என் மலர்
நீங்கள் தேடியது "அணை"
- 15 பேர் குழுவாக மார்கோனஹள்ளி அணைக்கு அருகில் நேற்று சுற்றுலா சென்றனர்.
- அணைக்கு திடீரென தண்ணீர் திறக்கப்பட்டதால், ஆற்றில் பலத்த நீரோட்டம் ஏற்பட்டது
கர்நாடகாவின் தும்கூரு மாவட்டத்தில் 15 பேர் குழுவாக மார்கோனஹள்ளி அணைக்கு அருகில் நேற்று சுற்றுலா சென்றனர்.
இவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஏழு பேர் ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது, அணைக்கு திடீரென தண்ணீர் திறக்கப்பட்டதால், ஆற்றில் பலத்த நீரோட்டம் ஏற்பட்டது. இதனால் ஏழு பேரும் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை மற்றும் தீயணைப்புப் படையினர் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். நவாஸ் என்ற ஒருவர் மட்டும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் இரண்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நான்கு பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
மீட்கப்பட்ட நவாஸைத் தவிர, வெள்ளத்தில் சிக்கிய அனைவரும் பெண்கள் மற்றும் சிறுமிகள் என்று துமகூரு காவல் கண்காணிப்பாளர் அசோக் தெரிவித்துள்ளார்.
அணைக்கு திடீரென தண்ணீர் திறக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
- பாகிஸ்தான் ராணுவத் தலைவர் மீண்டும் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் சென்றுள்ளார்.
- சிந்து நதியின் குறுக்கே இந்தியா அணை கட்டினால், அதனை 10 ஏவுகணைகள் கொண்டு தாக்கி அழிப்போம்
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை காரணம் காட்டி, அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளது.
ஒரு புறம் இந்தியாவுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு நட்புக் கரம் நீட்டி வருகிறது.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரிகள் விதிக்கப்படும் நேரத்தில், பாகிஸ்தான் ராணுவத் தலைவர் மீண்டும் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் சென்றுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவில் பேசிய பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர், "சிந்து நதியின் குறுக்கே இந்தியா அணை கட்டினால், அதனை 10 ஏவுகணைகள் கொண்டு தாக்கி அழிப்போம். நாங்கள் ஒரு அணு ஆயுத நாடு. நாங்கள் வீழ்ச்சியடைகிறோம் என்று நீங்கள் நினைத்தால், பாதி உலகத்தையே எங்களுடன் அழைத்துச் சென்றுவிடுவோம்" என்று தெரிவித்தார்.
இந்தியாவிற்கு பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் பகிரங்க மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அணு ஆயுதம் குறித்து பாகிஸ்தான் தெரிவித்த கருத்துக்களுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், "அமெரிக்காவிற்கு சென்றுள்ள பாகிஸ்தான் ராணுவத் தளபதி தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்துகள் குறித்து நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம். அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணியாது என்று இந்தியா ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. நமது தேசிய பாதுகாப்பைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் தொடர்ந்து எடுப்போம். இந்த கருத்துக்கள் நட்புரீதியான மூன்றாவது நாட்டின் மண்ணிலிருந்து கூறப்பட்டிருப்பதும் வருந்தத்தக்கது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சீனாவின் யாங்சே ஆற்றில் உள்ள உலகின் மிகப்பெரிய 'த்ரீ கோர்ஜஸ் அணை'யை விட பெரியதாக இருக்கும்.
- இந்தியா மற்றும் வங்கதேசத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்தியாவுக்கு மற்றொரு பின்னடைவாக சீனா, திபெத்தில் உள்ள பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே ஒரு பெரிய அணையைக் கட்டும் பணியைத் தொடங்கியுள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்துக்கு அருகே அமைந்துள்ள இந்த நதி திபெத்தில் யார்லுங் சாங்போ என்றும் இந்தியாவில் பிரம்மபுத்திரா என்றும் அழைக்கப்படுகிறது.
நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் சீனப் பிரதமர் லி கியாங் கலந்து கொண்டார்.
பொருளாதார ரீதியாகவும் ராஜதந்திர ரீதியாகவும் திபெத்தை இணைக்கும் இந்த திட்டத்திற்கு சீன அரசு கடந்த டிசம்பரில் ஒப்புதல் அளித்தது.
இந்த அணை கட்டி முடிக்கப்பட்டால், சீனாவின் யாங்சே ஆற்றில் உள்ள உலகின் மிகப்பெரிய 'த்ரீ கோர்ஜஸ் அணை'யை விட பெரியதாக இருக்கும்.
இது இந்தியா மற்றும் வங்கதேசத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த திட்டத்தில் ஐந்து நீர்மின் நிலையங்கள் கட்டப்படும் என்றும், மொத்த முதலீடு சுமார் 1.2 டிரில்லியன் யுவான் (167.1 பில்லியன் டாலர்) எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த அணைத் திட்டம் குறித்து இந்தியா சீனாவிடம் கடந்த ஜனவரியில் கவலை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
- கரையோர பொதுமக்களுக்கு எச்சரிக்கை
- குமரி மாவட்டம் முழுவதும் மழை நீடிப்பு
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்றும் மாவட்டம் முழுவதும் மழை நீடித்தது.இன்று காலையிலும் ஒரு சில இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. பேச்சிப்பாறை அணை பகுதியில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது.அங்கு அதிகபட்சமாக 57.8 மில்லிமிட்டர் மழை பதிவாகியுள்ளது.
கன்னிமார், கொட்டாரம், மயிலாடி, ஆரல்வாய்மொழி மற்றும் அதன் புறநகர் பகுதி களிலும் மழை பெய்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை களுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.அணைக்கு வரக்கூடிய தண்ணீ ருக்கு ஏற்ப அணையிலி ருந்து தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
இன்று காலை பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளில் இருந்து 2 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் குழித்துறை ஆறு, பரளியாறு கோதை யாறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகி றார்கள். திற்பரப்பு அருவி யில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீட்டிக்கப் பட்டு உள்ளது.
பேச்சிப்பாறை நீர்மட்டம் இன்று காலை 42.27 அடியாக உள்ளது. அணைக்கு 1437 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1066 கனஅடி உபரி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71.70 அடியாக உள்ளது. அணைக்கு 842 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 1864 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளில் இருந்து சுமார் 3 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சிற்றார்-1 அணை நீர்மட்டம் 13.12 அடியாகவும், சிற்றார்-2 நீர்மட்டம் 13.22 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 16 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 38.93 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 13.20 அடியாக உள்ளது.
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பாசன குளங்கள் நிரம்பி வழிகின்றன. மாவட்டம் ழுழுவதும் 750 குளங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 500-க்கும் மேற்பட்ட குளங்கள் 50 சதவீதம் நிரம்பியுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடு பட்டு வருகிறார்கள். தெரிசனங்கோப்பு, அரும நல்லூர், பூதப்பாண்டி சுசீந்திரம் பகுதிகளில் கும்பப்பூ சாகுபடி நடந்து வருகிறது.
- ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
- பேச்சிபாறையில் 65 மி.மீ மழை
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வங்க கடல் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளதால் மேலும் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவில், மயிலாடி, தக்கலை, குளச்சல், இரணியல், ஆரல்வாய்மொழி, ஆணைக் கிடங்கு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
பேச்சுப் பாறை, பெருஞ் சாணி, சிற்றார் அணை பகுதியிலும் மழை பெய்தது. பேச்சிபாறையில் அதிகபட்சமாக 65 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது. மழையோர பகுதி யான பாலமோர் பகுதியிலும் மழை பெய்து வருவதால் பேச்சிபாறை அணைக்கு வரக்கூடிய நீர் வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி வருவதையடுத்து பொதுபணித்துறை அதிகாரிகள் அணையின் நீர்மட்டத்தை கண்காணித்து வருகிறார்கள்.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை களின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி யுள்ளதை யடுத்து குழித்துறை யாறு, கோதையாறு, வள்ளியாறு, பரளிஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பெருஞ் சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் மூடப்பட்டுள்ளது.
பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 45.44 அடியாக இருந்தது. அணைக்கு 1468 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 6.86 கன அடி தண்ணீர் வெளியேற்றபடுகிறது. பெருஞ்சானி அணை நீர்மட்டம் 72. 10 அடியாக உள்ளது. அணைக்கு 643 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
சிற்றார் 1-அணை நீர்மட்டம் 13.12 அடியாகவும், சிற்றார் 2 நீர்மட்டம் 13.22 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 18 அடியாகவும், மாம்பழத் துறையார் அணையின் நீர்மட்டம் 49.13 அடியாகவும் உள்ளது. முக்கடல் அணையின் நீர்மட்டம் 20 அடியை நெருங்குகிறது.
மாவட்ட முழுவதும் பெய்து மழை அளவு மில்லி மீட்டரில் வரு மாறு:- பேச்சுப்பாறை 65, பெருஞ்சாணி 44.8, சிற்றார்1-40.6, சிற்றார் 2 -50.2, பூதப்பாண்டி 25.6, களியல் 48, கன்னிமார் 13.6, கொட்டாரம் 28.2, குழித்துறை 43, மைலாடி 20.2, நாகர்கோவில் 24.4, சுருளோடு 49, தக்கலை 20, குளச்சல் 3, இரணியல் 3, பாலமோர் 25.4, மாம்பழத்துறையாறு 26.4, திற்பரப்பு 54, ஆரல்வாய்மொழி 17.2, கோழிப் போர்வை 20.4, அடையாமடை 18.2, குருந்தன்கோடு 22, முள்ளங்கினாவிளை 42.6, ஆணை கிடங்கு 24.
- காற்றின் வேகம் அதிகமாக இருக்கக் கூடும் என்பதால் குமரி மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது.
- மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு வரும் நீர்வரத்தும் அதிகரித்து உள்ளது.
நாகர்கோவில் :
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழூவு மண்டலம் வலுவிழந்து குமரிக் கடல் நோக்கி நகர்ந்துள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்தது.
மேலும் காற்றின் வேகம் அதிகமாக இருக்கக் கூடும் என்பதால் குமரி மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் இன்று மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கச் செல்ல வில்லை.
இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. முள்ளங்கிவிளையில் 12.8 மில்லி மீட்டரும், மயிலாடியில் 8.2 மில்லி மீட்டரும், நாகர்கோவிலில் 7.2 மில்லி மீட்டரும் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது.
மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு வரும் நீர்வரத்தும் அதிகரித்து உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 703 கன அடி தண்ணீர் வருவதால், 785 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.அணையின் கொள்ளளவு 48 அடி என்ற நிலையில் தற்போது 43.38 அடி நீர்மட்டம் உள்ளது.
பெருஞ்சாணி அணை யின் கொள்ளளவு 77 அடி என்ற நிலையில் நீர்மட்டம் 73.02 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 79 கன அடி தண்ணீர் வருவதால், 150 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 மற்றும் 2 அணைகளில் 14.04 மற்றும் 14.13 அடி நீர்மட்டம் உள்ளது. 54.12 அடி கொள்ளளவு கொண்ட மாம்பழத்துறையாறு அணை யில் 48.47 அடி நீர்மட்டம் உள்ளது.
நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் கொள்ளளவு 25 அடி என்ற நிலையில் நீர்மட்டம் 20.80 அடி யாக உள்ளது. இந்த அணைக்கு விநாடிக்கு 8.6 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 8.6 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கரூர்:
காவிரி ஆற்றில் மாயனுார் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது.நேற்று 2,746 கன அடி தண்ணீர் வந்தது. இன்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 1,642 கன அடியாக குறைந்தது. காவிரியாற்றில் குடிநீர் தேவைக்காக, அந்த தண்ணீர் முழுதும் அப்படியே திறந்துவிடப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.அமராவதி அணையில் இருந்து ஆற்றில் காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 300 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 440, கன அடியும் தண்ணீர் திறக்கப் பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர் மட்டம், 67.79 அடியாக இருந்தது. அணைக்கு, வினாடிக்கு, 29 கன அடி தண்ணீர் வந்தது.க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பா ளையம் அணைக்கு தண்ணீர் வரத்து நின்றது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 15.38 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
- ஜூன் மாதம் 1-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டு பிப்ரவரி மாதம் 28-ந்தேதி அடைக் கப்படுகிறது
- மாவட் டத்தில் உள்ள பல கால்வாய்களில் கடை மடை பகுதிகளுக்கு இன்று வரை தண்ணீர் போய் சேரவில்லை.
கன்னியாகுமரி :
தமிழக முதல்- அமைச் சர் மு.க.ஸ்டாலின், நீர்வ ளத்துறை அமைச்சர், தமிழ் நாடு அரசின் நீர்வளத் துறையின் அரசு கூடுதல் செயலாளர் ஆகியோருக்கு கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதா வது:-
குமரிமாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு- 1, சிற்றாறு-2 அணைகளில் இருந்து விவசாயத்திற்கு ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டு பிப்ரவரி மாதம் 28-ந்தேதி அடைக் கப்படுகிறது. இந்த ஆண்டும் ஜூன் 1 -ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இத னால் விவசாயிகள் பயன டைந்தனர். ஆனால் மாவட் டத்தில் உள்ள பல கால்வாய்களில் கடை மடை பகுதிகளுக்கு இன்று வரை தண்ணீர் போய் சேரவில்லை.
குறிப்பாக சிற்றாறு பட்ட ணம் கால்வாயின் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட கடைவரம்பு பகுதிக ளான கருங்கல், பாலூர், சுண்டவிளை, தேவிகோடு முதல் கைசூண்டி, புதுக் கடை, பைங்குளம், தேங்காப்பட்ட ணம் வரை கடந்த பல ஆண்டுகளாக அதிகாரிகளின் அலட்சியத்தால் தூர்வாரப்பட வில்லை. கால்வாய்களில் சுமார் 2 அடிக்கும் மேல் புதர் மண்டிமண் தூர்ந்து காணப்படுகிறது. இந்த பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் விவசாயிகளால் பயிரிட்டுள்ள பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது குமரி மாவட்டத்தில் கடுமையான வெயில் அடிப்பதினால் மேற்கண்ட கால்வாய்க்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட குளங்கள் தண்ணீர் இல்லாமல் காணப்படுகிறது. ஆகவே விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந்தேதி அணை ளில் தண்ணீரை அடைக் காமல் அடுத்த மாதம் 30-ந் தேதி வரை அனைத்து கால் வாய்களிலும் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடவேண்டும்.
மேலும் உங்கள் தொகுதி யில் முதல் -அமைச்சர் திட் டத்தில் குமரி மாவட்டத் தில் உள்ள கோதையாறு வடிநில கோட்டத்தில் உள்ள கால்வாய்களை ரூ.53 கோடி மதிப்பீட்டில் சீர மைப்பதற்காக ஆய்வு செய் வதற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆய்வு பணிகள் நடை பெற்று வருகிறது. ஆய்வு பணிகளை விரைவில் முடித்து அரசுக்கு ஆய்வறிக் கையை வழங்கிபோர்க்கால அடிப்படையில் கால்வாய் களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- ஒரு வார காலமாக பனிபொழிவு குறைந்த நிலையில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அதிகரித்தது
- பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் காலை 37.85 அடியாக இருந்தது. 434க்கு கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கார்த்திகை மாதம் முழுவதும் கொட்டி தீர்த்த கடுமையான பனிப்பொழிவு காரணமாக பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள்.
கடந்த ஒரு வார காலமாக பனிபொழிவு குறைந்த நிலையில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. மதியம் நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதையடுத்து பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே சிரமப்பட்டனர். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தவிப்பிற்கு ஆளானார்கள்.
இந்த நிலையில் நேற்று காலை திடீரென சீதோசன நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை. அதன் பிறகு தொடர்ச்சியாக மதியம் சுட்டெரிக்கும் வெயில் அடித்தது. இந்த நிலையில் நேற்று இரவு மின்னல் கண்ணை பறிக்கும் வகையில் இருந்தது. இன்று அதிகாலையில் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது. நாகர்கோவிலில் அதிகாலை 3 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் அரை மணி நேரம் இடைவிடாது பெய்தது. தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்தது.
பூதப்பாண்டி, சுருளோடு, ஆரல்வாய்மொழி, மயிலாடி, கொட்டாரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது. மயிலாடியில் அதிகபட்சமாக 4.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது.மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் 1.8 மில்லி மீட்டர் மழை பதி வாகியுள்ளது. அதிகாலை யில் பெய்த மழையின் காரணமாக இதமான குளிர் காற்று வீசியது. பின்னர் காலையில் வழக்கம் போல் வெயில் அடிக்க தொடங்கி யது
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 37.85 அடியாக இருந்தது. அணைக்கு 434க்கு கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து 592 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 46.75 அடியாக உள்ளது. அணைக்கு 44 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 450 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சிற்றார்-1 அணை நீர்மட்டம் 9.51 அடியாக உள்ளது. அணைக்கு 91 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 3 அணைகளில் இருந்தும் 1192 தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு உள்ளது. வழக்கமாக பாசனத்திற்காக ஜூன் 1-ந் தேதி திறக்கப்படும் அணைகள் பிப்ரவரி 26 -ந் தேதி மூடப்படுவத வழக்கம்.
ஆனால் கடை மடை பகுதிகளில் விவசாயம் கருகும் நிலையில் இருப்பதால் தொடர்ந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகளும் சட்டமன்ற உறுப்பினர்களும் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் மார்ச் 20 -ந்தேதி வரை தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- 250 கன அடி 100 அடியாக குறைக்கப்பட்டது
- நீர்மட்டம் 54.04அடியாக உள்ளது
கரூர்,
உடுமலைப்பேட்டையில் உள்ள அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட 250 கன அடி தண்ணீர் வினாடிக்கு 100 கன அடியாக நேற்று குறைக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 54.04 அடியாக உள்ளது. காவிரி ஆற்றில் மாயனுார் கதவணைக்கு வினாடிக்கு 684 கன அடி தண்ணீர் வந்தது. வினாடிக்கு 689 கன அடியாக தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது. அந்த தண்ணீர் முழுதும் காவிரியாற்றில் குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்டது. க.பரமத்தி அருகே ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. அணையின் நீர்மட்டம் 14.72 அடியாக உள்ளது.
- கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து காணப்படுகிறது
- அஞ்சுகிராமம் மயிலாடி, கன்னியாகுமரி நாகர்கோவில் பகுதிகளில் மழை பெய்யவில்லை.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருகிறது. காலை நேரங்களில் வெயில் அடித்து வரும் நிலையில் மதியத்திற்கு பிறகு சீதோசன நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு மழை பெய்து வருகிறது.
குறிப்பாக மேற்கு மாவட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து காணப்படுகிறது. ஆனால் கிழக்கு மாவட்ட பகுதிகளான அஞ்சுகிராமம் மயிலாடி, கன்னியாகுமரி நாகர்கோவில் பகுதிகளில் மழை பெய்யவில்லை. தொடர்ந்து சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருகிறது. பூதப்பாண்டி பகுதியில் நேற்று மதியம் கனமழை கொட்டி தீர்த்தது.
முக்கடல் அணைப்பகுதி யிலும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 24.9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.பேச்சிப்பாறை பெருஞ் சாணி அணை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
திற்பரப்பு அருவிப்பகுதி யில் பெய்து வரும் சாரல் மழை காரணமாக ரம்மிய மான சூழல் நிலவுகிறது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. பேச்சி பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 34.71 அடியாக உள்ளது. அணைக்கு 216 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 223 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 33.25 அடியாக உள்ளது. அணைக்கு 78 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது. இந்த நிலையில் அணைப்பகுதியில் மழை பெய்துள்ளது.முக்கடல் அணையின் நீர்மட்டம் இன்று காலை 10.70 அடியாக உள்ளது.
மாவட்ட முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பேச்சிபாறை 9.4 பெருஞ்சாணி 14.4 சிற்றாறு1-11 சிற்றாறு2-14.2 பூதப்பாண்டி 20 கன்னிமார் 9.2 புத்தன் அணை 12.8 பாலமோர் 9.4 மாம்பழத்துறையாறு 19.2 திற்பரப்பு 8 முக்கடல் 24.9
- 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடல் நீர் உட்புகுவது தடுக்கப்–படுகிறது.
- 10 கி.மீ தூரத்திற்கு ஒரு தடுப்பணை அமைக்க வேண்டும்.
சீர்காழி:
சீர்காழி அருகே கொண்டல் தலைப்பி–லிருந்து உருவாகும் உப்பனாறு கொண்டல், வள்ளுவக்குடி, அகணி, சீர்காழி, சட்டநாதபுரம், திட்டை, தில்லைவிடங்கன், எடமணல் திருநகரி, வழுதலைக்குடி வழியாக சென்று திருமுலைவாசலில் கடலில் கலந்து வருகிறது. இந்த உப்பனாறு மூலம் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மேம்பட்டு வந்தது.
இந்நிலையில் கோடை காலங்களில் கடல் நீர் உப்பனாற்று முகத்துவாரம் வழியாக 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு உப்புகுந்து நிலத்தடி நீர் முழுதும் பாதிக்கப்பட்டு உவர் நீராக மாறி வருகிறது.
இதனால் சீர்காழி அருகே பனமங்கலம் பகுதியில் கடல் நீர் உட்புகுவதை தடுக்க அப்பகுதி மக்கள் ம.தி.மு.க மாவட்ட செயலாளர் மார்கோனி நிதியுதவியுடன் தற்காலிகமாக மண் அணை அமைத்து வருகின்றனர்.
மழைக்காலங்களில் பெய்த மழை நீரால் நிலத்தடி நீர் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில் கோடைக்காலம் துவங்க உள்ளதால் கடல் நீர் உட்புகுந்து வருவதை தடுக்க மண் அணையை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதன் மூலம் பனமங்கலம், துறையூர், கோடங்குடி, குமாரநத்தம், வரவுக்குடி, ஆதமங்கலம், கொண்டல், வள்ளுவக்குடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடல் நீர் உட்புகுவது தடுக்கப்–படுவதோடு நிலத்தடி நீர் பாதிக்கப்படாமல் காப்பாற்றப்–படுவதாக அப்பகுதி கிராம மக்கள், விவ–சாயிகள் தெரிவிக்கின்றனர்.
பனமங்கலம் பகுதியில் அரசு நிரந்தரமாக தடுப்பணை அமைக்க வேண்டும், 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு தடுப்பணை அமைத்திட வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






