என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vaigai dam"

    • கண்டமனூர் தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து வெள்ளம் போல் பெருக்கெடுத்து செல்கிறது.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 139.45 அடியாக உள்ளது. வரத்து 885 கன அடி. திறப்பு 1600 கன அடி.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வந்த நிலையில் முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது. சற்று மழை ஓய்ந்த நிலையில் டிட்வா புயல் காரணமாக கடந்த 3 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான வெள்ளிமலை, வருசநாடு, அய்யனார்கோவில், டானா தோட்டம் போன்ற பகுதிகளில் பெய்த மழை காரணமாக வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக கண்டமனூர் வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. எனவே கண்டமனூர் தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து வெள்ளம் போல் பெருக்கெடுத்து செல்கிறது. எனவே பொதுமக்கள் யாரும் தடுப்பணையில் குளிக்கவோ, துணி துவைக்கவோ இறங்க வேண்டாம் என்றும், கால்நடைகளை அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    நீர் வரத்து அதிகரிப்பால் 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 63.29 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1740 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 1319 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4262 மி.கன அடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 139.45 அடியாக உள்ளது. வரத்து 885 கன அடி. திறப்பு 1600 கன அடி. இருப்பு 6987 மி.கன அடி.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி 126.28 அடியில் நீடிப்பதால் அணைக்கு வரும் 83 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.10 அடி. வரத்து 57 கன அடி. சண்முகாநதி அணை நீர்மட்டம் 43.10 அடி. வரத்து 17 கன அடி. திறப்பு 14.17 கன அடி.

    • அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்து காணப்படுவதால் தொடர்ந்து சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • 58-ம் கால்வாய் பாசனத்தை நம்பி இருந்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ஆண்டிபட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவை சேர்ந்த 58 கிராமங்கள் பயன்பெறும் வகையில் வைகை அணையில் இருந்து கால்வாய் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் வசதி உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 67 அடிக்கு மேல் இருந்தால் மட்டுமே கால்வாய், மதகுகள் வழியாக அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியும். வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த காரணத்தால் அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 29ந் தேதி 69.46 அடியாக இருந்தது. இதனையடுத்து 58-ம் கால்வாய் வழியாக வினாடிக்கு 150 கன அடிநீர் வீதம் திறந்து விடப்பட்டது. ஏற்கனவே ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்கு ஆற்றின் வழியாகவும், கால்வாய் வழியாகவும், தண்ணீர் வெளியேறியதால் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது.

    இன்று காலை நிலவரப்படி 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 66.90 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1402 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 2299 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5063 மி.கன அடியாக உள்ளது. இதன் காரணமாக 58-ம் கால்வாய் வழியாக வெளியேறிய தண்ணீர் நின்றுபோனது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்து காணப்படுவதால் தொடர்ந்து சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக 58-ம் கால்வாய் பாசனத்தை நம்பி இருந்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதேபோல் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.10 அடியாக உள்ளது. வரத்து 1051 கன அடி. திறப்பு 1711 கன அடி. இருப்பு 5656 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 45 அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவில் நீடிப்பதால் அணைக்கு வரும் 37 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

    பெரியாறு அணை 9.4, உத்தமபாளையம் 3, வீரபாண்டி 2.2. மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • வைகை ஆற்றின் இரு கரைகளையும் தொட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் வடகிழக்கு பருவமழை கை கொடுத்ததன் காரணமாக கடந்த மாதம் 27-ந் தேதி 70 அடிக்கும் மேல் உயர்ந்தது. இதனால் அணையில் இருந்து ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பூர்வீக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    தற்போது மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்துக்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 67.91 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து 1810 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக கால்வாய் மற்றும் ஆற்றின் வழியாக 2609 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    இதனால் வைகை ஆற்றின் இரு கரைகளையும் தொட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அணையின் நீர் இருப்பு 5299 மி.கன அடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக குமுளி, தேக்கடி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 134.20 அடியாக உள்ளது. வரத்து 1184 கன அடி. திறப்பு 1723 கன அடி. நீர் இருப்பு 5680 மி.கன அடியாக உள்ளது.

    மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • 49,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • வைகை ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம்கொண்ட வைகை அணை நீர்மட்டம் வடகிழக்கு பருவமழை கை கொடுத்ததால் கடந்த மாதம் 27ம் தேதி அதிகபட்ச அளவாக 70.24 அடியை எட்டியது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் பாசனத்திற்காக அக்.27ம் தேதி முதல் 31ம் தேதி வரை 624 மி.கனஅடி நீர் திறக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக நவ.8ம் தேதி முதல் 772 மி.கனஅடி நீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று முற்றிலும் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 68.21 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1653 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து 58ம் கால்வாய் வழியாக வினாடிக்கு 115 கனஅடியும், மதுரை, ஆண்டிபட்டி, சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்காக 69 கனஅடி, மதுரை மாவட்ட பூர்வீக பாசனத்திற்கு 1000 கனஅடி என மொத்தம் 1219 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5372 மி.கனஅடியாக உள்ளது.

    மதுரை மாவட்ட பூர்வீக பாசனத்திற்கு இன்று முதல் தொடர்ந்து 6 நாட்களுக்கு 428 மி.கனஅடி நீர் திறக்கப்பட உள்ளதாக நீர்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர். 1000 கனஅடி நீர் 7 சிறிய மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதன்மூலம் 49,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கண்மாய்களும் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வைகை ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.65 அடியாக உள்ளது. வரத்து 617 கனஅடி, திறப்பு 1778 கனஅடி, இருப்பு 6030 மி.கனஅடி.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 126.28 அடியில் தொடர்ந்து நீடிப்பதால் அணைக்கு வரும் 15 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கனஅடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.80 அடியாகவும், சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 49.50 அடியாகவும் உள்ளது.

    • சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியில் தொடர்ந்து நீடிக்கிறது.
    • அணைக்கு வரும் 83 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கன அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால் அணையின் நீர்பிடிப்பு பகுதியான கொட்டக்குடிஆறு, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.

    கடந்த மாதம் 27ந் தேதி அணையின் நீர்மட்டம் 70.24 அடியாக உயர்ந்தது. அதன்பின்பு ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக வைகை ஆற்றின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக பெரியாறு பிரதான கால்வாய் வழியாகவும், 58-ம் கால்வாய் வழியாகவும் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 68.08 அடியாக உள்ளது. வரத்து 2176 கன அடி. திறப்பு 3499 கன அடி. இருப்பு 5338 மி.கன அடியாக உள்ளது.

    இதேபோல் முல்லைப்பெரியாறு அணையிலும் நீர்வரத்து சரிந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 137.10 அடியாக உள்ளது. வரத்து 927 கன அடி. திறப்பு 1800 கன அடி. இருப்பு 6395 மி.கன அடி.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியில் தொடர்ந்து நீடிக்கிறது. அணைக்கு வரும் 83 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.80 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் நீர் இருப்பு 252 மி.கன அடியாக உள்ளது.

    சண்முகாநதி அணையின் நீர் மட்டம் 51.10 அடி. திறப்பு 14.47 கன அடி. இருப்பு 75.04 மி.கன அடி.

    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.80 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.
    • சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியது. அதனை தொடர்ந்து கடந்த 27ம் தேதி வைகை பூர்வீக பாசன பகுதி 3ன் கீழ் உள்ள ராமநாதபுரம் மாவட்ட கண்மாய்களுக்கு 2500 கனஅடி நீர் திறக்கப்பட்டது. மறுநாள் 2000, அடுத்த நாள் 1500, 1000, நேற்று 222 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இன்று அந்த தண்ணீர் நிறுத்தப்பட்டு குடிநீர் மற்றும் மதுரை மாவட்ட பாசனத்திற்காக மட்டும் 1721 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 1990 கனஅடி நீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 69.03 அடியாக உள்ளது. 5579 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    இந்த நிலையில் நாளை முதல் வைகை பூர்வீக பாசன பகுதி 2ல் உள்ள சிவகங்கை மாவட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. முதல் 4 நாட்களுக்கு 2000 கனஅடியும், 5ம் நாள் 935 கனஅடியும் என மொத்தம் 5 நாட்களுக்கு 772 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து வைகை பூர்வீக பாசன பகுதி 1ல் உள்ள மதுரை மாவட்ட கண்மாய்களுக்கு 6 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.85 அடியாக உள்ளது. 1515 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1822 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 6584 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.80 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 160 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 52.10 அடியாக உள்ளது. 7 கனஅடி நீர் வருகிற நிலையில் 14.47 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • சோத்துப்பாறை அணை 126.28 என அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
    • ஆற்றில் இறங்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என்றும், கால்நடைகளை அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டத்தில் கடந்த 1 வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்கிறது.

    வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான வருசநாடு, வெள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் பல சிற்றாறுகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் மூல வைகை ஆறாக வாலிப்பாறை தும்மக்குண்டு, முறுக்கோடை, வருசநாடு, கடமலைக்குண்டு, துரைச்சாமிபுரம், கண்டமனூர், அமச்சியாபுரம், குன்னூர் வழியாக வைகை அணையில் சேர்ந்தது.

    மேலும் முல்லைப்பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறுகளிலும் நீர் வரத்து அதிகரித்ததால் வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்தது. 71 அடி உயரமுள்ள அணையின் நீர்மட்டம் நேற்று 69 அடியாக உயர்ந்தது. இதனால் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் உபரியாக வெளியேற்றப்பட்டது. நேற்று மாலை நீர்மட்டம் 69.05 அடியாக இருந்தபோது 4738 கன அடி நீர் திறக்கப்பட்டது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 69.13 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4875 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 3630 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5605 மி.கன அடியாக உள்ளது. இதன் காரணமாக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆற்றில் இறங்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என்றும், கால்நடைகளை அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

    மேலும் அணைக்கு வரும் தண்ணீரின் அளவை பொறுத்து எப்போது வேண்டுமானாலும் கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது என்பதால் அதிகாரிகள் 5 மாவட்ட கலெக்டர்களுக்கும் இது குறித்து சுற்றறிக்கையை அனுப்பியுள்ளனர்.

    இதே போல் மாவட்டத்தில் உள்ள மற்ற அணைகளுக்கும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. சோத்துப்பாறை அணை 126.28 என அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் அணைக்கு வரும் 252.37 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கன அடியாக உள்ளது. 57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. நீர் வரத்து 75 கன அடி. 52.55 அடி உயரமுள்ள சண்முகா நதி அணையின் நீர்மட்டமும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் அணைக்கு வரும் 34 கன அடி முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பெரியாறு அணை 13.6, சோத்துப்பாறை 26.2, பெரியகுளம் 15.4, வீரபாண்டி 8.4, ஆண்டிபட்டி 5.2, அரண்மனைபுதூர் 4, வைகை அணை 3.6, உத்தமபாளையம் 4.2, தேக்கடி 5.8, சண்முகா நதி அணை 3.8, மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. 

    • முல்லைப்பெரியாறு அணையிலும் நீர்மட்டம் தொடர்ந்து 135.30 அடியாக உள்ளது.
    • அணையில் இருந்து 1000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    தென்மேற்கு பருவமழை ஓரளவு கைகொடுத்ததாலும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் வைகை அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது.

    நீர்மட்டம் கடந்த 5-ந்தேதி 69 அடியாக உயர்ந்த நிலையில் 5 மாவட்டங்களுக்கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அணையில் இருந்து எப்போது வேண்டுமானாலும் தண்ணீர் திறக்கப்படலாம் என்ற நிலையில் நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

    இருந்தபோதும் அணைக்கு வரும் தண்ணீர் வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் சரியாக இருந்ததால் நீர்மட்டம் 70 அடியை எட்டவில்லை. இருந்தபோதும் அணையின் நீர்மட்டத்தை 70 அடிக்கு மேல் உயர்த்த அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    கடந்த 5-ந் தேதி முதல் தற்போது வரை அணையின் நீர்மட்டம் 69 அடிக்கு மேல் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 69.42 அடியாக உள்ளது. அணைக்கு 515 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து நேற்று 969 கன அடி திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 557 கன அடி மட்டுமே திறக்கப்படுகிறது.

    மதுரை, சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்கும், பாசனத்துக்கும் 557 கன அடி மட்டும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5681 மி.கன அடியாக உள்ளது.

    இதே போல் முல்லைப்பெரியாறு அணையிலும் நீர்மட்டம் தொடர்ந்து 135.30 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1023 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5940 மி.கன அடியாக உள்ளது. தற்போது அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை அளவு குறைந்த போதிலும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மின் உற்பத்தி 4 ஜெனரேட்டர்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள சுருளி, கும்பக்கரை, மேகமலை அருவிகளில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. நேற்று காலை முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக ஆண்டிபட்டி சுற்று வட்டார பகுதிகளிலும், மேகமலை, போடி உள்ளிட்ட இடங்களிலும் 2 மணி நேரம் கன மழை பெய்தது. இதனால் சின்ன சுருளி அருவியில் இன்று காலை நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வமுடன் அருவியில் நீராடி வருகின்றனர். 

    • தேனி மாவட்டத்துக்கு தற்போது கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
    • அணைக்கு நீர் வரத்து 974.50 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1867 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

    அணையின் நீர்மட்டம் 60 அடிக்கு மேல் உயர்ந்ததால் கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஜூன் 25-ந்தேதி முதல் 7 நாட்கள் ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசன பகுதிகளுக்கு ஆற்றுப்படுகை வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டது.

    முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், வைகை அணை நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாகவும் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. கடந்த மாதம் 26-ந் தேதி 66 அடியை எட்டியதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    தொடர்ந்து நீர்மட்டம் 68.50 அடியாக உயர்ந்ததால் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது அணையின் நீர்மட்டம் 69.19 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1510 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து பாசன தேவைக்காக 500 கன அடியும், குடிநீர் தேவைக்காக 69 கன அடி என மொத்தம் 569 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5622 மி.கன அடியாக உள்ளது.

    கடந்த 2023ம் ஆண்டுக்கு பிறகு வைகை அணை மீண்டும் தற்போதுதான் முழு கொள்ளளவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் வைகை அணை வரலாற்றில் தற்போது 35-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

    வழக்கமாக அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதும் 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை 69 அடியை கடந்த பிறகும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உபரி நீர் திறக்கப்படவில்லை.

    71 அடி வரை உயர்த்தப்பட்டு பின்னர் உபரி நீரை வெளியேற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இருந்தபோதும் அணை பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு அணைக்கு வரும் நீர் வரத்து அளவை கணக்கிட்டு வருகின்றனர்.

    5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எந்த நேரமும் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படலாம் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்துக்கு தற்போது கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதனால் எந்த நேரமும் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் என்பதால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்துக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வப்போது முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. அணையின் நீர்மட்டம் கடந்த வாரம் 136 அடிக்கு மேல் உயர்ந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 133.65 அடியாக சரிந்துள்ளது.

    அணைக்கு நீர் வரத்து 974.50 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1867 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5551 மி.கன அடியாக உள்ளது. அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் இயக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130 அடியாக மீண்டும் உயர்ந்துள்ளது.
    • தொடர் மழை காரணமாக சுருளி அருவியில் இன்று 4ம் நாளாக சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கூடலூர்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த வருடம் முன்கூட்டியே தொடங்கியதால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 136 அடியை கடந்து உபரி நீர் திறக்கப்பட்டதுடன் வைகை அணைக்கும் கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    அதன் பின் படிப்படியாக மழை குறைந்து விட்ட நிலையில் தற்போது மீண்டும் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதுடன் தேனி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130 அடியாக மீண்டும் உயர்ந்துள்ளது. நீர்வரத்து 1976 கன அடி. திறப்பு 1867 கன அடி. இருப்பு 4697 மி.கன அடியாக உள்ளது.

    71 அடி உயரமுள்ள வைகை அணை நீர்மட்டம் 64.47 அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியதும் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு விடப்படும்.

    தற்போது தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஓரிரு நாளில் 66 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர்வரத்து 1744 கன அடி. குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 869 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4513 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40 அடியாகவும், சோத்துப்பாறை நீர்மட்டம் 60.35 அடியாகவும், சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 48.60 அடியாக உள்ளது.

    தொடர் மழை காரணமாக சுருளி அருவியில் இன்று 4ம் நாளாக சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல் மேகமலை அருவியிலும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் ஆடி அமாவாசை என்பதால் அருவிக்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட வருவார்கள். இதனால் அதற்கு முன்பாக வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 114.45 அடியாக உள்ளது.
    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 38.30 அடியாக உள்ளது. 14 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.

    கூடலூர்:

    தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கியதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அந்தமானில் தொடங்கிய நிலையில் கேரளாவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    ஆனால் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவி வருகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் மழைப்பொழிவு இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்தது.

    குறிப்பாக வைகை அணைக்கு தண்ணீர் வரத்து முற்றிலும் நின்று விட்டது. இதனால் அணையின் நீர்மட்டமும் 53.58 அடியாக சரிந்துள்ளது. மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 2496 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 114.45 அடியாக உள்ளது. 3 கன அடி நீர் வருகிறது. 100 கன அடி நீர் தமிழக பகுதிக்கு திறக்கப்படுகிறது. அணையில் 1635 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 38.30 அடியாக உள்ளது. 14 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 98.23 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 41.70 அடியாக உள்ளது. 6 கன அடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. மழை எங்கும் இல்லை.

    • முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 113 அடியாக உள்ளது.
    • சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 66.25 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பருவமழையின் போது மழை கைகொடுத்ததால் அணை முழு கொள்ளளவான 71 அடியை எட்டியது. அதனை தொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் குறைந்து கொண்டு வருகிறது. அவ்வப்போது மழை பெய்தாலும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து நேற்று முற்றிலும் நின்று விட்டது.

    இதனால் அணையின் நீர்மட்டம் 57.71 அடியாக குறைந்துள்ளது. அணையில் முறைநீர் பாசன அடிப்படையில் தற்போது மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. அதன்படி குடிநீருடன் சேர்த்து 722 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3178 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 113 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 105 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. 1392 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 31 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 66.25 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 34 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. மழை எங்கும் இல்லை.

    ×