search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Veeranam Lake"

    • கடல்போல் காட்சி அளித்த வீராணம் ஏரி, தற்போது வறண்டு காட்சி அளிக்கிறது.
    • வாலாஜா ஏரியின் முழு கொள்ளளவு 5.5 அடியாகும்.

    சென்னை:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும். 16 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட இந்த ஏரியின் மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய தாலுகாகளில் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன.

    மேலும் சென்னை மக்களின் தாகத்தை தீர்ப்பதிலும் வீராணம் ஏரிக்கு முக்கிய பங்கு உள்ளது. அதாவது வீராணம் ஏரியில் இருந்து ராட்சத குழாய் மூலம் சென்னைக்கு வினாடிக்கு 76 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படும்.

    ஆனால் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாததாலும், காவிரியில் இருந்து தண்ணீர் வராததாலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் மளமளவென குறைந்தது. இதனால் கடந்த மாதம் பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    கடல்போல் காட்சி அளித்த வீராணம் ஏரி, தற்போது வறண்டு காட்சி அளிக்கிறது. இதனால் கடந்த 2 வாரத்துக்கு முன்பு சென்னைக்கு குடிநீர் அனுப்புவதும் நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது கோடைகாலம் தொடங்கி இருப்பதால் தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது. வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடியாத காலங்களில் நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவன சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை அனுப்புவது வழக்கம். அதன்படி என்.எல்.சி. சுரங்க நீரை வடலூா் அருகே உள்ள வாலாஜா ஏரியில் தேக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    வாலாஜா ஏரியின் முழு கொள்ளளவு 5.5 அடியாகும். தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் 50 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஏரியில் இருந்து பரவனாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு தனி கால்வாய் வெட்டி அதில் இருந்து ராட்சத மோட்டார் மூலம் வீராணம் குழாய் வழியாக வினாடிக்கு 15 கன அடி தண்ணீர் சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது. இதை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். வீராணம் ஏரி கைவிட்டபோதிலும் சென்னை மக்களின் தாகத்தை என்.எல்.சி. சுரங்க நீர் தீர்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வந்ததால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது.
    • சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. 47.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரி மூலம் கடலூர் மாவட்டத்தில் சுமார் 44 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    மேலும் நீர்மட்டத்திற்கு ஏற்ப ஏரியில் இருந்து சென்னை மக்களின் தேவைக்காக குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. இருப்பினும் வீராணம் ஏரியில் 39 அடிக்கு கீழ் நீர்மட்டம் குறைந்தால், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கமுடியாது. அதேபோல் சென்னைக்கும் குடிநீர் அனுப்பமுடியாது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை மற்றும் கீழணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் வறண்டு கிடந்த வீராணம் ஏரி நிரம்பியது. இதையடுத்து கடந்த மாதம் பாசனத்துக்காக ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

    மேலும் சென்னைக்கும் குடிநீர் அனுப்பப்பட்டு வந்ததால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது. இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது. அதேபோல் சென்னைக்கு அனுப்பும் குடிநீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று வீராணம் ஏரியின் நீர்மட்டம் 38.50 அடியாக குறைந்ததால், சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி முற்றுலும் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

    நீர் மட்டம் குறைந்ததால் வீராணம் ஏரி தற்போது விளையாட்டு மைதானம் போல் காட்சி அளிக்கிறது. ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் மட்டும் தண்ணீர் தேங்கி தற்போது வீராணம் ஏரி குட்டைபோன்று காட்சி அளிக்கிறது.

    • ஏரியின் மொத்த நீர் மட்ட அளவு 47.50 அடியில் 46 கன அடியை கடந்த சில தினங்களுக்கு முன்பாக எட்டியது.
    • வெள்ளாற்றின் கரையோரம் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் கூறினார்.

    சேத்தியாத்தோப்பு:

    கடலூர் மாவட்டத்தில் கடலூர், வடலூர், சேத்தியாத்தோப்பு, ஸ்ரீ முஷ்ணம், விருத்தாசலம், திட்டக்குடி, தொழுதூர், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், புவனகிரி ஆகிய பகுதிகளில் நேற்று இரவு 7 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. நள்ளிரவு 12 மணி வரை மழை கொட்டித் தீர்த்தது.

    விடியற்காலை 6 மணிவரை லேசான மழை பெய்தது. ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதில் சேத்தியாத்தோப்பு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு 17 செ.மீ. மழை பதிவாகியது. இதனால் வெள்ளாற்றில் நீர்வரத்து அதிகரித்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு தனது முழுக் கொள்ளளவான 7.5 அடியை எட்டியது.

    இதனைத் தொடர்ந்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டிற்கு நீர் வந்த வண்ணம் உள்ளதால் பொதுப்பணித் துறை நீர்ப்பாசனப் பிரிவினர் உபரி நீரை வெளியேற்ற முடிவு செய்தனர். அணைக்கட்டில் 20 மதகுகள் உள்ளன. இதில் 4 மதகுகளை மட்டும் திறந்து விநாடிக்கு 600 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது.

    மேலும், கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வருவது வீராணம் ஏரியாகும். 14 கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த ஏரி 5 கிலோ மீட்டர் அகலம் உடையது. ஏரியின் மொத்த நீர் மட்ட அளவு 47.50 அடியில் 46 கன அடியை கடந்த சில தினங்களுக்கு முன்பாக எட்டியது.

    தற்போது பெய்த மழையில் வீராணம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்ததால் வீராணம் ஏரியின் வி.என்.எஸ்.எஸ். மதகு, பாழ் வாய்க்கால்கள் மூலம் தலா 300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும், சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு குமார உடைப்பு வழியாகவும் 300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த நீர் அனைத்தும் பல்வேறு வாய்க் கால்கள் வழியாக பரங்கிப் பேட்டைக்கு சென்று வங்கக் கடலில் கலக்கிறது.

    நீர் வரத்தை பொறுத்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு, வீராணம் ஏரியில் இருந்து வெளி யேற்றப்படும் நீரின் அளவு கூடுதலாவதற்கு வாய்ப்பு உள்ளதாக செயற்பொறியாளர் அடைக்காப்பான் கூறினார். மேலும், வெள்ளாற்றின் கரையோரம் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் கூறினார். 

    • தொடர்ந்து மழை பெய்யும் என எதிர்பார்ப்பதால் 46.50 அடியில் இருந்த நீர்மட்டத்தை ஒரு அடி குறைத்து 45.50 அடியாக நிலை நிறுத்தியுள்ளனர்.
    • ஒருவேளை கட்டுக்கடங்காத புயல், வெள்ள நீர், ஏரிக்கு வரும் பட்சத்தில் உபரி நீரை வெளியேற்ற வெள்ளியங்கால் வடிகால் ஓடை கதவணை தயாராக உள்ளது.

    காட்டுமன்னார் கோவில்:

    காட்டுமன்னார் கோவில் சுற்று வட்டார பகுதிகளில் 2 நாட்களாக இரவு பகல் என தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது.

    ஏரியின் பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறையினர் பிரதான வடிகாலான சேத்தியாதோப்பு அருகே உள்ள பூதங்குடி பகுதியில் அமைந்திருக்கும் வீராணம் புதிய கால்வாய் மூலம் வெள்ளாறு அணைக்கட்டிற்கு தண்ணீர் திறந்து விட்டனர்.

    மேலும் வெள்ளாற்றில் இருந்து 4-க்கும் மேற்பட்ட பாசன வாய்க்கால்களின் மூலம் சேத்தியாத்தோப்பு பகுதியில் உள்ள உள்ளூர் பாசன வாய்க்கால்கள் மூலம் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்கிறது. தொடர்ந்து மழை பெய்யும் என எதிர்பார்ப்பதால் 46.50 அடியில் இருந்த நீர்மட்டத்தை ஒரு அடி குறைத்து 45.50 அடியாக நிலை நிறுத்தியுள்ளனர்.

    இதுகுறித்து பொதுப்பணித்துறையினர் தெரிவித்த போது, தொடர்ந்து 10 நாட்களுக்கு மழை பெய்தாலும் அதனை சமாளிக்கும் விதமாக ஏரியின் நீர்மட்டத்தை சமமாக வைத்துள்ளோம்.

    ஒருவேளை கட்டுக்கடங்காத புயல், வெள்ள நீர், ஏரிக்கு வரும் பட்சத்தில் உபரி நீரை வெளியேற்ற வெள்ளியங்கால் வடிகால் ஓடை கதவணை தயாராக உள்ளது.

    மேலும் நடைபெறும் சம்பா சாகுபடி மற்றும் வரவிருக்கும் குறுவை சாகுபடிகளையும் கருத்தில் கொண்டு ஏரியின் நீர்மட்டத்தை பராமரித்து வருகிறோம் என்றனர்.

    ஏற்கனவே வீராணம் ஏரிக்கு வரும் மழைநீர், கீழணையில் இருந்து திறக்கப்படும் காவிரி நீர் ஆகியவை நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • கடலூர் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது.
    • வீராணம் ஏரி நிரம்பி வருவதால் ஏரியில் இருந்து பாசனம் பெறும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது.

    டெல்டா பகுதி விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக இந்த ஏரி விளங்கி வருகிறது. கடலூர் மாவட்டத்தின் மிகப் பெரிய நீர் ஆதாரமாக இந்த ஏரி உள்ளது.

    இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

    காவிரி நீர் மேட்டூர் அணையில் இருந்து கல்லணைக்கு வந்து அங்கிருந்து அணைக்கரையில கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள கீழணைக்கு வரும். கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்படும்.

    மழைக்காலங்களில் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், அரியலூர், கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பெய்யும் மழை செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை மற்றும் காட்டாறுகள் மூலம் ஏரியை வந்தடையும்.

    இந்த ஆண்டு மேட்டூர் அணை தண்ணீர் இல்லாமல் மூடப்பட்டது. இதனால் ஏரிக்கு நீர் வரத்து இல்லாமல் ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது.

    தற்போது கடலூர் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. மேலும் வீராணம் ஏரிக்கு நீர்வரத்தும் அதிகரித்து உள்ளது. வினாடிக்கு 59 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் வீராணம் ஏரி 46 அடியை எட்டியது. ஏரியில் இருந்து சென்னைக்கு 59 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    வீராணம் ஏரி நிரம்பி வருவதால் ஏரியில் இருந்து பாசனம் பெறும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    கடலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் 16 ஏரிகள் முழுமையான கொள்ளளவை எட்டியுள்ளது. 16 ஏரிகள் 75 சதவீதமும், 40 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கீழணையில் இருந்து வடவாறு வழியாக வினாடிக்கு 1,614 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது.
    • ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது.

    டெல்டா பகுதி விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக இந்த ஏரி விளங்கி வருகிறது. கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக இந்த ஏரி உள்ளது.

    இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

    காவிரி நீர் மேட்டூர் அணையில் இருந்து கல்லணைக்கு வந்து அங்கிருந்து அணைக்கரையில் கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள கீழணைக்கு வரும். கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்படும்.

    மழைக்காலங்களில் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், அரியலூர், கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பெய்யும் மழை செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை மற்றும் காட்டாறுகள் மூலம் ஏரியை வந்தடையும்.

    இந்த ஆண்டு மேட்டூர் அணை தண்ணீர் இல்லாமல் மூடப்பட்டது. இதனால் ஏரிக்கு நீர் வரத்து இல்லாமல் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது.

    ஈரோடு மற்றும் கீழணைக்கு மேல் பகுதியில் சுமார் 80 கி.மீ. தூரத்தில் உள்ள பகுதிகளில் தொடர் மழை பெய்ததால் நேற்று முதல் கீழணைக்கு வினாடிக்கு சுமார் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் 9 அடி உள்ள கீழணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று கீழணையில் இருந்து வடவாறு வழியாக வினாடிக்கு 1,614 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரியலூர், ஜெயங்கொண்டம், ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் காட்டாறு மற்றும் செங்கால் ஓடை வழியாக வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் ஏரிக்கு தொடர்ந்து வருகிறது.

    மேலும் வீராணம் ஏரி பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை 6 மணி வரை 8 செ.மீ மழை பெய்துள்ளது.

    மேலும் நேற்று காலை முதல் மாலை 4 மணி வரை 4.8 செ.மீ மழை பெய்துள்ளது. இதனால் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது ஏரியின் நீர் மட்டம்44.25 அடியாக உள்ளது. கொள்ளிடம் ஆற்றில் இருந்து வீராணம் ஏரிக்கு இன்னும் 3 அடி தண்ணீரை அனுப்பி தேக்கி வைத்தால் மழை பெய்யாவிட்டாலும் எந்த பிரச்சனையும் இல்லாமல் சமாளித்து விடலாம் என அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீருக்கு 50 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கடந்த 1967-ம் ஆண்டு வீராணம் திட்டம் தொடங்கப்பட்டு 235 கி.மீ. தொலைவில் உள்ள சென்னைக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.
    • வீராணம் ஏரியின் நீர்மட்டம் தற்போது கடுமையாக சரிந்து வருகிறது.

    காட்டுமன்னார் கோவில்:

    கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வரும் வீரநாராயணன் ஏரி நாளடைவில் வீராணம் ஏரியாக மாறி விட்டது. இந்த ஏரி லால்பேட்டையில் அமைந்துள்ளது. 14 கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது.

    5 கிலோ மீட்டர் அகலம் உடைய இந்த ஏரியின் மொத்த நீர் மட்ட அளவு 47.50 அடி. 1461 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமிக்க முடியும். இந்த ஏரியில் 34 மதகுகள் உள்ளன. இதனால் இந்த ஏரி கடல் போல் ரம்மியமாக காட்சியளிக்கும் இருப்பினும் ஏரியை முழுமையாக தூர்வாராததால் ஏரியின் மட்டத்தில் சற்று வேறுபாடுகள் இருக்கிறது.

    மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கல்லணை, கீழணை வந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வருகிறது. இது தவிர நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரியலூர், பெரம்பலூர், செந்துறை, ஆண்டிமடம், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீரும் கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாக வருகிறது.

    இருப்பினும் பிரதான நீர் வடவாறு வழியாகவே வருகிறது. இந்த ஏரியை நம்பி சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், 40 ஆயிரத்து 526 ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது. சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக இந்த ஏரியில் கோடை காலத்திலும் தண்ணீர் சேமித்து வைக்கப்படுகிறது.

    கடந்த 1967-ம் ஆண்டு வீராணம் திட்டம் தொடங்கப்பட்டு 235 கி.மீ. தொலைவில் உள்ள சென்னைக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு இந்த திட்டம் கைவிடப்பட்டு மீண்டும் 2004-ம் ஆண்டிலிருக்து வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு நாளொன்றுக்கு 65 கன அடி குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்த ஏரி கடந்த ஆண்டில் 7 முறை நிரம்பியது. இதனால் வீராணம் ஏரியை நம்பியுள்ள விளைநிலங்களில் கடந்த ஆண்டு 3 போகமும் பயிரிடப்பட்டது. மேலும், சென்னைக்கு குடிநீரும் தங்கு தடையின்றி சென்றது. ஆனால், இந்த ஆண்டு இந்த ஏரி ஒரு முறைகூட நிரம்பவில்லை. இதற்கு போதிய மழை இல்லை என்று அதிகாரிகளால் கூறப்படுகிறது. அதேசமயம் ஏரிக்கு நீர் வரத்து வாய்க்கால்கள் துர்ந்து போயுள்ளதே காரணமென விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் வீராணம் ஏரி வறண்டது.

    இந்நிலையில் வீராணம் ஏரியின் நீர்மட்டம் தற்போது கடுமையாக சரிந்து வருகிறது. ஏரியின் நீர்மட்ட அளவான 47.50 அடியில் தற்போது 20.50 அடி நீர் மட்டுமே உள்ளது. குறிப்பாக ஏரியின் கரைப்பகுதியில் மட்டுமே நீர் உள்ளது. ஏரியின் மையப்பகுதி வறண்டு புல் மற்றும் பூண்டு செடிகள் முளைத்துள்ளன. மேலும், மேடாக உள்ள வீராணம் ஏரிக்கரை ஓரங்களும் வறண்டு வருகின்றன.

    இதனால் நடப்பு சம்பா பயிரிட போதுமான நீர் கிடைக்காத அபாயம் ஏற்பட்டுள்ளது. நெற்பயிர்களை நாற்று விட்டு நடவு செய்துள்ள நிலையில் வீராணம் ஏரி வறண்டு வருவது விவசாயிகளிடம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வீராணம் ஏரி நீர் கிடைக்கவில்லை எனில் நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் கருகும் அபாயமும் உள்ளது. மேலும், சென்னைக்கு குடிநீர் அனுப்புவதிலும் சிக்கல் ஏற்பட்டு நாளொன்றுக்கு 30 கனஅடி குடிநீர் மட்டுமே அனுப்பப்படுகிறது.

    இதே நிலை நீடித்தால், அடுத்த 15 நாட்களுக்குள் வீராணம் ஏரி முழுமையாக வறண்டு போய்விடும். இதனால் நடப்பு சம்பா பயிரிடும் விவசாயிகள் பாதிக்கப்படுவதோடு, சென்னையில் குடிநீர் பிரச்சனை உருவாகும் சூழலும் உருவாகியுள்ளது.

    • வடக்கு ராஜன் வாய்க்காலில் விடப்பட்டுள்ள குறைந்தளவு தண்ணீரை விவசாயிகள் என்ஜின் வைத்து சம்பா பருவ நேரடி நெல் விதைப்பு செய்த வயலுக்கு இறைத்து வருகின்றனர்.
    • நேற்றைய நிலவரப்படி வீராணம் ஏரியின் நீர்மட்டம் மட்டம் 40.55 அடியாக உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது.

    டெல்டா பகுதி விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக இந்த ஏரி விளங்கி வருகிறது. கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக இந்த ஏரி உள்ளது.

    இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

    காவிரி நீர் மேட்டூர் அணையில் இருந்து கல்லணைக்கு வந்து அங்கிருந்து அணைக்கரையில் கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள கீழணைக்கு வரும். கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்படும்.

    மழைக் காலங்களில் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், அரியலூர், கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பெய்யும் மழை செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை மற்றும் காட்டாறுகள் மூலம் ஏரியை வந்தடையும்.

    இந்த நிலையில் சிதம்பரம் நீர் வளத்துறை அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் கீழணையில் வடவாறு வழியாக தண்ணீரை அனுப்பி வைத்து ஏரியை நிரப்பினர். இதன் மூலம் ஏரி 47.50 அடி முழு கொள்ளளவை எட்டியது.

    தற்போது ஏரிக்கு நீர் வரத்து இல்லாத நிலையிலும், கடும் வெயிலால் பாதிக்கப்பட்ட சூழலிலும் கீழணையில் தேக்கி வைத்த தண்ணீரை கொண்டு தொடர்ந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் இருந்து நீர் வரத்து இல்லாத சூழ்நிலையில் மேட்டூர் அணை கடந்த வாரம் மூடப்பட்டது. இதனால் கீழணைக்கு காவிரி நீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

    தற்போது கீழணையில் 6 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. இதில் இருந்து வடக்கு ராஜன் வாய்க்காலுக்கு வினாடிக்கு 115 கன அடியும், வடவாற்றில் வினாடிக்கு 203 கன அடியும் தண்ணீர் விடப்பட்டு வருகிறது. வடவாற்றில் விடும் தண்ணீரை விவசாயிகள் என்ஜின் வைத்து இறைத்து வருவதால் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதே போல் வடக்கு ராஜன் வாய்க்காலில் விடப்பட்டுள்ள குறைந்தளவு தண்ணீரை விவசாயிகள் என்ஜின் வைத்து சம்பா பருவ நேரடி நெல் விதைப்பு செய்த வயலுக்கு இறைத்து வருகின்றனர்.

    நேற்றைய நிலவரப்படி வீராணம் ஏரியின் நீர்மட்டம் மட்டம் 40.55 அடியாக உள்ளது. இதில் இருந்து சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 42 கன அடியும், பாசன வாய்க்கால் மூலம் விவசாய பாசனத்துக்கு வினாடிக்கு 106 கன அடி அனுப்பப்பட்டு வருகிறது. நீர் வரத்து இல்லாத நிலையில் சென்னை குடிநீருக்காக தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்படும் சூழல் உருவாகும்.

    கீழணையில் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டால் வடலூரில் இருந்த பண்ருட்டி வரை உள்ள 100-க்கும் மேற்பட்ட போர்வெல் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு அந்த தண்ணீரை சென்னைக்கு வீராணம் ஏரி தண்ணீரை எடுத்து செல்லும் குழாய்கள் வழியாக செலுத்தி கொண்டு செல்வது என தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

    கடந்த காலங்களில் இது போன்ற பற்றாக்குறை ஏற்பட்ட போது என்.எல்.சி. சுரங்க நீரை பெற்று லாரி மூலம் சென்னைக்கு எடுத்து செலப்பட்டது.

    எனவே அடுத்தடுத்து ஏற்படும் நெருக்கடியை கொண்டு சென்னை குடிநீரின் தேவைக்காக இந்த 2 கட்ட பணிகளையும் மேற்கொள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் (மெட்ரோ வாட்டர்) முடிவு செய்துள்ளனர்.

    • ஏரியில் இருந்து வினாடிக்கு 54 கன அடி நீர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
    • ஏரிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வர சிதம்பரம் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

    சேத்தியாதோப்பு:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் முழுகொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. சென்னைக்கு இந்த ஏரியில் இருந்து குடிநீருக்காக தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    மேட்டூர் அணை நீரே வீராணம் ஏரிக்கு முக்கிய நீர் ஆதாரம் ஆகும். மேட்டூர் அணை நீர் கீழணையில் இருந்து வடவாறு வழியாக ஏரிக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் மழைக்காலங்களில் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியான அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் இருந்து காட்டாறுகள் மூலம் ஏரிக்கு நீர் வந்து சேரும்.

    மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைந்து வரும் நிலையில் கடந்த மாதம் கீழணையில் இருந்து 8 அடி தண்ணீர் ஏரிக்கு தொடர்ந்து அனுப்பி வைக்கப்பட்டதால் ஏரியின் நீர் மட்டம் 46 அடி வரை உயர்ந்தது.

    இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்ததாலும், கீழணையில் தண்ணீர் இல்லாததாலும், தொடர்ந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வந்ததாலும் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக சரிந்தது.

    ஏரியின் நீர் மட்டம் தற்போது 41.85 அடியாக உள்ளது. ஏரியில் இருந்து வினாடிக்கு 54 கன அடி நீர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    விவசாய பணிகளுக்காக வினாடிக்கு 200 கன அடியும், வி.என்.எஸ்.எஸ். வடிகால் மதகு வழியாக விவசாய பணிகளுக்கு 30 கன அடியும் என மொத்தமாக வினாடிக்கு 284 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஏரியின் நீர் மட்டம் குறைந்து கொண்ட வருகிறது.

    இன்னும் ஒரு வாரம் வரை தான் ஏரியில் தண்ணீர் இருக்கும் என கூறப்படுகிறது . இதனால் சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்பி வைப்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.

    இந்த நிலையில் ஏரிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வர சிதம்பரம் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வீராணம் ஏரியில் நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நெற்பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
    • ஏரியிலிருந்து மெட்ரோ நிறுவனம் சென்னை மாநகரத்திற்கு குடிநீர் அனுப்பி வருகிறது.

    காட்டுமன்னார்கோவில்:

    கடலுார் மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி கடைமடை டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ளது. இந்த ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

    பாசன வசதிக்காக பூதங்குடியில் தொடங்கி லால்பேட்டை வரை 32 மதகுகள் உள்ளது. இந்த ஏரியை நம்பி கடைமடை டெல்டா பாசன பகுதியான காட்டுமன்னார்கோவில், கீரப்பாளையம், குமராட்சி, புவனகிரி உள்ளிட்ட வட்டாரங்களில் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.

    ஏரியிலிருந்து மெட்ரோ நிறுவனம் சென்னை மாநகரத்திற்கு குடிநீர் அனுப்பி வருகிறது.

    டெல்டா பாசன பகுதியான கந்தகுமரன், நெடுஞ்சேரி, புத்துார், கண்ணங்குடி, மதுராந்தகநல்லுார், பன்னப்பட்டு, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் 30 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் ஆடி மாதத்தில் நேரடி நெல் விதைப்பு செய்தனர்.

    மேட்டூரிலிருந்து தண்ணீர் வரத்து தற்போது இல்லாத நிலையில், கடும் வெயிலால் ஏரியின் நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது ஏரியின் நீர்மட்டம் 38 அடியாக உள்ளது. சென்னைக்கு 454 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது முளைவிட்டுள்ள நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருவது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால், தண்ணீர் திறப்பதை திடீரென ஒத்தி வைத்தனர். இதனால், ஆவலுடன் காத்திருந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    வேறு வழியின்றி நெற்பயிர்கள் கருகிய பகுதிகளில் விவசாயிகள் மறு உழவு செய்து விதைப்பு செய்து வருகின்றனர். நெற்பயிர்கள் கருகி வருவதை தடுக்க நேரடி நெல் விதைப்பிற்கு விரைவில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வீராணம் ஏரி மூலம் 44 ஆயிரத்து 865 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
    • கீழணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 24-ந் தேதி முதல் வீராணம் ஏரிக்கு திறக்கப்பட்டது.

    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் வருகிறது.

    வீராணம் ஏரி மூலம் 44 ஆயிரத்து 865 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    இந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணையில் இருந்து கீழணைக்கு ஜூன் மாதம் 18-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்த தண்ணீர் படிப்படியாக கீழணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 24-ந் தேதி முதல் வீராணம் ஏரிக்கு திறக்கப்பட்டது.

    இந்த தண்ணீர் ஏரியில் திறக்கப்பட்டு தற்போது 45.10அடி தண்ணீர் உள்ளது. வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் வருகிற திங்கட்கிழமைக்குள் ஏரி முழு அளவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீருக்காக வினாடிக்கு 50 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. தற்போது விவசாய பணிகள் நடைபெறாததால் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

    • வீராணம் ஏரியில் அந்த பகுதி மட்டுமல்லாமல் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மீனவர்கள் இங்கு வந்து மீன்பிடித்து செல்கின்றனர்.
    • கொள்ளிடம் கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு 298 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.

    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தினமும் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    மேலும் புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம், லால்பேட்டை உள்ளிட்ட காட்டுமன்னார்கோவிலை சுற்றியுள்ள பல்வேறு விவசாய நிலங்கள் இந்த ஏரியின் மூலம் பாசனம் பெற்று வருகிறது. வீராணம் ஏரியில் அந்த பகுதி மட்டுமல்லாமல் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மீனவர்கள் இங்கு வந்து மீன்பிடித்து செல்கின்றனர். கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தில் கன மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இந்த நீர் கல்லணையில் இருந்து கொள்ளிடத்திற்கு ஆற்றில் திறந்து விடப்பட்டது. கொள்ளிடம் கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு 298 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏரியின் முழு கொள்ளளவு 47.50 கன அடி ஆகும். கடந்த மாதத்திலிருந்து வீராணம் ஏரிக்கு நீர் வரத்து வருவதால் ஏரியின் நீர்மட்டம் 42.75 கன அடியாக அதிகரித்தது.

    ஏரிக்கு வரும் நீர்வரத்தால் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் தற்போது 44.80 கன அடியாக உயர்ந்துள்ளது. வீராணம் ஏரியிலிருந்து சென்னை மெட்ரோ குடிநீருக்காக தினமும் 50 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. வீராணம் ஏரியை சுற்றியுள்ள விவசாய நிலத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது குறித்து விவசாயிகள் கூட்டம் நடத்தப்பட்டு அதன் பின்னர் தண்ணீர் திறக்கப்படும் என விவசாயிகள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஏரியில் நீர் வரத்து அதிகரித்து வருவதால் இன்னும் ஓரிரு நாட்களில் ஏரியின் முழுகொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×