என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கே.ஆர்.பி. அணையில் இருந்து வினாடிக்கு 3,126 கனஅடி தண்ணீர் திறப்பு- 3 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை
    X

    கே.ஆர்.பி. அணையில் இருந்து வினாடிக்கு 3,126 கனஅடி தண்ணீர் திறப்பு- 3 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

    • அணையின் பாதுகாப்பு கருதி வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டுள்ளது.
    • கரையோர கிராம மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையில் 49.75 கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு நீர்வரத்து 3 ஆயிரத்து 126 கனஅடி வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டுள்ளது.

    அணை பூங்காவுக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் சாத்தனூர் அணை வரை உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் மற்றும் தாழ்வானப்பகுத களில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் வெள்ள அபாய எச்சாரிக்கை விடப்படுகிறது. பெரியமுத்தூர், திம்மாபுரம், சுண்டேகுப்பம், காவேரிப்பட்டிணம், கால்வேஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சௌட்ட ஹள்ளி, தளி ஹள்ளி ஆகிய கரையோர கிராம மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களுக்கு தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது.

    தென் பெண்ணை யாற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

    மேலும் ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை கொண்டு செல்லவோ தடை விதிக்கப்படுகிறது என நீர்வளத்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×