search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கே.ஆர்.பி. அணை நிரம்பியது: தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
    X

    கே.ஆர்.பி. அணை நிரம்பியது: தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    • கடந்த 3 நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து படிப்படியாக உயர்ந்துள்ளது.
    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பகலில் வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.

    கிருஷ்ணகிரி:

    தொடர் மழை எதிரொலியாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை நிரம்பியது. இதனால் தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை நிரம்பியது விடுக்கப்பட்டுள்ளது.

    தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தும், அதிகரித்தும் காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து படிப்படியாக உயர்ந்துள்ளது.

    அதன்படி கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 645 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை வினாடிக்கு 1066 கன அடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 50.65 அடியாக உள்ளது. இதற்கு மேல் அணையில் நீர் தேக்க முடியாது என்பதால் அணைக்கு வரும் நீர் முழுவதும் பாசன கால்வாய்கள், மதகுகள் வழியாக திறந்துவிடப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் பெய்யும் மழை பொறுத்து நீர்வரத்து திறக்க அதிகரிக்கக்கூடும் என்பதால், தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு, நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நீர்வரத்து அதிகமாகும்பட்சத்தில் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கக்கூடும். இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்பும் ஆகிய 5 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் வசிக்கக்கூடிய மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பகலில் வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி அணையில் 60.20 மில்லி மீட்டரும், போச்சம்பள்ளி 36.20, கிருஷ்ணகிரி 26, பர்கூர் 14.20, நெடுங்கல் 7, ராயக்கோட்டை 5, தேன்கனிக்கோட்டை 5 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    Next Story
    ×