என் மலர்
நீங்கள் தேடியது "Thenpennai river"
- விவசாய நிலங்களில் தேங்கி நிற்கும் நீர் வடிகால் வாய்க்கால் மூலம் ஆறுகள் வழியாக கடலில் கலக்கிறது.
- நீர்வரத்து அதிகரிப்பால் கொமந்தான் மேடு தரைபாலத்தில் தண்ணீர் வழிந்து ஓடுகிறது.
பாகூர்:
தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கு வதற்கு முன்பாகவே கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கின்றது.
அதுபோல் விவசாய நிலங்களில் தேங்கி நிற்கும் நீர் வடிகால் வாய்க்கால் மூலம் ஆறுகள் வழியாக கடலில் கலக்கிறது.
இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளான திருவண்ணா மலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து 3000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
அதன்படி தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கக்கூடும் என்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை பாகூர் வருவாய் துறை, மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், கரையோரம் அமைந்துள்ள புதுவை கிராமங்களான மணமேடு, சோரியாங் குப்பம், ஆராய்ச்சிக்குப்பம் கொமந்தான்மேடு ஆகிய கரையோர கிராமங்களுக்கு நேரில் சென்று ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் நீர்வரத்து அதிகரிப்பால் கொமந்தான் மேடு தரைபாலத்தில் தண்ணீர் வழிந்து ஓடுகிறது. அப்பகுதியில் தரைப்பாலம் சீரமைக்கும் பணி நடைபெறுவதால் அருகே தற்காலிகமாக அமைக்கப்பட்ட மண் சாலையும் மூழ்கியது.
இதனால் அவ்வழியாக போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. அதேபோல் சித்தேரி அணைக்கட்டிலும் நீர்வரத்து அதிகரிப்பால் அந்த வழியும் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், விவசாயிகள் பல கிலோமீட்டர் தூரம் கடந்து சென்று வருகின்றனர்.
- சாத்தனூர் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- 119 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 116.75 அடியாக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
விழுப்புரம் மாவட்டம் சாத்தனூர் அணையின் நீர்வரத்து பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 119 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் தற்போது 116.75 அடியாக உயர்ந்துள்ளது.
இதனால் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும்என்று சாத்தனூர் உபகோட்டம் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் உள்ள புதுச்சேரி கிராமங்களான மணமேடு, குருவிநத்தம், பரிக்கல்பட்டு, சோரியங்குப்பம், கொமந்தான்மேடு, உச்சிமேடு ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு புதுச்சேரி தாசில்தார் கோபாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் வருவாய்த்துறை ஊழியர்கள் மோட்டார் சைக்கிள்களில் சென்று ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.
கால்நடைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்குமாறு அவர்கள் அறிவுறுத்தினர்.
- தென்பெண்ணை ஆற்றில் சீறிப்பாய்ந்த வெள்ளம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீப்பத்துறை வழியாக சாத்தனூர் அணையில் பாய்ந்து வருகிறது.
- தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆற்றின் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
திருவண்ணாமலை:
கர்நாடகா மாநிலம், மைசூரு மாண்டியா உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து 2 நாட்களாக விடிய விடிய மழை பெய்தது. தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
மேலும் ஓசூர் பகுதியிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.
நேற்று அணைக்கு வினாடிக்கு 1275 கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. இதனால் கிருஷ்ணகிரி அணைக்கு வெள்ளம் சீறிப் பாய்ந்து வருகிறது.
அணையின் பாதுகாப்பு கருதி நேற்று வினாடிக்கு 1449 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணையில் இருந்து பாசன கால்வாய்கள், ஆற்றிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அணையில் இருந்து ரசாயன நுரையுடன் தண்ணீர் வெளியேறியது. இதனால் கடும் துர்நாற்றம் வீசியது. இந்த நுரை அந்த பகுதியில் உள்ள தரைப்பாலம் தெரியாத அளவுக்கு மூடியது. இதனால் அப்பகுதி வழியாக கிராம பகுதிக்கு செல்லும் மக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து மேலும் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.
இதனால் கிருஷ்ணகிரி அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 51 அடியாக எட்டி உள்ளது.
இன்று காலை அணையில் இருந்து பாசன கால்வாய்கள், ஆற்றிலும் வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அணையில் இருந்து சீறிப்பாய்ந்த வெள்ளம் அங்குள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. அணைக்கு செல்லும் பாதை தடுப்பு வைத்து அடைக்கப்பட்டது.
இதனால் பூங்கா, அணையை சுற்றிப் பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
தென்பெண்ணை ஆற்றில் சீறிப்பாய்ந்த வெள்ளம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீப்பத்துறை வழியாக சாத்தனூர் அணையில் பாய்ந்து வருகிறது.
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கிருஷ்ணகிரி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் முழுவதும் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது.
இதன் காரணமாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆற்றின் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி அணையில் இருந்து சாத்தனூர் அணை வரை உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரத்தில் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.
பெரியமுத்தூர், திம்மாபுரம், சுண்டேகுப்பம், காவேரிப்பட்டிணம், கால்வேஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுட்டஹள்ளி, தளிஹள்ளி திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீப்பத்துறை பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
119 கனஅடி கொண்ட சாத்தனூர் அணையில் தற்போது 87 அடி தண்ணீர் உள்ளது. இதனால் இந்த அணையில் இருந்து நீர் திறக்கவில்லை.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மக்கள் அச்சப்பட தேவை இல்லை என தெரிவித்துள்ளனர்.
- அதிகப்படியான நிலத்தடி நீர் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
- 12,202 விவசாய பாசனத்திற்கு தரப்படும் நீரின் மூலம் 27,212 எக்டர்நிலம் பாசன வசதி பெறுவதால் 2.50 லட்சம் மக்கள் பயனடைவர்.
புதுச்சேரி:
புதுடெல்லியில் 37-வது தேசிய நதிநீர் இணைப்பு நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் நடந்தது. அதில் புதுச்சேரி மாநிலம் சார்பில் பங்கேற்ற பொதுப் பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசியதாவது:-
கோதாவரி காவிரி நதி நீர் இணைப்பின் முதல் சாத்திய கூறின் அறிக்கையின் படி, 7,000 மில்லியன் கனமீட்டர் நீர் கிடைக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது மறுமதிப் பீட்டின் அடிப்படையில் கிருஷ்ணா நதியின் பேடி வரதா இணைப்பையும் சேர்த்து 4,713 மில்லியன் கனமீட்டர் நீர் கிடைக்கும் என கணக்கிடப்பட்டு, அதில் புதுச்சேரிக்கு குடிநீர் மற்றும் பொது பயன்பாட்டிற்கு 27 மில்லியன் கனமீட்டர், தொழில் துறைக்கு 35 மில்லியன் கனமீட்டர் என, 62 மில்லியன் கனமீட்டர், அதாவது 2.20 ஆயிரம் மில்லியன் கன அடி நீர் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் விவசாயத் திற்கு நீர் பங்களிப்பு தரப்படவில்லை. புதுச்சேரி குடிநீர் பொதுப்பயன்பாடு, தொழிற்துறை மற்றும் விவசாயம் அனைத்திற்கும் நிலத்தடி நீரையே நம்பியுள்ளது. அதிகப்படியான நிலத்தடி நீர் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
எனவே புதுச்சேரி விவசாயிகளை பாதுகாக்க தேசிய நீர் வளர்ச்சி நிறுவனம் விவசாய பாசனத்திற்காக புதுச்சேரி பிரதேசத்திற்கு மேலும் 75 மில்லியன் கன மீட்டர் அதாவது 2.75 டி.எம்.சி., நீர் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சங்கராபரணி-தென்பெண்ணை ஆறுகளை இணைப்பதன் மூலம் புதுச்சேரியில் உள்ள 25 படுகையணை மற்றும் 56 ஏரிகளில் 47 மில்லியன் கன மீட்டர் நீரை தேக்கி வைக்க முடியும்.
12,202 விவசாய பாசனத்திற்கு தரப்படும் நீரின் மூலம் 27,212 எக்டர்நிலம் பாசன வசதி பெறுவதால் 2.50 லட்சம் மக்கள் பயனடைவர்.
எனவே புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சங்கராபரணி-தென்பெண்ணை ஆறுகளை இணைக்கும் திட்டத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கோதாவரி-காவிரி நதி நீர் இணைப்பின் மூலம் புதுச்சேரி மாநிலம் அதற்கு உண்டான நீர் பங்கீட்டளவை மற்ற மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிப்பது போல் அளிக்க வேண்டும்.
இந்த நீர் பங்களிப்பு காவிரி நீர் ஆணையத்தால் அளிக்கப்பட்டுள்ள நீரின் அளவான 7 ஆயிரம் மில்லியன் கனஅடியுடன் கூடுதலாக தரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்வதால் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
- அணையில் நீர்வரத்து அதிகரிப்பால், மொத்த உயரமான 119 அடியில் முழுவதும் நிரம்பியது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்வதால் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, சாத்தனூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பால், மொத்த உயரமான 119 அடியில் முழுவதும் நிரம்பியது.
இதனால் அணையில் இருந்து சுமார் 1.68 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால், தென்பண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் வெள்ள சேதம் ஏற்பட்டது.
- திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.
வேங்கிகால்:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணைக்கு, தென்பெண்ணை ஆற்றில் இருந்து நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று 1 லட்சத்து 68 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இதனால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் வெள்ள சேதம் ஏற்பட்டது. இன்று காலை சாத்தனூர் அணைக்கு 36 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அணையில் இருந்து நீர் திறப்பு 36 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று காலை ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா சோளிங்கர் உள்ளிட்ட பகுதிகளில் பரலான மழை பெய்தது.
திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், பள்ளிகொண்டா, காட்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை லேசான சாரல் மழை பெய்தது.
- அணை நீரில் நுரை பொங்கி குவியல், குவியலாக துர்நாற்றத்துடன் தென்பெண்ணை ஆற்றில் வெளியேறியவாறு உள்ளது.
- ரசாயன நுரைகள் காற்றில் பறந்து அருகிலுள்ள விவசாய நிலங்களில் விளைபயிர்கள் மீது படிந்து வருகின்றன.
ஓசூர்:
கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பலமாகவும், பரவலாகவும் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
நேற்று முன்தினம் அணைக்கு விநாடிக்கு 600 கன அடிநீர் வந்தது. 600 கன அடி நீரும், ஆற்றில் வெளியேற்றப்பட்டது. நேற்று, விநாடிக்கு 680 கன அடிநீர் வந்தது. அதே அளவு நீர், தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில், கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகள் மற்றும் குடியிருப்பு பகுதி கழிவுகள் மழை நீரில் கலந்து, தொடர்ச்சியாக கெலவரப்பள்ளி அணைக்கு வருவதால், அணை நீரில் நுரை பொங்கி குவியல், குவியலாக துர்நாற்றத்துடன் தென்பெண்ணை ஆற்றில் வெளியேறியவாறு உள்ளது. மேலும் இந்த ரசாயன நுரைகள் காற்றில் பறந்து அருகிலுள்ள விவசாய நிலங்களில் விளைபயிர்கள் மீது படிந்து வருகின்றன.
இதனால், விவசாயிகளும், கிராம மக்களும் வேதனை அடைந்துள்ளனர்.
- இதுவரை 327 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- சுடுமண் புகைப்பிடிப்பான், அகல்விளக்கு ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டம் கீழடி பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. 2600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சங்கத் தமிழ் மக்களின் நாகரீக வாழ்வை எடுத்துரைக்கும் வண்ணம் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
இதுவரை 40-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு பழந்தமிழ் மக்களின் வாழ்வு வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. கீழடிப் பகுதி அகழாய்வுகளில் சங்ககால மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் வகையிலான நிறைய நமக்கு தரவுகள் கிடைத்திருக்கின்றன.
இதனைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை- விஜயகரிசல் குளத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில், பழமையான அணிகலன் தயாரிப்பு மற்றும் விலங்குகளை வேட்டையாட பயன்படும் கருவிகள் தயாரிப்பின் மூலப்பொருட்களான ஜாஸ்பர், சார்ட் கற்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன.
பல ஆயிரம் ஆண்டுகாலமாகவே தமிழர் நாகரிகம் பொன்னும், பொருளும், அறிவும் நிறைந்த செழிப்பான மூத்த நாகரிகமாக இருந்தது என்பதற்கு மேலும் ஒரு சான்றாக வெம்பக்கோட்டை அகழாய்வில் 0.15 கிராம் எடையுள்ள தங்கத்தினால் ஆன மணி மற்றும் சுடு மண்ணால் ஆன பதக்கம், கழுத்தில் அணியும் நீல நிற கண்ணாடி மணி ஆகியவை கண்டெடுக்கப்பட்டது.
மேலும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் சென்னானூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் அகழாய்வில் இதுவரை 327 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள பகண்டை தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதியில் நடந்துவரும் மேற்புற கள ஆய்வில் பழங்கால சுடுமண் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் பழங்கால மக்கள் பயன்படுத்திய சுடுமண் புகைப்பிடிப்பான், அகல்விளக்கு ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- இந்த ஆண்டு தென் பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தினால் ஆங்காங்கே தண்ணீர் இருந்து வருகிறது.
- பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதித்த நிலையில் போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.
கடலூர்:
பொங்கல் பண்டிகை கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட்டு வந்த நிலையில் இன்று மாவட்ட முழுவதும் ஆற்று திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இந்த ஆண்டு தென் பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தினால் ஆங்காங்கே தண்ணீர் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடலூர், நெல்லிக்குப்பம் தென்பெண்ணையாற்றில் ஆற்றுத் திருவிழா இன்று நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலையிலேயே கடலூர், வண்டிப்பாளையம், புருகீஸ்பேட்டை, முதுநகர், பச்சையாங்குப்பம், பாதிரிக்குப்பம், மஞ்சக்குப்பம், செம்மண்டலம், சாவடி, புதுப்பாளையம், வன்னியர்பாளையம், தேவனாம்பட்டினம், ஆனைக்குப்பம், குண்டுஉப்பலவாடி, தாழங்குடா, உச்சிமேடு, நாணமேடு உள்ளிட்ட ஏராளமான கிராம பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சாமிகள் அலங்கரிக்கப்பட்டு பெண்ணையாற்றிற்கு கொண்டு வரப்பட்டன.
மஞ்சக்குப்பம் நேதாஜி சாலை பகுதியில் பக்தர்கள் சாலையோரங்களில் நின்று சாமிகளை வழிபட்டனர். சாமிகளுக்கு பெண்ணையாற்றில் புனித தீர்த்தவாரி செய்து ஆற்றங்கரைகளில் வரிசையாக நிறுத்தப்பட்டன.
கடலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் ஆற்றுத் திருவிழாவில் கலந்து கொண்டு வழிபட்டனர். இதில் ஒரு சிலர் ஆற்றில் புனித நீராடி சாமி கும்பிட்டனர். ஆற்றுத் திருவிழாவில் மட்டுமே கிடைக்கும் சுருளி கிழங்கினை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
ஆற்று திருவிழாவின்போது பெரும்பாலும் பள்ளி கல்லூரிகள் செயல்பட்டு வரும். ஆனால் இந்த ஆண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இது மட்டுமின்றி ஆறுகளில் தண்ணீர் உள்ளதால் அந்த பகுதிகளில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதித்த நிலையில் போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.
இந்த ஆற்றுத் திருவிழாவில் வெளிநாட்டினரும் கலந்து கொண்டனர்.
ஆற்று திருவிழாவில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பல்வேறு மாவட்டங்களில பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 18-ந் தேதி கடலூர்-விழுப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டியது.
இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை, கெடிலம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இரு கரைகளையும் தொட்டபடி மழை வெள்ளம் சென்றது. கடந்த 19-ந் தேதி தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 1.25 லட்சம் கனஅடி நீர் சென்றது.
மாவட்ட எல்லையான அரசூர் முதல் வடிநில பகுதியான தாழங்குடா வரை ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள குடியிருப்புகள் மற்றும் வயல்வெளியில் வெள்ளம் புகுந்தது.
இதேபோல் கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி, நெல்லிக்குப்பம், அண்ணாகிராமம், குண்டுஉப்பளவாடி, தாழங்குடா, பெரியகங்கனாங்குப்பம், உச்சிமேடு உள்பட 60-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது.
கடலூர் பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட நகரங்களையும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளிலும் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களை மீட்பு குழுவினர் மீட்டு அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர்.
இந்த நிலையில் கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீர் வடிய தொடங்கியது. இந்த நிலையில் நேற்று இரவு திடீரென கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் மழைநீர் வடிந்து செல்லாமல் மீண்டும் குடியிருப்புகளை சூழ்ந்தது.
அதன் பின்னர் மழை இல்லாததால் தாழ்வான பகுதிகளில் தேங்கிநின்ற மழை வெள்ளம் தற்போது வடிய தொடங்கி உள்ளது. இதையடுத்து முகாம்களில் தங்கியிருந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்ப தொடங்கி உள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் மழை குறைந்துள்ளதால் ஆறுகளில் செல்லும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. தற்போது தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 75 ஆயிரம் கன அடி நீரும், கெடிலம் ஆற்றில் 45 ஆயிரம் கனஅடி நீரும் செல்வதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைய தொடங்கியதாலும், கடலூர் பகுதியில் தற்போது மழை பெய்யாததாலும், குடியிருப்புகளில் தேங்கியுள்ள மழைநீர் வடிய தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புதுவை மற்றும் தமிழக பகுதியில் கனமழை பெய்தது.
புதுவையில் ஒரே நாளில் 19 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. இதனால் நகரமே வெள்ளக்காடாக காட்சியளித்தது. வீடுகளில் புகுந்த மழை நீரை வடிய வைக்கும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை நிரம்பியதால் அதில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது.
இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது.
ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக பாகூர் அருகே உள்ள சித்தேரி அணை நிரம்பியது. தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் ஏரி, வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டு அதன் நீரும் ஊருக்குள் புகுந்த வண்ணம் உள்ளது.
நேற்று பாகூர் அருகே உள்ள கிராமப்புறங்களில் தான் வெள்ளம் புகுந்து இருந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக ஆற்றில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாகூர் நகருக்குள்ளும் வெள்ளம் புகுந்தது.
பாகூரில் மாட வீதி தவிர மற்ற பகுதிகளான பங்களா வீதி, புதிய காமராஜ் நகர், குட்டை, பாகூர்பேட், மகா கணபதி நகர், கூட்டுறவு குடியிருப்பு நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் பாகூர் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
மக்கள் வெளியில் வர முடியாமலும், தங்களது உடமைகளை எடுத்து செல்ல முடியாமலும் தவித்தனர். பெரும்பாலான மக்கள் வீட்டின் மொட்டை மாடியில் தஞ்சம் புகுந்தனர். ஆனாலும் தங்களது உடமைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விடுமோ? என்ற அச்சத்தில் அவர்கள் விடிய விடிய தூங்காமல் கண் விழித்தபடி இருந்தனர்.
பாகூர் புதிய நகர் பகுதியில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் மக்கள் அங்கிருந்து வெளியேறினர்.
வெள்ளம் காரணமாக பாகூர் பகுதியில் 15 குடும்பத்தினர் தவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். பாகூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள கன்னியக்கோவில் பகுதியிலும் வெள்ளம் புகுந்தது.
மீட்பு பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். பேரிடர் மீட்பு குழுவினரும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தென்பெண்ணையாற்றில் மேலும் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படும் என்ற தகவலால் பாகூர் பகுதி பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதுதவிர வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானதால் கடலூர் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில் மழை பெய்தது.
இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கடலூர் நகராட்சிக்குட்பட்ட ஆல்பேட்டை அருகே தென்பெண்ணையாறு கடலில் கலக்குகிறது.
இந்த ஆறுக்கு கர்நாடக மாநிலத்தில் திறக்கப்படும் உபரிநீர், கிருஷ்ணகிரி அணைக்கு வந்து சாத்தனூர் அணையில் சேருகிறது. அங்கிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரால் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
தற்போது கனமழை பெய்ததால் தென்பெண்ணை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாத்தனூர் அணையில் இருந்து 50 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.
இது தவிர கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையாலும், காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் மூலம் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
முதல்கட்டமாக தென்பெண்ணை ஆற்றில் 75 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. பின்பு அது படிப்படியாக நேற்று காலை 1.25 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. இந்த தண்ணீர் வரத்து நெல்லிக்குப்பம் அருகே உள்ள சொர்ணாவூர் தடுப்பணை, விசுவநாதபுரத்தில் உள்ள தடுப்பணை ஆகியவற்றின் மூலம் கணக்கெடுக்கப்படுவதாக கடலூர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்காரணமாக தென்பெண்ணை ஆற்றின் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. ஆற்றின் கீழ்மட்டத்தில் இருந்து 25 அடி உயரத்துக்கு தண்ணீர் செல்கிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து 75 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
இந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் புதிய கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சுங்கச்சாவடி சாலை, மேல்பட்டாம்பாக்கம் சாலை, அழகியநத்தம் சாலை தண்ணீரில் மூழ்கியது.
இன்று காலையும் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்தது. இதையடுத்து கடலூர் மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதியில் உள்ள குண்டுசாலை, பெரியகங்கணாங்குப்பம், செம்மண்டலம், குண்டு உப்பலவாடி, கண்டக்காடு, தாழங்குடா, நாணல்மேடு, சுனாமி நகர், எஸ்.என்.சாவடி உள்ளிட்ட 50 இடங்களில் ஆற்று வெள்ள நீர் புகுந்தது.
இந்த தண்ணீர் சுமார் 10 ஆயிரம் வீடுகளை சூழ்ந்துள்ளது. இதனால் அந்த பகுதி தீவுபோல காணப்பட்டது. அங்குள்ள வீடுகளில் முதல் தளம் வரை தண்ணீர் தேங்கி உள்ளது. எனவே அங்குள்ளவர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.

இதனை தொடர்ந்து மீட்பு படையினர் விரைந்து சென்றனர். சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்குரிய ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
கடலூர் அருகே பெரிய கங்கணாங்குப்பம் பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.






