search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருக்கல்யாணம்"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 51 வகையான சீர்வரிசை பொருட்கள் மேளத்தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வடரங்கம் கிராமத்தில் ரங்கநாதர் பெருமாள் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் பெருமாள் சயன கோலத்தில் காட்சி தருகிறார்.

    பிரசித்தி பெற்ற இக்கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பெருமாள் தாயார் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    முன்னதாக திரளான பக்தர்கள் 51 வகையான சீர்வரிசை பொருட்களை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக மேளத்தாளங்கள் முழங்கிட கோவிலை வந்தடைந்தனர்.

    தொடர்ந்து பெருமாள் தாயார் எதிர்சேவையில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

    அதன் பின்னர் திருக்கல்யாண சம்பிரதாய சடங்குகள் தொடங்கி நடைபெற்றது.

    பாலாஜி பட்டாச்சாரியார், ரமேஷ் குருக்கள் மற்றும் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க மங்களநாணை அணிவித்து திருக்கல்யாண உற்சவம் நடத்தி வைத்தார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஏற்பாடுகளை சேலத்தைச் சேர்ந்த அயோத்தியாபட்டினம் ஸ்ரீ சன்னியாசி ரிஷி மடம் மற்றும் சத்ய நாராயணன் திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • யானைக்கு பயந்து வள்ளி முருகனை சந்திப்பதும் அடியார்களால் தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.
    • வேதமந்திரங்கள் முழங்க யாகம் வளர்க்கப்பட்டு மாங்கல்ய தாரண நிகழ்ச்சி நடந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை அடுத்த சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 13-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வள்ளி- முருகன் திருமணம் சிறப்பாக நடந்தது.

    இதனை முன்னிட்டு குறவள்ளி முருகனை சந்திப்பதும், அப்போது விநாயகர் பெருமான் யானை ரூபத்தில் வந்து வள்ளியை பயமுறுத்துவதும், பின் முருகனை வள்ளி அடைக்கலமாகி திருமண காட்சி நடைபெறுவதும் நடைபெற்றது.

    யானை அழைத்து வரப்பட்டு யானை பிளிருவதும் அதனை அடுத்து யானைக்கு பயந்து வள்ளி முருகனை சந்திப்பதும் அடியார்களால் தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க யாகம் வளர்க்கப்பட்டு மாங்கல்யதாரணம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதனை அடுத்து மாலை மாற்றும் வைபவம் நடைபெற்று, தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
    • திருமண தடை நீங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றது

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் கஸ்பா பகுதியில் உள்ள வீர விநாயகர் கோவிலில் முருகர், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. சாமிக்கு புத்தாடை அணிவித்து, வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. இதில் திருமண தடை நீங்க சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது
    • அறுசுவை உணவு பரிமாறப்பட்டது

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், சாத்துமதுரை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ பாலசுப்ரமணியர் கோவிலில் முருகர் திருக்கல்யாணம் நடந்தது.

    இதற்கு கிராம கனாச்சாரி சிவலிங்கம், கிராம நாட்டான்மைதாரர் துளசிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிலட்சுமிராஜ்குமார், ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமச்சந்திரன் மற்றும் முருகனடிமை ஜம்பு என்கிற சம்பத் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    இதில்முருகருக்கு பட்டு வேட்டி ஆடை, அம்பாளுக்கு பட்டுப்புடவை மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க தேவசேனா, வள்ளி- முருகன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பக்தர்கள் மொய் எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பணம் மற்றும் நகைகளை மொய் எழுதினர். இதைத் தொடர்ந்து அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
    • யாகசாலை அமைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சண்முக நாதர் கோவிலில் கந்த சஷ்டி, சூரசம்ஹாரத்தை தொடர்ந்து ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சண்முகநாதர் சாமி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது.

    இதனை முன்னிட்டு கோவில் வளாகத்தில் மேளதாளத்துடன் பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர்.

    பின்னர் அலங்கரித்து வைக்கப்பட்டட வள்ளி, தெய்வானை, சண்முகநாதர் சாமிக்கு சிறப்பு யாகசாலை அமைத்து பூஜைகள் நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மாலை மாற்றும் நிகழ்ச்சியும், மகா தீபாரதனையும் நடந்தது. இதில் வந்தவாசியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சோழவந்தான் அருகே முருகப்பெருமான் திருக்கல்யாணம் நடந்தது.
    • சோழவந்தான் பிரளயநாதர் சுவாமி கோவிலிலும், திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் கந்தசஷ்டி நிறைவு விழா நடைபெற்றது.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்ட ஈஸ்வரி அம்மன் சமேத மூலநாத சுவாமி கோவில் சுப்பிரமணி சுவாமி கந்த சஷ்டி விழா கடந்த 13-ந் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை சூரசம்கார விழா நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை பாவாடை தரிசனம் நடந்தது. சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு முருகன் அருள்பாலித்தார். நேற்று மாலை இங்குள்ள கிருஷ்ணன் கோவிலில் இருந்து மேளதாளத்துடன் வானவேடிக்கையுடன் பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர்.கிருஷ்ணமூர்த்திவாத்தியார் தலைமையில் யாகவேள்வி நடந்தது.நாகேஸ்வரன் பட்டர் மாப்பிள்ளை வீட்டாராகவும், விக்னேஸ்வரன் பெண் வீட்டாராகவும் இருந்து முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர்.

    இதில் செயல் அலுவலர் பாலமுருகன், ஆலயப் பணியாளர்கள், தொழிலதிபர் செந்தில்குமார் மற்றும் பிரதோஷ கமிட்டியினர், பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் மாங்கல்யபிரசாதம், கல்யாணவிருந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு சுவாமி அம்மன் புறப்பாடு கோவில் வளாகத்தை சுற்றி வந்தது. காடுபட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சோழவந்தான் பிரளயநாதர் சுவாமி கோவிலிலும் திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் கந்தசஷ்டி நிறைவு விழா நடைபெற்றது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம்.
    • சுவாமி-அம்பாளுக்கு பட்டாடைகள் மற்றும் மாலைகள் மாற்றப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் நடந்தது. திருவிழாவின் 7-ம் நாளான நேற்று காலையில் தெய்வானை அம்பாள் தெப்பக்குளம் அருகில் உள்ள தபசு காட்சி மண்டபத்தில் எழுந்தருளினார்.

    அங்கு மாலையில் சுவாமி, அம்பாளுக்கு காட்சி கொடுத்து தோல் மாலை மாற்றுதல் நடைபெற்று இரவு 11 மணிக்கு சுவாமியும், அம்பாளும் ராஜகோபுரம் அருகில் உள்ள மண்டபத்திற்கு வந்தனர். அங்கு வேத மந்திரங்கள் முழங்க 12 மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெரு மானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது.

    கந்தசஷ்டி திருவிழா 8-ம்நாளான இன்று (திங்கட்கிழமை) இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம்பல்லக்கிலும் பட்டின பிரவேசம் வீதி உலா வருதல் நடக்கிறது.

    திருவிழாவில் 21, 22, 23-ந் தேதி வரை 3 நாட்களும் நாள்தோறும் மாலை 6 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் ஊஞ்சல் காட்சி நடக்கிறது.

    12-ம் திருவிழாவான 24-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு வைபவம் நடைபெற்று சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவில் சேர்தலுடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர். *** திருச்செந்தூர் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றதை படத்தில் காணலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெரிய வஞ்சரம் மீன் ரூ.1000 விற்பனை செய்யப்பட்டது
    • மீன்களின் விலையும் கனிசமாக குறைந்துள்ளன

    வேலூர்:

    கார்த்திகை மாதம் பிறந்ததால் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கி உள்ளனர்.

    மேலும் நேற்று கந்த சஷ்டி விழா முடிந்து இன்று சாமிக்கு திருக்கல்யாணம் நடப்பதால் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பெரும்பாலானோர் அசைவ உணவுகளை தவிர்த்தனர்.

    இதனால் ஞாயிற்றுக்கிழமை எப்போதும் அதிக அளவில் கூட்டம் அலைமோதும் வேலூர் புதிய மீன் மார்க்கெட்டில் மீன் வாங்க ஆட்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் மீன்களின் விலையும் கனிசமாக குறைந்துள்ளன.

    பெரிய வஞ்சரம் மீன் ரூ.1000, சிறிய வஞ்சரம் மீன் ரூ.500, இறால் ரூ.350 முதல் ரூ.450, கட்லா ரூ.160, நண்டு ரூ.350 முதல் ரூ.450, மத்தி ரூ.140 முதல் ரூ.160, ஷீலா ரூ.350 என மீன் இன்று விற்பனை செய்யப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • மேல்சாந்திகள், நிர்வாகிகள், மகளிர் மன்றத்தினர், ஊர் பொது மக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

    என்.ஜி.ஓ.காலனி :

    நாகர்கோவில் அருகே உள்ள பெருவிளை தெய்வி முருகன் கோவிலில் 54-ம் ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த (13-ந்தேதி) தொடங்கி இன்று (19-ந்தேதி) வரை 7 நாட்கள் நடைபெறுகிறது.

    கந்த சஷ்டி விழாவின் 6-ம் நாளான நேற்று (18-ந் தேதி) காலை 6.30 மணிக்கு உதயகால பூஜையும், 11 மணிக்கு கும்பாபிஷேகமும், பகல் 12 மணிக்கு பெரு விளை சொக்கநாதர் ஆலயத்தில் அன்னை ஆதிபராசக்தியிடமிருந்து முருகக்கடவுள் சக்திவேல் வாங்கி வருதல் நிகழ்ச்சியும், பகல் 1 மணிக்கு தெய்வி முருகன் சூரசம்ஹாரத்திற்கு புறப்படுதல் நிகழ்ச்சியும், யானை ஊர்வலமும் நடை பெற்றது. அதனைத் தொடர்ந்து கேரள புகழ் மைலேந்திரகாவு சிங்காரி மேளமும், டிஜிட்டல் வே ஷங்கள் கலந்த வண்ண நிகழ்ச்சிகளும், மாலை 6.30 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதி களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இரவு 7 மணிக்கு மாபெரும் வண்ண நிகழ்ச்சிகளும், 8.30 மணிக்கு நடைபெற்ற போட்டி சிலம்பம் நிகழ்ச்சிக்கு தொழிலதிபர் ஐ. கேட்சன் தலைமை தாங்கி னார். போட்டிச் சிலம்பம் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

    7-ம் திருவிழாவான இன்று (19-ந்தேதி) திருக் கல்யாண விழா கொண்டா டப்பட்டது. நிகழ்ச்சியில் காலை 7 மணிக்கு பொங்க லிடுதலும், 11 மணிக்கு அன்னாபிஷேகமும், பகல் 12 மணிக்கு திருக்கல்யா ணமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 1 மணிக்கு அன்னதானமும், மாலை 5 மணிக்கு 1008 சகஸ்ர நாம அர்ச்சனை புஷ்பாபிஷே கமும், மாலையில் சாயங் கால பூஜையும், அதனைத் தொடர்ந்து மணக்கோல முருகனாக உரு காப்பு நிகழ்ச்சியும், பரிசு வழங்கு தல் நிகழ்ச்சியும், இரவு 8.30 மணிக்கு நிறைவு தீபாராத னையும், 8.45 மணிக்கு மணி மகுடம் என்ற சமூக நாடக மும் நடைபெற உள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடு களை கவுரவ தலைவர் மாசானமுத்து, சட்ட ஆலோசகர் செல்வகுமார், தலைவர் வெற்றிவேலன், செயலாளர் ராஜபூபதி, பொருளாளர் சிவராஜ், சிறுவர் பக்த சங்க கவுரவத் தலைவர் எம். அருள்குமரன், உபத்தலைவர் ராதா கிருஷ்ணன், இணைச் செய லாளர்கள் ரெங்கராஜ், அழகேசன், அழகுவேல் முருகன், மண்டப பொறுப் பாளர் செந்தில் என்ற அய்யப்பன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், மேல்சாந்திகள், நிர்வாகிகள், மகளிர் மன்றத்தினர், ஊர் பொது மக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சூரனை வெற்றிகண்ட முருகனுக்கு தெய்வானையை திருமணம் செய்து வைக்கும் விதமாக இன்று காலை மலைக்கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பெரியநாயகி அம்மன் கோவிலில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணிசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 13-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது. இதற்காக பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், மதியம் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடைபெற்றது.

    அதன்பின் சின்னகுமாரர் அசுரர்களை வதம் செய்யும் வகையில் மலைக்கொழுந்து அம்மனிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின் மாலை 4.30 மணிக்கு மயில் வாகனத்தில் முத்துக்குமாரசாமி எழுந்தருளினார். மாலை 6 மணிக்குமேல் யானை முகசூரன், பானுகோபன், சிங்கமுகசூரன், சூரபத்மன் ஆகியோரை அடுத்தடுத்து வதம் செய்து கடைசியாக சூரபத்மன் சேவலாக மாறுவதை தெரிவிக்கும் விதமாக சேவல் பறக்கவிடப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சூரனை வெற்றிகண்ட முருகனுக்கு தெய்வானையை திருமணம் செய்து வைக்கும் விதமாக இன்று காலை மலைக்கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வள்ளி-தெய்வானை சமேத சண்முகருக்கு சிறப்பு பூஜைகள் செய்து திருக்கல்யாணம் நடத்தப்பட்டது.

    ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர். மாலையில் பெரியநாயகி அம்மன் கோவிலில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram