என் மலர்
நீங்கள் தேடியது "தேனியில் மழை"
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.60 அடியாக உள்ளது.
- இன்று 4-ம் நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கூடலூர்:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
நேற்று மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சுமார் 2 மணி நேரம் மழை பெய்தது. ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதியில் இரவு முழுவதும் மிதமான மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷனம் நிலவி வருகிறது.
தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியான வெள்ளிமலை வனப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் மூலவைகை யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையின் எதிரொலியாக தற்போதே வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பது விவசாயிகள் மற்றும் பொதுமக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை 61.88 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1074 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 1499 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 3969 மி.கன அடியாக உள்ளது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்துள்ளது. 126.28 அடி உயரம் கொண்ட இந்த அணையில் நேற்று காலை 76 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 86.42 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 112 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 3 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.60 அடியாக உள்ளது. வரத்து 1424 கன அடி. திறப்பு 1000 கன அடி. இருப்பு 4837 மி.கன அடி.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 38.10 அடி. வரத்து 14 கன அடி. இருப்பு 161.64 மி.கன அடி.
ஆண்டிபட்டி 6, அரண்மனைபுதூர் 13.8, வீரபாண்டி 17.2, பெரியகுளம் 18, மஞ்சளாறு 12, சோத்துப்பாறை 2.2, வைகை அணை 20, போடி 3.2, உத்தமபாளையம் 5.2, கூடலூர் 8.4, பெரியாறு அணை 13.6, தேக்கடி 58.6, சண்முகாநதி அணை 14.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று 4-ம் நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் சுருளி அருவியில் யானைகள் நடமாட்டத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் செய்யப்பட்டது. நேற்று கம்பம் வனப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பெய்த கனமழையால் சுருளி அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
- சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டி அணைக்கு வரும் 128 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கூடலூர்:
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1½ அடி உயர்ந்துள்ளது. நேற்று அணையின் நீர்மட்டம் 134.95 அடியாக இருந்தது. நீர்வரத்து 652 கன அடியாக இருந்தது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 136.50 அடியாக உயர்ந்துள்ளது. நீர் வரத்து 5987 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 6244 மி.கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் மீண்டும் 136 அடியை கடந்துள்ளதால் இடுக்கி மாவட்டத்திற்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 9-ந்தேதி முழு கொள்ளளவை எட்டியது. இதனைத் தொடர்ந்து மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது. நேற்று இரவு முதல் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 66.01 அடியை எட்டியதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 19280 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 3169 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4854 மி.கன அடியாக உள்ளது.
அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் இன்று காலை10 மணிக்கு 25ஆயிரம் கனஅடி வரையிலும் மாலையில் மேலும் கூடுதலாக தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று 69 அடியை அணையின் நீர்மட்டம் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் வைகை கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக 5 மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளான தேவதானப்பட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், வடுகபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே மீண்டும் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டி அணைக்கு வரும் 128 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் வராகநதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 127.42 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 629 கன அடி நீர் முழுவதும் வெளியேறி வருகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி 56.30 அடியாக உள்ளது. நீர் வரத்து மற்றும் திறப்பு 128 கன அடி. இருப்பு 432 மி.கன அடி.
தொடர் மழை காரணமாக தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் வயல்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இடைவிடாமல் பெய்து வரும் மழையினால் அன்றாட பணிகளுக்கு செல்பவர்களுக்கு மிகுந்த பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
முக்கிய அணைகள் அனைத்தும் நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் குளங்கள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றன.
பெரியாறு 82.6, தேக்கடி 108, கூடலூர் 33.6, உத்தமபாளையம் 14.6, சண்முகாநதி அணை 88.4, போடி 87, வைகை அணை 25, மஞ்சளாறு 52, சோத்துப்பாறை 126, பெரியகுளம் 96, வீரபாண்டி 104.6, அரண்மனைபுதூர் 93, ஆண்டிபட்டி 86.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கேரளாவில் இதற்கான அறிகுறி நேற்று தென்பட்டது. கேரளாவில் பெய்த பலத்தமழை காரணமாக தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள தேனி மாவட்டத்திலும் விடிய விடிய மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வறட்சியான சூழ்நிலையே நிலவி வந்தது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.
பெரியாறு அணையின் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வந்தது. வடகிழக்கு பருவமழை காரணமாக அணைக்கு நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று காலை 882 கன அடியாக இருந்த நீர் மட்டம் இன்று காலை 1,268 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர் மட்டம் 133 அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 1,990 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5,399 மில்லியன் கன அடியாக உள்ளது.
இதே போல் வைகை அணை நீர் மட்டம் தொடர்ந்து 69 அடியிலேயே உள்ளது. அணைக்கு வரும் 2,220 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 53.65. வரத்து 20 கன அடி. திறப்பு 100 கன அடி. சோத்துப்பாறை நீர் மட்டம் 126.11 அடி. வரத்து 27 கன அடி. திறப்பு 30 கன அடி.
பெரியாறு 17.6, தேக்கடி 40.6, கூடலூர் 6.8, சண்முகாநதி அணை 23, உத்தமபாளையம் 9.6, வீரபாண்டி 5 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. #NortheastMonsoon






