search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் கோவிலில் நாளை மறுநாள் திருக்கல்யாணம்
    X

    சிறப்பு தீபாராதனை நடந்த போது எடுத்த படம்

    கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் கோவிலில் நாளை மறுநாள் திருக்கல்யாணம்

    • தினமும் கதிர்வேல் முருகனுக்கு லட்சார்ச்சனை நடந்து வருகிறது.
    • நவம்பர் 1-ந்தேதி ஊஞ்சல் உற்சவம், சாந்தாபிஷேகமும் நடக்கிறது.

    கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் கோவிலில் கந்த சஷ்டி விழாவும், லட்சார்ச்சனை விழாவும் கடந்த 25-ந்தேதி தொடங்கியது. தினமும் காலை 8 மணிக்கு கதிர்வேல் முருகனுக்கு லட்சார்ச்சனை நடந்து வருகிறது. காலை 10.30 மணிக்கு பழனி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 11.30 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், மாலை 5 மணிக்கு லட்சார்ச்சனையும், இரவு 7 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்று வருகிறது.

    நேற்று 4-வது நாள் விழாவை காலை 11.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை முடிந்ததும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வருகிற் 31-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு மூலவர் கதிர்வேல் முருகனுக்கு சிறப்பு அபிஷேகமும், 11-30 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், மாலை 6.30 மணிக்கு கார்த்திகேயர்-வள்ளி- தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. நவம்பர் 1-ந்தேதி (செவ்வாய் கிழமை) மாலை 6 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும், இரவு 7.30 மணிக்கு புஷ்பாஞ்சலி மற்றும் சாந்தாபிஷேகமும் நடைபெறுகிறது.

    Next Story
    ×