என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Theni rain"
- சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டி அணைக்கு வரும் 128 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கூடலூர்:
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1½ அடி உயர்ந்துள்ளது. நேற்று அணையின் நீர்மட்டம் 134.95 அடியாக இருந்தது. நீர்வரத்து 652 கன அடியாக இருந்தது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 136.50 அடியாக உயர்ந்துள்ளது. நீர் வரத்து 5987 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 6244 மி.கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் மீண்டும் 136 அடியை கடந்துள்ளதால் இடுக்கி மாவட்டத்திற்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 9-ந்தேதி முழு கொள்ளளவை எட்டியது. இதனைத் தொடர்ந்து மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது. நேற்று இரவு முதல் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 66.01 அடியை எட்டியதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 19280 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 3169 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4854 மி.கன அடியாக உள்ளது.
அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் இன்று காலை10 மணிக்கு 25ஆயிரம் கனஅடி வரையிலும் மாலையில் மேலும் கூடுதலாக தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று 69 அடியை அணையின் நீர்மட்டம் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் வைகை கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக 5 மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளான தேவதானப்பட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், வடுகபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே மீண்டும் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டி அணைக்கு வரும் 128 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் வராகநதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 127.42 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 629 கன அடி நீர் முழுவதும் வெளியேறி வருகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி 56.30 அடியாக உள்ளது. நீர் வரத்து மற்றும் திறப்பு 128 கன அடி. இருப்பு 432 மி.கன அடி.
தொடர் மழை காரணமாக தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் வயல்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இடைவிடாமல் பெய்து வரும் மழையினால் அன்றாட பணிகளுக்கு செல்பவர்களுக்கு மிகுந்த பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
முக்கிய அணைகள் அனைத்தும் நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் குளங்கள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றன.
பெரியாறு 82.6, தேக்கடி 108, கூடலூர் 33.6, உத்தமபாளையம் 14.6, சண்முகாநதி அணை 88.4, போடி 87, வைகை அணை 25, மஞ்சளாறு 52, சோத்துப்பாறை 126, பெரியகுளம் 96, வீரபாண்டி 104.6, அரண்மனைபுதூர் 93, ஆண்டிபட்டி 86.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- கும்பக்கரை அருவியிலும் இன்று 36-வது நாளாக சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
- சண்முகாநதி அணை நிரம்பி முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் அந்த அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் நேற்று மீண்டும் பரவலாக கனமழை பெய்தது. போடி, பெரியகுளம், தேவதானப்பட்டி ஆகிய பகுதிகளில் பெய்த கனமழையால் சாலையில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
குரங்கணி பகுதியில் பெய்த கனமழை காரணமாக கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைப்பிள்ளையார் நீர் வீழ்ச்சியில் தண்ணீர் அதிக அளவு செல்கிறது. இதனால் அங்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கும்பக்கரை அருவியிலும் இன்று 36-வது நாளாக சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
சண்முகாநதி அணை நிரம்பி முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் அந்த அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.60 அடியாக உள்ளது. வரத்து 784 கன அடி. திறப்பு 1500 கனஅடி. இருப்பு 6017 மி.கன அடி. வைகை அணை நீர்மட்டம் 62.73 அடி. வரத்து 1327 கன அடி. திறப்பு 1639 கன அடி. இருப்பு 4146 மி.கன அடி.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55.40 அடி. வரத்து 149 கன அடி. திறப்பு 90 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.37 அடி. வரத்து மற்றும் திறப்பு 48 கன அடி.
பெரியாறு 15.4, தேக்கடி 20, கூடலூர் 1.6, உத்தமபாளையம் 1.8, சண்முகாநதி அணை 2.6, போடி 62, சோத்துப்பாறை 14 மி.மீ. மழை அளவு பதிவானது.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நீர்பிடிப்பு பகுதியில் மழை முற்றிலும் ஓய்ந்துவிட்டதால் பெரியாறு அணைக்கு 649 கனஅடிநீரே வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து 131.25 அடியாக உள்ளது. அணையிலிருந்து 1867 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
நீர்திறப்பை குறைக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்திய போதும் அதிகளவு தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நீர் பாசனத்திற்கு போக வைகை அணையை வந்தடைகிறது. இதனால் அணைக்கு 1346கனஅடி நீர் வருகிறது. குடிநீர் மற்றும் பாசனத்திற்காக அணையிலிருந்து 3460 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.65 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 115.29 அடியாக உள்ளது. வருகிற 3 கனஅடிநீர் அப்படியே திறக்கப்படுகிறது.
தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. பெரியாறு 2, தேக்கடி 9.6, கூடலூர் 4.3, உத்தமபாளையம் 6.6, வீரபாண்டி 8, சண்முகாநதி அணை 8 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது. இன்றும் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கனமழை காரணமாக முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 142 அடி வரை உயர்ந்தது. ஆனால் அதன்பின்பு மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டம் 137.10 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு 606 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து 2207 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. இந்த நீர்பாசனத்திற்கு போக வைகை அணையை வந்தடைகிறது.
அணையின் நீர்மட்டம் 69.13 அடியாக உள்ளது. நீர்வரத்து 1895கனஅடியாக உள்ளது. மதுரை குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2030 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணை நீர்மட்டம் 41.75 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.
சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 116.06 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 3.8, கூடலூர் 1.3, சண்முகாநதி அணை 1, உத்தமபாளையம் 1.6, வீரபாண்டி 6, வைகை அணை 3, மஞ்சளாறு 4, சோத்துப்பாறை 3, கொடைக்கானல் 4.6 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.
மேலும் தேனி மாவட்டத்தின் பிறபகுதிகளிலும் இரவு முழுவதும் சாரல் மழை தொடர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கூடலூர்:
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அக்னிநட்சத்திரம் தொடங்கியதில் இருந்து காலை நேரங்களில் வெயில் கொளுத்துகிறது.
மாலையில் இடி மின்னலுடன் மழை பெய்து வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் கோடை வெயிலை சமாளிக்க முடிகிறது.
பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் சாரல்மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து 473 கனஅடியாக உயர்ந்துள்ளது. 100 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
வைகை அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை தொடர்ந்து வருகிறது. இதனால் நீர்வரத்து அதிகரித்து 902 கனஅடிநீர் வருகிறது. மேலும் அணையின் நீர்மட்டமும் ஒரேநாளில் 1¼ அடி உயர்ந்து 35.99 அடியாக உள்ளது. 48 கனஅடிநீர் மதுரை மாநகர குடிநீருக்காக திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணை நீர்மட்டம் 35.40 அடியாக உள்ளது. 25 கனஅடிநீர் வருகிறது. நீர்திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 126.50அடியாக உள்ளது. 80 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 2.8, தேக்கடி 5.4, கூடலூர் 1.4, உத்தமபாளையம் 1.2, மஞ்சளாறு 8, சோத்துப்பாறை 5 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு கோடை மழை கைகொடுத்ததால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே மழை தொடரவேண்டும் என எதிர்பார்த்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்