search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கள்ளழகர் கோவிலில் நாளை முதல் நடை திறப்பு நேரம் மாற்றம்
    X

    கள்ளழகர் கோவிலில் நாளை முதல் நடை திறப்பு நேரம் மாற்றம்

    • இந்த நடைமுறை மார்கழி மாதம் 30 நாளும் பொருந்தும்.
    • நாளை முதல் ஜனவரி 14-ந்தேதி வரை இது நடைமுறையில் இருக்கும்.

    மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) மார்கழி மாதப்பிறப்பையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். பின்னர் பகல் 12 மணிக்கு நடை சாத்தப்படும். தொடர்ந்து மாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 7 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    மேலும் கோவிலின் உப கோவில்களான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவில், வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 11.30 மணிக்கு நடை சாத்தப்படும், பின்னர் மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    இந்த நடைமுறை மார்கழி மாதம் 30 நாளும் பொருந்தும். அதாவது நாளை முதல் அடுத்த மாதம் ஜனவரி 14-ந் தேதி வரை இது நடைமுறையில் இருக்கும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, மற்றும் கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்து உள்ளனர்.

    Next Story
    ×