என் மலர்
நீங்கள் தேடியது "chithirai thiruvizha"
- தினசரி மண்டகப்படி விழாக்கள் நடைபெற்றது.
- மஞ்சள் நீராட்டு நிகழச்சி நடந்தது.
மணப்பாறை நகரின் மையப்பகுதியில் புகழ்பெற்ற வேப்பிலை மாரியம்மன் கோவில் உள்ளது. பழமையான இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா நடைபெறும். இதே போல் இந்த ஆண்டுக்கான விழா கடந்த 30-ந்தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து தினசரி மண்டகப்படி விழாக்கள் நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான பால்குட விழா, வேடபரி விழா ஆகியவை நடைபெற்று முடிந்த நிலையில் இறுதி விழாவான விடையாற்றி எனும் காப்புகளைதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நேற்று நடைபெற்றது. அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட மாலை, காப்பு உள்ளிட்டவைகளை மேளதாளங்கள் முழங்க கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ராஜவீதியின் வழியாக வாகைக்குளம் அருகில் உள்ள கோவில் கிணற்றை அடைந்ததும், அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் நீரில் கரைக்கப்பட்டன. அதேபோல் முளைப்பாரிகளும் நீரில் விடப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மஞ்சள் நீராட்டு நிகழச்சி நடந்தது. அதில் மஞ்சள் மற்றும் வண்ணப்பொடிகள் கலந்த நீரால் ஒருவருக்கொருவர் ஊற்றிக்கொண்டு மகிழ்சியை வெளிப்படுத்தினர்.
- 5-ந்தேதி கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் நடந்தது.
- நாளை அழகருக்கு உற்சவ சாந்தி நடைபெறுகிறது.
மதுரை கள்ளழகர் கோவிலில் நடக்கும் முக்கிய திருவிழாக்களில் பிரசித்தி பெற்றது சித்திரை திருவிழா வாகும். இந்த திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து 3-ந்தேதி சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடமிட்டு மதுரைக்கு புறப்பட்டார். சுமார் 450க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளி 4-ந்தேதி மதுரை வந்து சேர்ந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் திரளாக நின்று கள்ளழகரை தரிசித்தனர்.
மதுரை வந்த கள்ளழகருக்கு மூன்று மாவடி, தல்லாகுளம் பகுதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் எதிர்சேவை நடந்தது. இதைத்தொடர்ந்து 5-ந்தேதி அதிகாலையில் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கள்ளழகரை தரிசித்தனர். தொடர்ந்து தீர்த்தவாரியும் நடந்தது. கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தும், உற்சாக நடனமாடியும் பக்தர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.
6-ந்தேதி காலை தேனூர் மண்டகப்படியில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும், அதைத்தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் தசாவதார நிகழ்வும் நடைபெற்றது.
மறுநாள் (7-ந்தேதி) கள்ளழகர் மோகினி அவதார கோலத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அன்று இரவு 11 மணியளவில் மன்னர் சேதுபதி மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு ராஜ அலங்காரத்தில் அனந்தராயர் பல்லக்கில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை அங்கிருந்து பூப்பல்லக்கில் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவரை தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து தல்லாகுளம் கருப்பண்ணசாமி கோவிலில் விடைபெற்று அழகர்மலைக்கு கள்ளழகர் புறப்பட்டார். அப்போது பக்தர்கள் மலர்களை தூவி உற்சாகத்துடன் அவரை வழியனுப்பி வைத்தனர்.
மலைக்கு புறப்பட்ட கள்ளழகர் புதூர், மூன்று மாவடி, சுந்தரராஜன்பட்டி வழியாக நேற்று இரவு அப்பன் திருப்பதி சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்ட னர்.
இதைத்தொடர்ந்து இன்று காலை 11.10 மணியளவில் அழகர் இருப்பிடம் சென்றடைந்தார். அழகர் மலைகோட்டை வாசலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று திருஷ்டி பூசணிக்காய்களை உடைத்தும், ஆரத்தி எடுத்தும் அழகரை வரவேற்றனர்.
இதையடுத்து நாளை (10-ந்தேதி) அழகருக்கு உற்சவ சாந்தி நடைபெறுகிறது. அத்துடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.
- மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 1-ந் தேதி தொடங்கியது.
- நாளை, அழகர்கோவிலில் உற்சவ சாந்தியுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 1-ந் தேதி தொடங்கியது. 3-ந் தேதி தங்கப்பல்லக்கில் அழகர், மதுரைக்கு புறப்பட்டார். 450-க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளியபடி மதுரை வந்த கள்ளழகரை மூன்றுமாவடி, தல்லாகுளத்தில் பக்தர்கள் எதிர்சேவை அளித்து வரவேற்றனர்.கடந்த 5-ந் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவமும், மறுநாள் தேனூர் மண்டகப்படியில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும், ராமராயர் மண்டகப்படியில் தசாவதார நிகழ்வும் நடைபெற்றன.
நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று அதிகாலை 3 மணி அளவில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் இருந்து பூப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்துடன் எழுந்தருளிய கள்ளழகரை, கோவிந்தா கோவிந்தா... எனும் கோஷம் முழங்கிட பல்லாயிரகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அதை தொடர்ந்து கருப்பணசுவாமி கோவில் சன்னதியில் விடைபெற்று, அழகர் மலைக்கு கள்ளழகர் புறப்பட்டார். அப்போது பக்தர்கள் மலர் தூவியும், கண்ணீர் மல்க, மனமுருகி வணங்கி அவரை வழியனுப்பி வைத்தனர்.
பின்னர் கள்ளழகர் புதூர், மூன்று மாவடி, சுந்தரராஜன்பட்டி, அப்பன்திருப்பதி, கள்ளந்திரி, வழியாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.32 மணிக்கு மேல் அழகர் மலைக்கு சென்றடைகிறார். அதனை தொடர்ந்து நாளை, அழகர்கோவிலில் உற்சவ சாந்தியுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
- 16-ந்தேதி வேதாளம் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும்.
- 17-ந் தேதி தேரோட்டம் நடைபெறும்.
நெல்லை மாவட்டம் ஆவரைகுளத்தில் முத்தாரம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருக்கொடியினை நடேசன் ஏற்றினார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.
விழா நாட்களில் தினமும் காலை 9.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெறும். 8-ம் திருநாளான 15-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு 1,008 திருவிளக்கு பூஜையும், நள்ளிரவு 1 மணிக்கு பெருமாள் சாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறும்.
9-ம் திருநாளான 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு நாதஸ்வரம் இசை மற்றும் சிறப்பு பூஜையும், தொடர்ந்து வில்லிசையும் நடைபெறும். நள்ளிரவு 1 மணிக்கு முத்தாரம்மன் எழுந்தருளல், பத்திரகாளி அம்மன் எழுந்தருளல், வேதாளம் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறும்.
17-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 4 மணிக்கு மஞ்சள் மாரியம்மன் உலா வருதல் நிகழ்ச்சியும், மதியம் 1 மணிக்கு சுடலை ஆண்டவர் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறும். மாலை 5 மணிக்கு வாணவேடிக்கை, செண்டை மேளம் முழங்க தேரோட்டம் நடைபெறும். ஒவ்வொரு நாளும் மதியம் 12.30 மணிக்கு அன்னதானமும், மாலை 6 மணிக்கு சமய மாநாடும், தொடர்ந்து இரவு சிறப்பு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை முத்தாரம்மன் கோவில் நிர்வாக கமிட்டி மற்றும் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.
- நாளை தொடங்கி 11-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
- அம்மன் வாகன பவனி நடைபெறுகிறது.
நாகர்கோவில் அருகே உள்ள பிள்ளையார்புரத்தில் தேவி முத்தாரம்மன் கோவில் உள்ளது. இங்கு சித்திரை திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 11-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
நாளை அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், அம்மனுக்கு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும், மாலை 5 மணிக்கு பக்தி மஞ்சரி நிகழ்ச்சியும், நாதஸ்வர கச்சேரியும் நடைபெறுகிறது. இரவு 7:30 மணிக்கு சக்தி மகளிர் மன்றத்தாரின் பஜனையும், 8 மணிக்கு அதிர்ஷ்ட பிள்ளையாருக்கு பூஜையும், 9 மணிக்கு குருசாமிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், 10 மணிக்கு சுடலைமாடசாமிக்கு பொங்கலிட்டு சிறப்பு பூஜையும், 11 மணிக்கு வில்லிசையும், நள்ளிரவு 1:30 மணிக்கு சாஸ்தா சாமிக்கு அலங்கார பூஜையும், பெருமாள் சாமிக்கு அலங்கார பூஜையும் நடக்கிறது.
நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு வில்லிசையும், மதியம் 1.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும், பைரவநாதன் பூஜையும், அன்னதானமும், மாலை 4 மணிக்கு நாசிக்டோல் நிகழ்ச்சியும், 5.30 மணிக்கு கால சாமிக்கு சிறப்பு பூஜையும், 6.30 மணிக்கு பக்தர்கள் அம்பாளை வரவேற்கும் முகமாக குத்து விளக்கு ஏற்றி மஞ்சள் நீராட்டுதல் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து அம்மன் வாகன பவனியும் நடைபெறுகிறது. இந்த வாகன பவனியை என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., பிள்ளையார்புரம் சிவந்திஆதித்தனார் கல்லூரி தலைவர் என்.காமராஜ், செயலாளர் சி.ராஜன் மற்றும் லயன். டி.உதயகுமார் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள். வாண வேடிக்கையும் நடைபெறுகிறது.
இரவு 9.30 மணிக்கு உற்சவமூர்த்திக்கு ஊஞ்சல் சேவை, 10.30 மணிக்கு பத்திரகாளி அம்மனுக்கு வில்லிசையும், நள்ளிரவு 12. 30 மணிக்கு பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும், உஜ்ஜைனி மாகாளி அம்மனுக்கு பூஜையும், மாரி அம்மனுக்கு பூஜையும் நடைபெறுகிறது.
11-ந் தேதி அதிகாலை 3.30 மணிக்கு வில்லிசையும், காலை 7 மணிக்கு சிவ சுடலைமாட சாமிக்கு அலங்கார பூஜையும், சாமிகளுக்கு அமுது படைத்து ஒடுக்கு பூஜையும் நடக்கிறது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கவுரவ தலைவர் ஆர்.சுரேஷ்குமார், தலைவர் சி.பொன்ராகவன், உதவி தலைவர் சி.ராஜேஷ் என்ற வீரமணி, செயலாளர் ஆர்.கனகராஜன், உதவி செயலாளர் டி.முத்துகுமார், பொருளாளர் பி. பரமேஸ்வரன், சட்ட ஆலோசகர் டி.தங்கசுவாமி மற்றும் ஊர் மக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.
- பக்தர்கள் குடும்பம், குடும்பமாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.
- கள்ளழகருக்கு சக்கரை தீபம் ஏற்றி வழிபட்டனர்.
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் அமைந்துள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில் கடந்த 1-ந்தேதி சித்திரை திருவிழா தொடங்கியது. அன்று முதல் 2 நாட்கள் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் காட்சியளித்தார்.
அதனைத்தொடர்ந்து 3-ந்தேதி மாலை பெருமாள் கள்ளழகர் வேடம் தரித்து அங்குள்ள பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி சன்னதி முன்பு உத்தரவு பெற்று கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார்.
கள்ளந்திரி, அப்பன் திருப்பதி என வழி நெடுகிலும் உள்ள மண்டகப் படிகளில் எழுந்தருளினார். அப்போது திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
மறுநாள்(4-ந்தேதி) மதுரை மூன்று மாவடிக்கு கள்ளழகர் வருகை தந்தார். அப்போது பக்தர்கள் அவரை எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளி தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு சென்றடைந்தார்.
மறுநாள் (5-ந்தேதி) அதிகாலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் புறப்பட்ட கள்ளழகர் அதிகாலை 6 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
அதனைத்தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அன்று இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு இரவு விடிய விடிய திருவிழா நடந்தது.
மறுநாள் (6-ந்தேதி) வைகையாற்றில் உள்ள தேனூர் மண்டபத்தில் சேஷ வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். பின்னர் அங்கு திருமஞ்சனமாகி தங்க கருட வாகனத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் விடிய, விடிய தசாவதார நிகழ்ச்சி நடந்தது. கள்ளழகர் முத்தங்கி சேவை, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராமர் அவதாரம், கிருஷ்ணர் அவதாரம், மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார். நேற்று (7-ந்தேதி) மோகினி அலங்காரத்தில் பல்வேறு மண்டகப்படி களில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சிய ளித்தார்.
இன்று (8-ந்தேதி) அதிகாலை 2.30 மணிக்கு அனந்தராயர் பூப்பல்லக்கில் கள்ளழகர் தமுக்கத்தில் உள்ள கருப்பண்ணசாமி கோவிலில் எழுந்தருளினார். அங்கு அவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் வையாழியாக உருமாறிய கள்ளழகர் அழகர் மலைக்கு புறப்படும் வைபவம் நடந்தது.
தல்லாகுளம், அவுட்போஸ்ட் ஆகிய பகுதி களில் உள்ள ஒவ்வொரு மண்டகப்படிகளிலும் எழுந்தருளிய கள்ளழகர் காலை 6 மணிக்கு அவுட் போஸ்ட் மாரியம்மன் கோவிலிலும், 7 மணிக்கு அம்பலக்காரர் மண்டபத்திலும் எழுந்தருளினார்.
இதையொட்டி ரேஸ்கோர்ஸ், புதூர், தாமரைதொட்டி, ரிசர்வ்லைன், டி.ஆர்.ஓ. காலனி ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பம், குடும்பமாக வந்து சாமி தரிசனம் செய்தனர். அப்போது கள்ளழகருக்கு சக்கரை தீபம் ஏற்றி வழிபட்டனர். திரளான பக்தர்கள் "கோவிந்தா...கோவிந்தா..." கோஷமிட்டு கள்ளழகரை வழியனுப்பி வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து கள்ளழகர் இரவு 7 மணியளவில் மூன்று மாவடி, கடச்சனேந்தல் வழியாக அப்பன் திருப்பதிக்கு இரவு சென்றடைகிறார். அங்கு இன்று இரவு விடிய, விடிய திருவிழா நடைபெறுகிறது.
கடந்த 3-ந்தேதி கோவிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகர் மதுரை சித்திரை திருவிழாவை முடித்துக் கொண்டு நாளை காலை 11 மணியளவில் தனது இருப்பிடம் சேருகிறார்.
- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமராயர் மண்டபத்தில் கூடி இருந்தனர்.
- இன்று கள்ளர் திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருள்கிறார்.
சைவ- வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக மதுரை சித்திரை திருவிழா நடந்து வருகிறது. முதலில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தொடங்கிய சித்திரை திருவிழாவில் கடந்த 2-ந் தேதி மீனாட்சி திருக்கல்யாணம், மறுநாள் தேரோட்டமும் நடந்தது.
அழகர்கோவில் சித்திரை பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் 5-ந் தேதி நடந்தது. தங்கக்குதிரை வாகனத்தில் பச்சைப்பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
நேற்று முன்தினம் காலை வீரராகவ பெருமாள் கோவிலில் இருந்து கருட வாகனத்தில் புறப்பாடாகி மதுரை வண்டியூரில் உள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அனுமன் கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு பக்தர்களின் அங்கப்பிரதட்சணம் நடந்தது. பின்னர் மேள, தாளம் முழங்க மதுரை ஆழ்வார்புரத்தில் உள்ள ராமராயர் மண்டபத்துக்கு கிளம்பினார்.
அங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு மேல் தசாவதார நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் முத்தங்கி சேவையும் அதை தொடர்ந்து மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம் நடந்தது.
இறுதியாக நேற்று காலை மோகினி அவதாரத்தில் அழகர் காட்சி தந்தார். விடிய, விடிய தசாவதாரம் நிகழ்ச்சி அங்கு நடந்தது. இதனை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமராயர் மண்டபத்தில் கூடி இருந்தனர்.
நேற்று மதியம் 12 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் ஆனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருளினார். அதை தொடர்ந்து கோரிப்பாளையம் வழியாக இரவு 11 மணிக்கு தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமானார்.
இன்று (திங்கட்கிழமை) அதிகாலையில் கள்ளர் திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருள்கிறார். அதே திருக்கோலத்துடன் கருப்பணசாமி கோவில் சன்னதியில் இருந்து இன்று அழகர்மலைக்கு புறப்படுகிறார்.
- நாளை காலை 6 மணிக்கு மோகன அவதார கோலத்தில் கள்ளழகர் வீதி உலா வருகிறார்
- 8-ந்தேதி அதிகாலை 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளுகிறார்.
- 9-ந்தேதி காலை கள்ளழகர் இருப்பிடம் போய் சேருகிறார்.
மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நேற்று காலை நடந்தது. இதற்காக கடந்த 3-ந்தேதி அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் வேடம் பூண்டு பெருமாள் தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார்.
கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, கடச்சனேந்தல் உள்ளிட்ட இடங்களை கடந்து நேற்று முன்தினம் (4-ந்தேதி) மூன்று மாவடிக்கு வந்தார். அங்கு கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர் சேவை நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்றனர்.
பின்பு தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு வந்தார். அங்கு நள்ளிரவு 12 மணியளவில் திருமஞ்சனமாகி தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிந்து நேற்று அதிகாலை தல்லாகுளம் கருப்பணசாமி கோவில் அருகில் ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருளினார்.
அங்கிருந்து அதிகாலை 3 மணி அளவில் தங்க குதிரையில் அமர்ந்தபடி வைகை ஆற்றுக்கு வந்தார். பின்னர் அதிகாலை 5.52 மணியளவில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார். இதனை காண 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டனர்.
சுமார் ஒரு மணி நேரம் அங்கு அமைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன் பின்னர் மதிச்சியம் ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது கள்ளழகர் வேடமணிந்த பக்தர்கள் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்வித்தனர்.
இரவு 9 மணி அளவில் வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசனம் செய்தனர்.
வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் கள்ளழகருக்கு இன்று காலை திருமஞ்சனம் நடந்தது. அதனைத் தொடர்ந்து ஏகாந்த சேவை, பக்தி உலாத்துதல் நடந்தன.
அதனைத் தொடர்ந்து கள்ளழகர் சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது திரளான பக்தர்கள் சர்க்கரை தீபம் எடுத்து வழிபட்டனர். பின்பு அங்கிருந்து புறப்பட்ட கள்ளழகர் தேனூர் மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு கருட வாகனத்தில் எழுந்தருளினார்.
பின்னர் மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாப விமோசனம் கொடுக்கும் நிகழ்வு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். மாலை 3.30 மணியளவில் அனுமன் கோவிலில் கள்ளழகர் எழுந்தருள்கிறார். அப்போது பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்து வழிபாடு நடத்துகின்றனர்.
இரவில் கள்ளழகர் மீண்டும் ராமராயர் மண்டகப்படிக்கு வருகிறார். அங்கு இரவு 11 மணி முதல் நாளை(7-ந்தேதி) காலை வரை விடிய, விடிய தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது.
மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவ தாரம், நரசிம்ம அவதாரம், வாமன அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், பலராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், மோகன அவதாரம் ஆகிய திருக்கோலங்களில் அழகர் காட்சி அளிக்கிறார்.
நாளை காலை 6 மணிக்கு மோகன அவதார கோலத்தில் கள்ளழகர் வீதி உலா வருகிறார். பகல் 12 மணிக்கு ராமராயர் மண்ட பத்தில் அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருள்கிறார்.
நாளை இரவு 11 மணிக்கு தல்லாகுளத்தில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி 8-ந்தேதி அதிகாலை 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளுகிறார். அதே அதே கோலத்தில் கருப்பண சாமி கோவில் சன்னதியில் இருந்து அழகர் மலைக்கு புறப்படுகிறார்.
மூன்றுமாவடி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக 9-ந்தேதி காலை இருப்பிடம் போய் சேருகிறார்.
+2
- ஆயிரகணக்காண பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.
- நாளை தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
திருவையாறில் பழமைவாய்ந்த ஐயாறப்பர் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 25 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது . விழா நாட்களில் தன்னைத்தான பூஜித்தல், சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை, தேரோ ட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான சப்தஸ்தான பெருவிழாவை முன்னிட்டு இன்று காலை ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வர் சுயசாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கில் எழுந்தருளி மேளதாளம், நாதஸ்வர இன்னிசை கச்சேரி, சிவாச்சாரியர்கள் வேத பாராயணம் முழங்க கோவிலில் இருந்து ஏழூருக்கு புறப்பாடாகும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரகணக்காண பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து ஐயாறப்பர் மற்றும் நந்திகேஸ்வரர் பல்லக்குகள் திருவையாறில் இருந்து புறப்பட்டு திருப்பழனத்துக்கு சென்றன. பின்னர் அங்குள்ள பல்லக்குடன் திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, தில்லைஸ்தானம் ஆகிய ஊர்களுக்கு சென்று அந்தந்த பல்லக்குடன் தில்லைஸ்தானத்துக்கு இன்று இரவு சென்றடையும். அங்கு 7 பல்லக்குகளும் முகாமிடும். இந்த பல்லக்குகள் ஒவ்வொன்றாக நாளை காலை முதல் புறப்பட்டு திருவையாறு தேரடி திடலை பிற்பகலில் சென்றடையும். பின்னர் மாலையில் தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
பொம்மை பூ போடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் ஏழூர் பல்லக்குகளும் ஐயாறப்பர் கோவிலுக்கு சென்று தீபாரதனை காண்பிக்க ப்படும். பின்னர் அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும். விழா ஏற்பாடு களை தருமபுர ஆதீன சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். மேலும் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
- காலப்போக்கில் ஆயிரம் பொன்சப்பரத்தில் எழுந்தருள்வது நின்று போனது.
- நூறு ஆண்டுகளுக்கு பிறகு கள்ளழகர் சப்பரத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் சைவத்தையும், வைணவத்தையும் இணைக்கும் விழாக்களாக மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. முதலில் தேனூரில்தான் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடந்துள்ளது. அதனை மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சியாக மாற்றியுள்ளார்.
அப்போது மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தேரோட்டம் நடப்பது போல், பெருமாளுக்கும் தேர் செய்ய எண்ணினார். அதற்கு பல ஆண்டுகளாகும் என்பதால் 3 மாதத்திற்குள் சப்பரத் தேர் செய்ய எண்ணினார் மன்னர்.
இதற்காக மர ஸ்தபதியையும் அழைத்து சப்பரத்தேர் செய்ய உத்தர விட்டுள்ளார். அதன்படி மர ஸ்தபதியும் மன்னர் மனம் மகிழுமாறும், பிரமிப்பாகவும் சிறிய சப்பரத்தேர் செய்து முடித்துள்ளார். அந்த ஆண்டே சுந்தரராஜ பெருமாள் சப்பரத்தேரில் எழுந்தருளிய பின் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளியுள்ளார்.
குறித்த காலத்திற்குள் செய்து முடித்த மர ஸ்தபதியை பாராட்டி ஆயிரம் பொற்காசுகள் மன்னர் வழங்கி பாராட்டியுள்ளார். அன்றிலிருந்து சப்பரத்தேர் ஆயிரம் பொன் சப்பரம் என அழைக்கப்பட்டது. அதேபெயரால் தற்போதும் அழைக்கப்படுகிறது. காலப்போக்கில் ஆயிரம் பொன்சப்பரத்தில் எழுந்தருள்வது நின்று போனது.
இதற்குரிய சப்பரத்தேர் பராமரிப்பின்றி தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் முன்புள்ள மண்டகப் படியில் ஆயிரம் பொன் சப்பரத் தேர் இருந்தது.
தற்போது அந்த சப்பர தேர் சீரமைக்கப்பட்டது.அதில் கள்ளழகர் எழுந்தருள ஏற்பாடு செய்யப்பட்டது. நூறு ஆண்டுகளுக்கு பிறகு கள்ளழகர் சப்பரத் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.