என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vaigai Dam"

    • வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 69.88 அடியாக உள்ளது.
    • மேகமலை, கும்பக்கரை அருவிகளில் வெள்ளப்பெருக்கு நீடித்து வருவதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை தொடர்கிறது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் வடகிழக்கு பருவமழையால் 70 அடியை கடந்தது. இதன் காரணமாக தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு 3 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    விவசாயிகள் கோரிக்கையை ஏற்று ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்ட பூர்வீக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. முதற்கட்டமாக ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக 2500 கன அடி நீர் நேற்று திறக்கப்பட்டது. இன்று 2-ம் நாளாக வினாடிக்கு 2000 கன அடி வீதம் 172.80 மி.கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது. நாளை 1500 கனஅடி, 4-ம் நாள் 1000 கன அடி, 5-ம் நாள் 222 கன அடி என மொத்தம் 5 நாட்களுக்கு 624 மி.கன அடி நீர் ராமநாதபுரம் மாவட்ட கண்மாய்களுக்கு திறக்கப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து சிவகங்கை, மதுரை மாவட்டங்களுக்கு தண்ணீர் திறக்கப்படும். தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீர் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை வழியாக ராமநாதபுரம் செல்லும் என்பதால் கரையோரப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 69.88 அடியாக உள்ளது. வரத்து 2338 கன அடி. திறப்பு 3699 கன அடி. இருப்பு 5796 மி.கன அடி.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியில் தொடர்ந்து நீடிப்பதால் அணைக்கு வரும் 139 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.60 அடியாகவும், சண்முகா நதி அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவில் 52.50 அடியிலும் நீடிக்கிறது.

    மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சுருளி, மேகமலை, கும்பக்கரை அருவிகளில் வெள்ளப்பெருக்கு நீடித்து வருவதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை தொடர்கிறது.

    கூடலூர், உத்தமபாளையம், தலா 1.8, பெரியகுளம் 4, வீரபாண்டி 6.2, அரண்மனைபுதூர் 1.6, வைகை அணை 1.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • பெரியாறு நீர்மின் நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் கொண்டு மின் உற்பத்தி நடைபெறுகிறது.
    • சோத்துப்பாறை அணையின் நீர்மட்டமும் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியில் நீடிக்கிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் தொடக்கத்திலேயே மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் முக்கிய நீர் ஆதாரங்கள் அனைத்தும் வேகமாக நிரம்பின.

    71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் கடந்த 20-ந்தேதி 69 அடியாக உயர்ந்த நிலையில் அணையில் இருந்து வைகை ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்தும் தண்ணீர் வரத்து இருந்து வந்த நிலையில் நேற்று மதியம் அணையில் இருந்து வைகை ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டது. அதன்பின்பு ஆற்றில் திறக்கப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டது.

    இன்று காலை அணையில் இருந்து பெரியாறு, திருமங்கலம் பிரதான கால்வாய்களில் பாசனத்திற்கு 1430 கன அடி, குடிநீர் திட்டங்களுக்கு வினாடிக்கு 69 கன அடி என மொத்தம் 1499 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 69.78 அடியாக உள்ள நிலையில் நீர் வரத்து 2287 கன அடியாக உள்ளது. நீர் இருப்பு 5771 மி.கன அடியாக உள்ளது.

    அணையின் நீர்மட்டம் எப்போது வேண்டுமானாலும் உயரலாம் என்பதால் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு 3 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக கடந்த 18ந் தேதி அணையின் நீர்மட்டம் 138 அடியாக உயர்ந்தது. ரூல்கர்வ் விதிப்படி அணைக்கு வரும் தண்ணீர் உபரியாக இடுக்கி அணைக்கு திறந்து விடப்பட்டது. அதன்பிறகு மழை அளவும் குறைந்ததால் அணைக்கு வரும் நீர் வரத்தும் சரியத் தொடங்கியது. இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 138.05 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 4037 கன அடியாக உள்ள நிலையில் 1822 கன அடி நீர் உபரியாக திறக்கப்படுகிறது.

    இதன் காரணமாக பெரியாறு நீர்மின் நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் கொண்டு மின் உற்பத்தி நடைபெறுகிறது.

    இதேபோல் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டமும் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியில் நீடிக்கிறது. இதனால் அணைக்கு வரும் 181 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கன அடியாக உள்ளது. சண்முகாநதி அணையின் நீர்மட்டமும் அதன் முழு கொள்ளளவான 52.50 அடியை எட்டியதால் அணைக்கு வரும் 9 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 57 அடி உயரம் உள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 43.80 அடியாக உள்ளது. நீர் வரத்து 84 கன அடி.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அமைந்துள்ள அரிசிப்பாறையில் தொடர் மழை காரணமாக கடந்த 18ந் தேதி முதல் சுருளி அருவியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவி பகுதிக்கு செல்லவும் இன்று 8-வது நாளாக தடை நீடிக்கிறது. இதேபோல் பெரியகுளம் அருகில் உள்ள கும்பக்கரை அருவியில் இன்று 15-வது நாளாக பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேகமலை அருவியிலும் தடை தொடருகிறது.

    சுருளி அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக குளிக்க அமைக்கப்பட்ட தடுப்பு கம்பிகள், அருவிக்கு செல்லும் சிமெண்டு படிக்கட்டுகள் சேதம் அடைந்தன. அருவியில் நீர்வரத்து சீரான பிறகு சேதம் அடைந்த இரும்பு கம்பிகள், படிகள் சீரமைக்கப்படும் என்றும் அதுவரை சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி கிடையாது என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    பெரியாறு 24.2, தேக்கடி 9.8, சண்முகாநதி அணை 4.6, உத்தமபாளையம், கூடலூர் பகுதியில் தலா 2.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.80 அடியாக உள்ளது.
    • வருசநாடு பகுதியில் அமைந்துள்ள மேகமலை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர்மழையால் முல்லை பெரியாறு, போடி கொட்டக்குடியாறு, மூல வைகையாறு, வராகநதி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் கடந்த 18ம் தேதி நீர்மட்டம் 62.66 அடியாக இருந்தது. தொடர்மழை காரணமாக நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே உபரியாக வெளியேற்றப்படுகிறது.

    நீர்வரத்தை பொறுத்து அணையில் இருந்து தண்ணீரை திறந்து விடும் அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக 69.13 அடியாக நிலைநிறுத்தி கண்காணித்து வருகின்றனர். அணையில் நீர்வரத்து 3463 கனஅடியாக உள்ளது. ஆற்றின் வழியாகவும், பாசனத்திற்கும், குடிநீருக்காகவும் என மொத்தம் அணையிலிருந்து 3073 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 5605 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.80 அடியாக உள்ளது. 201 கனஅடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. தொடர்ந்து பெய்து வரும் மழையால் சோத்துப்பாறை அணை கடந்த 2 நாட்களுக்கு முன்பு முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டியது. இதனால் அணைக்கு வரும் 252.37 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ கூடாது என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    சண்முகாநதி அணையும் அதன் முழு கொள்ளளவான 52.50 அடியில் நீடிக்கிறது. அணைக்கு வரும் 16 கனஅடி நீர் உபரியாக திறக்கப்படுகிறது.

    கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இன்றும் 12-வது நாளாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுவதால் தடை தொடரும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் 5வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் ஆண்டிபட்டி அருகே வருசநாடு பகுதியில் அமைந்துள்ள மேகமலை அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அங்கும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆண்டிபட்டி 12, அரண்மனை புதூர் 7.6, வீரபாண்டி 7.6, பெரியகுளம் 9.2, மஞ்சளாறு 12.6, சோத்துப்பாறை 8.2, வைகை அணை 13.2, போடி 16.2, உத்தமபாளையம் 6.8, கூடலூர் 3.8, பெரியாறு அணை 4.2, தேக்கடி 3.6, சண்முகாநதி 9.4 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    • வைகை அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,463 கனஅடியாக உள்ளது.
    • அணையில் இருந்து குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திற்காக 3,416 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் தற்போது 69.13 கன அடியாக உள்ளது. வைகை அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,463 கனஅடியாக உள்ளது.

    அணை நிரம்பி உள்ளதால் நீர்ப்பிடிப்பு பகுதியானது கடல் போல காட்சியளிக்கிறது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திற்காக 3,416 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    அணை கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த 67 ஆண்டுகளில் 36-வது முறையாக நீர் நிரம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    5 மாவட்டங்களுக்கு முக்கிய நீராதாரமாக விளங்கும் வைகை அணை தற்போது நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மதுரை சிம்மக்கல் தரைப்பாலம்-விரகனூர் செல்லும் இணைப்பு சாலையில் இருகரைகளை உரசியவாறு தண்ணீர் செல்கிறது.
    • பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மதுரை:

    வடகிழக்கு பருவமழையால் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக நேற்று முன்தினம் 71 அடி உயரமுள்ள வைகைஅணை 69 அடி வரை எட்டியதால் அணையில் இருந்து விநாடிக்கு 3,600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் வைகை அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் நேற்று காலை மதுரை வந்தடைந்தது. இதனையொட்டி வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வைகை ஆறு பாய்ந்தோடும் திண்டுக்கல், தேனி, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையானது விடுக்கப்பட்டு உள்ளது.

    இதனால் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ள நிலையில் வைகை ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மதுரை சிம்மக்கல் தரைப்பாலம்-விரகனூர் செல்லும் இணைப்பு சாலையில் இருகரைகளை உரசியவாறு தண்ணீர் செல்கிறது.

    இதனையடுத்து மதுரை வைகையாற்று பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் கால்நடைகளை பாதுகாப்பாக பராமரிக்கவும், கால்நடைகளை ஆற்றில் இறக்கிவிட வேண்டாம் எனவும், நீர்நிலைகளின் அருகில் கால்நடைகளை கட்டிவைக்க வேண்டாம் என மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது தீபாவளி விடுமுறை என்பதால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வைகை ஆற்றில் இறங்கி குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர். 

    • 5,169 கனஅடியாக உள்ள உபரி நீர் திறப்பு, படிப்படியாக அதிகரிக்கும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
    • 5 மாவட்டங்களில் கரையோரம் வசிப்பவர்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை.

    தேனியின் சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

    இதனால் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது 5,169 கனஅடியாக உள்ள உபரி நீர் திறப்பு, படிப்படியாக அதிகரிக்கும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    இதனால் இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் கரையோரம் வசிப்பவர்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    தேனியில் நேற்றுமுன்தினம் 32 ஆண்டுகளுக்குப் பிறகு கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் முல்லைப் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்து பெரும்பாதிப்பு ஏற்பட்டது.

    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்றும் விட்டு விட்டு மழைக்கொட்டி தீர்த்து வருகிறது.
    • கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் குடிநீர் செல்லும் முக்கிய குழாய்கள் உடைந்து சேதம் அடைந்தன.

    வருசநாடு, அக்.18-

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. தேனி, திண்டுக்கல் உள்பட 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.

    வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான வெள்ளிமலை, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை தொடங்கி விடிய விடிய கன மழை பெய்தது. இதேபோல் போடியில் உள்ள முக்கிய நீர்பாசன குளங்களான பங்காறுசாமி குளம், செட்டிக்குளம், சங்கரப்பன்கண்மாய், மீனாட்சியம்மன் கண்மாய் ஆகியவற்றில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் அதிக அளவு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. போடி மெட்டு, குங்கரணி, பீச்சாங்கரை, ஊத்தாம்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும் விடிய விடிய கன மழை பெய்தது. இதனால் கொட்டக்குடி ஆறு, கொம்புதூக்கி ஆறு ஆகிய பகுதிகளிலும் வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது.

    கடந்த சில மாதங்களாக போதிய மழையின்றி வறண்டு கிடந்த தடுப்பணை பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் சீறிப்பாய்ந்து செல்வதால் பொதுமக்கள் அங்கு செல்ல வேணடாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தொடர் விடுமுறை காரணமாக சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் தடுப்பணை பகுதிக்கு செல்லகூடும் என்பதால் அங்கு தடுப்புகள் வைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்றும் விட்டு விட்டு மழைக்கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று இரவு வைகை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளான வெள்ளிமலை, மேகமலை, அரசரடி, பொம்மராஜபுரம், வருஷநாடு உள்ளிட்ட சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. இதன் காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஆற்றில் கரைபுரண்டு வந்த வெள்ள நீர் தேனி வருசநாடு சாலையில் பல்வேறு இடங்களில் புகுந்தது. இதனால் அந்தப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் தேங்கி இருந்த தண்ணீர் சிறிதளவு வடியத் தொடங்கியதும் வாகனங்கள் தண்ணீருக்குள் மெதுவாக சென்றது.

    இது தவிர வருஷநாடு முதல் கண்டமனூர் வரையிலான வைகை ஆற்றங்கரையோரம் உள்ள பல்வேறு தோட்டங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் விளைநிலங்கள் அனைத்தும் தண்ணீரால் நிரம்பி காட்சியளித்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

    மார்க்கையன்கோட்டை செல்லும் சாலையில் முல்லையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் டிரான்ஸ்பார்மர், குடிசை வீட்டை சூழ்ந்த வெள்ளம்.

     

    வடகிழக்கு பருவமழை தொடங்கிய 2 நாட்களிலேயே வைகை ஆற்றில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இனி வரும் நாட்களில் மழை அதிகரித்து வைகை ஆற்றில் அதிக அளவு வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதால் வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேகமலை அருவியில் இருந்து செல்லும் தண்ணீர் மேகமலை, சிங்கராஜபுரம், குமணன்தொழு ஆகிய 3 ஊராட்சிகளை சேர்ந்த 64 கிராமங்கள் பயன் அடைந்து வருகின்றனர்.

    கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் குடிநீர் செல்லும் முக்கிய குழாய்கள் உடைந்து சேதம் அடைந்தன. இதனால் 64 கிராம மக்கள் குடிநீரின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மழை நின்றபிறகுதான் குழாய்கள் சீரமைக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. எனவே அதுவரை குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வைகை அணைக்கு நேற்று 1319 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் இன்று காலை 12589 கன அடி நீர் வருவதால் இருகரைகளையும் தொட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. ஒருசில இடங்களில் கரையோரம் உள்ள வயல்களுக்குள்ளும் தண்ணீர் சென்று விட்டது.

    71 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 62.47 அடியாக உள்ளது. அணைக்கு 12 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வருவதால் விரைவில் முழு கொள்ளளவை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 68 அடியை எட்டியவுடன் முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும். இதனால் அணைக்கு வரும் நீர்வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.60 அடியாக உள்ளது.
    • இன்று 4-ம் நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கூடலூர்:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

    நேற்று மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சுமார் 2 மணி நேரம் மழை பெய்தது. ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதியில் இரவு முழுவதும் மிதமான மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷனம் நிலவி வருகிறது.

    தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியான வெள்ளிமலை வனப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் மூலவைகை யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையின் எதிரொலியாக தற்போதே வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பது விவசாயிகள் மற்றும் பொதுமக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை 61.88 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1074 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 1499 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 3969 மி.கன அடியாக உள்ளது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்துள்ளது. 126.28 அடி உயரம் கொண்ட இந்த அணையில் நேற்று காலை 76 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 86.42 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 112 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 3 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.60 அடியாக உள்ளது. வரத்து 1424 கன அடி. திறப்பு 1000 கன அடி. இருப்பு 4837 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 38.10 அடி. வரத்து 14 கன அடி. இருப்பு 161.64 மி.கன அடி.

    ஆண்டிபட்டி 6, அரண்மனைபுதூர் 13.8, வீரபாண்டி 17.2, பெரியகுளம் 18, மஞ்சளாறு 12, சோத்துப்பாறை 2.2, வைகை அணை 20, போடி 3.2, உத்தமபாளையம் 5.2, கூடலூர் 8.4, பெரியாறு அணை 13.6, தேக்கடி 58.6, சண்முகாநதி அணை 14.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று 4-ம் நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அதே வேளையில் சுருளி அருவியில் யானைகள் நடமாட்டத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் செய்யப்பட்டது. நேற்று கம்பம் வனப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பெய்த கனமழையால் சுருளி அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். 

    • வைகை அணையிலிருந்து அமைச்சர் மூர்த்தி தண்ணீர் திறந்து வைத்தார்.
    • மதுரை, சிவகங்கை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள ஒருபோக பாசனப் பரப்பாகிய 85 ஆயிரத்து 563 ஏக்கர் நிலங்களுக்கும் மற்றும் திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக பாசனப் பரப்பாகிய 19 ஆயிரத்து 439 ஏக்கர் நிலங்களுக்கும் ஆக மொத்தம் சேர்த்து 1 லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்களுக்கும் வினாடிக்கு 1,130 கன அடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு 8 ஆயிரத்து 493 மில்லியன் கன அடி தண்ணீரை இன்று முதல் வைகை அணையிலிருந்து திறந்துவிடுவதற்கு அரசு ஆணையிட்டு உள்ளது.

    இதனால் மதுரை, சிவகங்கை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

    தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி, வைகை அணையில் இருந்து ஒரு போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட ஒரு போக பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து அமைச்சர் மூர்த்தி தண்ணீர் திறந்து வைத்தார். 

    • 70 அடியை எட்டும் என எதிர்பார்த்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக 69 அடியிலேயே நீடித்தது.
    • தற்போது மழை ஓய்ந்த நிலையில் அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக 769 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

    தென்மேற்கு பருவமழை கைகொடுத்த நிலையில் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இதனால் 3 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு கரையோர மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

    கடந்த 5ம் தேதி அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியது. வழக்கமாக அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படும். ஆனால் இந்த ஆண்டு முழு கொள்ளளவான 71 அடிவரை நீர்மட்டத்தை நிலைநிறுத்த முடிவு செய்து நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 70 அடியை எட்டும் என எதிர்பார்த்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக 69 அடியிலேயே நீடித்தது.

    தற்போது மழை ஓய்ந்த நிலையில் அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக 769 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. ஆனால் நீாவரத்து 634 கனஅடியாகவே உள்ளதால் அணையின் நீர்மட்டம் 68.83 அடியாக குறைந்துள்ளது. 5529 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.65 அடியாக உள்ளது. 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு 619 கனஅடி நீர் வருகிறது. 5784 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    பெரியாறு 14, தேக்கடி 7.6 மழையளவு பதிவாகி உள்ளது.

    • வழக்கமாக 69 அடியில் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரியாக திறக்கப்படும்.
    • முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.25 அடியாக உள்ளது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் மதுரை,தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. தென்மேற்கு பருவமழை கைகொடுத்த நிலையில் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து கடந்த 5ம் தேதி 69 அடியை எட்டியது. இதனை தொடர்ந்து 3 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை வைகை கரையோர மக்களுக்கு விடுக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

    வழக்கமாக 69 அடியில் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரியாக திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு முழு கொள்ளளவில் நீர்மட்டத்தை நிலைநிறுத்த அதிகாரிகள் முடிவு செய்தனர். தற்போது மழை குறைந்துள்ள நிலையில் 20 நாட்களாக 69 அடியிலேயே நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 69.21 அடியாக உள்ளது. 591 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்கு 969 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 5626 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    இதனால் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி கடல்போல் காட்சி அளிக்கிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். அணையின் நீர்பிடிப்பு பகுதி மலையடிவாரத்தில் அமைந்துள்ளதை கண்டு ரசித்தனர்.

    மேலும் பூங்காவில் சிறுவர்கள் உற்சாகமாக விளையாடினர். இங்கு பல உபகரணங்கள் சேதமடைந்துள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.25 அடியாக உள்ளது. 876 கனஅடி நீர் வருகிறது. 1000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 5929 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. பெரியாறு அணை பகுதியில் மட்டம் 0.2 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    • தேனி மாவட்டத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
    • கடந்த வாரம் அணையின் கரையோரம் உள்ள பகுதிகளுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்ததாலும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது.

    அணையில் இருந்து மதுரை மாவட்ட பாசனத்துக்காக கடந்த 14 நாட்களாக 800 கன அடி வீதம் வெளியேற்றப்பட்டது. இன்று காலை முதல் அந்த தண்ணீர் நிறுத்தப்பட்டு மதுரை மாநகர குடிநீர் தேவைக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    கடந்த வாரம் அணையின் கரையோரம் உள்ள பகுதிகளுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 68.41 அடியாக உள்ளது.

    நீர்மின் நிலையம் வழியாக பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதால் இன்று அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணைக்கு வினாடிக்கு 1594 கன அடி தண்ணீர் வருகிறது.

    69 கன அடி மட்டும் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5421 மி.கன அடியாக உள்ளது. இந்த முறை வைகை அணையில் 71 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு பின்னர் வெளியேற்ற அதிகாரிகள் முடிவு செய்து வருகின்றனர்.

    தற்போது தேனி மாவட்டத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் ஓரிரு நாளில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதும் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படும் என்பதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட வைகை கரையோரம் உள்ள மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதே போல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு 1053 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1862 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர்மட்டம் 134.15 அடியாக உள்ளது. நீர் இருப்பு 5667 மி.கன அடியாக உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக மற்ற அணைகளுக்கும், நீர் நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.

    ×