என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mulla periyar dam"

    • ரூல்கர்வ் முறையை கைவிட வேண்டும் என தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
    • அணைக்கு 463 கனஅடி நீர் வருகிறது. 5916 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    கூடலூர்:

    கேரளா எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் தேனி மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. இங்கு பாசனத்திற்கு போக வைகை அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரின் மூலம் தேனி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.

    பருவமழை தொடங்கிய போது கடந்த அக்.17ம் தேதி கனமழை பெய்தது. இதனால் 132 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்து 138 அடியை எட்டியது.

    உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படி 142 அடிவரை தண்ணீர் தேக்கலாம் என்ற போதும் ரூல்கர்வ் விதிமுறைப்படி 18ம் தேதி கேரள பகுதிக்கு உபரிநீர் திறக்கப்பட்டது.

    மழை தொடர்ந்ததால் அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியது. இருந்த போதும் ரூல்கர்வ் முறைப்படி கேரள பகுதிக்கு 9 நாட்களுக்கு வீணாக தண்ணீர் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மழை குறைந்ததாலும் தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது.

    எனவே ரூல்கர்வ் முறையை கைவிட வேண்டும் என தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். கேரளாவுக்கு எந்த பயனுமின்றி தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது மழை இல்லாததால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. அந்த தண்ணீரை தேக்கி வைத்திருந்தால் தற்போது பாசனம் மற்றும் குடிநீருக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே தமிழக அரசு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

    கடந்த வாரம் 137.65 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 135.20 அடியாக குறைந்துள்ளது. இதனால் தமிழக பகுதிக்கு திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு 1820 கனஅடியில் இருந்து 1780 கனஅடியாக குறைக்கப்பட்டது. அணைக்கு 463 கனஅடி நீர் வருகிறது. 5916 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 68.49 அடியாக உள்ளது. குடிநீர் மற்றும் கால்வாய் பாசனத்திற்கு என மொத்தம் 2049 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு 1597 கனஅடி நீர் வருகிறது. 5442 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    • பெரியாறு நீர்மின் நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் கொண்டு மின் உற்பத்தி நடைபெறுகிறது.
    • சோத்துப்பாறை அணையின் நீர்மட்டமும் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியில் நீடிக்கிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் தொடக்கத்திலேயே மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் முக்கிய நீர் ஆதாரங்கள் அனைத்தும் வேகமாக நிரம்பின.

    71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் கடந்த 20-ந்தேதி 69 அடியாக உயர்ந்த நிலையில் அணையில் இருந்து வைகை ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்தும் தண்ணீர் வரத்து இருந்து வந்த நிலையில் நேற்று மதியம் அணையில் இருந்து வைகை ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டது. அதன்பின்பு ஆற்றில் திறக்கப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டது.

    இன்று காலை அணையில் இருந்து பெரியாறு, திருமங்கலம் பிரதான கால்வாய்களில் பாசனத்திற்கு 1430 கன அடி, குடிநீர் திட்டங்களுக்கு வினாடிக்கு 69 கன அடி என மொத்தம் 1499 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 69.78 அடியாக உள்ள நிலையில் நீர் வரத்து 2287 கன அடியாக உள்ளது. நீர் இருப்பு 5771 மி.கன அடியாக உள்ளது.

    அணையின் நீர்மட்டம் எப்போது வேண்டுமானாலும் உயரலாம் என்பதால் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு 3 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக கடந்த 18ந் தேதி அணையின் நீர்மட்டம் 138 அடியாக உயர்ந்தது. ரூல்கர்வ் விதிப்படி அணைக்கு வரும் தண்ணீர் உபரியாக இடுக்கி அணைக்கு திறந்து விடப்பட்டது. அதன்பிறகு மழை அளவும் குறைந்ததால் அணைக்கு வரும் நீர் வரத்தும் சரியத் தொடங்கியது. இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 138.05 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 4037 கன அடியாக உள்ள நிலையில் 1822 கன அடி நீர் உபரியாக திறக்கப்படுகிறது.

    இதன் காரணமாக பெரியாறு நீர்மின் நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் கொண்டு மின் உற்பத்தி நடைபெறுகிறது.

    இதேபோல் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டமும் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியில் நீடிக்கிறது. இதனால் அணைக்கு வரும் 181 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கன அடியாக உள்ளது. சண்முகாநதி அணையின் நீர்மட்டமும் அதன் முழு கொள்ளளவான 52.50 அடியை எட்டியதால் அணைக்கு வரும் 9 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 57 அடி உயரம் உள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 43.80 அடியாக உள்ளது. நீர் வரத்து 84 கன அடி.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அமைந்துள்ள அரிசிப்பாறையில் தொடர் மழை காரணமாக கடந்த 18ந் தேதி முதல் சுருளி அருவியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவி பகுதிக்கு செல்லவும் இன்று 8-வது நாளாக தடை நீடிக்கிறது. இதேபோல் பெரியகுளம் அருகில் உள்ள கும்பக்கரை அருவியில் இன்று 15-வது நாளாக பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேகமலை அருவியிலும் தடை தொடருகிறது.

    சுருளி அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக குளிக்க அமைக்கப்பட்ட தடுப்பு கம்பிகள், அருவிக்கு செல்லும் சிமெண்டு படிக்கட்டுகள் சேதம் அடைந்தன. அருவியில் நீர்வரத்து சீரான பிறகு சேதம் அடைந்த இரும்பு கம்பிகள், படிகள் சீரமைக்கப்படும் என்றும் அதுவரை சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி கிடையாது என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    பெரியாறு 24.2, தேக்கடி 9.8, சண்முகாநதி அணை 4.6, உத்தமபாளையம், கூடலூர் பகுதியில் தலா 2.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக 69 அடியிலேயே நீடித்து வருகிறது.
    • மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 969 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

    தென்மேற்கு பருவமழை கைகொடுத்ததால் அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியது. ரூல்கர்வ் நடைமுறைப்படி 136 அடிக்கு மேல் ஜூலை மாதத்தில் தேக்கமுடியாது என்பதால் கேரளாவுக்கு உபரிநீர் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டமும் சரிந்தது. தற்போது நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழைபெய்ய தொடங்கி உள்ளதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது.

    இன்று காலை 6 மணி நிலவரப்படி முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.30 அடியாக உள்ளது. அணைக்கு 1311 கனஅடி நீர் வருகிறது. தமிழக பகுதிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 5942 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக 69 அடியிலேயே நீடித்து வருகிறது. முழு கொள்ளளவில் தண்ணீர் தேக்க அதிகாரிகள் முடிவு செய்து அங்கு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 69.46 அடியாக உள்ளது. அணைக்கு 638 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 969 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 5690 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. மழை எங்கும் இல்லை.

    • மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.20 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. மேலும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்துடன் கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்த தண்ணீர் வைகை அணையை வந்து சேர்கிறது. மேலும் மூல வைகை ஆறு, கொட்டக்குடி ஆறு ஆகியவற்றிலும் நீர் வரத்து அதிகரித்ததால் வைகை அணையின் நீர்மட்டம் கடந்த 4 நாட்களில் 2 அடி வரை உயர்ந்துள்ளது.

    71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 56.10 அடியாக உள்ளது. அணைக்கு 1582 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    எனவே விரைவில் பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் 2898 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.55 அடியாக உள்ளது. 1605 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்துக்கு 200 கன அடி, குடிநீருக்காக 100 கன அடி நீருடன் சேர்த்து 1644 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் 4826 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.20 அடியாக உள்ளது. 15 கன அடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 92.16 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 45.40 அடியாக உள்ளது. 6 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. பெரியாறில் 1.8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. 

    • அணைக்கு வினாடிக்கு 6125 கன அடி தண்ணீர் வருவதால் இன்று மாலையே 130 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • வைகை அணையின் நீர் இருப்பை பொறுத்து இருபோக பாசன நிலங்களின் முதல்போகத்திற்கு ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்படும்.

    கூடலூர்:

    தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே தொடங்கியது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 23-ந்தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.

    கடந்த 6 நாட்களில் மட்டும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 15 அடி வரை உயர்ந்துள்ளது. வழக்கமாக அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயத்திற்காக ஜூன் மாதம் முதல் தேதியில் தண்ணீர் திறப்பது வழக்கம்.

    தற்போது அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் தங்கள் நிலங்களை தயார்படுத்தி வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் 1350 கன அடி திறக்கப்பட்டு பின்னர் 900 கன அடியாக குறைக்கப்பட்டது. நேற்று 460 கன அடி திறக்கப்பட்டு இன்று காலையில் மீண்டும் 1400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 129.85 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6125 கன அடி தண்ணீர் வருவதால் இன்று மாலையே 130 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர் இருப்பு 4665 மி.கன அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் வகையிலும் குடிநீர் மற்றும் பாசன தேவைக்காகவும் கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வழக்கமாக நாளை முதல் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் 14707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    தேனி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை காரணமாகவும் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியான கொட்டக்குடி ஆறு, வருஷநாடு, வைகை ஆறுகள் உள்ள பகுதியில் பெய்த மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து உயர்ந்தது. வைகை அணையின் நீர் இருப்பை பொறுத்து இருபோக பாசன நிலங்களின் முதல்போகத்திற்கு ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்படும். தற்போது பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை அணையின் நீர்மட்டம் 54.36 அடியாக உள்ளது. வரத்து 949 கன அடி. திறப்பு 72 கன அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 2617 மி.கன அடி.

    இதனால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நிலங்களின் பாசனத்திற்கு ஜூன் முதல் வாரத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பெரியாறு அணை 27.8, தேக்கடி 13.6, போடி 4.4, மஞ்சளாறு, அரண்மனைபுதூர் தலா 4, வீரபாண்டி 3.2, கூடலூர் 3.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 53.90 அடியாக உள்ளது.
    • அருவிகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி தடை விதித்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    கூடலூர்:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள கேரளாவில் 10 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது.

    குறிப்பாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியான இடுக்கி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த 23ந் தேதி 114 கன அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 127.85 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 7 நாட்களில் மட்டும் 14 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    7741 கன அடி நீர் வருகிறது. இதனால் தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 100 கன அடியாக இருந்த நீர்திறப்பு 467 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 4234 மி.கன அடியாக உள்ளது.

    லோயர் கேம்ப்பில் உள்ள நீர் மின் உற்பத்தி நிலையத்தில் 42 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 4 எந்திரங்கள் மூலம் 168 மெகவாட் வரை மின்உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த மார்ச் 24ம் தேதி முதல் பெரியாறு அணையில் இருந்து ராட்சதகுழாய்களின் வழியாக திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டு இரைச்சல் பாலம் வழியாக 100 கனஅடி நீர் மட்டும் திறக்கப்பட்டது. இதனால் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கி உள்ளது. நேற்று 120 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டது.

    தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் இருபோக நெல் விவசாயம் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் நடைபெறுகிறது. வழக்கமாக ஜூன் 1ந் தேதி முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். நீர்மட்டம் குறையும் பட்சத்தில் அதற்கேற்றபடி தாமதமாக திறக்கப்படும். தற்போது அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பதாலும் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என்பதாலும் வழக்கமாக திறக்கப்படுவதுபோல வருகிற 1ந் தேதி தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து தமிழக அரசுக்கு எடுத்துரைத்து தண்ணீர் திறப்பு குறித்து முறைப்படி அறிவிக்கப்படும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 53.90 அடியாக உள்ளது. வரத்து 786 கன அடி. திறப்பு 72 கன அடி. இருப்பு 2545 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 39.80 அடி. வரத்து 15 கன அடி. இருப்பு 183.98 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 93.15 அடி. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 44.60 அடியாக உள்ளது. 9 கனஅடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.

    தொடர் மழை காரணமாக மேகமலை, சுருளி, கும்பக்கரை உள்ளிட்ட அருவிகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி தடை விதித்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். போடி, குரங்கணி, கொட்டக்குடி, டாப்ஸ்டேசன், போடிமெட்டு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர் மழையால் அணைப்பிள்ளையார் தடுப்பணையில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் மீனாட்சி அம்மன் கண்மாய், சங்கரப்பன் கண்மாய் செல்லும் கால்வாய் பகுதிகளில் மராமத்து பணிகள் நடைபெறுவதால் மதகுகள் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் அணைப்பிள்ளையார் தடுப்பணையில் நீரின் வேகம் அதிகரித்து காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆற்றுப் பகுதிக்கு செல்லவேண்டாம் என போலீசார், பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    பெரியாறு அணை 82.6, தேக்கடி 43.2, கூடலூர் 9.6, உத்தமபாளையம் 11.8, பெரியகுளம் 4, சண்முகாநதி அணை 6.2, அரண்மனைபுதூர் 11.6, வீரபாண்டி 1.2, மஞ்சளாறு 2, சோத்துப்பாறை 2, வைகை அணை 2.4, போடி 5.2 மி.மீ. மழை அளவு பதிவானது.

    • வைகை அணையின் நீர்மட்டம் 59.84 அடியாக உள்ளது.
    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 31 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.

    பருவமழை போதிய அளவு பெய்யாததால் அணையின் நீர்மட்டம் உயராமல் இருந்தது. அதனைத் தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்தபோதும் அணைக்கு நீர்வரத்து குறைவாகவே உள்ளது.

    இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்துள்ளது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் முதல் போக நெல்சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும். நீர்மட்டம் குறைந்து வருவதால் தண்ணீர் திறக்கப்படுமா? என விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

    அணைக்கு 50 கன அடி நீர் மட்டுமே வருகிறது. இருந்தபோதும் தமிழக பகுதிக்கு 322 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 113.75 அடியாக சரிந்துள்ளது. 1518 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 59.84 அடியாக உள்ளது. 114 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3572 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 31 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 45 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 70.71 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் 3 கன அடி.

    சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 32.60 அடியாக உள்ளது. 9 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.

    • பெரியாறு என்ற பெயரில் உள்ள ஆவண படத்தில் அணை உடைந்து ஏராளமான கேரள மக்கள் பலியாவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
    • விஷம பிரசார குறும்படம் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    கூடலூர்:

    கேரள மாநிலத்தில் உள்ள முல்லைப்பெரியாறு அணை தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    152 அடி உயரம் கொண்ட பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பேபி அணையை பலப்படுத்தி நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளது.

    அணையை கண்காணிப்பதற்காக மூவர் குழு அவர்களுக்கு துணையாக 5 பேர் கொண்ட துணைக்குழுவும் அமைக்கப்பட்டது. பருவமழை காலத்தில் அணைப்பகுதியை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்து வருகின்றனர். இதில் அணை உறுதியாக உள்ளது என பல முறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆனால் கேரள அரசு மற்றும் சில தன்னார்வ அமைப்பினர் முல்லைப்பெரியாறு அணை குறித்து அவ்வப்போது விஷம பிரசாரம் செய்து வருகின்றனர்.

    கடந்த சில வருடங்களுக்கு முன்பு டேம்-999 என்ற ஆவண படம் வெளியிடப்பட்டது. இதில் முல்லைப்பெரியாறு அணை உடைவதுபோன்று கிராபிக்ஸ் காட்சிகளை வைத்து பாடல்களை வெளியிட்டனர். கேரளாவை சேர்ந்த வக்கீல் ரசூல்ஜோய் அணை உடைந்து விடும் எனவே புதிய அணை கட்ட வேண்டும் என கையெழுத்து இயக்கத்தை நடத்தினார்.

    இந்நிலையில் அவர் சார்பில் புதிய குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது. பெரியாறு என்ற பெயரில் உள்ள ஆவண படத்தில் அணை உடைந்து ஏராளமான கேரள மக்கள் பலியாவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

    இந்த விஷம பிரசார குறும்படம் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது தமிழக-கேரள மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக தமிழக விவசாயிகள் கொந்தளித்துள்ளனர். இது குறித்து ஒருங்கிணைந்த 5 மாவட்ட பெரியாறு, வைகை பாசன விவசாய சங்க தலைவர் எஸ்.ஆர்.தேவர் கூறுகையில், கேரள மக்களிடையே பெரியாறு அணை குறித்து பொய் பிரசாரம் செய்து வரும் சேவ் கேரளா பிரிக்கேட் அமைப்பு மற்றும் அதன் தலைவர் ரசூல்ஜோயை வண்மையாக கண்டிக்கின்றோம்.

    உச்ச நீதிமன்றத்தின் 11 நீதிபதிகளும், 7 நீர்பாசன தலைமை பொறியாளர்களும் தலைசிறந்த அணை வல்லுனர்களும் சேர்ந்து முல்லைப்பெரியாறு அணையை சோதனை செய்து அணை பலமாக உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அதன் அடிப்படையில்தான் அணை நீர்மட்டத்தை 142 வரை உயர்த்த உத்தரவிடப்பட்டது. இந்த சூழ்நிலையில் இருமாநில மக்களின் நல்லுறவை கெடுக்கின்ற வகையிலும் பிரிவினையை தூண்டும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பெரியாறு குறும்படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும். சம்மந்தப்பட்ட நபர்களை தேசிய பாதுகாபாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றார்.

    சேவ் கேரளா பிரிக்கேட் அமைப்பினர் ஆவண படம் தயாரிக்க ரூ.30 லட்சம் தேவை என்றும் அதற்கு நன்கொடை அனுப்பி வைக்குமாறு வங்கி கணக்கை தொடங்கி வசூல் வேட்டையை தொடங்கினர். இதை அறியாத சிலர் அவர்களுக்கு நன்கொடை வழங்கினர். வெளிநாடு வாழ் கேரள மக்களிடமும் நிதி வசூல் செய்ய முயன்றனர். ஆனால் இவர்கள் போலி பிரசாரம் செய்வதால் யாரும் பணம் அனுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த ஜூன் மாதம் டெல்லியில் நடந்த மேற்பார்வை குழு கூட்டத்தில் பெரியாறு அணையில் நில அதிர்வு மானி பொருத்துவது குறித்து கேரள அரசு கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
    • தேவையான கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என கேரள அரசுக்கு கண்காணிப்பு குழு உத்தரவிட்டது.

    கூடலூர்:

    தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாய பாசனத்திற்கு ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை உள்ளது. 152 அடி உயரம் கொண்டுள்ள அணையில் உச்சநீதிமன்றம் உத்தரவுபடி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

    இருந்தபோதும் அணை பலவீனமாக இருப்பதாக கேரளஅரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அதிகாரிகள் குழு ஆய்வு செய்து அணை பலமாக இருப்பதை உறுதி செய்த பின்னரும் கேரளாவில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

    தற்போது நில அதிர்வு மற்றும் நில நடுக்கத்தால் அணைக்கு பாதிப்பு ஏற்படுவதாக பொய் குற்றச்சாட்டை கூறி வருகிறது. இதனால் நில அதிர்வு மானி பொருத்த கண்காணிப்பு குழுவை கேரள அரசு வலியுறுத்தியது.

    கடந்த ஜூன் மாதம் டெல்லியில் நடந்த மேற்பார்வை குழு கூட்டத்தில் பெரியாறு அணையில் நில அதிர்வு மானி பொருத்துவது குறித்து கேரள அரசு கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கு தேவையான கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என கேரள அரசுக்கு கண்காணிப்பு குழு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அணையில் நில அதிர்வு மற்றும் நில நடுக்கத்தை அளவிடும் சீஸ்மோகிராப் மற்றும் அக்ஸ்சலரோ கருவிகள் வாங்க ரூ.99.95 லட்சம் நிதி தமிழக பொதுப்பணித்துறைக்கு ஒதுக்கப்பட்டது. கருவிகளை பொருத்தும் பணியை செய்து முடிக்க ஐதராபாத்தை சேர்ந்த மத்திய அரசின் தேசிய புவியியல் ஆராய்ச்சி மையத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் இரு மாநில பிரச்சினை என்பதால் நில அதிர்வு மானியின் அறிக்கை ஒவ்வொரு 15 நொடிக்கும் ஐதராபாத்தில் உள்ள ஆய்வு குழுவிற்கு தகவல் சொல்லும் வகையில் 5 ஆண்டு ஒப்பந்தத்துடன் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து விஞ்ஞானிகள் பெரியாறு அணையில் கருவிகள் பொருத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை தமிழக அதிகாரிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கேரள நீர்பாசனத்துறையின் இண்டர்ஸ்டேட் வாட்டர் குழுவின் அனுமதி பெற்று அவர்கள் முன்னிலையில்தான் பணியை மேற்கொள்ள வேண்டும் என தமிழக பொதுப்பணித்துறையை கேரளா வற்புறுத்தி உள்ளது.

    இதற்கு ஒருங்கிணைந்த 5 மாவட்ட பெரியாறு, வைகை விவசாய சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் தலைவர் எஸ்.ஆர்.தேவர் கூறுகையில், முல்லைப்பெரியாறு அணையில் வர்ணம் பூசுதல், மராமத்து பணி என அனைத்துக்கும் கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஸிஅகஸ்டின் தலைமையில் உள்ள இண்டர்ஸ்டேட் வாட்டர் குழுவிடம் அனுமதி பெற வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    இது இரு மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் பிரச்சினை என்பதால் கேரள அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது. கடந்த 2006-ம் ஆண்டு கேரள சட்டமன்றத்தில் ஏற்றிய அணைகள் பாதுகாப்பு சட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளதை நினைவில் கொள்ள வேண்டும். முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வரும் கேரளாவின் செயலுக்கு தமிழக விவசாயிகள் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம் என்றார்.

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 138.30 அடியாக உள்ளது. வரத்து 974 கன அடி. திறப்பு 511 கன அடி. இருப்பு 6698 மி.கன. அடி.
    • வைகை அணை நீர்மட்டம் 66.54 அடி. வரத்து 1217 கன அடி. திறப்பு 1719 கன அடி. இருப்பு 4978 மி.கன அடி.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழையின்றி கடுமையான வெப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் 2 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் தொடங்கி சாரல் மழையாக பல இடங்களில் இடைவிடாமல் பெய்த நிலையில் இரவில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக கொட்டி தீர்த்தது.

    குறிப்பாக போடி, பெரியகுளம், தேவதான ப்பட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய சாரல் மழை பெய்தது. இதனால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஏற்கனவே சோத்துப்பாறை அணை நிரம்பி உள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வராக நதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 138.30 அடியாக உள்ளது. வரத்து 974 கன அடி. திறப்பு 511 கன அடி. இருப்பு 6698 மி.கன. அடி. வைகை அணை நீர்மட்டம் 66.54 அடி. வரத்து 1217 கன அடி. திறப்பு 1719 கன அடி. இருப்பு 4978 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.80 அடி. வரத்து 182 கன அடி. திறப்பு 40 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.94 அடி. வரத்து 469 கன அடி. திறப்பு 30 கன அடி.

    தேக்கடி 17, போடி 62.6, வைகை அணை 5.4, சோத்துப்பாறை 72, மஞ்சளாறு 70, பெரியகுளம் 4, வீரபாண்டி 12.4, அரண்மனைபுதூர் 11.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    மாவட்டத்தில் இன்று காலையிலும் பரவலாக சாரல் மழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் முரளிதரன் அறிவித்துள்ளார்.

    • ஆண்டிப்பட்டி மற்றும் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
    • அணைக்கு வரும் நீர்வரத்தும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    கூடலூர்:

    முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நேற்று முன்தினம் 541 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 1166 கனஅடியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியதால் இடுக்கி மாவட்டத்திற்கு 2-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த நவம்பர் 9-ந்தேதி 136 அடியை எட்டியவுடன் முதல்கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை பொதுப்பணித்துறையினரால் விடப்பட்டது. தற்போது அணையின் நீர்மட்டம் 141 அடியை கடந்து விட்டதால் இன்னும் ஓரிரு நாளில் 142 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 141.40 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 2106 கனஅடி நீர் வருகிறது.

    நேற்று வரை 511 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை முதல் 1100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ரூல்கர்வ் விதிமுறைப்படி முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியதும் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் இடுக்கி மாவட்டத்திற்கும், லோயர்கேம்ப் வழியாக தமிழக பகுதிக்கும் திறக்கப்படும். இதனை தவிர்க்கும் வகையில் இன்று காலை முதல் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    நீர் இருப்பு 7504 மி.கனஅடியாக உள்ளது. பெரியாறு அணை நீர்மட்டத்தை மே 31-ந்தேதி வரை 142 அடிவரை தேக்கி வைத்து கொள்ளலாம் என்பதால் கூடுதல் தண்ணீரை வெளியேற்றி வைகை அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் முயற்சியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீர்வரத்தும் அதிகரித்த வண்ணம் உள்ளது. 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 66.27 அடியாக உள்ளது. நீர்வரத்து 2900 கனஅடி. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீருக்கு மட்டும் 69 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர்இருப்பு 4916 மி.கனஅடியாக உள்ளது. கனமழை நீடிக்கும் பட்சத்தில் வைகை அணையின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால் பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கரையோரம் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

    மஞ்சளாறு அணை நீர்மட்டம் 54.90 அடியாகவும், சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.41 அடியாகவும் உள்ளது.

    பெரியாறு 7.8, தேக்கடி 23.6, கூடலூர் 6.8, சண்முகாநதி அணை 5.6, உத்தமபாளையம் 3.6, வைகை அணை 2.2, சோத்துப்பாறை 10, வீரபாண்டி 5, அரண்மனைப்புதூர் 2.2, ஆண்டிபட்டி 2.8 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.80 அடியாக உள்ளது. 34 கனஅடிநீர் வருகிறது. 30 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
    • சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 121.85 அடியாக உள்ளது. 8 கனஅடிநீர் வருகிறது. 27 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    கூடலூர்:

    முல்லை பெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகின்றது. 152 அடி உயரம் கொண்ட அணையில் 142 அடிவரை தண்ணீர் தேக்கி கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு கேரள அரசு பல்வேறு முட்டுக்கட்டை போட்டுவந்தபோதும் பருவமழை காலங்களின் போது 142 அடிவரை தண்ணீர் தேக்கப்பட்டு அணையின் பலம் நிரூபிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு 89 கனஅடிநீர் மட்டுமே வருகிறது. ஆனால் தமிழக பகுதிக்கு 1867 கனஅடிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் நீர்மட்டம் 139.40 அடியாக சரிந்துள்ளது.

    71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் 69 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கப்பட்ட நிலையில் பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. மழை நின்றபோதும் தண்ணீர்திறப்பு அதிகரிக்கப்பட்டதால் தற்போது அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து 52.56 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு 667 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2669 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.80 அடியாக உள்ளது. 34 கனஅடிநீர் வருகிறது. 30 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 121.85 அடியாக உள்ளது. 8 கனஅடிநீர் வருகிறது. 27 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    ×