search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mulla Periyar Dam"

    • மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 869 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 2317 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 46 அடியில் நீடிக்கிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 118.57 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    நேற்று முன்தினம் 121.05 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 3 அடி உயர்ந்து 124.10 அடியாக இருந்தது. இன்று காலை மேலும் 1 அடி உயர்ந்து 125.10 அடியாக காணப்படுகிறது. அணைக்கு நீர் வரத்து 5395 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1267 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    அணையில் 3640 மி.கன அடி இருப்பு உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 52.36 அடியாக உள்ளது. அணைக்கு 1671 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 869 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 2317 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 46 அடியில் நீடிக்கிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 118.57 அடியாக உள்ளது.

    தொடர் மழை காரணமாக பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவி, கம்பம் அருகே உள்ள சுருளி அருவி, ஆண்டிபட்டி அருகே உள்ள மேகமலை அருவி ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மேலும் வறண்டு கிடந்த கொட்டக்குடி, மூல வைகை ஆறு, வராக நதி ஆகியவற்றில் நீர்வரத்து அதிகரித்தது. குறிப்பாக குரங்கணி, கொட்டக்குடி, பீச்சாங்கரை, முட்டம், சென்ட்ரல் ஸ்டேஷன், டாப் ஸ்டேஷன் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைப்பிள்ளையார் தடுப்பணையில் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி வழங்கப்படவில்லை. இப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு அங்கு வரும் சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

    பெரியாறு 30.8, தேக்கடி 18.6, கூடலூர் 6.2, உத்தமபாளையம் 7.6, வைகை அணை 0.4, சோத்துப்பாறை 2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • வைகை அணையின் நீர்மட்டம் 52.07 அடியாக உள்ளது. அணைக்கு 846 கன அடி நீர் வருகிறது.
    • மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 819 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    கூடலூர்:

    கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.

    152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் 142 அடி வரை தேக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் வழக்கம்போல் ஜூன் 1-ந்தேதி முதல் போக நெல்சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது. பருவமழை ஓரளவு கைகொடுத்ததால் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்தது.

    மேலும் தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறப்பை குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். இந்த நிலையில் தற்போது மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் 122.70 அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக 1200 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 52.07 அடியாக உள்ளது. அணைக்கு 846 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 819 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 120.70 அடியாக உள்ளது.

    பெரியாறு 1.4, தேக்கடி 0.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • இந்திய தியாகிகளை நாங்கள் மறைத்ததாக கூறுகிறார்கள். அதை மறைத்தது கவர்னர் தான்.
    • ஒரு விழாவுக்கு நாங்கள் கவர்னர் மாளிகைக்கு போயிருந்தபோது அவர் போட்டுக்காட்டிய தியாகிகள் வரலாற்று படத்தில் காந்தி, நேரு படம் இல்லை.

    வேலூர்:

    தி.மு.க பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் காட்பாடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த தேர்தலில் பிரதமர் மோடியின் பேச்சுக்கள் எத்தனையோ அத்துமீறல்களுக்கு உட்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும், பிரதமருக்கும் வித்தியாசம் உண்டு. பிரதமரின் பேச்சு முக்கியத்துவம் பெறும்.

    அதில் ஒன்றுதான் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற உள்ள வேளையில் ஒருவித மறைமுகமான செல்வாக்கை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு இவரது செய்கை உள்ளது என்பதால் தான் நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். நாங்கள் மட்டும் அல்ல, இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் எல்லாம் மோடியின் செய்கையை தவறு என்று சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். அதையெல்லாம் அவர் பொருட்படுத்தாமல் கன்னியாகுமரிக்கு வந்து தடை உத்தரவு போட்டு வியாபாரம் ஸ்தம்பித்து போகிற நிலையை உருவாக்கி தியானத்தில் அமர்ந்துள்ளார். இது நல்லது அல்ல என்பதை தான் நாங்கள் சுட்டிக் காட்டியுள்ளோம்.

    காந்தி பற்றி மோடி பேசியதை நான் எதிர்பார்க்கவில்லை. காந்தி குஜராத்தை சேர்ந்தவர். அவரது ஆசிரமம் அங்குதான் உள்ளது. அதைக்கூட பார்த்திருக்க மாட்டாரா?. காந்தி பற்றி தெரியாதா?. அவரது பேச்சு காந்தி மீது எவ்வளவு வஞ்சகம் கொண்டிருக்கிறார் என்பதை காட்டுகிறது.

    இந்திய தியாகிகளை நாங்கள் மறைத்ததாக கூறுகிறார்கள். அதை மறைத்தது கவர்னர் தான். ஒரு விழாவுக்கு நாங்கள் கவர்னர் மாளிகைக்கு போயிருந்தபோது அவர் போட்டுக்காட்டிய தியாகிகள் வரலாற்று படத்தில் காந்தி, நேரு படம் இல்லை. அதை மறைத்தவர் கவர்னர்.

    புதிய அணை கட்ட கேரள அரசு அறிக்கை தாக்கல் செய்தாலும் சரி, டி.பி.ஆர். தாக்கல் செய்தாலும் சரி, அவர்களால் நம்மை கேட்காமல் ஒரு செங்கல்லையும் எடுத்து வைக்க முடியாது. வைக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் திட்டவட்டமாக கூறியுள்ளது.

    அவர்கள் அரசியலுக்காக வேண்டுமானால் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மதிக்காமல் நடந்து கொள்ளலாம். ஆனால் மேகதாது, சிலந்தி ஆறு, முல்லை பெரியாறில் எந்த காரணத்தைக் கொண்டும் சுப்ரீம் கோர்ட்டின் அனுமதியின்றியும், தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமலும் ஒரு செங்கல்லை கூட எடுத்து வைப்பதற்கு முடியவே முடியாது.

    ஒடிசாவை தமிழர் ஆள்வதா என்று மத்திய மந்திரி அமித்ஷா பேசியுள்ளார். ஒடிசா ஒரு காலத்தில் தமிழர்கள், சோழ மன்னர்கள் ஆண்ட காலத்தில் எங்களிடம் தான் இருந்தது. ஏன் நாங்கள் இலங்கை வரை சென்று ஆட்சி செய்துள்ளோம். இதெல்லாம் அமித்ஷாவுக்கு தேவையில்லாத ஒன்று. ஒடிசாவில் எத்தனை வடமாநிலத்தவர் செல்வாக்கோடு உள்ளனர். அதேபோன்றுதான் ஒரு தமிழர் உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குழுவில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
    • அணை எந்த அளவுக்கு வலுவாக உள்ளது? ஷட்டர்கள் பலமாக உள்ளதா? அணை பாதுகாப்பாக உள்ளதா? என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்ய உள்ளனர்.

    சென்னை:

    மேற்கு தொடர்ச்சி மலையில் பெரியாற்றின் குறுக்கே முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டுள்ளது. சுமார் 131 ஆண்டுகள் பழமையான இந்த அணை மூலம் தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் ,சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்த நிலையில் இந்த அணை பலவீனமாக உள்ளதாகவும், இயற்கை சீற்றங்களின் போது அணையை சுற்றி உள்ள பகுதிகள் பாதிக்கப்படும் எனவும் கேரளா அரசு தொடர்ந்து கூறி வருகிறது. மேலும் முல்லைப்பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் புதிய அணை கட்டுவதற்கான சாத்திய கூறுகள் குறித்தும் திட்ட அறிக்கை தயாரித்து தாக்கல் செய்துள்ளது.

    கேரள அரசின் இந்த முயற்சிக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பி இருந்தார். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை கேரளா அரசு மீறி வருவதாக அவர் குற்றம் சாட்டி இருந்தார்.

    தமிழக விவசாயிகளும் கடந்த சில நாட்களாக தேனி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் எதிர்ப்பு காரணமாக நேற்று முன்தினம் நடக்க இருந்த நிபுணர் குழு கூட்டமும் திடீரென ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் அறிவுறுத்தலின் பேரில் முல்லை பெரியாறு அணையை பார்வையிட மத்திய நீர் ஆணைய நிர்வாக என்ஜினீயர் தலைமையில் 5 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த குழுவினர் அடுத்த மாதம் (ஜூன்) 13 மற்றும் 14-ந்தேதிகளில் முல்லைப்பெரியாறு அணையை நேரில் பார்வையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இவர்கள் அணை எந்த அளவுக்கு வலுவாக உள்ளது? ஷட்டர்கள் பலமாக உள்ளதா? அணை பாதுகாப்பாக உள்ளதா? என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்ய உள்ளனர்.

    பின்னர் அவர்கள் அணையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் மத்திய துணைகுழுவினர் முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்ட வேண்டும் என வலியுறுத்தி கேரள அரசு மத்திய அரசிடம் மனு அளித்திருந்தது.
    • மத்திய அரசின் நடவடிக்கைக்கு தமிழக அரசும், தி.மு.க, அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மதுரை:

    தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் ஜீவாதாரமாக விளங்கி வருகிறது. ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுவிக் முயற்சியால் கட்டப்பட்ட இந்த அணை கேரள மாநில எல்லை பகுதியில் அமைந்திருந்தாலும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    பெரியாறு மேற்கு தொடர்ச்சி மலையில் தொடங்கி மேற்கு நோக்கி ஓடி அரபிக்கடலில் கலக்கிறது. இந்த ஆற்றை மறித்து நீரை கிழக்கு நோக்கி திருப்பி மழை மறைவு பகுதியான தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டத்திற்கு பயன்படுத்தவே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டது. இதன் கொள்ளளவு 15.5 டி.எம்.சி. ஆகும். அணையின் நீர்மட்டம் 155 அடியாக உள்ளது.

    சுரங்கம் வழியாக தமிழக எல்லையில் உள்ள சுருளி, வைகையாற்றில் திருப்பி விடப்பட்டு தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணைக்கு பெரியாறு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் தேனி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுகிறது.

    தமிழகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து கேரள அரசு தொடக்கத்தில் இருந்த பல்வேறு அவதூறு கருத்துக்களை பரப்பி வருகிறது. அணை பலமாக இல்லை என கேரள அரசு தொடர்ந்து தெரிவிக்கிறது. இதனால் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் இரு மாநிலத்துக்கும் தொடர்ந்து பிரச்சனை நிலவி வருகிறது.

    இந்த நிலையில் முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்ட வேண்டும் என வலியுறுத்தி கேரள அரசு மத்திய அரசிடம் மனு அளித்திருந்தது. இதற்கான நிபுணர் குழு கூட்டம் இன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்காலிகமாக இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே புதிய அணை கட்டுவது தொடர்பாக மத்திய அரசின் நடவடிக்கைக்கு தமிழக அரசும், தி.மு.க, அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். முல்லைப்பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்காக கேரள அரசின் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டுமென வலியுறுத்தி நேற்று தேனி மாவட்டத்தில் இருந்து 5 மாவட்ட விவசாயிகள் பேரணியாக முல்லைப்பெரியாறு அணையை நோக்கி சென்றனர். ஆனால் தமிழக எல்லையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று மதுரை தல்லாகுளம் தபால் தந்தி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

    முல்லைப் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட விவசாயிகள் கேரள அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    • நீர்வரத்துக்கு ஏற்ப அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
    • இன்று காலை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 1369 கனஅடியாக உயர்த்தப்பட்டது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் மதுரை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. கடந்த சில நாட்களாக தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவான 71 அடியை எட்டியது.

    அதன்பின்னர் நீர்வரத்துக்கு ஏற்ப அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கடந்த 18 நாட்களாக அணையின் நீர் மட்டம் 71 அடியில் நீடித்தது. இந்தநிலையில் இன்று காலை அணையின் நீர்மட்டம் சற்று சரிந்து 70.85 அடியாக உள்ளது. அணைக்கு 916 கனஅடிநீர் வருகிறது. நேற்று 1169 கனஅடிநீர் திறக்கப்பட்டது. இன்று காலை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 1369 கனஅடியாக உயர்த்தப்பட்டது.

    முல்லை பெரியாறு அணையின்நீர்மட்டம் 138 அடியாக உள்ளது. அணைக்கு 282 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 1000 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55.60 அடியாக உள்ளது. 56 கனஅடிநீர் வருகிறது. 80 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 59 கனஅடிநீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • ஆற்றை கடக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர்.
    • சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. 382.31 கனஅடிநீர் வருகிறது. 27 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதிபெறுகிறது. மேலும் மதுரை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    மேலும் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியான வருசநாடு, வெள்ளிமலை, கண்டமனூர், அரசரடி உள்ளிட்ட கிராமங்களில் பெய்த தொடர் மழையால் மூலவைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 3-வது முறையாக அணையின்நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவான 71 அடியை எட்டியது. இதனால் அணைக்கு வரும் நீர்முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    நேற்று பகல்பொழுதில் திடீரென கனமழை பெய்தது. இதனால் நீர்வரத்து 5224 கனஅடியாக உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவில் நீடிப்பதால் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட வைகை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஆற்றை கடக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர். அணையின் நீர்மட்டம் 5-வது நாளாக 71 அடியில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. எனவே நீர்வரத்து மற்றும் இருப்பு அளவை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 138.10 அடியாக உள்ளது. அணைக்கு 1702 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து நீர்திறப்பு இன்று காலை நிறுத்தப்பட்டது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 56.50 அடியாக உள்ளது. அணைக்கு 281 கனஅடிநீர் வருகிறது. 30 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. 382.31 கனஅடிநீர் வருகிறது. 27 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    • சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டி அணைக்கு வரும் 128 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கூடலூர்:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1½ அடி உயர்ந்துள்ளது. நேற்று அணையின் நீர்மட்டம் 134.95 அடியாக இருந்தது. நீர்வரத்து 652 கன அடியாக இருந்தது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 136.50 அடியாக உயர்ந்துள்ளது. நீர் வரத்து 5987 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 6244 மி.கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் மீண்டும் 136 அடியை கடந்துள்ளதால் இடுக்கி மாவட்டத்திற்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 9-ந்தேதி முழு கொள்ளளவை எட்டியது. இதனைத் தொடர்ந்து மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது. நேற்று இரவு முதல் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 66.01 அடியை எட்டியதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 19280 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 3169 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4854 மி.கன அடியாக உள்ளது.

    அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் இன்று காலை10 மணிக்கு 25ஆயிரம் கனஅடி வரையிலும் மாலையில் மேலும் கூடுதலாக தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று 69 அடியை அணையின் நீர்மட்டம் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் வைகை கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக 5 மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

    பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளான தேவதானப்பட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், வடுகபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே மீண்டும் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

    சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டி அணைக்கு வரும் 128 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் வராகநதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 127.42 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 629 கன அடி நீர் முழுவதும் வெளியேறி வருகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி 56.30 அடியாக உள்ளது. நீர் வரத்து மற்றும் திறப்பு 128 கன அடி. இருப்பு 432 மி.கன அடி.

    தொடர் மழை காரணமாக தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் வயல்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இடைவிடாமல் பெய்து வரும் மழையினால் அன்றாட பணிகளுக்கு செல்பவர்களுக்கு மிகுந்த பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

    முக்கிய அணைகள் அனைத்தும் நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் குளங்கள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றன.

    பெரியாறு 82.6, தேக்கடி 108, கூடலூர் 33.6, உத்தமபாளையம் 14.6, சண்முகாநதி அணை 88.4, போடி 87, வைகை அணை 25, மஞ்சளாறு 52, சோத்துப்பாறை 126, பெரியகுளம் 96, வீரபாண்டி 104.6, அரண்மனைபுதூர் 93, ஆண்டிபட்டி 86.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 136.20 அடியாக உள்ளது.
    • தேக்கடியில் 0.2, போடியில் 12, சோத்துப்பாறையில் 2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 10-ந்தேதி முழு கொள்ளளவை எட்டியது. இதனைத் தொடர்ந்து திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனையடுத்து மதுரை, சிவகங்கை மாவட்ட பூர்வீக பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. வடகிழக்கு பருவமழை கைகொடுத்த நிலையில் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஆனால் தற்போது மழை குறைந்ததாலும், பாசனத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

    இருந்தபோதும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சிவகங்கை மாவட்ட 2-ம் பூர்வீக பாசனத்துக்காக இன்று காலை முதல் வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 7 சிறிய மதகுகள் மூலம் 5 நாட்களுக்கு 619 மில்லியன் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    இதன் மூலம் சிவகங்கை மாவட்டத்தின் 10531 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தண்ணீர் திறப்பு காரணமாக திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை மாவட்ட வைகை ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வைகை அணையின் நீர் மட்டம் 64.86 அடியாக உள்ளது. வினாடிக்கு 1492 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 2669 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4600 மி.கன அடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 136.20 அடியாக உள்ளது. வரத்து 1016 கன அடி. திறப்பு 1000 கன அடி. இருப்பு 6128 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடி. வரத்து மற்றும் திறப்பு 90 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.54 அடி. வரத்து மற்றும் திறப்பு 154 கன அடி.

    தேக்கடியில் 0.2, போடியில் 12, சோத்துப்பாறையில் 2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. கனமழை நின்ற பிறகும் கும்பக்கரை அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் அங்கு குளிக்க இன்று 29-வது நாளாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

    • கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது.
    • வைகை அணையின் நீர்மட்டம் 47.18 அடியாக உள்ளது. 147 கன அடி நீர் வருகிறது.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.

    தற்போது முதல் போக சாகுபடி நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது அணையின் நீர்மட்டத்தை பொறுத்து நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    மதுரை குடிநீர் திட்டத்துக்காக லோயர்கேம்ப் முல்லைப்பெரியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதனால் குடிநீர் பம்பிங் செய்வதில் பிரச்சனை ஏறுபட்டது. கூடலூர், உத்தமபாளையம், கம்பம், காமயகவுண்டன்பட்டி, கோம்பை, பண்ணைபுரம், தேவாரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு முல்லைப்பெரியாறு அணை மூலமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 119.40 அடி நீர்மட்டம் உள்ளது. 526 கன அடி நீர் வருகிறது. நேற்று வரை 400 கன அடி நீர் திறக்கப்பட்டது. இன்று நீர்திறப்பு 500 கன அடியாக உயர்த்தப்பட்டது.

    வைகை அணையின் நீர்மட்டம் 47.18 அடியாக உள்ளது. 147 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர்திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.10 அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 79.01 அடியாக உள்ளது. வருகிற 3 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    பெரியாறு 7, தேக்கடி 0.6, உத்தமபாளையம் 1, சண்முகாநதி அணை 1.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • வைகை அணையின் நீர்மட்டம் 50.03 அடியாக உள்ளது.
    • வெள்ளிமலை, அரசரடி, வருசநாடு, கடமலைக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் மழை இல்லாததால் மூலவைகையாற்றில் நீர்வரத்து குறைந்தது.

    கூடலூர்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியது. கேரள மாநிலத்தில் கனமழை பெய்தபோதும் முல்லை பெரியாறு நீர்பிடிப்பு பகுதியில் போதிய அளவு மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தநிலையில் ஜூலை மாதத்தில் பருவமழை தீவிரமடைந்து அணைப்பகுதியில் மழை பெய்தது.

    இதனால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து 120 அடியை எட்டியது. இந்த நிலையில் தற்போது மழை முற்றிலும் ஓய்ந்துவிட்டது. இதனால் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 119.90 அடியாக உள்ளது. 301 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 400 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 50.03 அடியாக உள்ளது. வெள்ளிமலை, அரசரடி, வருசநாடு, கடமலைக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் மழை இல்லாததால் மூலவைகையாற்றில் நீர்வரத்து குறைந்தது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அடியோடு நின்றுவிட்டது. மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 29.04அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    தொடர் மழை காரணமாக அணைகளுக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் நிறைவடையும் நிலையிலும் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக பெரியகுளம், போடி, ஆண்டிப்பட்டி, வைகை அணை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து மக்கள் நிம்மதி அடைந்தனர்.

    மேலும் இன்னும் ஒரு சில நாட்களில் விவசாய பணிகளை தொடங்க உள்ள கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள் தங்கள் நிலங்களை தயார்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாக அணைகளுக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 132.05 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 371 கனஅடி நீர்வருகிறது. அணையில் இருந்து 100 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்இருப்பு 5177 மி.கனஅடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 64.53 அடியாக உள்ளது. வரத்து 25 கனஅடி, சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் இன்று காலை முதல் மேலும் 100 கனஅடிநீர் குறைக்கப்பட்டு 1100 கனஅடி திறக்கப்பட்டது. இதுதவிர மதுரைமாநகர குடிநீருக்கு 72 கனஅடி என மொத்தம் 1172 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 4528 மி.கனஅடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 38.60 அடி, வரத்து 7 கனஅடி, திறப்பு 10 கனஅடி, சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 95.44 அடி, திறப்பு 3 கனஅடி.

    பெரியாறு 5.2, வைகை அணை 37.2, சோத்துப்பாறை 8, பெரியகுளம் 11, போடி 5.6, ஆண்டிபட்டி 39.2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
    ×