என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Vaigai"
- வைகை ஆற்றின் குறுக்கே ரூ.30.60 கோடியில் மதகு அணை கட்டப்படுகிறது.
- விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வைகை ஆற்றில் கட்டிக் குளம், மிளகனூர் மற்றும் இதர கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல ஏதுவாக, வைகை ஆற்றின் குறுக்கே ரூ30.60 கோடி மதிப்பீட்டில் மதகு அணை கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜையை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி முன்னிலை வகித்தனர். பின்னர் அமைச்சர் கூறியதாவது:-
இந்த அணைக்கட்டு மூலம் ஏற்கனவே கட்டிக் குளம் முகப்பில் உள்ள தலைமதகு வழியாக கட்டிக் குளம் கண்மாய்க்கும், வைகை ஆற்றின் வலது புறத்தில் புதிதாக தலைமதகு கட்டி மிளகனூர், முத்தனேந்தல் மற்றும் இதர கண்மாய்களுக்கு வலது பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் பகிர்ந்தளிக்க முடியும்.
மேலும் இந்த அணைக்கட்டின் மூலம் வைகை ஆற்றின் மிக குறைந்த அளவு நீர் வரத்து இருக்கும் பட்சத்தில் மேற்கண்ட கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கவும், இதன் மூலம் உபரிநீரை தேக்கவும் இயலும். வைகை ஆற்றில் இருந்து உபரி வெள்ள நீரை மிளகனூர் கண்மாய் வழியாக சின்னக் கண்ண னூர், எஸ்.கரிசல்குளம் ஆகிய கண்மாய்களுக்கும், நாட்டார் கால்வாய் வழியாக ராஜகம்பீரம், அன்னவாசல் கண்மாய்கள் உள்பட 16 கண்மாய்களுக்கும் வெள்ள நீரை இந்த அணைக்கட்டு மூலம் வழங்க இயலும். இதனால் சுற்றியுள்ள 4269.00 ஏக்கர் பாசன நிலங்களும் பயன்பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மானாமதுரை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, யூனியன் தலைவர் லதா அண்ணாத்துரை, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (சிவகங்கை) பாரதிதாசன், உதவி செயற்பொறி யாளர்கள் மோகன்குமார், முத்துப்பாண்டி மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 127.70 அடியாக உள்ளது.
- வைகை அணையின் நீர்மட்டம் 67.32 அடியாக உள்ளது.
கூடலூர்,
பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை, முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. எனவே மழை வரும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் பொதுமக்களை ஏமாற்றி சென்றது.
நீர்வரத்து குறைந்ததால் முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 127.70 அடியாக உள்ளது. 184 கனஅடிநீர் வருகிறது. நேற்று 1333 கனஅடிநீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை நீர்திறப்பு 1267 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 67.32 அடியாக உள்ளது. 804 கனஅடிநீர் வருகிறது. நேற்று 1249 கனஅடிநீர் திறக்கப்பட்டது. இன்று காலை பாசனம் மற்றும் குடிநீருக்காக 1199 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி, வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 118.57 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
- தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இருந்த போதும் மாவட்டத்தில் அணைகள் முழு கொள்ளளவிலேயே நீடிக்கிறது.
- 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இன்று காலை நிலவரப்படி 70.41 அடி நீர்மட்டம் உள்ளது.
கூடலூர்:
கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில் பெய்த தொடர்மழையால் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பின. மேலும் பெரும்பாலான குளம், கண்மாய் உள்பட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.
வைகை, முல்லை பெரியாறு, கொட்டக்குடி ஆறு, வராகநதி ஆகியவற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இருந்த போதும் மாவட்டத்தில் அணைகள் முழு கொள்ளளவிலேயே நீடிக்கிறது.
71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இன்று காலை நிலவரப்படி 70.41 அடி நீர்மட்டம் உள்ளது. 2031 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2069 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
57 அடி உயரம் கொண்ட மஞ்சளாறு அணையில் 55 அடிவரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. தொடர் மழை காரணமாக 40 நாட்களுக்கும் மேலாக அணையின் நீர்மட்டம் 55 அடியிலேயே நீடித்து வருகிறது. 92 கனஅடி நீர் வருகிற நிலையில் அது அப்படியே உபரியாக திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.31 அடியாக உள்ளது. 7 கனஅடி நீர் வருகிற நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.70 அடியாக உள்ளது. 1117 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து 1867 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்