என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வைகை அணையில் பாசனத்துக்கான தண்ணீர் திறப்பு நிறுத்தம்
- வைகை அணை நீர்மட்டம் பருவமழையின்போது முழு கொள்ளளவை எட்டியது.
- முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 125.85 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் பருவமழையின்போது முழு கொள்ளளவை எட்டியது. அதனை தொடர்ந்து மதுரை, திண்டுக்கல், ராமநாதாபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக அவ்வப்போது தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து இன்று காலை நிலவரப்படி 46.62 அடியாக உள்ளது. 831 கனஅடி நீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதால் பாசனத்துக்கான தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 1869 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன நீர் திறக்கப்படுகிறது. அணையில் 1579 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 125.85 அடியாக உள்ளது. 142 கனஅடி நீர் வருகிறது. தமிழக பகுதிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3802 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.10 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 125.30 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 26.25 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. தேக்கடி 1.4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.






