என் மலர்
நீங்கள் தேடியது "theppa thiruvizha"
- தெப்பத்தில் சவுந்தரராஜா, சவுந்தரவல்லி தாயார் மற்றும் ஆண்டாள் சமேதமாக எழுந்தருளினர்.
- இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தாடிக்கொம்புவில் பிரசித்தி பெற்ற சவுந்தரராஜா பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் ஆடிப்பெருந் திருவிழா நடந்தது. விழாவையொட்டி திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து நேற்று மாலை ஆடித்திருவிழா தெப்ப உற்சவ நிகழ்ச்சி நடந்தது. இதில் தெப்பத்தில் சவுந்தரராஜா, சவுந்தரவல்லி தாயார் மற்றும் ஆண்டாள் சமேதமாக எழுந்தருளினர்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- வருடாந்திர தெப்போற்சவம் 9-ந்தேதியில் இருந்து 11-ந்தேதி வரை நடக்கிறது.
- தெப்போற்சவ விழாவின் 3 நாட்களிலும் வீதி உற்சவம் நடக்கிறது.
சித்தூர் மாவட்டம் கார்வேட்டிநகரத்தில் உள்ள ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபாலசாமி கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் 9-ந்தேதியில் இருந்து 11-ந்தேதி வரை நடக்கிறது. தற்போது கோவில் புஷ்கரணியில் புனரமைப்புப் பணி நடப்பதால் தெப்போற்சவம், புஷ்கரணியில் நடக்காமல் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உற்சவர்கள் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
9-ந்தேதி சீதா, லட்சுமணர், கோதண்டராமசாமி, 10 மற்றும் 11-ந்தேதிகளில் ருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபாலசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
மேற்கண்ட 3 நாட்கள் காலை 9 மணியில் இருந்து காலை 10.30 மணி வரை ஸ்பாபன திருமஞ்சனமும், மாலை 4 மணியில் இருந்து மாலை 6 மணி வரை வீதி உற்சவமும் நடக்கிறது. அதையொட்டி திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் இந்து தர்மபிரசார பரிஷத் சார்பில் ஆன்மிக மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் நடக்கிறது.
மேற்கண்ட தகவலை கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தெப்பத்தில் சுவாமி, அம்பாள் ஏகசிம்மாசனத்திலும், பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளினர்.
- இந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆடிப்பூர தெப்பதிருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சாமியும், அம்பாளும் ஒவ்வொரு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர தெப்ப உற்சவம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி மாலை 5.30 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள சூரியதீர்த்த தெப்பகுளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி, அம்பாள் ஏகசிம்மாசனத்திலும், பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளினர்.
பின்னர் அவர்கள் 5 முறை தெப்பக்குளத்தில் வலம் வந்தனர். பின்னர் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி சுவாமிகள் அங்குள்ள மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த தெப்ப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- மங்கள வாத்தியங்கள் முழங்க, தெப்பதில் ராஜகோபாலசாமி பவனி வந்தார்.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் புகழ் பெற்ற வைணவ தலங்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டு முழுவதும் பெருமாளுக்கு உற்சவம் நடப்பது சிறப்பாகும். இந்த கோவிலில் ஆனி தெப்ப உற்சவம் கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ராஜகோபாலசாமி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்கார வாகனங்களில் எழுந்தருளி கோவிலில் இருந்து புறப்பட்டு அரித்ரா நதி தெப்பக்குளத்தை சுற்றி வீதியுலா சென்றார். தொடர்ந்து இன்று இரவு அரித்ராநதி தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.
இதில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ருக்மணி, சத்தியபாமா சமேதராக கிருஷ்ண அலங்காரத்தில் ராஜகோபாலசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத் தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க, தெப்பதில் ராஜகோபாலசாமி பவனிவந்தார். இதற்கான ஏற்பாடுகளை வர்த்தக சங்கம் சார்பில் சங்க தலைவர் ஆனந்த், செயலாளர் அசோகன், பொருளாளர் பிரபாகரன், கோவில் நிர்வாக அலுவலர் மாதவன் மற்றும் அலுவலர்கள், தீட்சிதர்கள் செய்து இருந்தனர். தெப்ப உற்சவத்தில் மன்னார்குடி மட்டுமல்லாது சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- தென்காசி வாசுதேவநல்லூரில் உள்ளது அர்த்தநாரீஸ்வரர் என்ற சிந்தாமணிநாதர் கோவில்.
- இந்த ஆண்டுக்கான ஆனித்திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் என்ற சிந்தாமணிநாதர் கோவில் உள்ளது. சிவபெருமான் உமையொரு பாகனாக உருவம் தரித்து பக்தர்களுக்கு அருள் வழங்கும் ஸ்தலங்கள் தமிழகத்தில் இரண்டு உள்ளது. அந்த திருத்தலங்களுள் வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில் ஒன்றாகும். பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆனித்திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆனித்திருவிழா 10 நாட்கள் நடைபெற்றது. ஒன்பதாம் திருநாளான கடந்த 11-ந்தேதி தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
10-ம் திருநாளான நேற்று முன்தினம் காலை 9 மணி அளவில் நிறைவு நாள் நிகழ்ச்சியாக தீர்த்தவாரி கனக பல்லக்கில் அம்மையப்பன் வீதி உலா நடந்தது. மாலை சப்தாவரணம் மண்டகப்படிதாரரான இல்லத்து பிள்ளைமார் சமுதாயம் சார்பில் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகன சப்பரத்தில் அர்த்தநாரீஸ்வரர் முக்கிய வீதிகளில் திருவீதி உலா நடைபெற்றது. இரவு தெப்பத்தில் நாடார் உறவின்முறை சார்பில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மையப்பன் எழுந்தருளி நீராளி மண்டபத்தை 11 முறை வலம் வந்து தேரோட்டம் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூர் எஸ்.டி.கல்வி நிறுவனத்தின் தலைவர் எஸ்.தங்கப்பழம், தாளாளர் எஸ்.டி.முருகேசன், நகர பஞ்சாயத்து தலைவர் லாவண்யா இராமேஸ்வரன், கோவில் செயல் அலுவலர் அசோக்குமார், மகாத்மா காந்தி சேவா சங்க தலைவர் கு.தவமணி, அனைத்து சமுதாய மண்டகபடிதாரர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வாசுதேவநல்லூர் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- இந்த தெப்பத்திருவிழா வருகிற 14-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
- தெப்பத் திருவிழா வருகிற 13-ந்தேதி ஹரித்ராநதி தெப்பக்குளத்தில் நடைபெறுகிறது.
வைணவ கோவில்களில் சிறப்பு வாய்ந்ததாக ராஜகோபால சுவாமி கோவில் திகழ்கிறது. ஆண்டு முழுவதும் பெருமாளுக்கு உற்சவம் நடப்பது இக்கோவிலின் சிறப்பாகும். இங்கு, ஆண்டுதோறும் ஆனி மாத உற்சவம் ஹரித்ராநதி தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவமாக கொண்டாடப்படுகிறது.அதன்படி, இந்த ஆண்டு ஆனி தெப்பத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில் நிர்வாக அலுவலர் எஸ்.மாதவன், ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் பவுண்டரிகபுரம் ஆசிரமம் கே.எஸ்.ராமன் ஆகியோர் முன்னிலையில் கோவில் தீட்சிதர் செல்லப்பா தலைமையில் தீட்சிதர்கள் கொடியேற்றி வைத்தனர்.இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த தெப்பத்திருவிழா வருகிற 14-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா வருகிற 13-ந் தேதி (புதன்கிழமை) ஹரித்ராநதி தெப்பக்குளத்தில் நடைபெறுகிறது.அப்போது அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ருக்மணி, சத்தியபாமா சமேதராக கிருஷ்ண அலங்காரத்தில் ராஜகோபாலசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- இன்று மாலை வீரராகவ பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
- நாளை மற்றும் நாளை மறுநாளும் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் அமா வசை தினங்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமியை வழிபட்டு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் ஆனி அமாவாசையான இன்று சாமி தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்றிரவு முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தனர். அவர்கள் கோவில் சுற்றுப்புற பகுதியில் தங்கி இருந்தனர்.
இன்று அதிகாலை முதலே பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்துவிட்டு வீரராகவர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய திரண்டனர்.
ஒரே நேரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. அவர்கள் நீண்ட வரிசையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
கண்ணாடி மண்டபத்தில் முத்தங்கி சேவையில் எழுந்தருளிய உற்சவர் வீரராகவ பெருமாள், மூலவர் வீரராகவ பெருமாளை வழிபட்டனர்.
இன்று மாலை 6 மணியளவில் உற்சவர் வீரராகவ பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளி, மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதே போல் நாளை மற்றும் நாளை மறுநாளும் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
- இந்த கோவிலில் 108 கலச அபிஷேகம் மற்றும் தெப்ப உற்சவம் நடைபெற்றது.
- சுவாமி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவாடானை அருகே உள்ள பாண்டுகுடியில் ஆயிரவைசிய மஞ்சப்புத்தூர் சமூக சபைக்கு பாத்தியப்பட்ட லெட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 108 கலச அபிஷேகம் மற்றும் தெப்ப உற்சவம் நடைபெற்றது.
இதனையொட்டி லெட்சுமி நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சனமும், 108 கலசங்கள் வைத்து யாக வேள்விகள் நடத்தப்பட்டது. இதைதொடர்ந்து சுவாமி, ஸ்ரீதேவி பூதேவியுடன் கோவிலுக்கு தெப்பத்தில் எழுந்தருளினார். அங்கு தெப்ப உற்சவம் நடைபெற்றது.
பின்னர் சுவாமி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
- கும்பகோணத்தில் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த சக்கரபாணி கோவில் உள்ளது.
- பெருமாள், தாயாருக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கும்பகோணத்தில் சக்கரபாணி கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பவுர்ணமி நாளில் தெப்ப உற்சவம் நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி கடந்த 14-ந்தேதி இரவு கோவில் பிரகாரத்தில் உள்ள அமிர்தபுஷ்கரணியில் விஜயவல்லி, சுதர்சனவல்லி தாயாரோடு சக்கரபாணி மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
தொடர்ந்து தெப்பம் திருக்குளத்தில் மூன்று முறை வலம் வந்து பெருமாள், தாயாருக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதனை முன்னிட்டு சக்தி தீர்த்தம் என்றழைக்கப்படும் தெப்ப குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டது. பின்னர் பெரிய பேரல்களை கொண்டு மிதவை ரத மேடை அமைக்கப்பட்டு, மின் விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வள்ளி, தேவசேனா சமேத சிங்காரவேலருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்று, மிதவை ரத மேடையில் எழுந்தருளினார்கள்.
பின்னர் தெப்பக் குளத்தை சுற்றி வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசித்தனர். தெப்ப உற்சவத்தையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று(திங்கட்கிழமை) இரவு ஆளும் பல்லக்கு உற்சவத்துடன் வைகாசி விசாக திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்சன் ஆலோசனையின்படி உதவி ஆணையர் ராணி, நிர்வாக அதிகாரி சுரேஷ் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
9-ம் திருவிழாவான நேற்று முன்தினம் தேரோட்டமும், சப்தா வர்ண நிகழ்ச்சியும் நடந்தது. திருவிழாவின் இறுதி நாளான நேற்று தெப்பத்திருவிழா நடைபெற்றது.
இதனையொட்டி இரவு 8 மணிக்கு கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தட்டுவாகனங்களில் சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோர் மேளதாளத்துடன் தெப்பத்தில் எழுந்தருளினர்.
தொடர்ந்து தெப்பக்குளத்தை தெப்பம் 3 முறை சுற்றி வந்தது. முதல் சுற்றை காக்கமூர் இளைஞர்களும், 2-வது சுற்றை மேலத்தெரு இளைஞர்களும், 3-வது சுற்றை கீழத்தெரு இளைஞர்களும் வடம்பிடித்து இழுத்து வந்தனர்.
3-வது சுற்றின் முடிவில் அலங்கார தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து வாகனங்களில் சுவாமி, அம்பாள், பெருமாள் எழுந்தருளி ரதவீதிகள் வழியே உலா வந்தனர். அப்போது பக்தர்கள் திருக்கண் சார்த்தி வழிபட்டனர்.
தெப்பக்குளத்தை சுற்றி நான்குபுறமுள்ள படிக்கட்டுகளில் எண்ணெய் விளக்குகள் ஏற்றப்பட்டு தெப்பக்குள மண்டபத்தில் மின்விளக்குகள் அமைத்து தீபஅலங்கார திவ்விய தரிசன காட்சியை பல்லாயிரக்கணக்கான மக்கள் வருடம்தோறும் காணுகின்ற வகையில் தெப்பத்திருவிழா பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. குமரி மாவட்டத்திலேயே நடைபெறும் மிகப்பெரிய தெப்பத்திருவிழா இதுவேயாகும். சித்திரை திருவிழா சிறப்பு அம்சம் மார்கழி திருவிழா நடக்கும் 5, 7, 9 ஆகிய நாட்களில் மட்டும் மகா விஷ்ணு சிவபெருமானோடு வீதியுலாவிற்கு வருகின்றார்.
ஆனால் சித்திரை தெப்பத்திருவிழா நடக்கும் 10 நாட்களிலும் சிவனோடு, விஷ்ணுவும் வீதியுலா வருகை தந்து பத்தாம் நாள் தெப்பத் திருவிழாவின் போதும் தெப்பத்தில் எழுந்த ருளுகிறார். ஆக, மகா விஷ்ணுவிற்கும் முக்கியத் துவம் கொடுக் கின்ற விழாவாக சித்திரை திரு விழா அமைந்துள்ளது சிறப்பு அம்சமாகும். சித்திரை, மார்கழி திருவிழாவின்போது தேரோட்டத்தில் பங்கேற்காத மகாவிஷ்ணு தெப்பத் திருவிழாவில் மட்டும் தெப்பத்தில் எழுந்தருளுகிறார். தரணியில் பரணிபாடும் இவ்விழா பரணிநட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
மார்கழியை போல் சித்திரை திருவிழாவிலும் 10 நாட்கள் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மார்கழி திருவிழா முடிந்து 3 மாத இடைவெளிக்குப்பிறகு சித்திரை திருவிழா நடக்கின்றது. இது தாணு மாலயசாமி திருக்கோவிலின் 2-வது பெரிய திருவிழாவாகும். சுசீந்திரம் கோவில் நிர்வாகத்தோடு புகழ்பெற்ற ஆதீன மடங்களும், குறிப்பாக சுசீந்திரம் திருவாவடுதுறை ஆதீன மடமும் துணையாய் இருந்து திருவிழாவினை சிறப்பிக்கின்றன. இம்மடத்தின் சார்பில் 4 நாட்கள் சமய வளர்ச்சி மாநாடும், தேவார பாடசாலை ஆண்டுவிழாவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
வ ருடம் தோறும் சித்திரை திருவிழா 10-ம் நாள் இரவு சிவனும், விஷ்ணுவும் தெப்பத்தில் அமர்ந்து தெப்பக்குளத்தை மூன்று முறை வலம் வருகின்றனர். ஜனத்திரள் மத்தியில் வீதிகளில் உருண்டோடி வரும் தேர் போன்று, தண்ணீரில் மிதக்கின்ற நீளமான மரத்தடிகள் மீது சட்டங்கள் பொருத்தி தேர் போன்று அதை அமைத்து மின்விளக்குகள் மற்றும் பூமாலைகளால் அலங்காரம் செய்வித்து உமா-மகேஸ்வர் மற்றும் திருமால் உற்சவ மூர்த்திகளை எழுந்தருளச்செய்து நாதஸ்வர மேளதாளங்கள் இசைக்க காக்கமூர் மற்றும் சுசீந்திரம் இளைஞர்களால் வடம்பிடித்து தண்ணீரில் இழுத்து வரப்படுகிறது.
தெப்பக்குளத்தை சுற்றி நான்குபுறமுள்ள படிக்கட்டுகளில் எண்ணெய் விளக்குகள் ஏற்றப்பட்டு தெப்பக்குள மண்டபத்தில் மின்விளக்குகள் அமைத்து தீபஅலங்கார திவ்விய தரிசன காட்சியை பல்லாயிரக்கணக்கான மக்கள் வருடம்தோறும் காணுகின்ற வகையில் தெப்பத்திருவிழா பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. குமரி மாவட்டத்திலேயே நடைபெறும் மிகப்பெரிய தெப்பத்திருவிழா இதுவேயாகும்.
சித்திரை திருவிழா சிறப்பு அம்சம்
மார்கழி திருவிழா நடக்கும் 5, 7, 9 ஆகிய நாட்களில் மட்டும் மகா விஷ்ணு சிவபெருமானோடு வீதியுலாவிற்கு வருகின்றார். ஆனால் சித்திரை தெப்பத்திருவிழா நடக்கும் 10 நாட்களிலும் சிவனோடு, விஷ்ணுவும் வீதியுலா வருகை தந்து பத்தாம் நாள் தெப்பத் திருவிழாவின் போதும் தெப்பத்தில் எழுந்த ருளுகிறார். ஆக, மகா விஷ்ணுவிற்கும் முக்கியத் துவம் கொடுக் கின்ற விழாவாக சித்திரை திரு விழா அமைந்துள்ளது சிறப்பு அம்சமாகும். சித்திரை, மார்கழி திருவிழாவின்போது தேரோட்டத்தில் பங்கேற்காத மகாவிஷ்ணு தெப்பத் திருவிழாவில் மட்டும் தெப்பத்தில் எழுந்தருளுகிறார்.
தரணியில் பரணிபாடும் இவ்விழா பரணிநட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. மார்கழியை போல் சித்திரை திருவிழாவிலும் 10 நாட்கள் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மார்கழி திருவிழா முடிந்து 3 மாத இடைவெளிக்குப்பிறகு சித்திரை திருவிழா நடக்கின்றது. இது தாணு மாலயசாமி திருக்கோவிலின் 2-வது பெரிய திருவிழாவாகும். சுசீந்திரம் கோவில் நிர்வாகத்தோடு புகழ்பெற்ற ஆதீன மடங்களும், குறிப்பாக சுசீந்திரம் திருவாவடுதுறை ஆதீன மடமும் துணையாய் இருந்து திருவிழாவினை சிறப்பிக்கின்றன. இம்மடத்தின் சார்பில் 4 நாட்கள் சமய வளர்ச்சி மாநாடும், தேவார பாடசாலை ஆண்டுவிழாவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.