search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vinayaka chaturthi"

    • பவித்திர உற்சவம்-10 நாட்கள் திருவிழா
    • சித்தி - புத்தி விநாயகருக்கு கல்யாண உற்சவம்

    மணக்குள விநாயகர் கோவிலில் விநாயகர் சதூர்தி விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஜனவரி முதல் தேதி ஆங்கில புத்தாண்டு அன்று பக்தர்கள் அதிகமாக வந்து வழிபடுகிறார்கள்.

    பிரமோற்சவம்-ஆவணி மாதம் 25 நாட்கள் திருவிழா, பவித்திர உற்சவம்-10 நாட்கள் திருவிழா

    மாதந்தோறும் சங்கடகர சதூர்த்தி தினத்தில் மூலவருக்கு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.

    திருக்கல்யாணம்

    பக்தர்கள் நேர்த்தி கடனாக சித்தி - புத்தி விநாயகருக்கு கல்யாண உற்சவம் நடத்தி வைக்கிறார்கள். இந்த கோவிலில்தான் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. வெள்ளித்தேர் இழுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துகிறார்கள்.

    தங்க கோபுரம்

    மணக்குள விநாயகர் கோவிலில் தங்க கோபுரம் உள்ளது. அகில இந்திய அளவில் விநாயகருக்கு கோபுரம் முழுவதும் தங்கத்தால் வேயப்பட்டிருப்பது இங்கு மட்டும்தான். பக்தர்கள் செலுத்திய 10 கிலோ தங்கத்தால் இந்த தங்க கோபுரம் உருவாக்கப்பட்டுள்ளது.

    மணக்குள விநாயகர் கோவிலில் பள்ளி அறை

    விநாயகர் கோவிலில் எங்கும் பள்ளி அறை இருபதில்லை. ஆனால் புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் பள்ளியறை உள்ளது. தினமும் இரவு நைவேத்தியம் முடிந்தவுடன் பள்ளி அறைக்கு விநாயகர் செல்கிறார். இதன் அடையாளமாக பாதம் மட்டும் இருக்கும் உற்சவ விக்ரம் அங்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு விநாயகரோடு அவரது தாயார் சக்தி தேவியார் உடன் இருக்கிறார்.

    சிறப்பு

    மணக்குள விநாயகரை பாரதியார், அரவிந்தர், அன்னை ஆகியோர் வழிபட்டார்கள். இந்த கோவிலில் தினம் தோறும் 3 வேளையும் பிரசாதம் செய்து பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். அன்னதானம் வழங்கப்படுகிறது. சிவ தலங்களில் இருக்கும் நடராஜரைபோல் இங்கு நர்த்தன விநாயகர் உள்ளார்.

    இந்த கோவில் புதுவை புதிய பஸ்நிலையத்திலிருந்து 4 கிலோ மீட்டர் தூரத்திலும் புதுவை ரெயில் நிலையத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்து உள்ளது.

    பக்தர்களின் பிரார்த்தனை

    திருமண வரம், குழந்தை வரம் கேட்டு பக்தர்கள் வந்து இங்கு வழிபடுகின்றனர். திருமணம் கூடி வந்ததும் திருமண பத்திரிக்கையை வைத்து வழிபட்டு செல்கின்றனர். குழந்தை பிறந்தவுடன் குழந்தையுடன் வந்து வழிபடுகிறார்கள். புது தொழில் தொடங்குவோர்.

    புது கணக்கு தொடங்குவோர் வந்து வணங்கி செல்கிறார்கள். புதுவையை விட்டு வெளியூர் செல்வோர் மணக்குள விநாயகரை வந்து வழிபட்டு செல்கிறார்கள். பக்தர்கள் நேர்த்தி கடனாக காணிக்கை செலுத்துகின்றனர். விநாயகருக்கு அமெரிக்க வைரத்தாலே கவசம் செய்து கொடுத்துள்ளனர்.

    • `ஓம்' என்ற சொல் மந்திரங்களின் ஆதார சுருதி
    • இதயமே `ஓம்' என்ற வடிவத்தில் அமைத்திருக்கிறது.

    விநாயகருக்கான ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் விநாயக சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இது தவிர மாதம் தோறும் தேய்பிறை சதுர்த்தி திதியில் சங்கடஹர சதுர்த்தி விரதம் வரும் கார்த்திகை மாதத் தேய்பிறை பிரதமை திதி வரையில் 21 நாட்கள் விநாயக சஷ்டி விரதம் அனுஷ்டிக்கலாம்.

    `ஓம்' என்பதின் அர்த்தம்

    `ஓம்'-என்பதற்கு நூறுக்கு அதிகமான அர்த்தங்கள் இருக்கின்றன. `ஓம்' என்ற சொல் மந்திரங்களின் ஆதார சுருதி பிற மந்திரங்களின் முன்னோடியாக வரும் பீஜமந்திரம் இந்த சொல்லில் இருந்து தான் மற்ற மந்திரங்கள் பிறந்தன. இது படைப்புக்கடவுள் பிரம்மனின் நாத வடிவம். ஓம் என்பது முழுமையை குறிக்கிறது.

    இது பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மூவருக்கும் பொதுவானது.

    `ஓம்' என்பது சுற்றிக் கொண்டேயிருக்கும் பூமி கடவுளின் சங்கீத சுருதியுடன் சேர்ந்த ஒலி. இந்த `ஓம்' என்ற சொல் மனதை ஒருமுகப்படுத்தும் வித்தையைச் செய்கிறது. `ஓம்' என்ற நாதத்தில் கணபதி முழுமையாக இருக்கிறார். `ஓம்' என்பது ஆத்மாவின் இருப்பிடமான இதயத்தில் இருந்து 108 நாடிகளை இயக்குகிறது. இதயமே `ஓம்' என்ற வடிவத்தில் அமைத்திருக்கிறது.

    விநாயகரை துதிக்க மந்திரம்

    ஓம் சுமுகாய நம

    ஓம் ஏக தந்தாய நம

    ஓம் கபிலாய நம

    ஓம் கஜகர்ணகாய நம

    ஓம் லம்போதராய நம

    ஓம் விநாயகாய நம

    ஓம் விக்னராஜாய நம

    ஓம் கணாத்பதியே நம

    ஓம் தூமகேதுவே நம

    ஓம் கணாத்ய சசாய நம

    ஓம் பால சந்திராய நம

    ஓம் கஜானனாய நம

    ஓம் வக்ரதுண்டாய நம

    ஓம் சூர்ப்ப கன்னாய நம

    ஓம் ஏரம்பாய நம

    ஓம் ஸ்காந்த பூர்வஜாய நம

    மேலே உள்ள மந்திரத்தைச் சொன்னாலே, கஷ்டங்கள் நீங்கி வாழ்வு மலர்ந்து மணம் வீசும்.

    • சனிப்பிரதோஷ முதல் தொடங்கி அனுஷ்டிக்க வேண்டும்.
    • 6 நாட்கள் சுப்பிரமணியரை நினைத்து அனுஷ்டிப்பது கந்தசஷ்டி விரதம்.

    சோமவார விரதம்

    கார்த்திகை மாத முதல் சோமவாரம் தொடங்கி சோமவாரம்தோறும் சிவபெருமானைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாகும். அதில் உபவாசம் உத்தமம். அது கூடாதவர் ஒரு பொழுது போசனஞ் செய்யக் கடவர். அதுவும் கூடாதவர் ஒரு பொழுது பகலிலே பதினைந்து நாழிகையின் பின் போசனஞ் செய்யக் கடவர்.

    இவ்விரதம் வாழ்நாள் முழுவதும், பன்னிரண்டு வருஷகாலமாயினும், மூன்று வருஷ காலமாயினும், ஒரு வருஷ காலமாயினும் அனுட்டித்தல் வேண்டும். பன்னிரெண்டு மாதத்திலும் அனுட்டிக்க இயலாதவர் கார்த்திகை மாதத்தில் மாத்திரமேனும் அனுட்டிக்கக் கடவர். (உபவாசம் -உணவின்றியிருத்தல்.)

    திருவாதிரை விரதம்

    மார்கழி மாதத்து திருவாதிரை நட்சத்திரத்திலே சபாநாயகரைக் குறித்து அனுட்டிக்கும் விரதமாம். இதில் உபவாசம் செய்தல் வேண்டும். இவ்விரதம் சிதம்பரத்தில் இருந்து அனுட்டிப்பது உத்தமோத்தமம்.

    உமாமகேஸ்வர விரதம்

    கார்த்திகை மாதத்து பௌர்ணமியிலே உமாமகேஸ்வர மூர்த்தியைக் குறித்து அனுட்டிக்கும் விரதமாம். இதில் ஒரு பொழுது பகலிலே போசனஞ் செய்யக் கடவர். இரவிலே பணிகாரம் பழம் உட்கொள்ளலாம்.

    சிவராத்திரி விரதம்

    மாசி மாதத்து கிருஷ்ணபட்ஷ சதுர்த்ததி திதியிலே சிவபெருமானைக் குறித்து அனுட்டிக்கும் விரதமாகும். இதில் உபவாசஞ் செய்து நான்கு யாமமும் நித்திரையின்றிச் சிவ பூசை செய்தல் வேண்டும். நான்கு யாமப் ப+சையும் அவ்வக் காலத்தில் செய்வது உத்தமம். ஒரு காலத்தில் சேர்த்துச் செய்வது மத்திமம்.

    பரார்த்தம், ஆன்மார்த்தம் என்னும் இரண்டினும், சிவராத்திரி நானள்கு யாமப் ப+சையிலே சூரிய தேவர் முதலிய பரிவாரங்களுக்குஞ் சோமஸ்கந்தமூர்த்தி முதலிய மூர்த்திகளுக்கும் பூசை செய்ய வேண்டுவதில்லை. பரார்த்தத்திலே மகாலிங்க முதலிய மூல மூர்த்திகளுக்கும் ஆன்மார்த்தத்திலே மகாலிங்கத்திற்கும் மாத்திரம் பூசை செய்யக் கடவர். பரார்த்தம், ஆன்மார்த்தம் என்னும் இரண்டினும் விநாயகக் கடவுளுக்கு மாத்திரம் நான்கு யாமமும் பூசை செய்யலாம்.

    சண்டேஸ்வர பூசை நான்கு யாமமும் செய்தல் வேண்டும். சிவ பூசை செய்பவர் நித்திரையின்றி ஸ்ரீபஞ்சாட்சர செபமும் சிவபுராண சிரவணமும் பண்ணல் வேண்டும். இதில் உபவாசம் உத்தமம், நீரேனும் பாலேனும் உண்ணல் மத்திமம், பழம் உண்பது அதமம், தோசை முதலிய பணிகாரம் உண்பது அதமாதமம், சிவராத்திரி தினத்திலே இராத்திரியில் பதினான்கு நாழிகைக்கு மேல் ஒரு முகூர்த்தம் இலிங்கோற்பவ காலமாகும்.

    நான்கு யாமமும் நித்திரையழிக்க இயலாதவர் லிங்கோற்பவ காலம் நீங்கும் வரையுமாயினும் நித்திரையழித்தல் வேண்டும். இக்காலத்திலே சிவதரிசனஞ் செய்வது உத்தமோத்தம புண்ணியம். இச்சிவராத்திரி விரதஞ் சைவசமயிகள் யாவராலும் அவசியம் அனுட்டிக்கத்தக்கது.

    கேதார கவுரி விரதம்

    புரட்டாதி மாதத்திலே சுக்கிலபட்ச அட்டமி முதல் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியீறாகிய இருபத்தொரு நாளாயினும் கிருஷ்ணபட்ச பிரதமை முதல் சதுர்தசியீறாகிய ஏழு நாளாயினும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியாகிய ஒரு நாளாயினுங் கேதாரநாதரைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம்.

    இதில் இருபத்தோர் இழையாலாகிய காப்பை ஆடவர்கள் வலக்கையிலும் பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொண்டு முதலிருபது நாளும் ஒவ்வொரு போசனஞ் செய்து இறுதி நாளாகிய சதுர்த்தசியிலே கும்பஸ்தாபனம் பண்ணிப் பூசை செய்து, உபவசித்தல் வேண்டும். உபவசிக்க இயலாதவர்கள் கேதாரநாதருக்கு நிவேதிக்கப்பட்ட உப்பில்லாப் பணிகாரம் உட்கொள்ளக் கடவர்.

    பிரதோஷ விரதம்

    சுக்கில பட்சம் கிருஷ்ணபட்சம் எனும் இரண்டு பட்சத்துக்கும் வருகின்ற திரியோதசி திதியிலே சூரியாஸ்தமனத்துக்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் பின் மூன்றே முக்கால் நாழிகையுமாக உள்ள காலமாகிய பிரதோஷ காலத்திலே சிவபெருமானைக் குறித்து அனுட்டிக்கும் விரதமாகும். இவ்விரதம் ஐப்பசி, கார்த்திகை, சித்திரை, வைகாசி என்னும் நான்கு மாதங்களுள் ஒன்றிலே சனிப் பிரதோஷ முதலாகத் தொடங்கி அநுட்டித்தல் வேண்டும்.

    பகலிலே போசனஞ் செய்யாது, சூரியன் அஸ்தமிக்க நான்கு நாழிகை உண்டு என்னும் அளவிலே ஸ்நானஞ்செய்து சிவபூசை பண்ணித் திருக்கோயிலிற் சென்று சிவதரிசனஞ் செய்து கொண்டு பிரதோஷ காலங்கழிந்த பின் சிவனடியாரோடு போசனம் பண்ணல் வேண்டும். பிரதோஷ காலத்தில் போசனம், சயனம், ஸ்நானம், விஷ்ணு தரிசனம், எண்ணெய் தேய்த்தல், வாகனமேறல், மந்திர செபம், நூல் படித்தல் என்னும் இவ்வெட்டும் செய்யலாகாது.

    பிரதோஷ காலத்திலே நியமமாக மெய்யன்போடு சிவதரிசனஞ் செய்து கொண்டுவரின் கடன், வறுமை, நோய், பயம், கிலேசம், அவமிருந்து, மரணவேதனை, பாவம் என்னும் இவைகளெல்லாம் நீங்கும். அஸ்தமனத்திற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையே சிவ திரிசனத்துக்கு உத்தமகாலம்.

    சுக்கிரவார விரதம்

    சித்திரை மாதத்து சுக்கிலபட்சத்து முதற்சுக்கிரவாரந் தொடங்கிச் சுக்கிர வாரந்ழிதூறும் பார்வதி தேவியாரைக் குறித்து அனுட்டிக்கும் விரதம் ஆகும். இதில் ஒரு பொழுது பகலிலே போசனஞ் செய்தல் வேண்டும்.

    நவராத்திரி விரதம்

    புரட்டாதி மாதத்து சுக்கிலபட்ச பிரதமை முதல் நவமியீறாகிய முதல் ஒன்பது நாளும் பார்வதி தேவியாரைக் கும்பத்திலே பூசை செய்து அனுட்டிக்கும் விரதமாகும். இதிலே முதலெட்டு நாளும் பணிகாரம் பழம் முதலியவை உட்கொண்டு மகாநவமியில் உபவாசஞ் செய்தல் வேண்டும்.

    விநாயக சதுர்த்தி

    ஆவணி மாதத்துச் சுக்கிலபட்ஷத்து சதுர்த்தியிலே விநாயகக்கடவுளைக் குறித்து அனுட்டிக்கும் விரதம் ஆகும். இதில் ஒரு பொழுதில் பகலிலே போசனஞ் செய்து இரவிலே பழமேனும் பலகாரமேனும் உட்கொள்ளல் வேண்டும். இத்தினத்திலே சந்திரனைப் பார்க்கலாகாது.

    விநாயக சஷ்டி விரதம்

    கார்த்திகை மாத்தது கிருஷ்ணபட்சப் பிரதமை முதல் மார்கழி மாதத்துச் சுக்கிலபட்ச சஷ்டியீறாகிய இருபத்தொரு நாளும் விநாயகக் கடவுளைக் குறித்து அனுட்டிக்கும் விரதம் ஆகும். இதில் இருபத்தோரிழையாலாகிய காப்பை ஆடவர்கள் வலக்கையிலும் பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொண்டு முதலிருபது நாளும் ஒவ்வொரு பொழுது போசனஞ் செய்து இறுதி நாளாகிய சஷ்டியில் உபவாசஞ் செய்தல் வேண்டும்.

    கார்த்திகை விரதம்

    கார்த்திகை மாதத்து கார்த்திகை நட்சத்திரம் முதலாகத் தொடங்கி கார்த்திகை நட்சத்திரந்தோறும் சுப்பிரமணியக் கடவுளைக் குறித்து அனுட்டிக்கும் விரதம் ஆகும். இதில் உபவாசம் உத்தமம். அது கூடாதவர் பழம் முதலியன இரவில் உட்கொள்ளக்கடவர். இவ்விரதம் பன்னிரெண்டு வருஷகாலம் அனுட்டித்தல் வேண்டும்.

    கந்த சஷ்டி விரதம்

    ஐப்பசி மாதத்துச் சுக்கிலபட்சத்து பிரதமை முதல் சஷ்டி ஈறாகிய ஆறு நாளும் சுப்பிரமணியக் கடவுளை குறித்து அனுஷ்டிக்கும் விரதமாகும். இதில் ஆறு நாளும் உபவாசம் செய்வது உத்தமம். அது கூடாதவர் முதலைந்து நாட்களும் ஒவ்வொரு பொழுது உண்டு சஷ்டியில் உபவாசஞ் செய்யக்கடவர். இவ்விரதம் ஆறு வருஷ காலம் அனுட்டித்தல் வேண்டும். மாதந்தோறும் சுக்கிலபட்ஷ சஷ்டியிலே குப்பிரமணியக் கடவுளை வழிபட்டு, மா, பழம், பால், பானகம், மிளகு என்பவைகளுள் இயன்றது ஒன்று உட்கொண்டு வருவது உத்தமம்.

    • நவநீதகிருஷ்ணன் இரண்டு கைகளிலும் வெண்ணையுடன் சிரித்த முகத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
    • புத்திரதோஷம் உள்ளவர்கள் வெண்ணெய், சர்ககரை பொங்கல், அவல் படைத்து வழிபட்டால் பலன் கிடைக்கும்

    மதுரையில் எத்தனையோ கிருஷ்ணன் கோவில்கள் இருந்தாலும் பந்தடி 5-வது தெருவில் (விளக்குத்தூண் அருகே) உள்ள நவநீதகிருஷ்ணன் கோவிலுக்கு தனி சிறப்பு உண்டு.

    சுமார் 500 வருடங்களுக்கு முன்பு இக்கோவில் கட்டப்பட்டதாகும். இந்த கோவிலில் மூலவர் நவநீதகிருஷ்ணன் ஆவார். மகாலட்சுமி அம்மனும் இங்கு உள்ளது. எத்தனையோ திருவிழாக்கள் நடந்தாலும் இந்த கோவிலில் கோகிலாஷ்டமி, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, விநாயகர் சதுர்த்தி விழாக்கள் மிகவும் பிரசித்தம். இவற்றையெல்லாம் பின்பற்றும் வகையில் நடக்கும் விழா கிருஷ்ணஜெயந்தி விழா என்றால் மிகையில்லை.

    இக்கோவிலின் முன்பு மண்டபத்தில் மகா கணபதி உள்ளார். சன்னதி முன்பக்கம் இடது புறம் ஆஞ்நேயரும், வலதுபுறம் கருடாழ்வாரும் உள்ளனர். இங்கு அருள்பாலிக்கும் நவநீதகிருஷ்ணன் இரண்டு கைகளிலும் வெண்ணையுடன் சிரித்த முகத்துடன் பாலகனாக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். நவநீதகிருஷ்ணன் வீதி உலா செல்வது கிடையாது. ஒவ்வொரு ரோகினி நட்சத்திரத்திலும் சாமிக்கு விசேஷ பூஜை நடக்கிறது.

    கிருஷ்ணர் பிறந்த தினமான கோகுலாஷ்டமி இங்கு சிறப்பாக கொண்டாடப்படும். மறுநாள் மாலையில் பகவத்கீதை பாராயணம் நடக்கிறது. புத்திரதோஷம் உள்ளவர்கள் இவருக்கு வெண்ணெய், சர்ககரை பொங்கல், அவல் படைத்து வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது.

    இந்த கோவிலில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஸ்ரீநிவாசா மீது தொடர்ந்து 3 மாதங்கள் சூரிய ஒளி விழுவது சிறப்பு அம்சமாகும். தினமும் காலையில் கிருஷ்ணருக்கு பூஜை செய்யும்போது 27 நட்சத்திர தீபம் மற்றும் 108 தீபம் ஏற்றி தூபம் காட்டுகின்றனர்.

    இந்த கோவிலில் கண்டகி நதியில் கிடைத்த சாளக்கிராம கற்கள் இருக்கின்றன. சாளகிராமம் மற்றும் ஜடாரிக்கு தினமும் பாலாபிஷேகம் நடக்கிறது. இந்த தரிசனம் காண்போருக்கு வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    பொதுவாக பெருமாள் கோவில்களில் நவக்கிரக சன்னதி வைக்கப்படுவதில்லை. கண்ணன், காளிங்கன் என்ற நாகத்திற்கு முக்தி கொடுத்து அதன் மீது நின்று ஆடியவர் என்பதால் இங்கு ராகு, கேது கிரகங்கள் மட்டும் சிலை வடிவில் உள்ளன.

    ஆவணி மாத சதுர்த்தி விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி பிறந்த கதையை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    முன்னொரு காலத்தில் சிவபெருமானின் பக்தனான கஜமுகாசுரன் என்பவன் வரம் பல பெற்றமையால் இறுமாப்புக் கொண்டு தேவர்களைப் பல வழிகளிலும் துன்புறுத்தி வந்தான். அவன் தன்னை மனிதர்களாலோ, விலங்குகளாலோ, ஆயுதங்களாலோ யாரும் கொல்ல முடியாதபடி வரம் பெற்று இருந்ததால் தேவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறினர்.

    எனவே அனைத்து தேவர்களும் ஒன்றாக திரண்டு சிவபெருமானிடம் சரண் அடைந்தனர். இதனால் அவர் ஆவணி மாத சதுர்த்தி அன்று விநாயகரை யானை முகத்தோடும், மனித உடலோடும் படைத்து கஜமுகாசுரனை அழிக்க அனுப்பி வைத்தார்.

    விநாயகருக்கும் கஜமுகாசுரனுக்கும் கடும்போர் நடந்தது. முடிவில் விநாயகர் பெருமான் தனது கொம்புகளில் ஒன்றை ஒடித்து அவனை அழிக்க ஏவினார்.
    அசுரனோ, மூஞ்சுறாய் வந்து எதிர்த்து நின்றான். விநாயகப் பெருமான் அவனை சம்ஹாரம் செய்தார்.

    பின்னர் அவர் மூஞ்சுறைத் தனது வாகனமாக்கிக் கொண்டு அருளினார். இதன்மூலம் அனைவரும் சுபிட்சம் பெற்றனர். அன்று முதல் ஆவணி மாத சதுர்த்தி விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விநாயகரை வழிபட்டால் தீராதவினைகள் தீரும். சகல பாக்கியங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்
    யானை வடிவம் கொண்ட விநாயகர், எப்படி ஒரு எலியின் மீது அமர முடியும்? என்ற சந்தேகம் எழுவது இயல்பே. இதற்கான விளக்கத்தை அறிந்து கொள்ளலாம்.
    யானை வடிவம் கொண்ட விநாயகர், எப்படி ஒரு எலியின் மீது அமர முடியும்? என்ற சந்தேகம் எழுவது இயல்பே.

    ஒரு பெரிய உருவம் ஒரு சிறிய விலங்கின் மீது ஏறி அமர்கிறது என்று இதற்கு பொருள் கொள்ளக்கூடாது. அணுவுக்கு அணுவாகவும், பெரிதுக்கும் பெரிதானதுமாக இறைவன் இருக்கிறான் என்பதே இதன் தத்துவம்.

    இறைவனை நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்பதையும் இது உணர்த்துகிறது. அவரது குணநலன்களை அறிந்து கொள்ள முடியாது. எலி மீது யானை ஏறுவதென்பது எப்படி கற்பனைக்கு கூட சாத்தியமில்லையோ, அது போல் இறைவனும் நம் கற்பனைகளையெல்லாம் கடந்தவன் என்பதே இதன் தத்துவம். 
    ×