என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரம்மபுத்ரா"

    • சீனாவின் யாங்சே ஆற்றில் உள்ள உலகின் மிகப்பெரிய 'த்ரீ கோர்ஜஸ் அணை'யை விட பெரியதாக இருக்கும்.
    • இந்தியா மற்றும் வங்கதேசத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

    இந்தியாவுக்கு மற்றொரு பின்னடைவாக சீனா, திபெத்தில் உள்ள பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே ஒரு பெரிய அணையைக் கட்டும் பணியைத் தொடங்கியுள்ளது.

    அருணாச்சலப் பிரதேசத்துக்கு அருகே அமைந்துள்ள இந்த நதி திபெத்தில் யார்லுங் சாங்போ என்றும் இந்தியாவில் பிரம்மபுத்திரா என்றும் அழைக்கப்படுகிறது.

    நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் சீனப் பிரதமர் லி கியாங் கலந்து கொண்டார்.

    பொருளாதார ரீதியாகவும் ராஜதந்திர ரீதியாகவும் திபெத்தை இணைக்கும் இந்த திட்டத்திற்கு சீன அரசு கடந்த டிசம்பரில் ஒப்புதல் அளித்தது.

    இந்த அணை கட்டி முடிக்கப்பட்டால், சீனாவின் யாங்சே ஆற்றில் உள்ள உலகின் மிகப்பெரிய 'த்ரீ கோர்ஜஸ் அணை'யை விட பெரியதாக இருக்கும்.

    இது இந்தியா மற்றும் வங்கதேசத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

    இந்த திட்டத்தில் ஐந்து நீர்மின் நிலையங்கள் கட்டப்படும் என்றும், மொத்த முதலீடு சுமார் 1.2 டிரில்லியன் யுவான் (167.1 பில்லியன் டாலர்) எனவும் கூறப்பட்டுள்ளது.

    இந்த அணைத் திட்டம் குறித்து இந்தியா சீனாவிடம் கடந்த ஜனவரியில் கவலை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.  

    • கப்பற்படை தளத்தில் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த போது தீ விபத்து.
    • நேற்று ஏற்பட்ட தீ இன்று காலை முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது.

    இந்திய கப்பற்படையின் முக்கியமான போர்க்கப்பல்களில் ஒன்று ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா. இந்த கப்பல் மும்பையில் உள்ள கப்பற்படை தளத்தில் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்தது. இந்த கப்பலில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக வீரர்களை மும்பை தீயணைப்புப்படை உதவியுடன் தீணை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கடுமையான போராட்டத்திற்குப்பின் இன்று காலை தீ அணைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கப்பலில் இருந்த மாலுமி ஒருவர் மாயமாகியுள்ளார். கப்பலில் மேலும் தீப்பிடிக்க வாய்ப்புள்ளதாக என அதிகாரிகள் கப்பல் முழுவதும் ஆராய்ந்து வருகிறார்கள். இந்த தீ விபத்தால் கப்பல் ஒரு பக்கம் சாய்ந்து நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா என்பது உள்நாட்டிலேயே கட்டப்பட்ட போர்க்கப்பல்களில் முதன்மையானது. இது ஏப்ரல் 2000-ல் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது.

    கப்பலில் நடுத்தர தூரம், குறுகிய தூரம் மற்றும் விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேற்பரப்பில் இருந்து மேற்பரப்பு மற்றும் மேற்பரப்பில் இருந்து வான் ஏவுகணைகள் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளும் பொருத்தப்பட்டுள்ளன.

    ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா 5300 டன் எடை கொண்டது. 125 மீட்டர் நீளமும், 14.4 மீட்டர் அகலமும் (beam) கொண்டது. 27 நாட்டிக்கல் வேகத்தில் செல்லக் கூடியதாகும்.

    ×