என் மலர்
நீங்கள் தேடியது "flood warning"
- நீர் இருப்பு 3,168 மில்லியன் கன அடியாக உள்ளது.
- தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 750 கன அடியில் இருந்து 1,500 கன அடியாக அதிகரித்துள்ளது.
கனமழையால் நீர் வரத்து அதிகரித்ததால் புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், புழல் ஏரிக்கான நீர்வரத்து 2,930 கன அடியில் இருந்து 4,460 ஆக அதிகரித்துள்ளது. இதனால், நீர் இருப்பு 3,168 மில்லியன் கன அடியாக உள்ளது.
புழல் ஏரியில் இருந்து 1500 கனஅடி நீர் திறக்கப்படுவதால் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புழல் ஏரியில் இருந்து கால்வாய் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- சாத்தூர் அணை 113.60 அடியை எட்டியுள்ள நிலையில் நீர்வரத்து 12,000 கன அடியாக உள்ளது.
- தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 9 ஆயிரம் கன அடியில் இருந்து 15,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
119 அடி உயரம் கொண்ட சாத்தனூர் அணை 113.60 அடியை எட்டியுள்ள நிலையில் நீர்வரத்து 12,000 கன அடியாக உள்ளது.
முன்னதாக, சாத்தனூர் அணைக்கு 7,000 கன அடி நீர் வரத்து இருந்த நிலையில், 5,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இது மேலும் அதிகரித்து, உபரி நீர் விநாடிக்கு 9000 கன அடியாக திறக்கப்பட்டது.
இந்நிலையில், சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 9 ஆயிரம் கன அடியில் இருந்து 15,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடூர் அணையில் இருந்து 5,779 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் அதன் முழு கொள்ளளவான 32 அடியில் 31 அடியை எட்டியதால் நீர் திறக்கப்பட்டுள்ளது.
- சாத்தனூர் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- 119 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 116.75 அடியாக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
விழுப்புரம் மாவட்டம் சாத்தனூர் அணையின் நீர்வரத்து பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 119 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் தற்போது 116.75 அடியாக உயர்ந்துள்ளது.
இதனால் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும்என்று சாத்தனூர் உபகோட்டம் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் உள்ள புதுச்சேரி கிராமங்களான மணமேடு, குருவிநத்தம், பரிக்கல்பட்டு, சோரியங்குப்பம், கொமந்தான்மேடு, உச்சிமேடு ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு புதுச்சேரி தாசில்தார் கோபாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் வருவாய்த்துறை ஊழியர்கள் மோட்டார் சைக்கிள்களில் சென்று ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.
கால்நடைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்குமாறு அவர்கள் அறிவுறுத்தினர்.
- அணையின் பாதுகாப்பு கருதி வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டுள்ளது.
- கரையோர கிராம மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையில் 49.75 கனஅடி நீர் இருப்பு உள்ளது.
அணைக்கு வினாடிக்கு நீர்வரத்து 3 ஆயிரத்து 126 கனஅடி வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டுள்ளது.
அணை பூங்காவுக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் சாத்தனூர் அணை வரை உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் மற்றும் தாழ்வானப்பகுத களில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் வெள்ள அபாய எச்சாரிக்கை விடப்படுகிறது. பெரியமுத்தூர், திம்மாபுரம், சுண்டேகுப்பம், காவேரிப்பட்டிணம், கால்வேஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சௌட்ட ஹள்ளி, தளி ஹள்ளி ஆகிய கரையோர கிராம மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களுக்கு தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது.
தென் பெண்ணை யாற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை கொண்டு செல்லவோ தடை விதிக்கப்படுகிறது என நீர்வளத்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
- நீர்வரத்து முழுவதும் தென்பெண்ணை ஆற்றிலும், பாசன கால்வாய்களில் திறந்துவிடப்பட்டுள்ளது.
- அணை பகுதியை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், மாலை மற்றும் இரவில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு, கிருஷ்ணகிரி அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அதன்படி நீர்வரத்து 1697 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 50.15 அடியாக உள்ளதால், நீர்வரத்து முழுவதும் தென்பெண்ணை ஆற்றிலும், பாசன கால்வாய்களில் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 2195 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆற்றில் சீறி பாய்ந்து அணை பூங்காவிற்கு செல்லும் தரைப்பாலம் மூழ்கியபடி தண்ணீர் செல்கிறது. இதன் காரணமாக, தரைப்பாலம் வழியாக பூங்காவிற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தரைப்பாலத்தின் இருபகுதிகளிலும் கே.ஆர்.பி. அணை போலீசார் யாரும் உள்ளே செல்லாத வகையில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அணை பகுதியை பார்வையிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றில் அதிகளவில் தண்ணீர் செல்வதாலும், நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதே போல் ஆற்றங்கரை யோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும், ஆற்றில் குளிக்கவோ, கடக்கவோ கூடாது என நீர்வளத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
- தென்பெண்ணை ஆற்றில் சீறிப்பாய்ந்த வெள்ளம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீப்பத்துறை வழியாக சாத்தனூர் அணையில் பாய்ந்து வருகிறது.
- தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆற்றின் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
திருவண்ணாமலை:
கர்நாடகா மாநிலம், மைசூரு மாண்டியா உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து 2 நாட்களாக விடிய விடிய மழை பெய்தது. தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
மேலும் ஓசூர் பகுதியிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.
நேற்று அணைக்கு வினாடிக்கு 1275 கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. இதனால் கிருஷ்ணகிரி அணைக்கு வெள்ளம் சீறிப் பாய்ந்து வருகிறது.
அணையின் பாதுகாப்பு கருதி நேற்று வினாடிக்கு 1449 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணையில் இருந்து பாசன கால்வாய்கள், ஆற்றிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அணையில் இருந்து ரசாயன நுரையுடன் தண்ணீர் வெளியேறியது. இதனால் கடும் துர்நாற்றம் வீசியது. இந்த நுரை அந்த பகுதியில் உள்ள தரைப்பாலம் தெரியாத அளவுக்கு மூடியது. இதனால் அப்பகுதி வழியாக கிராம பகுதிக்கு செல்லும் மக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து மேலும் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.
இதனால் கிருஷ்ணகிரி அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 51 அடியாக எட்டி உள்ளது.
இன்று காலை அணையில் இருந்து பாசன கால்வாய்கள், ஆற்றிலும் வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அணையில் இருந்து சீறிப்பாய்ந்த வெள்ளம் அங்குள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. அணைக்கு செல்லும் பாதை தடுப்பு வைத்து அடைக்கப்பட்டது.
இதனால் பூங்கா, அணையை சுற்றிப் பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
தென்பெண்ணை ஆற்றில் சீறிப்பாய்ந்த வெள்ளம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீப்பத்துறை வழியாக சாத்தனூர் அணையில் பாய்ந்து வருகிறது.
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கிருஷ்ணகிரி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் முழுவதும் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது.
இதன் காரணமாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆற்றின் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி அணையில் இருந்து சாத்தனூர் அணை வரை உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரத்தில் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.
பெரியமுத்தூர், திம்மாபுரம், சுண்டேகுப்பம், காவேரிப்பட்டிணம், கால்வேஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுட்டஹள்ளி, தளிஹள்ளி திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீப்பத்துறை பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
119 கனஅடி கொண்ட சாத்தனூர் அணையில் தற்போது 87 அடி தண்ணீர் உள்ளது. இதனால் இந்த அணையில் இருந்து நீர் திறக்கவில்லை.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மக்கள் அச்சப்பட தேவை இல்லை என தெரிவித்துள்ளனர்.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- பாதுகாப்பு கருதி முன் எச்சரிக்கையாக வினாடிக்கு 4,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், ஓசூர் பகுதியிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மொத்த கொள்ளளவான 52 அடியில் 51 அடியை எட்டியதால் 3 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி முன் எச்சரிக்கையாக வினாடிக்கு 4,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்படும் என்பதால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அணை முதல் சாத்தனூர் அணை வரை தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- பழனியில் உள்ள பாலாறு பொருந்த லாறு, வரதமாநதி, குதிரை யாறு அணைகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
- பூஞ்சோலை கிராமத்துக்கு செல்லும் தரைப்பாலம் கன மழை காரணமாக அடித்து செல்லப்பட்டது.
பழனி:
கொடைக்கானல் மற்றும் பழனியில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக முக்கிய அணைகள் வேகமாக நிரம்பியது. பழனியில் உள்ள பாலாறு பொருந்த லாறு, வரதமாநதி, குதிரை யாறு அணைகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
மேலும் இந்த 3 அணை களில் இருந்து தற்போது கூடுதல் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. இதன்மூலம் திண்டுக்கல், திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
பாலாறு பொருந்தலாறு அணை முழு கொள்ளளவை எட்டியதாலும் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் 1200 கன அடி நீர் வெளியேற்ற ப்படுகிறது. இந்த நீர் சண்முகநதியில் திறந்து விடப்படும். எனவே சண்முகநதி, பாலாறு பொருந்தலாறு கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கை யுடன் இருக்குமாறு அறி வுறுத்தப்பட்டுள்ளது.
பழனி அருகே உள்ள பூஞ்ேசாலை கிராமத்துக்கு செல்ல ஒரு தரைப்பாலம் உள்ளது. இப்பகுதியில் பெய்த கன மழை காரண மாக தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது.
இதனால் பாலத்தின் வழியே பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அணையின் மீது ஏறி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு ள்ளது. அத்தியாவசிய பணிகளுக்கு செல்ல முடியாமலும், பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே உடைந்த தரைப்பாலத்தை சீரமைத்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அணைக்கு வரும் மழை நீரின்வரத்து வேகமாக அதிகரிப்பு.
- வைகை ஆற்றில் இறங்க பொதுமக்கள் முயற்சிக்க வேண்டாம் என அறிவுறுத்தல்
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி விட்டன. 71 அடி உயரம் கொண்ட வைகை அணை இந்த ஆண்டில் 2வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது.
பலத்த மழை காரணமாக நேற்று இரவு 7 மணியில் இருந்து அணைக்கு வரும் நீரின் வரத்து வேகமாக அதிகரித்தது. இதையடுத்து அணையில் இருந்து முதல்கட்டமாக 5,399 கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு இரவு 8,900 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் தேனி, திண்டுக்கல்,மதுரை,சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு மேலும் அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் வைகை ஆற்றில் இறங்கவோ அல்லது கடக்கவோ பொதுமக்கள் முயற்சிக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து 170 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
- ஆந்திராவின் 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்தது.
வங்க கடலில் உருவான மாண்டஸ்' புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்து வரும் நிலையில், ஆந்திராவிலும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இதையடுத்து ஆந்திராவின் தென் கடலோர மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் குவிக்கப்பட்டனர்.
6 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறைகளும் திறக்கப்பட்டுள்ளன. 5 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் மற்றும் 5 மாநில பேரிடர் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவசர காலங்களில் மக்களை வெளியேற்றவும் தயாராக இருப்பதாகவும் மாநில பேரிடர் மேலாண்மை இயக்குனர் அம்பேத்கர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தொடர் மழை காரணமாக கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து 170 கன அடி உபரி நீர் திறக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
- கடந்த 3 நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து படிப்படியாக உயர்ந்துள்ளது.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பகலில் வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.
கிருஷ்ணகிரி:
தொடர் மழை எதிரொலியாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை நிரம்பியது. இதனால் தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை நிரம்பியது விடுக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தும், அதிகரித்தும் காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து படிப்படியாக உயர்ந்துள்ளது.
அதன்படி கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 645 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை வினாடிக்கு 1066 கன அடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 50.65 அடியாக உள்ளது. இதற்கு மேல் அணையில் நீர் தேக்க முடியாது என்பதால் அணைக்கு வரும் நீர் முழுவதும் பாசன கால்வாய்கள், மதகுகள் வழியாக திறந்துவிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் பெய்யும் மழை பொறுத்து நீர்வரத்து திறக்க அதிகரிக்கக்கூடும் என்பதால், தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு, நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நீர்வரத்து அதிகமாகும்பட்சத்தில் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கக்கூடும். இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்பும் ஆகிய 5 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் வசிக்கக்கூடிய மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பகலில் வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி அணையில் 60.20 மில்லி மீட்டரும், போச்சம்பள்ளி 36.20, கிருஷ்ணகிரி 26, பர்கூர் 14.20, நெடுங்கல் 7, ராயக்கோட்டை 5, தேன்கனிக்கோட்டை 5 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
- அணையின் மொத்த கொள்ளளவு 119 அடியாக உள்ள நிலையில் தற்போது நீரின் அளவு 117 அடியை எட்டி உள்ளது.
- மழையின் காரணமாக வினாடிக்கு 3000 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அணையின் கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட மக்களின் தண்ணீர் தேவை மற்றும் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்ட விவசாயிகளின் விவசாய தேவைக்கான தண்ணீர் தேவைகளை சாத்தனூர் அணை பூர்த்தி செய்து வருகிறது.
சாத்தனூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக வினாடிக்கு 3000 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
அணையின் மொத்த கொள்ளளவு 119 அடியாக உள்ள நிலையில் தற்போது நீரின் அளவு 117 அடியை எட்டி உள்ளது.
அணையில் இருந்து இன்று காலை 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் 4 மாவட்டங்களின் அணையின் கரையோரம் உள்ள மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, கால்நடைகளை ஆற்றில் இறக்கவும் கூடாது என நீர்ப்பாசன துறை மற்றும் வருவாய் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அணைக்கு வரும் நீரின் அளவைப் பொறுத்து மேலும் கூடுதல் நீர் அணையில் இருந்து திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






