என் மலர்
நீங்கள் தேடியது "தண்ணீர் திறப்பு"
- 49,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வைகை ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம்கொண்ட வைகை அணை நீர்மட்டம் வடகிழக்கு பருவமழை கை கொடுத்ததால் கடந்த மாதம் 27ம் தேதி அதிகபட்ச அளவாக 70.24 அடியை எட்டியது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் பாசனத்திற்காக அக்.27ம் தேதி முதல் 31ம் தேதி வரை 624 மி.கனஅடி நீர் திறக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக நவ.8ம் தேதி முதல் 772 மி.கனஅடி நீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று முற்றிலும் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 68.21 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1653 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து 58ம் கால்வாய் வழியாக வினாடிக்கு 115 கனஅடியும், மதுரை, ஆண்டிபட்டி, சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்காக 69 கனஅடி, மதுரை மாவட்ட பூர்வீக பாசனத்திற்கு 1000 கனஅடி என மொத்தம் 1219 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5372 மி.கனஅடியாக உள்ளது.
மதுரை மாவட்ட பூர்வீக பாசனத்திற்கு இன்று முதல் தொடர்ந்து 6 நாட்களுக்கு 428 மி.கனஅடி நீர் திறக்கப்பட உள்ளதாக நீர்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர். 1000 கனஅடி நீர் 7 சிறிய மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதன்மூலம் 49,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கண்மாய்களும் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வைகை ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.65 அடியாக உள்ளது. வரத்து 617 கனஅடி, திறப்பு 1778 கனஅடி, இருப்பு 6030 மி.கனஅடி.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 126.28 அடியில் தொடர்ந்து நீடிப்பதால் அணைக்கு வரும் 15 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கனஅடி.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.80 அடியாகவும், சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 49.50 அடியாகவும் உள்ளது.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.80 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.
- சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியது. அதனை தொடர்ந்து கடந்த 27ம் தேதி வைகை பூர்வீக பாசன பகுதி 3ன் கீழ் உள்ள ராமநாதபுரம் மாவட்ட கண்மாய்களுக்கு 2500 கனஅடி நீர் திறக்கப்பட்டது. மறுநாள் 2000, அடுத்த நாள் 1500, 1000, நேற்று 222 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இன்று அந்த தண்ணீர் நிறுத்தப்பட்டு குடிநீர் மற்றும் மதுரை மாவட்ட பாசனத்திற்காக மட்டும் 1721 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 1990 கனஅடி நீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 69.03 அடியாக உள்ளது. 5579 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
இந்த நிலையில் நாளை முதல் வைகை பூர்வீக பாசன பகுதி 2ல் உள்ள சிவகங்கை மாவட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. முதல் 4 நாட்களுக்கு 2000 கனஅடியும், 5ம் நாள் 935 கனஅடியும் என மொத்தம் 5 நாட்களுக்கு 772 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து வைகை பூர்வீக பாசன பகுதி 1ல் உள்ள மதுரை மாவட்ட கண்மாய்களுக்கு 6 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.85 அடியாக உள்ளது. 1515 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1822 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 6584 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.80 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 160 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.
சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 52.10 அடியாக உள்ளது. 7 கனஅடி நீர் வருகிற நிலையில் 14.47 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.
- ஏரியின் மொத்த நீர் மட்ட அளவு 47.50 அடியில் 46 கன அடியை கடந்த சில தினங்களுக்கு முன்பாக எட்டியது.
- வெள்ளாற்றின் கரையோரம் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் கூறினார்.
சேத்தியாத்தோப்பு:
கடலூர் மாவட்டத்தில் கடலூர், வடலூர், சேத்தியாத்தோப்பு, ஸ்ரீ முஷ்ணம், விருத்தாசலம், திட்டக்குடி, தொழுதூர், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், புவனகிரி ஆகிய பகுதிகளில் நேற்று இரவு 7 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. நள்ளிரவு 12 மணி வரை மழை கொட்டித் தீர்த்தது.
விடியற்காலை 6 மணிவரை லேசான மழை பெய்தது. ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதில் சேத்தியாத்தோப்பு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு 17 செ.மீ. மழை பதிவாகியது. இதனால் வெள்ளாற்றில் நீர்வரத்து அதிகரித்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு தனது முழுக் கொள்ளளவான 7.5 அடியை எட்டியது.
இதனைத் தொடர்ந்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டிற்கு நீர் வந்த வண்ணம் உள்ளதால் பொதுப்பணித் துறை நீர்ப்பாசனப் பிரிவினர் உபரி நீரை வெளியேற்ற முடிவு செய்தனர். அணைக்கட்டில் 20 மதகுகள் உள்ளன. இதில் 4 மதகுகளை மட்டும் திறந்து விநாடிக்கு 600 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது.
மேலும், கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வருவது வீராணம் ஏரியாகும். 14 கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த ஏரி 5 கிலோ மீட்டர் அகலம் உடையது. ஏரியின் மொத்த நீர் மட்ட அளவு 47.50 அடியில் 46 கன அடியை கடந்த சில தினங்களுக்கு முன்பாக எட்டியது.
தற்போது பெய்த மழையில் வீராணம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்ததால் வீராணம் ஏரியின் வி.என்.எஸ்.எஸ். மதகு, பாழ் வாய்க்கால்கள் மூலம் தலா 300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும், சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு குமார உடைப்பு வழியாகவும் 300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த நீர் அனைத்தும் பல்வேறு வாய்க் கால்கள் வழியாக பரங்கிப் பேட்டைக்கு சென்று வங்கக் கடலில் கலக்கிறது.
நீர் வரத்தை பொறுத்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு, வீராணம் ஏரியில் இருந்து வெளி யேற்றப்படும் நீரின் அளவு கூடுதலாவதற்கு வாய்ப்பு உள்ளதாக செயற்பொறியாளர் அடைக்காப்பான் கூறினார். மேலும், வெள்ளாற்றின் கரையோரம் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் கூறினார்.
- மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக திறக்கப்பட்ட நீர் முறைநீர் பாசன அடிப்படையில் நிறுத்தப்பட்டது.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.55 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. தற்போது மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக திறக்கப்பட்ட நீர் முறைநீர் பாசன அடிப்படையில் நிறுத்தப்பட்டது.
இந்த மாவட்டங்களில் 2-ம்போக பாசனத்திற்காக கால்வாய் வழியாக டிசம்பர் 18ந் தேதி முதல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. முறைப்பாசன அடிப்படையில் சில நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்டும் பின்னர் சில நாட்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது.
கடந்த 10ந் தேதி முதல் கால்வாய் வழியாக வினாடிக்கு 450 கன அடி நீர் திறக்கப்பட்டு பின்னர் 525 கன அடியாக உயர்த்தப்பட்டது. நேற்று காலை கால்வாய் வழியாக திறக்கப்பட்ட பாசன நீர் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் கிருதுமால் நதி குடிநீர் தேவைக்காக 300 கன அடி மற்றும் மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் என மொத்தம் 369 கன அடிநீர் திறக்கப்படுகிறது. அணைக்கு 170 கனஅடி நீர் வருகிறது. நீர்மட்டம் 63.25 அடியாக உள்ளது. அணையில் 4255 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 117.60 அடியாக உள்ளது. 143 கன அடி நீர் வருகிற நிலையில் 444 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.55 அடியாக உள்ளது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 90.69 அடியாக உள்ளது. 3.8 கன அடி நீர் வருகிறது. 25 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 30.30 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 14.47 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.






