search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manakkula Vinayaka"

    • பவித்திர உற்சவம்-10 நாட்கள் திருவிழா
    • சித்தி - புத்தி விநாயகருக்கு கல்யாண உற்சவம்

    மணக்குள விநாயகர் கோவிலில் விநாயகர் சதூர்தி விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஜனவரி முதல் தேதி ஆங்கில புத்தாண்டு அன்று பக்தர்கள் அதிகமாக வந்து வழிபடுகிறார்கள்.

    பிரமோற்சவம்-ஆவணி மாதம் 25 நாட்கள் திருவிழா, பவித்திர உற்சவம்-10 நாட்கள் திருவிழா

    மாதந்தோறும் சங்கடகர சதூர்த்தி தினத்தில் மூலவருக்கு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.

    திருக்கல்யாணம்

    பக்தர்கள் நேர்த்தி கடனாக சித்தி - புத்தி விநாயகருக்கு கல்யாண உற்சவம் நடத்தி வைக்கிறார்கள். இந்த கோவிலில்தான் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. வெள்ளித்தேர் இழுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துகிறார்கள்.

    தங்க கோபுரம்

    மணக்குள விநாயகர் கோவிலில் தங்க கோபுரம் உள்ளது. அகில இந்திய அளவில் விநாயகருக்கு கோபுரம் முழுவதும் தங்கத்தால் வேயப்பட்டிருப்பது இங்கு மட்டும்தான். பக்தர்கள் செலுத்திய 10 கிலோ தங்கத்தால் இந்த தங்க கோபுரம் உருவாக்கப்பட்டுள்ளது.

    மணக்குள விநாயகர் கோவிலில் பள்ளி அறை

    விநாயகர் கோவிலில் எங்கும் பள்ளி அறை இருபதில்லை. ஆனால் புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் பள்ளியறை உள்ளது. தினமும் இரவு நைவேத்தியம் முடிந்தவுடன் பள்ளி அறைக்கு விநாயகர் செல்கிறார். இதன் அடையாளமாக பாதம் மட்டும் இருக்கும் உற்சவ விக்ரம் அங்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு விநாயகரோடு அவரது தாயார் சக்தி தேவியார் உடன் இருக்கிறார்.

    சிறப்பு

    மணக்குள விநாயகரை பாரதியார், அரவிந்தர், அன்னை ஆகியோர் வழிபட்டார்கள். இந்த கோவிலில் தினம் தோறும் 3 வேளையும் பிரசாதம் செய்து பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். அன்னதானம் வழங்கப்படுகிறது. சிவ தலங்களில் இருக்கும் நடராஜரைபோல் இங்கு நர்த்தன விநாயகர் உள்ளார்.

    இந்த கோவில் புதுவை புதிய பஸ்நிலையத்திலிருந்து 4 கிலோ மீட்டர் தூரத்திலும் புதுவை ரெயில் நிலையத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்து உள்ளது.

    பக்தர்களின் பிரார்த்தனை

    திருமண வரம், குழந்தை வரம் கேட்டு பக்தர்கள் வந்து இங்கு வழிபடுகின்றனர். திருமணம் கூடி வந்ததும் திருமண பத்திரிக்கையை வைத்து வழிபட்டு செல்கின்றனர். குழந்தை பிறந்தவுடன் குழந்தையுடன் வந்து வழிபடுகிறார்கள். புது தொழில் தொடங்குவோர்.

    புது கணக்கு தொடங்குவோர் வந்து வணங்கி செல்கிறார்கள். புதுவையை விட்டு வெளியூர் செல்வோர் மணக்குள விநாயகரை வந்து வழிபட்டு செல்கிறார்கள். பக்தர்கள் நேர்த்தி கடனாக காணிக்கை செலுத்துகின்றனர். விநாயகருக்கு அமெரிக்க வைரத்தாலே கவசம் செய்து கொடுத்துள்ளனர்.

    • புதுவையில் மிகவும் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் உள்ளது.
    • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில் இன்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் மிகவும் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் உள்ளது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில் இன்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. மூலவர், உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் உட்பட வாசனை திரவியங்கள் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கலசாபிஷேகம் செய்யப்பட்டு மூலவருக்கு தங்க கவசம், அமெரிக்கன் டைமண்ட் கவசம் அணிவிக்கப்பட்டு, பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    உற்சவர் ராஜதர்பார் அலங்காரத்தில் அருள்பாலித்தார். கோவில் யானை லட்சுமிக்கு 9 சபந்திரகலாவுடன் கூடிய தங்க முலாம் பூசிய, விநாயகர் உருவத்துடன் கூடிய நெற்றி பட்டை அணிவிக்கப்பட்டிருந்தது.

    அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை கோவிலில் நாதஸ்வர கச்சேரி நடக்கிறது. பக்தர்கள் அர்ச்சனை செய்யவும், தேங்காய் உடைக்கவும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் விநாயகரை தரிசனம் மட்டும் செய்தனர். பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதிகளவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. நாளை மணக்குள விநாயகர் கோவிலில் 62-ம் ஆண்டு பிரம்மோற்சவ கொடியேற்றம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    சதுர்த்தியையொட்டி இந்து முன்னணி சார்பில் 175 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. 5 நாட்களுக்கு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிற 4-ம் தேதி (ஞாயிற்றுகிழமை) மாலை ஊர்வலமாக கொண்டு சென்று கடலில் சிலைகள் விஜர்சனம் செய்யப்படுகிறது.

    ×