என் மலர்
நீங்கள் தேடியது "Sothuparai Dam"
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.60 அடியாக உள்ளது.
- இன்று 4-ம் நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கூடலூர்:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
நேற்று மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சுமார் 2 மணி நேரம் மழை பெய்தது. ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதியில் இரவு முழுவதும் மிதமான மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷனம் நிலவி வருகிறது.
தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியான வெள்ளிமலை வனப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் மூலவைகை யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையின் எதிரொலியாக தற்போதே வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பது விவசாயிகள் மற்றும் பொதுமக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை 61.88 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1074 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 1499 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 3969 மி.கன அடியாக உள்ளது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்துள்ளது. 126.28 அடி உயரம் கொண்ட இந்த அணையில் நேற்று காலை 76 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 86.42 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 112 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 3 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.60 அடியாக உள்ளது. வரத்து 1424 கன அடி. திறப்பு 1000 கன அடி. இருப்பு 4837 மி.கன அடி.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 38.10 அடி. வரத்து 14 கன அடி. இருப்பு 161.64 மி.கன அடி.
ஆண்டிபட்டி 6, அரண்மனைபுதூர் 13.8, வீரபாண்டி 17.2, பெரியகுளம் 18, மஞ்சளாறு 12, சோத்துப்பாறை 2.2, வைகை அணை 20, போடி 3.2, உத்தமபாளையம் 5.2, கூடலூர் 8.4, பெரியாறு அணை 13.6, தேக்கடி 58.6, சண்முகாநதி அணை 14.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று 4-ம் நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் சுருளி அருவியில் யானைகள் நடமாட்டத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் செய்யப்பட்டது. நேற்று கம்பம் வனப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பெய்த கனமழையால் சுருளி அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
- கடந்த 3 நாட்களாக பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 113.50 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் சோத்துப்பாறை அணை அமைந்துள்ளது. கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் இருந்து வரும் நீர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழை மூலம் அணைக்கு நீர்வரத்து உள்ளது.
கடந்த 3 நாட்களாக பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வனப்பகுதியில் பெய்த தொடர் மழைக்கு சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 2 நாட்களில் 20 அடி உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 66.25 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 86.75 அடியாக உயர்ந்துள்ளது. 42 கனஅடி நீர் வருகிற நிலையில் 3 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பாசன பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 113.50 அடியாக உள்ளது. 493 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 105 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 1476 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 56.50 அடியாக உள்ளது. 238 கன அடி நீர் வருகிற நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 2966 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 32 அடியாக உள்ளது. 109 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 34.70 அடியாக உள்ளது. 7 கன அடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை.
பெரியகுளம் 6, மஞ்சளாறு 7, சோத்துப்பாறை 6, போடி 1.2, கூடலூர் 2.8, பெரியாறு 0.2, தேக்கடி 0.4, சண்முகாநதி 8.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- கனமழை காரணமாக கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது.
- ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக நேற்று இரவு முதல் விட்டுவிட்டு மின்தடை ஏற்பட்டது.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் நடப்பாண்டு பருவமழை பொய்த்துப்போன நிலையில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று 306 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 620 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 118.25 அடியாக உள்ளது. அணையிலிருந்து 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர்இருப்பு 2312 மி.கனஅடியாக உள்ளது.
இதேபோல் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் நேற்று கனமழை பெய்தது. வைகை அணையில் மட்டும் 15 செ.மீ மழை கொட்டியது. இதனால் அணையின் நீர்மட்டம் 47.08 அடியாக உயர்ந்தது. நேற்று 41 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 331 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து 69 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1630 மி.கனஅடியாக உள்ளது.
மஞ்சளாறு அணைக்கு நேற்று நீர்வரத்து இல்லாமல் இருந்தது. இன்று காலை அணைக்கு 108 கனஅடி நீர் வருகிறது. நீர்மட்டம் 48.50 அடியாக உள்ளது. நீர் இருப்பு 312.32 மி.கனஅடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 73.80 அடியாக உள்ளது. நீர்வரத்து 47 கனஅடி, திறப்பு 3 கனஅடி, நீர் இருப்பு 33.34 மி.கனஅடி.
கனமழை காரணமாக கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் கடந்த 2 நாட்களாக அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்து குளித்து மகிழ்ந்தனர். இன்று காலை முதல் தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா பயணிகள் யாரும் வரவேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் வார விடுமுறை நாட்களில் அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
பெரியாறு 39, தேக்கடி 13.4, கூடலூர் 2.6, உத்தமபாளையம் 3.2, சண்முகாநதி அணை 7.4, போடி 18.8, வைகை அணை 150.2, சோத்துப்பாறை 61, மஞ்சளாறு 85, பெரியகுளம் 80.4, வீரபாண்டி 11.2, அரண்மனைப்புதூர் 24, ஆண்டிபட்டி 98.2 மி.மீ மழையளவு பதிவானது.
ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக நேற்று இரவு முதல் விட்டுவிட்டு மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
- கனமழை காரணமாக அணை அருகே உள்ள அகமலை, கண்ணக்கரை பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டது.
- நீரை சுத்திகரித்தாலும் அணை நீர் செந்நிறமாகவே இருப்பதால் மக்கள் அதிர்ச்சி.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள சோத்துப்பாறை அணை 25 கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.
இந்நிலையில், சோத்துப்பாறை அணைக்கு மேல் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று பெய்த கனமழை காரணமாக அணை அருகே உள்ள அகமலை, கண்ணக்கரை பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டது.
இதன் காரணமாக, அணை நீர் செந்திறமாக மாறியுள்ளது. பெரியகுளம் நகராட்சியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் நீரை சுத்திகரித்தாலும் அணை நீர் செந்நிறமாகவே இருப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பொது மக்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
- நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
- 126.28 அடி உயரம் கொண்ட சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 88 அடியாக சரிவு
பெரியகுளம் :
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குெதாடர்ச்சி மலைப்பகுதியில் உள்ளது சோத்துப்பாறை அணை. 126.28 அடி உயரம் கொண்ட இந்த அணையின் மூலம் பெரியகுளம், தாமரைக்குளம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
மேலும் பெரியகுளம் நகரில் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
இதனால் அணையின் நீர்மட்டம் 87.74 அடியாக குறைந்துள்ளது. நீர்வரத்து இல்லாத நிலையில் குடிநீருக்காக 6 கனஅடிநீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்மட்டம் குறைந்து வருவதால் குறிப்பிட்ட தேதியில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. மழை கைகொடுத்தால் மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியும் என்பதால் விவசாயிகள் மழையை எதிர்பார்த்துள்ளனர்.
முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 131.85 அடியாக உள்ளது. 137 கனஅடிநீர் வருகிறது. 400 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 60.37 அடியாக உள்ளது. வரத்து இல்லை. பாசனம் மற்றும் மதுரை மாநகர குடிநீருக்காக 969 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.20 அடியாக உள்ளது. 47 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை.






