search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வீராணம் ஏரி இந்த ஆண்டில் முதன் முறையாக நிரம்பியது
    X

    வீராணம் ஏரி இந்த ஆண்டில் முதன் முறையாக நிரம்பியது

    • வீராணம் ஏரி தனது முழுக் கொள்ளளவான 47.50 அடியை இன்று காலை எட்டியது.
    • வீராணம் ஏரி நிரம்பி விட்டதாக பொதுப்பணித்துறையினர் அறிவித்தனர்.

    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி 11 கி.மீ. நீளமும், 4 கி.மீ. அகலமும் கொண்டது. இந்த ஏரியில் 1.46 டி.எம்.சி. நீரினை தேக்கி வைக்கமுடியும். இந்த ஏரியின் முழுக் கொள்ளளவு 47.5 அடியாகும். இந்த ஏரி சென்னையின் முக்கிய ஆதாராமாக திகழ்ந்து வருகிறது. இந்த ஏரியின் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    இந்த ஏரிக்கு பருவகால மழை மூலமாகவும் காவிரியின் கொள்ளிடத்தில் உள்ள கீழணையில் இருந்து வடவாறு வழியாக நீர் வரும். கடந்த ஆண்டில் மழை பெய்யாத மாதமே இல்லை. இதனால் வீராணம் ஏரிக்கு நீர் வந்து கொண்டே இருந்தது. இதனால் வீராணம் ஏரி கடந்த ஆண்டு மட்டும் 6 முறை நிரம்பியது குறிப்பிடத்தக்கதாகும். இதனை அடுத்து சென்னையில் தடையின்றி குடிநீர் விநியோகம் நடந்தது.

    மேலும், ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட நீரினால் காட்டுமன்னார்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் நெல் உட்பட பயிர்களின் விளைச்சல் அமோகமாக இருந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருந்தனர். இதனால் விவசாயத் தொழிலாளர்களுக்கும் தொடர்ச்சியான பணிகள் கிடைத்தது. காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் தற்போது அறுவடை முடிந்த நிலையிலும், வடவாறு வழியாக ஏரிக்கு நீர் வந்து கொண்டே உள்ளது.

    இந்நிலையில் வீராணம் ஏரி தனது முழுக் கொள்ளளவான (1.46 டி.எம்.சி.) 47.50 அடியை இன்று காலை எட்டியது. இதனால் வீராணம் ஏரி நிரம்பி விட்டதாக பொதுப்பணித்துறையினர் அறிவித்தனர். இதனால் காட்டுமன்னார்கோவில் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், சென்னை நகருக்கும் தங்கு தடையின்றி குடிநீர் விநியோகிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

    Next Story
    ×