என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் பிரசினை"

    • கனமழை காரணமாக அணை அருகே உள்ள அகமலை, கண்ணக்கரை பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டது.
    • நீரை சுத்திகரித்தாலும் அணை நீர் செந்நிறமாகவே இருப்பதால் மக்கள் அதிர்ச்சி.

    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள சோத்துப்பாறை அணை 25 கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.

    இந்நிலையில், சோத்துப்பாறை அணைக்கு மேல் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று பெய்த கனமழை காரணமாக அணை அருகே உள்ள அகமலை, கண்ணக்கரை பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டது.

    இதன் காரணமாக, அணை நீர் செந்திறமாக மாறியுள்ளது. பெரியகுளம் நகராட்சியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் நீரை சுத்திகரித்தாலும் அணை நீர் செந்நிறமாகவே இருப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து பொது மக்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×