என் மலர்
நீங்கள் தேடியது "வைகை அணை"
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 32.05 அடியாக உள்ளது.
- சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 70.39 அடியாக உள்ளது.
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதி மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மழைப்பொழிவு இல்லாமல் இருந்தது. மேலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்ததால் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்று விட்டது.
இந்த நிலையில் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இதேபோல் தேனி மாவட்டத்திலும் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. மேலும் வருசநாடு, பெரியகுளம், முருகமலை, தேவதானப்பட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அடிக்கடி காட்டுத்தீ பற்றி எரிந்து அரிய வகை மூலிகைகள், மரங்கள் எரிந்து நாசமானது.
காட்டுத்தீயை அணைக்க வனத்துறையினர் போராடினர். இருந்தபோதும் தொடர்ந்து பற்றி எரிந்ததால் விவசாயிகள் அச்சம் அடைந்தனர். இந்த நிலையில் தற்போது பெய்துள்ள மழையால் காட்டுத்தீ முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வனப்பகுதியில் ஈரப்பதம் காணப்படுகிறது. இதனால் வன விலங்குகள் வெளியேறும் அபாயம் நீங்கி உள்ளது.
நீர் வரத்தின்றி காணப்பட்ட முல்லைப்பெரியாறு அணைக்கு 54 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 322 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 114.10 அடியாக உள்ளது. 1576 மி.கன அடி. நீர் இருப்பு உள்ளது.
இதேபோல் வைகை அணைக்கும் நீர்வரத்து தொடங்கி உள்ளது. இன்று காலை 177 கன அடி நீர் வந்த நிலையில் மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 422 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3531 மி.கன அடி. நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 32.05 அடியாக உள்ளது. 5 கன அடி நீர் வருகிறது. 45 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 70.39 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 30.70 அடியாக உள்ளது. வரத்து 11 கன அடி. திறப்பு இல்லை.
ஆண்டிபட்டி 4.8, வீரபாண்டி 4.6, பெரியகுளம் 12, மஞ்சளாறு 7, சோத்துப்பாறை 9, வைைக அணை 8.2, போடி 2.8, உத்தமபாளையம் 5.6, கூடலூர் 2.6, பெரியாறு அணை 1.2, தேக்கடி 11.8, சண்முகாநதி 6.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- கடந்த 2017-ம் ஆண்டு வைகை அணையை பாதுகாக்க வலியுறுத்தி ஏற்கனவே போராட்டம் நடத்தினார்.
- மழைக்காலங்களில் விரைவில் தண்ணீர் நிரம்பி உபரியாக வீணாகி செல்கிறது.
ஆண்டிபட்டி:
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் நர்மதா (வயது 46). இவருக்கு திருமணமாகி நந்தகுமார் என்ற கணவரும், 18 வயது மகனும் உள்ளனர். ராஜபாளையத்தை பூர்வீகமாக கொண்ட இவரது தந்தை ரெயில்வேயில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
சமூக ஆர்வலரான இவர் நீர் நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு வைகை அணையை பாதுகாக்க வலியுறுத்தி ஏற்கனவே போராட்டம் நடத்தினார்.
தற்போது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து வைகை அணை போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து நிறைவேற்றப்படாமல் இருந்த அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் போராட்டம் நடத்தினார். மேலும் கண்ணகி நகர் மக்கள் பிரச்சனை உள்பட பல்வேறு சமூக பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்தியுள்ளார்.
இந்நிலையில் தேனி மாவட்டத்துக்கு வந்த நர்மதா வைகை அணை நீரில் இறங்கி வழிபட்டு தனது போராட்டத்தை தொடங்கினார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், 5 மாவட்ட மக்களின் நீராதாரமாக உள்ள வைகை அணையை பாதுகாக்கவும், இதனை தூர்வாரினால் கூடுதல் தண்ணீர் தேக்க முடியும் என்பதை அரசுக்கு வலியுறுத்தி ஏற்கனவே போராட்டம் நடத்தினேன். ஆனால் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து 8 ஆண்டுகளாக எந்த பணிகளும் மேற்கொள்ளவில்லை.
இதே போல் அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்றக்கோரி போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து அந்த திட்டத்துக்கு தமிழக அரசு ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்து ஒரு பகுதியை நிறைவேற்றி உள்ளனர். ஆனால் வைகை அணையை தூர் வார ரூ.89 லட்சம் ஒதுக்கினாலே போதுமானது. ஆனால் இந்த நிதியை ஒதுக்காமல் வைகை அணையை தூர் வாராமல் வைத்துள்ளனர்.
இதனால் மழைக்காலங்களில் விரைவில் தண்ணீர் நிரம்பி உபரியாக வீணாகி செல்கிறது. மேலும் வைகை அணை நீர் வெளியேறும் வரத்து வாய்க்கால் பகுதிகளும் தூர் வாரப்படாமல் உள்ளது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். அதிகாரிகள் உத்திரவாதம் அளிக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டேன் என்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர்.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.20 அடியாக குறைந்துள்ளது.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.65 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் மதுரை, தேனி மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
நீர்பிடிப்பு பகுதியில் மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து சரியத்தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அணையில் முறைநீர் பாசனம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சில நாட்கள் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதும், அதனைத் தொடர்ந்து நிறுத்தப்படுவதை என நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
அதன்படி இன்று காலை பாசனத்திற்கான தண்ணீர் நிறுத்தப்பட்டு மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்பட்டது. அணைக்கு 79 கன அடி நீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 62.01 அடியாக சரிந்துள்ளது. 3995 மி.கன அடி. நீர் இருப்பு உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.20 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு 61 கன அடி நீர் வருகிற நிலையில் 356 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்யாததால் அணையின் நீர்மட்டம் உயராமல் உள்ளது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மழை பெய்தால் மட்டுமே வழக்கம்போல் ஜூன் மாதத்தில் முதல்போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அணையில் 1943 மி.கன அடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.65 அடியாக உள்ளது. 6 கன அடி நீர் வருகிறது. 55 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 79.70 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 25 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 26.25 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.
- மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக திறக்கப்பட்ட நீர் முறைநீர் பாசன அடிப்படையில் நிறுத்தப்பட்டது.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.55 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. தற்போது மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக திறக்கப்பட்ட நீர் முறைநீர் பாசன அடிப்படையில் நிறுத்தப்பட்டது.
இந்த மாவட்டங்களில் 2-ம்போக பாசனத்திற்காக கால்வாய் வழியாக டிசம்பர் 18ந் தேதி முதல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. முறைப்பாசன அடிப்படையில் சில நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்டும் பின்னர் சில நாட்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது.
கடந்த 10ந் தேதி முதல் கால்வாய் வழியாக வினாடிக்கு 450 கன அடி நீர் திறக்கப்பட்டு பின்னர் 525 கன அடியாக உயர்த்தப்பட்டது. நேற்று காலை கால்வாய் வழியாக திறக்கப்பட்ட பாசன நீர் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் கிருதுமால் நதி குடிநீர் தேவைக்காக 300 கன அடி மற்றும் மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் என மொத்தம் 369 கன அடிநீர் திறக்கப்படுகிறது. அணைக்கு 170 கனஅடி நீர் வருகிறது. நீர்மட்டம் 63.25 அடியாக உள்ளது. அணையில் 4255 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 117.60 அடியாக உள்ளது. 143 கன அடி நீர் வருகிற நிலையில் 444 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.55 அடியாக உள்ளது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 90.69 அடியாக உள்ளது. 3.8 கன அடி நீர் வருகிறது. 25 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 30.30 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 14.47 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.
- கடந்த சில நாட்களாக பாசனத்திற்கான நீர் நிறுத்தப்பட்டு மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 45.60 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. பருவமழை கைகொடுத்ததால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக பாசனத்திற்கான நீர் நிறுத்தப்பட்டு மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை முதல் பாசனத்திற்கு 450 கனஅடி நீருடன் சேர்த்து 519 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 508 கனஅடி நீர் வருகிறது.
அணையின் நீர்மட்டம் 65.42 அடியாக உள்ளது. 4724 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 120.55 அடியாக உள்ளது. 104 கனஅடி நீர் வருகிறது. 556 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 2737 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 45.60 அடியாக உள்ளது. 21 கனஅடி நீர் வருகிறது. 75 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 107.58 அடியாக உள்ளது. 2.5 கனஅடி நீர் வருகிறது. 25 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 37.50 அடியாக உள்ளது. 6 கனஅடி நீர் வருகிறது. 14.47 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
போடி 0.4, உத்தமபாளையம் 0.8, கூடலூர் 1.2, சண்முகாநதி 3.4 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.40 அடியாக உள்ளது.
- மஞ்சளாறு பகுதியில் மட்டும் 5 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
வைகை அணைக்கு முல்லைப்பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருசநாடு, மூல வைகையாறு ஆகியவற்றின் மூலம் நீர்வரத்து அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை மற்றும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் 12ந் தேதி 49 அடியாக இருந்த நீர்மட்டம் 16ந் தேதி 60.79 அடியாக உயர்ந்தது. அதனைத் தொடர்ந்தும் நீர்வரத்து அதிகரித்ததால் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 64.40 அடியை எட்டியுள்ளது. அணைக்கு 1546 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1499 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 4499 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.40 அடியாக உள்ளது. 664 கன அடி நீர் வருகிற நிலையில் 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 4568 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.90 அடியாக உள்ளது. வரத்து 66 கன அடி. திறப்பு 90 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 31.29 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. மஞ்சளாறு பகுதியில் மட்டும் 5 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- சுற்றுலாப் பயணிகள் தரைப்பாலத்தை கடக்க தடை.
- நீர் இருப்பு 3023 மி.கன அடியாக உள்ளது.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.
மேலும் தேனி, மதுரை மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது. அணையின் நீர்மட்டம் வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த மாத தொடக்கத்தில் 65 அடியை எட்டியது.
முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு மழை அளவு படிப்படியாக குறையத் தொடங்கியது.
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மற்றும் அவ்வப்போது பெய்யும் மழை நீரால் வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 56.82 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 612 கன அடி தண்ணீர் வருகிறது. நீர் இருப்பு 3023 மி.கன அடியாக உள்ளது.
இந்நிலையில் வைகை அணையில் இருந்து சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கிருதுமால் உபவடி நிலத்திற்கு குடிநீர் தேவைக்காக சிறப்பு நிகழ்வாக தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி வைகை அணையில் கூடுதல் இருப்பாக உள்ள 1.68 டி.எம்.சி. தண்ணீரில் இன்று முதல் 8 நாட்களுக்கு வினாடிக்கு 650 கன அடி வீதம் 0.45 டி.எம்.சி.க்கு மிகாமல் தண்ணீரின் இருப்பு மற்றும் வரத்தை பொறுத்து நீர் திறந்து விடப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை அணையில் இருந்து கூடுதல் பாசனத்துக்கான தண்ணீர் மற்றும் குடிநீருக்கு என 2219 கன அடி நீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை ஆற்றில் நீர் கரைபுரண்டு ஓடுகிறது.

அணையின் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்வதால் இரு புறங்களிலும் அடைக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் செல்ல அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.
தரைப்பாலத்தை கடந்து பூங்காவிற்கு செல்ல முடியாமல் அவர்கள் ஏமாற்றமடைந்தனர். இருந்த போதும் சிலர் வாகனங்கள் மூலம் பாலத்தை சுற்றி எதிர்புறம் சென்றனர்.
எனவே கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி நீர்வளத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஆற்றை கடக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என எச்சரித்துள்ளனர்.
அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- மதுரை மாநகர் குடிநீர் தேவைக்காக மட்டும் 69 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 120.15 அடியாக உள்ளது.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த மாத தொடக்கத்தில் 65 அடியை எட்டியது.
முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு மழை அளவு படிப்படியாக குறையத் தொடங்கியது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மற்றும் அவ்வப்போது பெய்யும் மழை நீரால் வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 56.56 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 568 கன அடி தண்ணீர் வருகிறது. தற்போது மதுரை மாநகர் குடிநீர் தேவைக்காக மட்டும் 69 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 2978 மி.கன அடியாக உள்ளது.
இந்நிலையில் வைகை அணையில் இருந்து சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கிருதுமால் உபவடி நிலத்திற்கு குடிநீர் தேவைக்காக சிறப்பு நிகழ்வாக தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வைகை அணையில் கூடுதல் இருப்பாக உள்ள 1.68 டி.எம்.சி. தண்ணீரில் நாளை முதல் 8 நாட்களுக்கு வினாடிக்கு 650 கன அடி வீதம் 0.45 டி.எம்.சி.க்கு மிகாமல் தண்ணீரின் இருப்பு மற்றும் வரத்தை பொறுத்து நீர் திறந்து விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 120.15 அடியாக உள்ளது. வரத்து 320 கன அடி. திறப்பு 755 கன அடி. இருப்பு 2658 மி.கன அடியாக உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.20 அடியாக உள்ளது. வரத்து 54 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 399.31 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 122.83 அடி. வரத்து 11.5 கன அடி. திறப்பு 30 கன அடி. இருப்பு 94.34 மி.கன அடி. சண்முகாநதி அணை நீர்மட்டம் 50.40 அடி. வரத்து இல்லாத நிலையில் பாசன தேவைக்காக 15 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 72.78 அடியாக உள்ளது.
சோத்துப்பாறையில் 2.6, பெரியாறு அணையில் 1.4, தேக்கடி 3.8 மி.மீ. மழை அளவு பதிவானது.
- அணைக்கு 1183 கன அடி நீர் வருகிறது. 3381 மி. கன அடி நீர் இருப்பு உள்ளது.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.65 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. பருவமழை கைகொடுத்த நிலையில் 71 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 65 அடி வரை உயர்ந்தது.
அதனைத் தொடர்ந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாய பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மதுரை மாவட்ட பூர்வீக பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் 1699 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. மேலும் தற்போது நீர்பிடிப்பு பகுதியில் மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டமும் வேகமாக சரிந்து 58.79 அடியாக குறைந்துள்ளது.
அணைக்கு 1183 கன அடி நீர் வருகிறது. 3381 மி. கன அடி நீர் இருப்பு உள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.65 அடியாக உள்ளது. 395 கன அடி நீர் வருகிற நிலையில் தமிழக பகுதிக்கு 967 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 2955 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.30 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறையின் அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 30 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
தேக்கடியில் மட்டும் 0.4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.65 அடியாக உள்ளது.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.30 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. பருவமழை கைகொடுத்ததால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 65 அடி வரை எட்டியது. அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
பின்னர் மதுரை மாவட்ட பூர்வீக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 58.79 அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் 569 கன அடியில் இருந்து 1699 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அணைக்கு 1183 கனஅடி நீர் வருகிறது. 3381 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.65 அடியாக உள்ளது. 395 கன அடிநீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 967 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 2955 மி. கன அடி இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.30 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் 30 கன அடி.
தேக்கடியில் மட்டும் 0.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 122.15 அடியாக உள்ளது.
- கும்பக்கரை அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றுத்துடன் திரும்பினர்.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் முல்லை பெரியாறு, கொட்டக்குடி ஆறு, வராகநதி உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளும் நிரம்பி உள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வருசநாடு, வெள்ளிமலை, அரசரடி, கடமலைக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் மூல வைகையாறு தடுப்பணையில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் நீர்வரத்து அதிகமாகக்கூடும் என நீர் வளத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ, ஆற்றைக் கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். நீர்வரத்து அதிகரித்த நிலையில் வைகை அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 569 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு 1171 கனஅடி நீர் வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த வைகை அணை நீர்மட்டம் மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 58.23 அடியாக உள்ளது. அணையில் 3273 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 122.15 அடியாக உள்ளது. 420 கனஅடி நீர் வருகிற நிலையில் தமிழக பகுதிக்கு 1000 கனஅடி நீர்திறக்கப்படுகிறது. அணையில் 3054 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.30 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 126.28 அடியில் பல நாட்களாக நீடித்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் 30 கனஅடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.
கொடைக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான வட்டக்கானல், வெள்ளக்கவி ஆகிய இடங்களில் பெய்த தொடர் மழை காரணமாக பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இன்றும் 4வது நாளாக வெள்ளப்பெருக்கு குறையாமல் இருப்பதால் அருவி பகுதிக்கு செல்ல தடை தொடரும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
இதனால் கும்பக்கரை அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றுத்துடன் திரும்பினர்.
வீரபாண்டி 2.8, உத்தமபாளையம் 1.6, கூடலூர் 2.2, பெரியாறு அணை 0.6, தேக்கடி 1.4, சண்முகாநதி 1.8 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.
- மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 3699 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 123.40 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி, திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் பெய்யத் தொடங்கி உள்ளது.
பூர்வீக பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. 65 அடி வரை உயர்ந்த நீர் மட்டம் தற்போது 61.12 அடியாக குறைந்துள்ளது. மீண்டும் மழை பெய்யத் தொடங்கி உள்ளதால் அணைக்கு நீர்வரத்து 848 கன அடியில் இருந்து 1156 கன அடியாக உயர்ந்துள்ளது.
மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 3699 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இன்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் மழை தொடரும் என்ற நம்பிக்கையில் மும்முரமாக விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 123.40 அடியாக உள்ளது. அணைக்கு 534 கன அடி நீர் வருகிற நிலையில் 1105 கனஅடி நீர் திற்கப்படுகிறது. 3301 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.55 அடியாக உள்ளது. 65 கன அடி நீர் வருகிற நிலையில் 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியில் நீடிக்கிறது. வரத்தும், திறப்பும் 34.29 கன அடி.
ஆண்டிபட்டி 4.2, அரண்மனைபுதூர் 0.6, பெரியகுளம் 12.4, சோத்துப்பாறை 5.2, வைகை அணை 1.4, உத்தமபாளையம் 0.8, கூடலூர் 3.6, பெரியாறு அணை 2.4, தேக்கடி 4.4, சண்முகாநதி அணை 4.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.