search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் தெப்போற்சவம் ஜனவரி 1-ந்தேதி தொடக்கம்
    X

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் தெப்போற்சவம் ஜனவரி 1-ந்தேதி தொடக்கம்

    • தெப்போற்சவம் 5-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
    • மாலை 6 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை தெப்போற்சவம் நடக்கிறது.

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் ஜனவரி 1-ந்தேதியில் இருந்து 5-ந்தேதி வரை 5 நாட்கள் கோலாகலமாக நடக்கிறது. தெப்போற்சவத்தின் முதல் நாளான ஜனவரி 1-ந்தேதி விநாயகர், சந்திரசேகரர், 2-ந்தேதி வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், 3-ந்தேதி சோமஸ்கந்தமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி 5 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    4-ந்தேதி காமாட்சியம்மன் தெப்பத்தில் எழுந்தருளி 7 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 5-ந்தேதி சண்டிகேஸ்வரர் மற்றும் சந்திரசேகரர் தெப்பத்தில் எழுந்தருளி 9 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். மேற்கண்ட 5 நாட்களில் மாலை 6 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை தெப்போற்சவம் நடக்கிறது. தெப்போற்சவத்தையொட்டி திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அன்னமாச்சாரியார் திட்டத்தின் கீழ் தினமும் பக்தி கீர்த்தனைகள் பாடப்படுகிறது.

    மேலும் திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன மகோற்சவத்தையொட்டி ஜனவரி 6-ந்தேதி காலை 5.30 மணியில் இருந்து காலை 8.30 மணி வரை நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர் உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    Next Story
    ×