என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kallazhagar"

    • கள்ளழகரை வரவேற்ற பக்தர்கள், 'கோவிந்தா கோவிந்தா' என பக்தி முழக்கத்துடன் வழிபாடு செய்தனர்.
    • காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் 108 வைணவ தலங்களில் ஒன்றான அழகர்கோவில் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா உலக புகழ் பெற்றதாகும். மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 8-ந்தேதியும், தேரோட்டம் 9-ந்தேதியும் நடைபெற்றது.

    திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என்று போற்றி அழைக்கப்படுவதும், 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றானதுமான மதுரை மாவட்டம் அழகர் கோவில் மலையடிவாரத்தில் உள்ள கள்ளழகர் கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்திற்காக சுந்தரராஜ பெருமாள் தங்கப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்தில் 18-ம் படி கருப்பண சுவாமி உத்தரவு பெற்று அழகர்கோவிலில் இருந்து மதுரைக்கு புறப்பட்டார்.

    இந்நிலையில் இன்று காலை 5.45 மணி முதல் 6.05 மணிக்குள் தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வந்த கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். தண்ணீரை பீய்ச்சி அடித்து கள்ளழகரை வரவேற்ற பக்தர்கள், 'கோவிந்தா கோவிந்தா' என பக்தி முழக்கத்துடன் வழிபாடு செய்தனர். இதனைத்தொடர்ந்து காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

    வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவத்தை தொடர்ந்து ராமராயர் மண்டகபடியில் கள்ளழகரை குளிர்விக்கும் தீர்த்தவாரி நடக்கிறது. 13-ந்தேதி காலையில் சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் அழகர் காட்சி தருகிறார். தொடர்ந்து அன்று மாலையில் கருட வாகனத் தில் பிரசன்னமாகி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    அதனைத் தொடர்ந்து இரவு முதல் மறுநாள் காலை வரை விடிய, விடிய தசாவதார காட்சி நடைபெறும். 14-ந்தேதி மதியம் ராஜாங்க திருக்கோலத்தில் அழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அன்று இரவு பூப்பல்லக்கு விழா நடைபெறும். 15-ந் தேதி மதுரையில் இருந்து கள்ளழகர் மலைக்கு திரும்புகிறார். 17-ந்தேதி உற்சவ சாற்று முறையுடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.

    அழகர்கோவில் புறப்பாடு முதல் மீண்டும் கோவிலுக்கு திரும்பும் வரை சுமார் 494 மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளுகிறார். 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும், சி.சி.டி.வி. கேமராக்கள் அமைத்தும் பாதுகாப்பு பணிகளை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • மாலை 4.30 மணியளவில் அவுட்போஸ்ட் மாரியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
    • கள்ளழகர் இறங்கும் வைபவத்திற்காக மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் 108 வைணவ தலங்களில் ஒன்றான அழகர்கோவில் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா உலக புகழ் பெற்றதாகும். மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 8-ந்தேதியும், தேரோட்டம் 9-ந்தேதியும் நடைபெற்றது.

    தீர்த்த திருவிழா, தேவேந்திர பூஜை, வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி- அம்மன் எழுந்தருளல், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி-பவளக்கனி வாய் பெருமாள் 16 கால் மண்டபத்தில் விடைபெறும் நிகழ்வு உள்ளிட்டவைகளுடன் சித்திரை திருவிழா நேற்று முன்தினம் முடிந்தது.

    இதற்கிடையே திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என்று போற்றி அழைக்கப்படுவதும், 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றானதுமான மதுரை மாவட்டம் அழகர் கோவில் மலையடிவாரத்தில் உள்ள கள்ளழகர் கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அங்கு 2 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின் 3-ம் நாளான நேற்று காலை திருவீதி உலா நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நாளை (12-ந்தேதி) நடைபெறுகிறது. இதற்காக சுந்தரராஜ பெருமாள் தங்கப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்தில் 18-ம் படி கருப்பண சுவாமி உத்தரவு பெற்று நேற்று மாலை அழகர்கோவிலில் இருந்து மதுரைக்கு புறப்பட்டார்.

    முன்னதாக மாலை 6 மணியளவில் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளிய கள்ளழகருக்கு நூபுர கங்கை தீர்த்த அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்பு கண்டாங்கி பட்டு உடுத்தி, நெற்றிப்பட்டை, கரங்களில் வளைத்தடி, நேரிக்கம்பு, பரிவாரத்துடன் மேளதாளங்கள் முழங்க, அதிர்வேட்டுகள் ஒலிக்க கள்ளழகர் தங்கப் பல்லக்கில் மதுரையை நோக்கி புறப்பாடாகினார்.

    விரதம் இருந்து வரும் பக்தர்கள் ஆடியபடி அழகருடன் வந்தனர். வழிநெடுகிலும் உள்ள பல்வேறு மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பொய்கை கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, ஜமீன்தார் மண்டபம் உள்ளிட்ட இடங்களில் கள்ளழகர் எழுந்தருளினார். தொடர்ந்து கள்ளழகர் சுந்தர்ராஜன்பட்டி மறவர் மண்டபத்தில் எழுந்தருளினார். பின்பு கடச்சனேந்தல் சென்ற கள்ளழகர் அங்கு அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரை பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.



    அங்கிருந்து புறப்பட்டு மூன்று மாவடிக்கு இன்று காலை 5.30 மணியளவில் வந்து சேர்ந்தார். அங்கு கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நடந்தது. அதில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கானோர் மூன்று மாவடியில் திரண்டிருந்தனர். அவர்கள் கண்டாங்கி பட்டு உடுத்தி தங்கப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகருக்கு எதிர்சேவை அளித்தனர். அழகர், கருப்பணசாமி, அனுமார் வேடமணிந்த பக்தர்கள் ஆடிப்பாடியும், தீப்பந்தம் ஏந்தியும், பெண்கள் கையில் சர்க்கரை தீபம் ஏந்தியபடியும் கள்ளழகரை வரவேற்றனர். அப்போது கோவிந்தா கோவிந்தா என்று முழக்கமிட்டு பக்தர்கள் வழிபட்டனர்.

    பின்பு அங்கிருந்து புறப்பட்ட கள்ளழகர் கே.புதூர் மாரியம்மன் கோவிலுக்கு வந்தடைந்தார். அங்கும் திரளான பக்தர்கள் திரண்டு நின்று கள்ளழகருக்கு எதிர் சேவை அளித்தனர். இதைத் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு ரிசர்வ் லைன் மாரியம்மன் கோவிலுக்கு கள்ளழகர் சென்றடைகிறார்.

    பின்பு அங்கிருந்து புறப்படும் கள்ளழகர் மாலை 4.30 மணியளவில் அவுட்போஸ்ட் மாரியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். மாலை 4.50 மணி முதல் 5.30 மணி வரை அம்பலக்காரர் மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி தரும் கள்ளழகர் அங்கிருந்து புறப்பட்டு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு செல்கிறார்.

    அங்கு அவருக்கு இரவு 8.30 மணி முதல் 11.30 மணி வரை திருமஞ்சனம் நடக்கிறது. நள்ளிரவில் அங்கு தங்ககுதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அதன் பிறகு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்படும் ஆண்டாள் சூடிகளைந்த மாலை கள்ளழகருக்கு அணிவிக்கப்படுகிறது.

    அதனை ஏற்று ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி கள்ளழகர் காட்சியளிக்கிறார். அதனைத் தொடர்ந்து தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலில் இருந்து தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு மதுரை வைகை ஆற்றுக்கு வருகிறார். அங்கு அதிகாலை 5.45 முதல் 6.05 மணிக்குள் கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் வீற்றிருந்து வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள்.

    கள்ளழகர் இறங்கும் வைபவத்திற்காக மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி மதுரை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவத்தை தொடர்ந்து ராமராயர் மண்டகபடியில் கள்ளழகரை குளிர்விக்கும் தீர்த்தவாரி நடக்கிறது. 13-ந்தேதி காலையில் சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் அழகர் காட்சி தருகிறார். தொடர்ந்து அன்று மாலையில் கருட வாகனத் தில் பிரசன்னமாகி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    அதனைத் தொடர்ந்து இரவு முதல் மறுநாள் காலை வரை விடிய, விடிய தசாவதார காட்சி நடைபெறும். 14-ந்தேதி மதியம் ராஜாங்க திருக்கோலத்தில் அழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அன்று இரவு பூப்பல்லக்கு விழா நடைபெறும். 15-ந் தேதி மதுரையில் இருந்து கள்ளழகர் மலைக்கு திரும்புகிறார். 17-ந்தேதி உற்சவ சாற்று முறையுடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.

    அழகர்கோவில் புறப்பாடு முதல் மீண்டும் கோவிலுக்கு திரும்பும் வரை சுமார் 494 மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளுகிறார். 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும், சி.சி.டி.வி. கேமராக்கள் அமைத்தும் பாதுகாப்பு பணிகளை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் போலீசார் ஈடுபடவுள்ளனர்.

    • பத்தரை மாற்று தங்கம் என்பது பத்து பங்கு தங்கம், அரை பங்கு செம்பு கலந்தது.
    • அபரஞ்சி தங்கத்தை பற்றி தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    ராமாயண பாடல்களை இயற்றியபோது, கம்பர் ஓர் இடத்தில் அதிக தயக்கம் கொண்டார் என கூறுவது உண்டு.

    ராமர் பிறந்ததும் அவரது முகத்தின் பிரகாசத்தை எதனோடு ஒப்பிடுவது என்று கம்பருக்கு தயக்கம் ஏற்பட்டதாம். அதாவது, பிரகாசமான எதனோடு ஒப்பிட்டாலும், அது ராமரின் முக அழகுக்கு ஈடாகாது என்பதால் கம்பர் தயங்கியதாக இலக்கிய ஆர்வலர்கள் கூறுவது உண்டு.

    கள்ளழகரின் சிலையை பொன்னால் வடிவமைக்க நினைத்தவர்களுக்கும் அதுபோன்ற தயக்கம் ஏற்பட்டது போலும். எத்தகைய பொன்னாக இருந்தாலும், அது அழகருக்கு ஈடாகாது என எண்ணி உள்ளனர்.

    பத்தரை மாற்று தங்கம், பத்து மாற்று தங்கம் என்றெல்லாம் சொல்லப்படுவது உண்டு.

    பத்தரை மாற்று தங்கம் என்பது பத்து பங்கு தங்கம், அரை பங்கு செம்பு கலந்தது. பத்துமாற்று தங்கம் என்பது செம்பு கலக்காத சொக்கத்தங்கம். ஆனால், அதைவிடவும் கூடுதல் சிறப்பு கொண்ட தங்கத்தில் அழகரின் விக்ரகத்தை உருவாக்க வேண்டும் என பழங்காலத்திலேயே முடிவு செய்து அலசி ஆராய்ந்துள்ளனர்.

    அப்படி தேடியபோது அவர்களுக்கு அபரஞ்சி தங்கம் பற்றி தெரியவந்துள்ளது. அகராதியில் அபரஞ்சி தங்கம் என்றால் என்ன என்று நாம் தேடினால் 'புடமிட்ட பொன்' என பொருள் கிடைக்கிறது.

    அதாவது, சொக்கத்தங்கத்தைவிட இன்னும் தூய்மை கொண்டதாக சொல்கிறார்கள்.

    அழகர்கோவிலின் மூலவர் சுந்தரராஜ பெருமாள். உற்சவர் கள்ளழகர். இதில் அழகர் என்றால் அழகில் சொக்க வைப்பவர். அப்படிப்பட்ட அழகரை கண்டதும் பக்தர்களை தானாக ஈர்க்கும் வகையில் அவரது சிலை அமைய வேண்டும் என்பதற்காக அபரஞ்சி தங்கத்தை பயன்படுத்தி மிகவும் கண்ணும் கருத்துமாக இந்த சிலையை உருவாக்கி இருக்கிறார்கள். அபரஞ்சி தங்கத்தை பற்றி தமிழ் இலக்கியத்திலும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    திருக்குற்றாலக் குறவஞ்சி, அபரஞ்சி தங்கத்தை குறவஞ்சியின் மேனிக்கு உவமையாக பாடியுள்ளது.

    "வஞ்சி எழில்அபரஞ்சி வரிவிழி நஞ்சி". -இதுதான் அந்த பாடல்வரி.

    இதற்கு உரை எழுதிய தமிழ் அறிஞர்கள், அபரஞ்சி என்பதை வார்த்துவிட்ட பொன் என்றும், அத்தகையை மேனி பொலிவை உடையவள் குறவஞ்சி எனவும் கூறுகிறார்கள்.

    அபரஞ்சி தங்கத்தால் செய்த 2 சிலைகள்தான் உள்ளதாக அழகர்கோவில் பட்டர்கள் கூறுகிறார்கள்.

    அதில் ஒன்று கள்ளழகர் சிலை என்றும், மற்றொன்று திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி கோவிலில் உள்ள சிலை எனவும் தெரிவித்தனர்.

    மேலும், அழகர் விக்ரகத்துக்கு அழகர் மலைமேல் உள்ள நூபுர கங்கை நீரால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. பிற நீரால் அபிஷேகம் செய்தால் சிலை கருத்து விடக்கூடும் என்றும் தெரிவித்தனர்.

    • இந்த ஆண்டுக்கான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இந்த மாத இறுதியில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • 17-ந்தேதி உற்சவ சாற்று முறையுடன் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

    மதுரை:

    திருவிழாக்களின் நகரமான மதுரை மாநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் வருடத்தின் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறுவது சிறப்புக்குறியதாகும்.

    இதில் சித்திரை மாதத்தில் முத்திரை பதிக்கும் நிகழ்வாக நடக்கும் மீனாட்சி அம்மன், கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், அதனை தொடர்ந்து வைகை ஆற்றில் அழகர் எழுந்தருளும் நிகழ்வு என நகரமே 2 வாரங்கள் விழாகோலம் பூண்டிருக்கும்

    இந்த ஆண்டுக்கான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இந்த மாத இறுதியில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    முன்னதாக கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா தொடக்கமாக வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் தல்லாக்குளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் சித்திரை திருவிழா கொட்டகை முகூர்த்த நிகழ்ச்சி மற்றும் ஆயிரம்பொன் சப்பரம் தலை அலங்காரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    பிற்பகல் 11 மணிக்கு மேல் வண்டியூர் வைகை ஆற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் கொட்டகை முகூர்த்த விழா நடைபெறுகிறது.

    அழகர்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா வருகிற மே மாதம் 8-ந்தேதி தொடங்குகிறது. 9-ந்தேதி சுந்தர்ராஜ பெருமாள் கோவில் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    10-ந்தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் சுந்தர்ராஜ பெருமாள் கள்ளழகர் வேடம் தரித்து மதுரைக்கு புறப்பாடாகிறார். 11-ந்தேதி மதுரை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 12-ந்தேதி காலை 5.45 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார். பின்னர் ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளும் கள்ளழகருக்கு தண்ணீர் பீய்ச்சுதல் நிகழ்ச்சி நடைபெறும்.

    தொடர்ந்து அண்ணாநகர் வழியாக வண்டியூர் வீர ராகவ பெருமாள் கோவிலில் கள்ளழகர் இரவு எழுந்தருளுகிறார். 13-ந்தேதி (செவ்வாய்கிழமை) வீர ராகவ பெருமாள் கோவிலில் இருந்து சேஷ வாகனத்தில் புறப்பாடாகும் கள்ளழகர் கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார்.

    அங்கு மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுத்தல் நடக்கிறது. தொடர்ந்து இரவு முதல் விடிய விடிய தசாவதார கோலத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார். மறுநாள் (14-ந்தேதி) அதிகாலை மோகன அவதாரத்தில் காட்சியளிக்கும் கள்ளழகர் ராஜாங்க அலங்கராத்தில் அனந்தராயர் பல்லக்கில் சேதுபதி மண்டபத்திற்கு புறப்பாடாகிறார்.

    அன்று இரவு அங்கிருந்து பூப்பல்லக்கில் புறப்படும் கள்ளழகர் 15-ந்தேதி இருப்பிடம் நோக்கி செல்கிறார். 16-ந்தேதி காலை 10 மணிக்கு மேல் கோவிலுக்கு கள்ளழகர் வந்தடைகிறார். 17-ந்தேதி உற்சவ சாற்று முறையுடன் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

    மேற்கண்ட தகவலை கோவில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், துணை ஆணையம் யக்ஞ நாராயணன் தெரிவித்துள்ளனர்.

    • வேத மந்திரங்கள் முழங்க அழகருக்கு திருத்தைலம் சாத்தப்பட்டது.
    • தீர்த்தத்தில் அழகர் நீராடியது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

    மதுரையில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் நடக்கும் தைலக்காப்பு உற்சவம் தனி சிறப்புடையதாகும். இந்த ஆண்டுக்கான தைலக்காப்பு உற்சவம் கடந்த 3-ந் தேதி நவநீதகிருஷ்ணன் சன்னதி மண்டபத்தில் பரமபத நாதன் சேவையுடன் தொடங்கியது.

    முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலையில் கள்ளழகர்், அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் இருப்பிடத்தில் இருந்து மேளதாளம் முழங்க, யானை, பரிவாரங்களுடன் நூபுர கங்கை ராக்காயி அம்மன் கோவிலை நோக்கி சென்றார். வழியில் மலைப்பாதையில் அனுமன் தீர்த்தம், கருட தீர்த்த எல்லையில் அழகருக்கு தீபாராதனை நடந்தது.

    சுமார் 4 கி.மீ தூரம் உள்ள அழகர்மலைக்கு சென்றைடைந்தார். அங்கு நூபுரகங்கை மண்டபம் முழுவதும் வண்ண, வண்ண விளக்குகளாலும், பூமாலைகளாலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சகல மங்கலவாத்தியங்களுடன் கள்ளழகர், அங்குள்ள மண்டபத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளினார். அந்த மண்டபத்தில் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, அன்னாசி, திராட்சை, வாழை உள்ளிட்ட 9 வகையான பழ வகைகள் தோரணங்களாக அலங்கரிக்கப்பட்டு அழகரை வரவேற்றன.

    இதைதொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க அழகருக்கு திருத்தைலம் சாத்தப்பட்டது. அதன் பின்னர் கள்ளழகர் பெருமாள், நூபுர கங்கையில் திருமஞ்சனமாகி நீராடினார். காலத்திற்கும் வற்றாத தீர்த்தத்தில் அழகர் நீராடியது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

    அதன் பிறகு மேல்மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மீண்டும் பல்லக்கில் எழுந்தருளி அழகர்கோவிலுக்கு சென்று இருப்பிடம் சேர்ந்தார்.

    தைலக்காப்பு திருவிழாவின் அனைத்து நிகழ்ச்சிகளும் பக்தர்கள் வசதிக்காக எல்.இ.டி. திரை மூலம், நூபுர கங்கை அடிவாரம், முருகப்பெருமானின் 6-வது படைவீடான சோலைமலை கோவில், கள்ளழகர் கோவில் ஆகிய இடங்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டன.

    முன்னதாக ராக்காயி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தன. ஆண்டிற்கு ஒருமுறை அழகர், சோலைமலைக்கு சென்று திரும்புவது பெருமை படைத்ததாகும்.

    விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா நடந்தபோது, இந்த வருடமும் நூபுர கங்கை பகுதியில் மதியம் சாரல் மழை பெய்தது. இந்த தைலக்காப்பு திருவிழாவை காண வெளிமாவட்டங்கள், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து தரிசனம் செய்தனர்.

    ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை பணியாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அப்பன் திருப்பதி போலீசார் செய்திருந்தனர்.

    • இந்த நடைமுறை மார்கழி மாதம் 30 நாளும் பொருந்தும்.
    • நாளை முதல் ஜனவரி 14-ந்தேதி வரை இது நடைமுறையில் இருக்கும்.

    மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) மார்கழி மாதப்பிறப்பையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். பின்னர் பகல் 12 மணிக்கு நடை சாத்தப்படும். தொடர்ந்து மாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 7 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    மேலும் கோவிலின் உப கோவில்களான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவில், வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 11.30 மணிக்கு நடை சாத்தப்படும், பின்னர் மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    இந்த நடைமுறை மார்கழி மாதம் 30 நாளும் பொருந்தும். அதாவது நாளை முதல் அடுத்த மாதம் ஜனவரி 14-ந் தேதி வரை இது நடைமுறையில் இருக்கும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, மற்றும் கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்து உள்ளனர்.

    • ராப்பத்து விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • கள்ளழகர் வர்ணக்குடையுடன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் கடந்த மாதம் 23-ந் தேதி வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கியது. பகல்பத்து விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் என்னும் பரமபத வாசல் திறக்கப்பட்டது. இதைதொடர்ந்து ராப்பத்து விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

    ராப்பத்து விழாவின் 8-ம் நாள் விழாவில், வேடுபறி நிகழ்ச்சி கோவில் உட்பிரகாரத்தில் நடைபெற்றது. முன்னதாக கள்ளழகர் என்ற சுந்தரராஜபெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஆடி வீதி, கோவில் உட்பிரகாரம் வழியாக வந்து தொடர்ந்து சுவாமி, தீவட்டி பரிவாரங்கள் மற்றும் மேளதாளம் முழங்க வர்ணக்குடையுடன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    • இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை திருவிழா முக்கியமானதாகும்.
    • மே மாதம் 5-ந் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.

    மதுரையில் நடைபெறும் சித்திரை பெருந்திருவிழா உலக பிரசித்தி பெற்றது ஆகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாணம் முடிந்ததும், அதை தொடர்ந்து கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கும் வைபமும் ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள்.

    மேலும் 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றானது, மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை திருவிழா முக்கியமானதாகும். இந்த திருவிழாவின் முன்னோட்ட நிகழ்ச்சியாக சப்பர முகூர்த்த விழா நேற்று கள்ளழகர் கோவிலின் உப கோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலின் உள்பிரகார சன்னதி முன்பாக நடந்தது.

    மேளதாளம் முழங்க சப்பர முகூர்த்த விழா நடந்தது. இதில் ஆயிரம் பொன் சப்பரத்திற்கு வேண்டிய மூங்கில் சேகரிக்கும் பணி சம்பிரதாய படி நடந்தது. பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத பெருமாளுக்கு சிறப்பு பூஜைகளும், மஹா தீபாராதனைகளும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வருகிற மே மாதம் 5-ந் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார். அதற்கு முன்னோட்ட நிகழ்வுதான் இது. இந்த விழாவில் கள்ளழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி, தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், கூடலழகர்கோவில், நிர்வாக அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள் சேகர், பிரதிபா, அருள் செல்வம், கோவில் பட்டர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    • திருக்கல்யாண திருவிழா 5-ந்தேதி நடக்கிறது.
    • 6-ந்தேதி மஞ்சள் நீர்சாற்று முறையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    மதுரை மாவட்டம், அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் திருக்கல்யாண திருவிழா சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டுக்கான இந்த திருவிழா வருகிற 2-ந்தேதி காலை 9.45 மணிக்கு சாமி புறப்பாடு நிகழ்ச்சியுடன் ெதாடங்குகிறது.

    இதை தொடர்ந்து அன்று மாலை 6 மணியளவில் கள்ளழகர் ஸ்ரீதேவி, பூமிதேவியருடன் பல்லக்கில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்கிறார்.பின்னர் இரவு 7.30 மணிக்கு சுவாமி இருப்பிடம் செல்கிறார்.தொடர்ந்து 3-ந்தேதியும், 4-ந்தேதியும் அதே நிகழ்ச்சிகள் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது.

    இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண திருவிழா 5-ந்தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 9.50 மணிக்கு மேல் 10.20 மணிக்குள் திருக்கல்யாண மண்டபத்தில் கள்ளழகர் ஒரே நேரத்தில் ஸ்ரீதேவி, பூமிதேவி, கல்யாண சுந்தரவல்லி தாயார், ஆண்டாள் ஆகிய 4 பிராட்டிகளை மணக்கிறார்.

    திருக்கல்யாணம் முடிந்ததும் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெறும். அதனை தொடர்ந்து இரவு பெருமாள் நான்கு தேவியர்களுடன் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். பின்னர் 6-ந்தேதி மஞ்சள் நீர்சாற்று முறையுடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, கண்காணிப்பாளர் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • திருக்கல்யாணம் 5-ந்தேதி நடக்கிறது.
    • 6-ந் தேதி மஞ்சள் நீர்சாற்று முறையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    மதுரை மாவட்டம், அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில், 108 வைணவதலங்களில் ஒன்றானது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் திருக்கல்யாண திருவிழாவும் தனி பெருமையுடையது.

    இந்த திருவிழாவானது நேற்று காலை தொடங்கியது. அன்று மாலை 6 மணிக்கு மேளதாளம் முழங்க தீவட்டி வர்ணக்குடை பரிவாரங்களுடன் கள்ளழகர் என்ற சுந்தர்ராசப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன், மனோரஞ்சித மாலைகள் அலங்காரத்தில், சுந்தரவல்லி யானை முன்செல்ல, பல்லக்கில் புறப்பாடாகி சென்று, அங்குள்ள நந்தவன ஆடி வீதிகள் வழியாக சென்று திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.பின்னர் பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் தீபாராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அதன் பின்னர் இரவே சுவாமி கோவிலுக்குள் போய் இருப்பிடம் சென்றார். இதை தொடர்ந்து இன்றும், 4-ந்தேதி நாளையும் அதே நிகழ்ச்சிகள் அதே மண்டபத்தில் நடைபெறுகிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண திருவிழா வருகிற 5-ந்தேதி அன்று காலை 9.50 மணிக்கு மேல் 10.20 மணிக்குள் திருக்கல்யாண மண்டபத்தில் சுந்தர்ராசப்பெருமாள், ஒரே நேரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாணசுந்தரவல்லி தாயார், ஆண்டாள் ஆகிய 4 பிராட்டிமார்களையும் மணக்கிறார்.

    திருக்கல்யாணம் முடிந்ததும் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெறும். அதனை தொடர்ந்து கோவில் வளாகத்திற்குள் பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து வழங்கப்படும். அப்போது திருக்கல்யாண மொய் எழுதப்படும். பின்னர் அன்று இரவு பெருமாள் நான்கு தேவியர்களுடன் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். பின்னர் 6-ந் தேதி மஞ்சள் நீர்சாற்று முறையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • சித்திரை திருவிழா 1-ந்தேதி தொடங்கி 10-ந்தேதி வரை நடக்கிறது.
    • 5-ந்தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.

    அழகர்கோவில் இணை கமிஷனர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

    மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 1-ந்தேதி தொடங்கி 10-ந்தேதி வரை நடக்கிறது. 3-ந் தேதியன்று மாலை 6 மணியில் இருந்து 7.10 மணிக்குள் அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் புறப்பட்டு மதுரை வருகிறார்.

    இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 5-ந்தேதி அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்போது பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சும் வைபவம் ராமராயர் மண்டபத்தில் நடக்க உள்ளது. அந்த நிகழ்ச்சிக்காக பக்தர்கள் விரதம் இருந்து தோல் பையில் தண்ணீர் சுமந்து சிறிய குழாய் மூலம் சுவாமியின் மீது தண்ணீர் பீய்ச்சி நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம்.

    கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் தோல் பையில் விரத ஐதீகத்தை மீறி, செயற்கையான மற்றும் அதிக விசையான குழாயை பொருத்தி தண்ணீரில் திரவியங்கள் மற்றும் வேதிப்பொருட்களை கலந்து பீய்ச்சுவதால் சுவாமி, குதிரை வாகனம் மற்றும் ஆபரணங்களும், பக்தர்கள், பட்டர்கள், பணியாளர்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. மேலும் சிலர், தண்ணீர் பாக்கெட்டுகளை பற்களால் கடித்து அந்த பாக்கெட் தண்ணீரை சுவாமியின் மீது பீய்ச்சுகின்றனர்.

    இந்த ஆண்டு சித்திரைத்திருவிழாவின்போது பக்தர்கள் அதிக விசை உடைய குழாயை தோல் பையில் பொருத்தி தண்ணீர் பீய்ச்ச வேண்டாம். விரத ஐதீகத்தின்படி தோல் பையில் சிறிய பைப் பொருத்தி திரவியங்கள், வேதிப்பொருட்கள் கலக்காமல் சுத்தமான தண்ணீர் மட்டும் பீய்ச்சும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • முகூர்த்த கால்கள் நடும் நிகழ்ச்சி மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் நடந்தது.
    • 5-ந்தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார்.

    மதுரையில் நடைபெறும் சித்திரை பெருந்திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்த விழாவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாணம், தேரோட்டம் முடிந்ததும், கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆண்டு தோறும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    மேலும் 108 வைணவ தலங்களில் ஒன்றான கள்ளழகர் கோவிலின் சித்திரை. திருவிழாவின் முன்னோட்ட நிகழ்ச்சியாக சப்பர முகூர்த்த விழா கடந்த ஜனவரி மாதம், கள்ளழகர் கோவிலின் உப கோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் நடந்தது. இதில் ஆயிரம் பொன் சப்பரத்திற்கு வேண்டிய மூங்கில் சேகரிக்கும் பணி சம்பிரதாயபடி அன்று நடந்தது.

    இதை தொடர்ந்து நேற்று காலையில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில், கள்ளழகர் கோவில் சித்திரை விழாவுக்கு கொட்டகை முகூர்த்த விழா நடந்தது. இதில் யாளி திருமுகத்திற்கு, நூபுர கங்கை தீர்த்தத்தினால் வேத மந்திரங்களுடன் பூஜைகள், அபிஷேகமும் நடந்தது. பின்னர் யாளி முகத்திற்கு சந்தனம், பூ மாலைகள், மாவிலைகள், சாத்தப்பட்டன. அதை தொடர்ந்து வர்ணம் பூசப்பட்ட மரத்தில் சந்தனம் பூசப்பட்டது.

    மேளதாளம் முழங்க அந்த முகூர்த்தகால்கள் எடுத்து செல்லப்பட்டன. மூலவர் சன்னதி முன்பாகவும், ராஜகோபுரம் முன்பாகவும் நடப்பட்டன.

    பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத பெருமாளுக்கு சிறப்பு பூஜைகளும், மகா தீபாராதனைகளும் நடந்தது. விழாவில் துணை ஆணையர் ராமசாமி, தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, கண்காணிப்பாளர்கள் சேகர், பிரதீபா, அருள் செல்வன், உள்துறை பேஷ்கார்கள் முருகன், புகழேந்தி, மற்றும் பணியாளர்கள், ஏராளமான பக்தர்கள், உபயதாரர்கள் கலந்து கொண்டனர். மேலும் தொடர்ந்து வைகை ஆறு தேனூர் மண்டபத்திலும் முகூர்த்தகால் நடப்பட்டது. மேலும் அழகர்கோவிலில் இருந்து வண்டியூர் வரை சுமார் 460-க்கும் மேற்பட்ட மண்டபங்களில் கள்ளழகர் எழுந்தருளுவார்.இந்த மண்டபங்களின் முன்பாக பந்தல் அமைக்கும் பணிகள் நேற்றே தொடங்கி விட்டது.

    சித்திரைக்கு முத்திரை பதிக்கும் அழகர்கோவில் திருவிழா மே மாதம் 1-ந் தேதி தொடங்குகிறது. 2-ந் தேதி கோவிலிலே விழா நடைபெறும்.

    3-ந் தேதி இரவு 7 மணிக்கு அழகர்கோவிலில் இருந்து தங்கப்பல்லக்கில் கள்ளழகர் பெருமாள் மதுரை நோக்கி புறப்படுகிறார். 4-ந் தேதி அதிகாலையில் மதுரை மூன்றுமாவடியில் எதிர் சேவை நடைபெறும்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 5-ந் தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் காலை 5.45 மணிக்கு மேல் 6.12 மணிக்குள் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்வார்கள். 6-ந் தேதி வைகை ஆறு தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுக்கிறார். அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார காட்சி நடைபெறும்.

    7-ந் தேதி இரவு பூப்பல்லக்கு விழா நடைபெறும். 8-ந் தேதி காலையில் கள்ளழகர் அழகர் மலை நோக்கி செல்லுதல், அன்றிரவு அப்பன் திருப்பதி விழா, 9-ந் தேதி காலை 10.32 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் சுவாமி அழகர் கோவிலுக்குள் சென்று இருப்பிடம் சேருதல் நடைபெறும்.. 10-ந் தேதி உற்சவசாற்று முறையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    ×