search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vaigai Dam"

    • கடந்த சில நாட்களாக பாசனத்திற்கான நீர் நிறுத்தப்பட்டு மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 45.60 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. பருவமழை கைகொடுத்ததால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்டது.

    கடந்த சில நாட்களாக பாசனத்திற்கான நீர் நிறுத்தப்பட்டு மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை முதல் பாசனத்திற்கு 450 கனஅடி நீருடன் சேர்த்து 519 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 508 கனஅடி நீர் வருகிறது.

    அணையின் நீர்மட்டம் 65.42 அடியாக உள்ளது. 4724 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 120.55 அடியாக உள்ளது. 104 கனஅடி நீர் வருகிறது. 556 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 2737 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 45.60 அடியாக உள்ளது. 21 கனஅடி நீர் வருகிறது. 75 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 107.58 அடியாக உள்ளது. 2.5 கனஅடி நீர் வருகிறது. 25 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 37.50 அடியாக உள்ளது. 6 கனஅடி நீர் வருகிறது. 14.47 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    போடி 0.4, உத்தமபாளையம் 0.8, கூடலூர் 1.2, சண்முகாநதி 3.4 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    • சுற்றுலாப் பயணிகள் தரைப்பாலத்தை கடக்க தடை.
    • நீர் இருப்பு 3023 மி.கன அடியாக உள்ளது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.

    மேலும் தேனி, மதுரை மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது. அணையின் நீர்மட்டம் வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த மாத தொடக்கத்தில் 65 அடியை எட்டியது.

    முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு மழை அளவு படிப்படியாக குறையத் தொடங்கியது.

    முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மற்றும் அவ்வப்போது பெய்யும் மழை நீரால் வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 56.82 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 612 கன அடி தண்ணீர் வருகிறது. நீர் இருப்பு 3023 மி.கன அடியாக உள்ளது.

    இந்நிலையில் வைகை அணையில் இருந்து சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கிருதுமால் உபவடி நிலத்திற்கு குடிநீர் தேவைக்காக சிறப்பு நிகழ்வாக தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி வைகை அணையில் கூடுதல் இருப்பாக உள்ள 1.68 டி.எம்.சி. தண்ணீரில் இன்று முதல் 8 நாட்களுக்கு வினாடிக்கு 650 கன அடி வீதம் 0.45 டி.எம்.சி.க்கு மிகாமல் தண்ணீரின் இருப்பு மற்றும் வரத்தை பொறுத்து நீர் திறந்து விடப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை அணையில் இருந்து கூடுதல் பாசனத்துக்கான தண்ணீர் மற்றும் குடிநீருக்கு என 2219 கன அடி நீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை ஆற்றில் நீர் கரைபுரண்டு ஓடுகிறது.


    அணையின் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்வதால் இரு புறங்களிலும் அடைக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் செல்ல அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.

    தரைப்பாலத்தை கடந்து பூங்காவிற்கு செல்ல முடியாமல் அவர்கள் ஏமாற்றமடைந்தனர். இருந்த போதும் சிலர் வாகனங்கள் மூலம் பாலத்தை சுற்றி எதிர்புறம் சென்றனர்.

    எனவே கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி நீர்வளத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஆற்றை கடக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என எச்சரித்துள்ளனர்.

    அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மதுரை மாநகர் குடிநீர் தேவைக்காக மட்டும் 69 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 120.15 அடியாக உள்ளது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த மாத தொடக்கத்தில் 65 அடியை எட்டியது.

    முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு மழை அளவு படிப்படியாக குறையத் தொடங்கியது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மற்றும் அவ்வப்போது பெய்யும் மழை நீரால் வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 56.56 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 568 கன அடி தண்ணீர் வருகிறது. தற்போது மதுரை மாநகர் குடிநீர் தேவைக்காக மட்டும் 69 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 2978 மி.கன அடியாக உள்ளது.

    இந்நிலையில் வைகை அணையில் இருந்து சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கிருதுமால் உபவடி நிலத்திற்கு குடிநீர் தேவைக்காக சிறப்பு நிகழ்வாக தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வைகை அணையில் கூடுதல் இருப்பாக உள்ள 1.68 டி.எம்.சி. தண்ணீரில் நாளை முதல் 8 நாட்களுக்கு வினாடிக்கு 650 கன அடி வீதம் 0.45 டி.எம்.சி.க்கு மிகாமல் தண்ணீரின் இருப்பு மற்றும் வரத்தை பொறுத்து நீர் திறந்து விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 120.15 அடியாக உள்ளது. வரத்து 320 கன அடி. திறப்பு 755 கன அடி. இருப்பு 2658 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.20 அடியாக உள்ளது. வரத்து 54 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 399.31 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 122.83 அடி. வரத்து 11.5 கன அடி. திறப்பு 30 கன அடி. இருப்பு 94.34 மி.கன அடி. சண்முகாநதி அணை நீர்மட்டம் 50.40 அடி. வரத்து இல்லாத நிலையில் பாசன தேவைக்காக 15 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 72.78 அடியாக உள்ளது.

    சோத்துப்பாறையில் 2.6, பெரியாறு அணையில் 1.4, தேக்கடி 3.8 மி.மீ. மழை அளவு பதிவானது.

    • அணைக்கு 1183 கன அடி நீர் வருகிறது. 3381 மி. கன அடி நீர் இருப்பு உள்ளது.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.65 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. பருவமழை கைகொடுத்த நிலையில் 71 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 65 அடி வரை உயர்ந்தது.

    அதனைத் தொடர்ந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாய பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மதுரை மாவட்ட பூர்வீக பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் 1699 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. மேலும் தற்போது நீர்பிடிப்பு பகுதியில் மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டமும் வேகமாக சரிந்து 58.79 அடியாக குறைந்துள்ளது.

    அணைக்கு 1183 கன அடி நீர் வருகிறது. 3381 மி. கன அடி நீர் இருப்பு உள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.65 அடியாக உள்ளது. 395 கன அடி நீர் வருகிற நிலையில் தமிழக பகுதிக்கு 967 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 2955 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.30 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறையின் அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 30 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

    தேக்கடியில் மட்டும் 0.4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.65 அடியாக உள்ளது.
    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.30 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. பருவமழை கைகொடுத்ததால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 65 அடி வரை எட்டியது. அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

    பின்னர் மதுரை மாவட்ட பூர்வீக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 58.79 அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் 569 கன அடியில் இருந்து 1699 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அணைக்கு 1183 கனஅடி நீர் வருகிறது. 3381 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.65 அடியாக உள்ளது. 395 கன அடிநீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 967 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 2955 மி. கன அடி இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.30 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் 30 கன அடி.

    தேக்கடியில் மட்டும் 0.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 122.15 அடியாக உள்ளது.
    • கும்பக்கரை அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றுத்துடன் திரும்பினர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் முல்லை பெரியாறு, கொட்டக்குடி ஆறு, வராகநதி உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளும் நிரம்பி உள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வருசநாடு, வெள்ளிமலை, அரசரடி, கடமலைக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் மூல வைகையாறு தடுப்பணையில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    மேலும் நீர்வரத்து அதிகமாகக்கூடும் என நீர் வளத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ, ஆற்றைக் கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். நீர்வரத்து அதிகரித்த நிலையில் வைகை அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 569 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு 1171 கனஅடி நீர் வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த வைகை அணை நீர்மட்டம் மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 58.23 அடியாக உள்ளது. அணையில் 3273 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 122.15 அடியாக உள்ளது. 420 கனஅடி நீர் வருகிற நிலையில் தமிழக பகுதிக்கு 1000 கனஅடி நீர்திறக்கப்படுகிறது. அணையில் 3054 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.30 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 126.28 அடியில் பல நாட்களாக நீடித்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் 30 கனஅடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.

    கொடைக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான வட்டக்கானல், வெள்ளக்கவி ஆகிய இடங்களில் பெய்த தொடர் மழை காரணமாக பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இன்றும் 4வது நாளாக வெள்ளப்பெருக்கு குறையாமல் இருப்பதால் அருவி பகுதிக்கு செல்ல தடை தொடரும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    இதனால் கும்பக்கரை அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றுத்துடன் திரும்பினர்.

    வீரபாண்டி 2.8, உத்தமபாளையம் 1.6, கூடலூர் 2.2, பெரியாறு அணை 0.6, தேக்கடி 1.4, சண்முகாநதி 1.8 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    • மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 3699 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 123.40 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி, திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் பெய்யத் தொடங்கி உள்ளது.

    பூர்வீக பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. 65 அடி வரை உயர்ந்த நீர் மட்டம் தற்போது 61.12 அடியாக குறைந்துள்ளது. மீண்டும் மழை பெய்யத் தொடங்கி உள்ளதால் அணைக்கு நீர்வரத்து 848 கன அடியில் இருந்து 1156 கன அடியாக உயர்ந்துள்ளது.

    மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 3699 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இன்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் மழை தொடரும் என்ற நம்பிக்கையில் மும்முரமாக விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 123.40 அடியாக உள்ளது. அணைக்கு 534 கன அடி நீர் வருகிற நிலையில் 1105 கனஅடி நீர் திற்கப்படுகிறது. 3301 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.55 அடியாக உள்ளது. 65 கன அடி நீர் வருகிற நிலையில் 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியில் நீடிக்கிறது. வரத்தும், திறப்பும் 34.29 கன அடி.

    ஆண்டிபட்டி 4.2, அரண்மனைபுதூர் 0.6, பெரியகுளம் 12.4, சோத்துப்பாறை 5.2, வைகை அணை 1.4, உத்தமபாளையம் 0.8, கூடலூர் 3.6, பெரியாறு அணை 2.4, தேக்கடி 4.4, சண்முகாநதி அணை 4.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 124.20 அடியாக உள்ளது.
    • பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மட்டும் 31 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பூர்வீக பாசன நிலங்களுக்காக நேற்று முன்தினம் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் ஆற்றின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்த தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கப்பட்டு இன்று காலை முதல் 3151 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 65 அடியை கடந்த நிலையில் முழு கொள்ளளவை நெருங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூடுதல் தண்ணீர் திறப்பு காரணமாகவும், மழை முற்றிலும் நின்று விட்ட காரணத்தாலும் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 63.65 அடியாக உள்ளது. நீர் வரத்து 1125 கன அடியாக உள்ளது. நீர் இருப்பு 4337 மி.கன அடி.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 124.20 அடியாக உள்ளது. நீர் வரத்து 648 கன அடி. திறப்பு 1107 கன அடி. இருப்பு 3460 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. வரத்து 76 கன அடி. திறப்பு 100 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடி. வரத்து மற்றும் திறப்பு 42.14 கன அடி. இருப்பு 100 மி.கன அடி.

    சண்முகாநதி அணை நீர் மட்டம் 52.50 அடி. இருப்பு 79.57 மி.கன அடியாக உள்ளது. பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மட்டும் 31 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. மற்ற இடங்களில் மழை இல்லை.

    • கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்தது.
    • சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் தேனி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்தது.

    மேலும் பாசனத்துக்கான தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி 64.96 அடியாக உள்ளது. அணைக்கு 1309 கன அடி நீர் வருகிறது. 4622 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    இந்த நிலையில் வைகை பூர்வீக பாசன பகுதி 3க்கு இன்று முதல் 9 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று காலை வைகை அணையில் இருந்து பாசனத்துக்கான தண்ணீர் திறக்கப்பட்டது.

    இன்று முதல் 18-ந் தேதி வரை 9 நாட்களுக்கு 1830 மி.கன அடியும், வைகை பூர்வீக பாசன பகுதி 1க்கு 20-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை 10 நாட்களுக்கு 418 மி.கன அடியும் வைகை பூர்வீக பாசன பகுதி 2க்கு டிசம்பர் 1-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை 8 நாட்களுக்கு 752 மி.கன அடியும், 3000 அடிக்கு மிகாமல் 27 ஆயிரத்து 529 ஏக்கர், 40 ஆயிரத்து 743 ஏக்கர் மற்றும் 67 ஆயிரத்து 837 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் நிலையில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் அடுத்த ஆண்டு மார்ச் வரை வைகை அணையில் வைகை பங்கீட்டு நீர் 1354 மி.கன அடி எட்டும் போதெல்லாம் வைகை பூர்வீக பாசன பகுதி 1, 2, 3க்கு தண்ணீர் திறப்பு விதிகளின்படி 2:3:7 விகித அடிப்படையில் தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் மதுரை ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 124.60 அடியாக உள்ளது. 766 கன அடி நீர் வருகிற நிலையில் 1100 கன அடி நீர் தமிழக பகுதிக்கு திறக்கப்படுகிறது. அணையில் 3539 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் 100 கன அடி. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் 52.30 கன அடியாக உள்ளது. மழை எங்கும் இல்லை.

    • வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
    • வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியவுடன் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் முக்கிய நீர்வரத்து பகுதியாக வருசநாடு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது. அரசரடி, பொம்மிராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழை நீர் ஓடைகள் வழியே சிற்றாறுகளாக மாறி மூல வைகையாக உருவெடுக்கிறது.

    மேலும் வைகையின் துணை ஆறுகளாக சுருளியாறு, கொட்டக்குடி, வறட்டாறு, வராக நதி, முல்லையாறு, கூட்டாறு, மஞ்சளாறு, நாகலாறு, மருதாநதி, பாம்பாறு உள்ளிட்ட ஆறுகள் உள்ளன.

    இந்த ஆறுகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்யும் மழை நீரை வைகைக்கு கொண்டு வந்து சேர்க்கின்றன. இந்த ஆறுகளில் பெரும்பாலும் மழைக்காலங்களில் மட்டுமே நீர்வரத்து இருக்கும்.

    தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கொட்டக்குடி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    வைகை அணைக்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வரும் நீர் தேனி, பழனிசெட்டிபட்டி அளவீட்டு மையத்தில் கண்காணிக்கப்படுகிறது. வருசநாடு மூல வைகை ஆற்றில் இருந்து வரும் நீர் அமச்சியாபுரம் அருகே உள்ள அளவீட்டு மையத்தில் கண்காணிக்கப்படுகிறது.

    இந்த நீர்வரத்தை கணக்கில் கொண்டு வைகை அணையில் உள்ள அளவீட்டு மையத்தில் அணையின் நீர்மட்டம் கணக்கிடப்படுகிறது. மழை மற்றும் அவசர காலங்களில் நீர்மட்டத்தில் ஏற்படும் திடீர் உயர்வுக்கு தகுந்தபடி நீர் வெளியேற்றம் செய்யப்படும். கடந்த 3 நாட்களாக வைகை அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்ததால் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 64.34 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 2273 கன அடியாக உள்ளது. நேற்று வரை மதுரை குடிநீருக்கு மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை முதல் பாசனத்துக்கு சேர்த்து 1199 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4484 மி.கன அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியவுடன் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். 68.5 அடியை எட்டியதும் 2ம் கட்ட எச்சரிக்கை விடப்படும். 69 அடியை எட்டியதும் 3ம் கட்ட எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் வெளியேற்றப்படும்.

    கடந்த சில நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் வைகை அணையின் நீர்மட்டம் ஓரிரு நாளில் 66 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு 24 மணி நேரமும் நீர் வளத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். 3 ஷிப்டுகளாக 24 மணி நேரமும் அணைக்கு வரும் தண்ணீர் அளவு, திறக்கப்படும் தண்ணீரின் அளவு ஆகியவற்றை கண்காணித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே வைகை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் இந்த அணை மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 124.95 அடியாக உள்ளது. வரத்து 2022 கன அடி. திறப்பு 1100 கன அடி. இருப்பு 3608 மி.கன அடி. மஞ்சளாறு அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி 55 அடியிலேயே உள்ளது. இதனால் அணைக்கு வரும் 184 கன அடி முழுவதும் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டமும் முழு கொள்ளளவை எட்டி 126.28 அடியிலேயே உள்ளது. இதனால் அணைக்கு வரும் 357 கன அடி முழுவதும் உபரியாக வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், ஆற்றை கடக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கும்பக்கரை அருவியிலும் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவியில் குளிக்க இன்று 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    வீரபாண்டி 12.4, பெரியகுளம் 25, மஞ்சளாறு 13, சோத்துப்பாறை 36, போடி 7.2, ஆண்டிபட்டி 2.8, பெரியாறு 5.4, சண்முகாநதி அணை 2, அரண்மனைபுதூர் 1.6, உத்தமபாளையம் 1.8, கூடலூர் 1.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் மீண்டும் முழு கொள்ளளவை எட்டும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
    • முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் 124.30 அடியாக உள்ளது. அணைக்கு 3402 கன அடி நீர் வருகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். வைகை அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் கடந்த 2 நாட்களில் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி 62.30 அடியாக உள்ளது. நீர்வரத்து 2745 கன அடி நீர் வருகிற நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. எனவே இன்று மாலைக்குள் 63 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் மீண்டும் முழு கொள்ளளவை எட்டும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனால் விவசாய பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ளனர்.

    முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் 124.30 அடியாக உள்ளது. அணைக்கு 3402 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 3479 மி. கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடித்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் 100 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 534.70 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    ஆண்டிபட்டி 20, அரண்மனைப்புதூர் 0.4, பெரியகுளம் 52, மஞ்சளாறு 10, சோத்துப்பாறை 123.2, வைகை அணை 2.2, போடி 33.4, உத்தமபாளையம் 5.6, பெரியாறு அணை 72.8, தேக்கடி 60.4, சண்முகாநதி 10.6 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • வைகை அணையிலிருந்து திறக்கப்படும் பாசனத்திற்கான நீர் 500 கனஅடியாக குறைக்கப்பட்டது.
    • சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து 1180 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டமும் சீராக உயர்ந்து 122.95 அடியாக உள்ளது.

    அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 456 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3212 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. வருசநாடு, அரசரடி, கண்டமனூர், கடமலைக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர்மழையால் மூல வைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்தது. மேலும் வைகை அணைக்கு நீர்வரத்து 1191 கனஅடியாக உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் 59.68 அடியாக உள்ளது.

    மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நகர் பகுதியில் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் கடும் அவதியடைந்தனர். இதனால் பாசனத்திற்கு தண்ணீர் தேவை குறைந்தது. இதன் காரணமாக வைகை அணையிலிருந்து திறக்கப்படும் பாசனத்திற்கான நீர் 500 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    குடிநீருக்காக 69 கனஅடியுடன் சேர்த்து 569 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3542 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணை நீர்மட்டம் 55 அடியில் நீடித்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் 224 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. 64.34 கனஅடி நீர் வருகிறது. குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 30 கனஅடியும், மற்றவை உபரியாகவும் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 7.2, தேக்கடி 20.4, கூடலூர் 8.2, சண்முகாநதி அணை 4.6, உத்தமபாளையம் 4.6, வீரபாண்டி 4.6 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    ×