என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தம்- நீர்மட்டம் சரிவதால் நடவடிக்கை
    X

    வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தம்- நீர்மட்டம் சரிவதால் நடவடிக்கை

    • மதுரை, சேடப்பட்டி, ஆண்டிபட்டி குடிநீர் தேவைகளுக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
    • அணையின் நீர்மட்டம் 41.47 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிது.

    கடந்த சில நாட்களாக திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்திற்காக கால்வாய் வழியாக 900 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. அணையின் நீர்மட்டம் சரிந்து வந்ததாலும், அணைக்கு நீர்வரத்து குறைந்து கொண்டே சென்றதாலும் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீரை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட 900 கன அடி முற்றிலும் நிறுத்தப்பட்டது. மதுரை, சேடப்பட்டி, ஆண்டிபட்டி குடிநீர் தேவைகளுக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 41.47 அடியாக உள்ளது. வரத்து 340 கன அடி. இருப்பு 1070 மி.கன அடி.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 117.20 அடி. வரத்து 32 கன அடி. திறப்பு 433 கனஅடி. இருப்பு 2123 மி.கன அடி.

    தேனி மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. வைகை அணை 13.6, போடி 4.6, ஆண்டிபட்டி 2.6, அரண்மனைபுதூர் 2.4, கூடலூர் 1 என மாவட்டத்தில் 25.4 மி.மீ. மழை அளவு பதிவானது.

    Next Story
    ×