search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupati Kapileshwar Temple"

    • பவித்ரோற்சவம் நாளை தொடங்கி ஜூலை 2-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
    • இன்று மாலை அங்குரார்ப்பண நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஆண்டு முழுவதும் நடக்கும் அர்ச்சனை, உற்சவங்களில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளால் ஏற்பட்ட தோஷ நிவர்த்திக்கான பவித்ரோற்சவம் நடத்தப்படுவது வழக்கம்.

    அதன்படி கோவிலில் இந்த ஆண்டுக்கான பவித்ரோற்சவம் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஜூலை) 2-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. அதற்காக, இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அங்குரார்ப்பண நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    30-ந்தேதி உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம், கலசபூஜை, ஹோமம், பவித்ர பிரதிஷ்டை நடக்கிறது. 1-ந்தேதி காலை கிரந்தி பவித்ரா சமர்ப்பணம், மாலை யாக சாலை பூஜை, ஹோமம் நடக்கிறது. 2-ந்தேதி காலை மகா பூர்ணாஹுதி, கலசோத்வாசனம், பவித்ர சமர்ப்பணம் நடக்கிறது.

    அன்று மாலை 6 மணிக்கு மூலவர்களுக்கு கபிலேஸ்வரர், காமாட்சி தாயார், விக்னேஸ்வரர், சுப்பிரமணியசாமி, சண்டிகேஸ்வரருக்கு ஏகாந்தமாக ஆஸ்தானம் நடக்கிறது. இத்துடன் வருடாந்திர பவித்ரோற்சவம் நிறைவடைகிறது.

    • 29-ந்தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது.
    • 30-ந்தேதி உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது.

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஆண்டு முழுவதும் நடக்கும் அர்ச்சனை மற்றும் உற்சவங்களின்போது அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த சில தவறுகளால் ஏற்படுகிற தோஷ நிவர்த்திக்காகவும், கோவிலின் புனிதம் (பவித்ரம்) பாதிக்கப்படாமலும் இருக்க வேவேண்டி சாஸ்திர முறைப்படி ஆண்டுக்கொரு முறை பவித்ரோற்சவம் நடத்தப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான பவித்ரோற்சவம் வருகிற 30-ந்தேதியில் இருந்து அடுத்த மாதம் (ஜூலை) 2-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. இதற்காக 29-ந்தேதி மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அங்குரார்ப்பணம் நடக்கிறது.

    முதல் நாளான வருகிற 30-ந்தேதி உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம், கலச பூஜை, ஹோமம், பவித்ர பிரதிஷ்டை நடக்கிறது. 2-வது நாளான ஜூலை மாதம் 1-ந்தேதி காலை கிரந்தி பவித்ர சமர்ப்பணம், மாலை யாக சாலை பூஜை, ஹோமம் நடக்கிறது. 3-வது நாளான ஜூலை மாதம் 2-ந்தேதி காலை மகாபூர்ணாஹுதி, கலசோற்வாசனம், பவித்ர சமர்ப்பணம் ஆகியவை நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு கபிலேஸ்வரர், காமாட்சி தாயார், விக்னேஸ்வரர், சுப்பிரமணியசாமி, சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு ஏகாந்தமாக ஆஸ்தானம் நடக்கிறது.

    • உற்சவர்களுக்கு திருவீதி உற்சவம் நடந்தது.
    • அங்குரார்பணம், நவகலச ஸ்தாபனம் ஆகியவை நடந்தன

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் பத்ர புஷ்ப யாகம் நடந்தது. அதையொட்டி நேற்று முன்தினம் மாலை சாஸ்திரபூர்வமாக விக்னேஷ்வர பூஜை, புண்யாஹவச்சனம், அங்குரார்பணம், நவகலச ஸ்தாபனம் ஆகியவை நடந்தன.

    அதைத்தொடர்ந்து நேற்று காலை 7.30 மணியில் இருந்து காலை 9.30 மணி வரை உற்சவர்களாக சோமஸ் கந்தமூர்த்தி, காமாட்சி தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. காலை 10 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை பத்ர புஷ்ப யாக மகோற்சவம் நடந்தது.

    அதில் துளசி, சாமந்தி, கன்னேறு, மொகலி, சம்பங்கி, ரோஜா, அல்லி போன்ற பல்வேறு வகையான மலர்கள் மற்றும் இலைகளால் புஷ்ப யாகம் எனப்படும் புஷ்பார்ச்சனை செய்யப்பட்டது. அதற்கு ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை சேர்ந்த காணிக்கையாளர்களும், பக்தர்களும் சுமார் 3 டன் எடையில் 12 வகையான மலர்கள், 6 வகையான இலைகளை காணிக்கையாக வழங்கினர். மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை உற்சவர்களுக்கு திருவீதி உற்சவம் நடந்தது.

    கடந்த பிப்ரவரி மாதம் நடந்த வருடாந்திர பிரம்மோற்சவம் மற்றும் பிற திருவிழாக்களின்போது அதிகாரிகள், அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் தெரிந்தும் தெரியாமலும், அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளால் ஏற்படுகின்ற தோஷத்துக்கு பரிகாரமாக இந்தப் பத்ர புஷ்ப யாகம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இன்று மாலை அங்குரார்ப்பணம், நவ கலச ஸ்தாபனம் நடக்கிறது.
    • நாளை கபிலேஸ்வரர், காமாட்சி தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது.

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) பத்ர புஷ்ப யாக மகோற்சவம் நடக்கிறது. அதையொட்டி இன்று (வியாழக்கிழமை) மாலை சாஸ்திரமுறைப்படி விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவச்சனம், அங்குரார்ப்பணம், நவ கலச ஸ்தாபனம் நடக்கிறது.

    நாளை காலை 7.30 மணியில் இருந்து காலை 9.30 மணி வரை உற்சவர்களான கபிலேஸ்வரர், காமாட்சி தாயாருக்கு நவ கலச ஸ்நாபன திருமஞ்சனமும் மற்றும் மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு, இளநீர், விபூதி ஆகியவற்றால் ஸ்நாபன திருமஞ்சனமும் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து காலை 10 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை பத்ர புஷ்ப யாக மகோற்சவம் கோலாகலமாக நடக்கிறது. உற்சவர்களான கபிலேஸ்வரர், காமாட்சி தாயாருக்கு மல்லி, ஜாதி மல்லி, சாமந்தி, சம்பங்கி, ரோஜா, தாமரை, கனகாம்பரம் உள்பட பல்வேறு மலர்களாலும், வில்வம், துளசி, பன்னீர் இலைகளாலும் பத்ர புஷ்ப யாக மகோற்சவம் நடக்கிறது.

    இந்தப் பத்ர புஷ்ப யாக மகோற்சவம் கோவிலில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் தெரிந்தும், தெரியாமலும் ெசய்கின்ற தவறுகளால் ஏற்படுகின்ற தோஷ நிவர்த்திக்காக நடத்தப்படுவதாக அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.

    • மே 4-ந்தேதி அங்குரார்ப்பணமும் நடக்கிறது.
    • கபிலேஸ்வரர், காமாட்சி தாயாருக்கு நவகலச திருமஞ்சனம் நடக்கிறது.

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் அடுத்த மாதம் (மே) 5-ந்தேதி பத்ர புஷ்ப யாகமும், இதற்காக மே 4-ந்தேதி மாலை அங்குரார்ப்பணமும் நடக்கிறது.

    மே 5-ந்தேதி காலை 7.30 மணியில் இருந்து காலை 9.30 மணி வரை உற்சவர்களான கபிலேஸ்வரர், காமாட்சி தாயாருக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு, இளநீர், விபூதி, மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் நவ கலச திருமஞ்சனம் நடக்கிறது. காலை 10 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை உற்சவர்களுக்கு சாமந்தி, கன்னேறு, தாழம்பூ, சம்பங்கி, தாமரை, ரோஜா, மல்லி, கனகாம்பரம் மற்றும் வில்வம், துளசி, பன்னீர் இலைகளுடன் பத்ர புஷ்ப யாக மஹோற்சவம் நடத்தப்படுகிறது.

    கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், ஆன்மிக சேவையில் ஈடுபட்டு வரும் அர்ச்சகர்கள், கோவில் அதிகாரிகள் ஆகியோர்கள் ஏதேனும் தெரிந்தும், தெரியாமலும் செய்த தவறுகளால் ஏற்படுகின்ற தோஷ நிவர்த்திக்காக பத்ர புஷ்ப யாகம் செய்யப்படுகிறது, என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ராவணாசூர வாகன வீதிஉலா நடந்தது.
    • மூலவர்களுக்கு கலசாபிஷேகம் நடந்தது.

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வந்தது. விழாவின் 10-வது நாளான நேற்று காலை 7 மணியில் இருந்து காலை 9 மணி வரை வாகன வீதிஉலா நடந்தது.

    அதில் நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் சூரியபிரபை வாகனத்திலும், சிவகாமசுந்தரி பல்லக்கிலும் எழுந்தருளினர். ஊர்வலம் ேகாவிலில் இருந்து புறப்பட்டு பல்வேறு வீதிகள் வழியாக அண்ணாராவ் சர்க்கிள் வரை சென்று, அங்கிருந்து மீண்டும் கோவிலுக்கு திரும்பியது. வழியில் பக்தர்கள் கற்பூர ஆரத்தி கொடுத்தனர்.

    முன்னதாக காலை 8.30 மணியளவில் உற்சவர்களான கபிலேஸ்வரர், காமாட்சி தாயார் மற்றும் திரிசூலம் ஆகியவற்றுக்கு ஸ்நாபன திருமஞ்சனமும், அதன்பிறகு கபிலத்தீர்த்தத்தில் திரிசூல ஸ்நானமும் நடந்தது. அதேபோல் மூலவர்களுக்கு கலசாபிஷேகம் நடந்தது.

    அதைத்தொடர்ந்து மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியிறக்கம் நடந்தது. அத்துடன் கபிலேஸ்வரர் கோவிலில் நடந்து வந்த வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவடைந்தது. நிறைவாக இரவு 8 மணியில் இருந்து காலை 10 மணி வரை ராவணாசூர வாகன வீதிஉலா நடந்தது.

    • நாளை இரவு நந்தி வாகன சேவை நடக்கிறது.
    • ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாணம் நடக்கிறது.

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாளை (சனிக்கிழமை) மகாசிவராத்திரி விழா நடக்கிறது. விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு சிறப்பு வரிசைகள், சாமியானா பந்தல்கள், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மகாசிவராத்திரியையொட்டி நாளை அதிகாலை 2.30 மணியில் இருந்து அதிகாலை 4.30 மணி வரை ஏகாதச ருத்ராபிஷேகம் நடக்கிறது. காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரை தேரோட்டம், காலை 10.30 மணியில் இருந்து காலை 11.30 மணி வரை ஸ்நாபன திருமஞ்சனம், மாலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை நந்தி வாகன சேவை நடக்கிறது.

    மேலும் அதிகாலை 5.30 மணியில் இருந்து மதியம் 2 மணி வரையிலும், மாலை 4.30 மணியில் இருந்து இரவு 12 மணி வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை லிங்கோத்பவ அபிஷேகம், புருஷாமிருக வாகன வீதிஉலா, மாலை சிவன்-பார்வதி திருக்கல்யாணம், இரவு திருச்சி உற்சவம் நடக்கிறது.

    மேற்கண்ட தகவலை கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இன்று கல்ப, குதிரை வாகன வீதிஉலா நடக்கிறது.
    • திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணிவரை உக்கிரமான வியாக்ர வாகனத்தில் உற்சவர் சோமஸ்கந்தமூர்த்தி, காமாட்சி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். வாகனத்துக்கு முன்னால் வீதிகளில் கோலாட்டங்கள், பஜனைகள் நடந்தது. மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டது.

    அதன்பிறகு அர்ச்சகர்கள் உற்சவர்களுக்கு காலை 10.30 மணியில் இருந்து 11.30 மணி வரை மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், பழச்சாறுகள் மற்றும் நறுமண திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்வித்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 8 மணியில் இருந்து காலை 9 மணிவரை யானை வாகன வீதிஉலா நடந்தது. வீதிஉலாவில் கோவில் துணை அதிகாரி தேவேந்திரபாபு, உதவி அதிகாரி பார்த்தசாரதி மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு குதிரை வாகன வீதிஉலா நடக்கிறது.

    • உற்சவர்களுக்கு நறுமண திரவியங்களால் அபிஷேகம் செய்து அலங்கரித்தனர்.
    • வாகனத்துக்கு முன்னால் வீதிகளில் கோலாட்டங்கள், பஜனைகள் நடந்தது.

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணிவரை திருச்சி வாகனத்தில் உற்சவர் சோமஸ்கந்த மூர்த்தி, காமாட்சி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். வாகனத்துக்கு முன்னால் வீதிகளில் கோலாட்டங்கள், பஜனைகள் நடந்தது. மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டது.

    அதன்பின் அர்ச்சகர்கள் உற்சவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், பழச்சாறுகள் மற்றும் நறுமண திரவியங்களால் அபிஷேகம் செய்து அலங்கரித்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 8 மணியில் இருந்து காலை 9 மணிவரை அதிகார நந்தி வாகன வீதிஉலா நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    • ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
    • இன்று பூத வாகன வீதிஉலா, சிம்ம வாகன வீதிஉலா நடக்கிறது.

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகமாக நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை உற்சவர் கபிலேஸ்வரர், காமாட்சி தாயார் சூரியபிரபை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    வாகனத்துக்கு முன்னால் வீதிகளில் பஜனைகள், கோலாட்டங்கள் நடந்தன. மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. உற்சவர்களான சோமஸ்கந்தமூர்த்திக்கும், காமாட்சி தாயாருக்கும் காலை 10.30 மணியில் இருந்து காலை 11.30 மணி வரை மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், பழச்சாறு ஆகியவற்றால் ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. இரவு சந்திர பிரபைவாகன வீதிஉலா நடந்தது. அதில் அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலை பூத வாகன வீதிஉலா, இரவு சிம்ம வாகன வீதிஉலா நடக்கிறது.

    • ஹம்ச வாகன வீதிஉலா நடந்தது.
    • இன்று சூரிய, சந்திர பிரபா வாகன வீதிஉலா நடக்கிறது.

    திருப்பதி கபிலதீர்த்தம் அருகில் உள்ள கபிலேஸ்வரர் கோவிலில் 10 நாள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது. அதையொட்டி பஞ்சமூர்த்திகளான சோமாஸ் கந்தமூர்த்தி, காமாட்சி தாயார், விநாயகர், சண்டிகேஸ்வரர், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசாமி உற்சவர்கள் கொடிமரம் அருகே சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

    பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் காலை 8.54 மணிக்கு மீன லக்னத்தில் சைவ சமய நியதிப்படி கங்கணப்பட்டர் உதயசுவாமி தலைமையில் வேதமந்திரங்கள், சங்க நாதங்கள் முழங்க, பக்தர்கள் சிவ.. சிவ.. சங்கரா.. சம்போ மகாதேவா எனப் பக்தி கோஷம் எழுப்ப, வேதபண்டிதர்கள் ரிக், யஜுர், சாம, அதர்வன வேதங்களை ஓத, அர்ச்சகர்களின் சிவ நாமஸ்மரணங்களுக்கு இடையே சாஸ்திரபூர்வமாகக் கொடியேற்று விழா நடந்தது. சிவப்பு நிறத்தில் நந்தி உருவம் வரையப்பட்ட வெள்ளைநிற கொடியை கொடிமரத்தில் ஏற்றினர்.

    விழாவின் ஒரு பகுதியாக கொடிமரத்துக்கு அபிஷேகம், பலி, யாகம், திருவிளக்கு வழிபாடு, உபசாரம் நடந்தது. ஆண்டுக்கு ஒருமுறை பிரம்மோற்சவ விழாவையொட்டி கொடியேற்ற நாளில் மட்டும் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

    தீபாராதனையின் ஒரு பகுதியாக ரத ஆரத்தி, நட்சத்திர ஆரத்தி, தீபாராதனை, கும்ப ஆரத்தி காண்பிக்கப்பட்டது. அதன் பிறகு சத்திரம், சாமரம், கண்ணாடி, சூரியன் சந்திரன், விசாணக்கரம், கொடி போன்றவற்றை வைத்து உபசாரம் செய்யப்பட்டது.

    பின்னர் உற்சவர்களான கபிலேஸ்வரர், காமாட்சி தாயார் தனித்தனி பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 8 மணியில் இருந்து இரவு 10 மணிவரை ஹம்ச வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர்களான கபிலேஸ்வரர், காமாட்சி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    கொடியேற்றும் நிகழ்ச்சியில் கோவில் துணை அதிகாரி தேவேந்திரபாபு, உதவி அதிகாரி பார்த்தசாரதி மற்றும் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சூரிய பிரபா வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபா வாகன வீதிஉலா நடக்கிறது.

    • பிரம்மோற்சவம் இன்று தொடங்குகிறது.
    • கோவில் வளாகத்தில் புற்று மண் எடுத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ கொடியேற்றம் இன்று (சனிக்கிழமை) காலை 8.54 மணிக்கு மீன லக்னத்தில் நடக்கிறது. தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் முறையே காலை 8 மணியில் இருந்து 10 மணி வரையிலும், இரவு 8 மணியில் இருந்து 10 மணி வரையில் வாகன சேவைகள் நடக்கின்றன.

    பிரம்மோற்சவத்துக்கான அங்குரார்ப்பண உற்சவம் நேற்று மாலை நடந்தது. கோவில் வளாகத்தில் புற்று மண் எடுத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    அதில் தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன், கோவில் துணை அதிகாரி தேவேந்திரபாபு, உதவி அதிகாரி பார்த்தசாரதி, கண்காணிப்பாளர் பூபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×