என் மலர்
நீங்கள் தேடியது "வீராணம் ஏரி"
- ஏரியின் மொத்த நீர் மட்ட அளவு 47.50 அடியில் 46 கன அடியை கடந்த சில தினங்களுக்கு முன்பாக எட்டியது.
- வெள்ளாற்றின் கரையோரம் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் கூறினார்.
சேத்தியாத்தோப்பு:
கடலூர் மாவட்டத்தில் கடலூர், வடலூர், சேத்தியாத்தோப்பு, ஸ்ரீ முஷ்ணம், விருத்தாசலம், திட்டக்குடி, தொழுதூர், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், புவனகிரி ஆகிய பகுதிகளில் நேற்று இரவு 7 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. நள்ளிரவு 12 மணி வரை மழை கொட்டித் தீர்த்தது.
விடியற்காலை 6 மணிவரை லேசான மழை பெய்தது. ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதில் சேத்தியாத்தோப்பு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு 17 செ.மீ. மழை பதிவாகியது. இதனால் வெள்ளாற்றில் நீர்வரத்து அதிகரித்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு தனது முழுக் கொள்ளளவான 7.5 அடியை எட்டியது.
இதனைத் தொடர்ந்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டிற்கு நீர் வந்த வண்ணம் உள்ளதால் பொதுப்பணித் துறை நீர்ப்பாசனப் பிரிவினர் உபரி நீரை வெளியேற்ற முடிவு செய்தனர். அணைக்கட்டில் 20 மதகுகள் உள்ளன. இதில் 4 மதகுகளை மட்டும் திறந்து விநாடிக்கு 600 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது.
மேலும், கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வருவது வீராணம் ஏரியாகும். 14 கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த ஏரி 5 கிலோ மீட்டர் அகலம் உடையது. ஏரியின் மொத்த நீர் மட்ட அளவு 47.50 அடியில் 46 கன அடியை கடந்த சில தினங்களுக்கு முன்பாக எட்டியது.
தற்போது பெய்த மழையில் வீராணம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்ததால் வீராணம் ஏரியின் வி.என்.எஸ்.எஸ். மதகு, பாழ் வாய்க்கால்கள் மூலம் தலா 300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும், சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு குமார உடைப்பு வழியாகவும் 300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த நீர் அனைத்தும் பல்வேறு வாய்க் கால்கள் வழியாக பரங்கிப் பேட்டைக்கு சென்று வங்கக் கடலில் கலக்கிறது.
நீர் வரத்தை பொறுத்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு, வீராணம் ஏரியில் இருந்து வெளி யேற்றப்படும் நீரின் அளவு கூடுதலாவதற்கு வாய்ப்பு உள்ளதாக செயற்பொறியாளர் அடைக்காப்பான் கூறினார். மேலும், வெள்ளாற்றின் கரையோரம் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் கூறினார்.
- ஏரி நீரில் நச்சுக்கள் கலந்துள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் மற்றும் பிரசிடென்சி கல்லூரி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
- ஒரு லிட்டர் குடிநீரில் 1 மைக்ரோ கிராமுக்கு மேல் நச்சுக்கள் இருக்க கூடாதென உலக சுகாதார மைய வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது.
சேத்தியாத்தோப்பு:
கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி சென்னையின் முக்கிய நீராதாரமாக விளங்குகிறது. இந்த ஏரி கடந்த 10-ம் நூற்றாண்டில் சோழர்களால் உருவாக்கப்பட்டது. இங்கிருந்து குழாய்கள் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த ஏரி நீரில் நச்சுக்கள் கலந்துள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் மற்றும் பிரசிடென்சி கல்லூரி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து 2019-ம் ஆண்டு மார்ச் வரை 16 கி.மீ. பரப்பில் உள்ள வீராணம் ஏரியின் 6 இடங்களில் இருந்து ஏரி நீர் எடுக்கப்பட்டது. இதனை ஆய்வுக்கு உட்படுத்தியபோது வீராணம் ஏரி நீரில் 10 சயனோ பாக்டீரியாக்கள் உள்ளதால் இவைகள் மூலமாக இந்த நச்சுக்கள் உருவானது ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் குடிநீரில் 1 மைக்ரோ கிராமுக்கு மேல் நச்சுக்கள் இருக்க கூடாதென உலக சுகாதார மைய வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது. ஆனால், வீராணம் ஏரியில் ஒரு லிட்டர் நீரில் 17.72 மைக்ரோ கிராம் முதல் 19.38 கிராம் வரை நச்சுகள் உள்ளது கண்டறியப்பட்டது. இந்த நச்சுக்கள் மனித உடலில் உள்ள கல்லீரலை பாதிப்படைய செய்வதோடு, தோல் வியாதிகளும் வருமென சென்னை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
மழைக்காலங்களில் விளைநிலங்களில் தேங்கும் நீர் வடிவாய்க்கால்கள் மூலம் வீராணம் ஏரிக்குள் வருகிறது. இந்த நிலங்களின் விளைச்சலுக்காக பயன்படுத்தப்படும் உரங்களினால், ஏரிக்கு வரும் நீரின் மூலமாக இந்த நச்சுக்கள் வந்திருக்கும் என்று சென்னை பிரசிடென்சி கல்லூரி தாவரவியல் ஆராய்ச்சியாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், இந்நீரில் உள்ள அமினோ அமிலம் மூலமாக புற்றுநோய் வருவதற்கான அபாயமும் உள்ளதாக அவரது அறிக்கையில் கூறியுள்ளார்.
கடந்த 2-ம் உலகப்போரின் போது மேற்கண்ட நச்சுக்களை எதிரி நாடுகளில் உள்ள நீர்நிலைகளில் கலந்து அந்த மக்களை ஹிட்லர் கொன்று குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.






