என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளழகர் திருவிழா"

    • கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் வருகிற 12-ந் தேதி நடைபெற உள்ளது.
    • வைகை அணையில் இருந்து 216 மி.கன அடி நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    ஆண்டிபட்டி:

    மதுரையில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்ற நிலையில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் வருகிற 12-ந் தேதி நடைபெற உள்ளது.

    இதற்காக வைகை அணையில் இருந்து முன்கூட்டியே மதுரையைச் சென்று சேரும் வகையில் தண்ணீர் திறப்பது வழக்கம். அதன்படி இன்று மாலை 6 மணி முதல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையில் இருந்து 216 மி.கன அடி நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று மாலை 1000 கன அடி வீதம் தண்ணீர் ஆற்றின் வழியே திறக்கப்படும். அணையில் இருந்து வெளியேறும் நீர் படிப்படியாக குறைக்கப்பட்டு மே 12-ந் தேதி காலை 6 மணிக்கு நிறுத்தப்படும். ஆற்றின் வழியாக தண்ணீர் செல்வதால் கரையோர பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 55.27 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 25 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் தேவைக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 2762 மி.கன அடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 114.35 அடியாக உள்ளது. வரத்து 197 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 1618 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 37.50 அடியாக உள்ளது. வரத்து 68 கன அடி.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 100 அடி. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    ஆண்டிபட்டி 13.6, வீரபாண்டி 26.8, பெரியகுளம் 58, மஞ்சளாறு 12, சோத்துப்பாறை 5, வைகை அணை 46.8, கூடலூர் 11.6, பெரியாறு அணை 14.8, தேக்கடி 18.2, சண்முகா நதி அணை 7.4, அரண்மனைபுதூர் 2.2, மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • சித்திரை திருவிழாவை தொடர்ந்து விவசாயம் செழிக்கும் வகையில் தொடர்ந்து மழை பெய்ய வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர்.
    • முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 115.35 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. இதற்காக வைகை அணையிலிருந்து கடந்த 19ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது அந்த தண்ணீர் மதுரையை வந்தடைந்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சித்திரை திருவிழாவை தொடர்ந்து விவசாயம் செழிக்கும் வகையில் தொடர்ந்து மழை பெய்ய வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர். 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டு படிப்படியாக நீர் திறப்பு குறைக்கப்பட்டது. அதன்படி இன்று 272 கனஅடி நீர் மட்டுமே திறக்கப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து இல்லை. நீர்மட்டம் 58.07 அடியாக குறைந்துள்ளது.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 115.35 அடியாக உள்ளது. அணைக்கு 209 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து 105 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 104.10 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவிற்காக வைகை அணையிலிருந்து கடந்த 19ம் தேதி 1000 கனஅடி தண்ணீர்திறக்கப்பட்டது.
    • முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 115.30 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    மதுரையில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவிற்காக வைகை அணையிலிருந்து கடந்த 19ம் தேதி 1000 கனஅடி தண்ணீர்திறக்கப்பட்டது. தொடர்ந்து 4 நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் பின்னர் இது படிப்படியாக குறைக்கப்பட்டு முற்றிலும் நிறுத்தப்பட்டது.

    கடந்த 4 நாட்களில் மட்டும் மதுரை கள்ளழகர் திருவிழாவிற்காக வைகை அணையிலிருந்து 216 மி.கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணி துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 57.64 அடியாக உள்ளது. நீர் இருப்பு 3166 மி.கனஅடியாக உள்ளது.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 115.30 அடியாக உள்ளது. வரத்து 83 கனஅடியாகவும், திறப்பு 105 கனஅடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 1751 மி.கனஅடியாக உள்ளது.

    ×