search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "manjalaru dam"

    • 53 அடியை எட்டுவதால் 2-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்படும் என அதிகாரிகள் என தெரிவித்தனர்.
    • முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 119.40 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் மஞ்சளாறு அணை அமைந்துள்ளது. இதன்மூலம் தேவதானப்பட்டி, வத்தலக்குண்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.

    கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் வறண்டு கிடந்த மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 51 அடியை எட்டியதும் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வத்தலக்குண்டு குன்னுவாரன்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மஞ்சளாறு கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 52.20 அடியாக உள்ளது. அணைக்கு 88 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை. விரைவில் 53 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது 2-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்படும் என அதிகாரிகள் என தெரிவித்தனர்.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 119.40 அடியாக உள்ளது. 719 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 400 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 48.52 அடியாக உள்ளது. 333 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 85.60 அடியாக உள்ளது. 22 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 5.4, தேக்கடி 2.8 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இருந்த போதும் மாவட்டத்தில் அணைகள் முழு கொள்ளளவிலேயே நீடிக்கிறது.
    • 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இன்று காலை நிலவரப்படி 70.41 அடி நீர்மட்டம் உள்ளது.

    கூடலூர்:

    கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில் பெய்த தொடர்மழையால் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பின. மேலும் பெரும்பாலான குளம், கண்மாய் உள்பட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.

    வைகை, முல்லை பெரியாறு, கொட்டக்குடி ஆறு, வராகநதி ஆகியவற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இருந்த போதும் மாவட்டத்தில் அணைகள் முழு கொள்ளளவிலேயே நீடிக்கிறது.

    71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இன்று காலை நிலவரப்படி 70.41 அடி நீர்மட்டம் உள்ளது. 2031 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2069 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    57 அடி உயரம் கொண்ட மஞ்சளாறு அணையில் 55 அடிவரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. தொடர் மழை காரணமாக 40 நாட்களுக்கும் மேலாக அணையின் நீர்மட்டம் 55 அடியிலேயே நீடித்து வருகிறது. 92 கனஅடி நீர் வருகிற நிலையில் அது அப்படியே உபரியாக திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.31 அடியாக உள்ளது. 7 கனஅடி நீர் வருகிற நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.70 அடியாக உள்ளது. 1117 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து 1867 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    ×