என் மலர்
நீங்கள் தேடியது "கிருஷ்ணர்"
- பாண்டவர்கள் சார்பில் பகவான் கிருஷ்ணர், கவுரவர்கள் இருக்கும் அஸ்தினாபுரத்துக்கு தூது சென்றார்.
- ஆலயம் கிழக்கு நோக்கிய நிலையில் மூன்று நிலை ராஜகோபுரங்களுடன் காட்சியளிக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பாடகம் பகுதியில் அமைந்துள்ளது, பாண்டவதூத பெருமாள் கோவில். சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில் 108 திவ்யதேச வைணவ தலங்களில் 49-வது கோவிலாகும். இங்கு, பாண்டவர்களுக்காக துரியோதனிடம் தூது சென்ற கோலத்தில் கிருஷ்ண பகவான் 25 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார்.
தல வரலாறு
மகாபாரத காலத்தில், பாண்டவர்களில் மூத்தவரான தருமர், கவுரவர்கள் சூழ்ச்சியால் சூதாட்டத்தில் தன் செல்வங்களையும், நாட்டையும் இழந்தார். பின்பு கவுரவர்கள், பாண்டவர்களை 13 வருடம் வன வாசம் செல்ல செய்தனர். வனவாசம் சென்று திரும்பிய நிலையில் பாண்டவர்கள், ஐவருக்கும் 5 ஊர் இல்லையென்றாலும், 5 வீடாவது தர வேண்டும் என்று கிருஷ்ணரிடம் முறையிட்டனர்.
இதையடுத்து பாண்டவர்கள் சார்பில் பகவான் கிருஷ்ணர், கவுரவர்கள் இருக்கும் அஸ்தினாபுரத்துக்கு தூது சென்றார். பாண்டவர்களின் பலமே கிருஷ்ணர்தான் என்பதை அறிந்திருந்த துரியோதனன், அவரை அவமானப்படுத்த எண்ணினான். இதற்காக, அஸ்தினாபுரம் அரண்மனையில் கிருஷ்ணர் அமர்வதற்காக ஆசனம் அமைக்கப்பட்டது. அதன் முன்பாக ஆழமான பள்ளம் தோண்டப்பட்டு, அதன்மேல் பந்தலைப் போட்டு மறைத்தனர்.
அஸ்தினாபுரம் அரண்மனைக்கு வந்த கிருஷ்ண பகவான், தனக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்தார். உடனே, கிருஷ்ணர் தான் அமர்ந்த ஆசனத்துடன் பள்ளத்தில் விழுந்தார். அந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இருந்த துரியோதனன், அவரை கொல்ல காவலர்களிடம் உத்தரவிட்டார். உடனே அவரைத் தாக்க சில மல்லர்கள் முயன்றனர்.
மல்லர்கள் பள்ளத்திற்குள் இறங்கியவுடன் கிருஷ் ணர் அவர்களை அழித்து, தன் விஸ்வரூப தரிசனத்தை காட்டி ஒங்கி உயர்ந்து நின்றார். அதைப் பார்த்த அவையில் இருந்த அனைவருமே மிரண்டு போயினர். பாண்டவர்களுக்காக தூது சென்றதால் கிருஷ்ணர், 'பாண்டவதூத பெருமாள்' என அழைக்கப்படுகிறார்.
பாரதப் போர் முடிந்து பல ஆண்டுகள் கடந்த பிறகு, பரீட்சித்து மகாராஜாவின் மகனான ஜனமேஜயர் என்ற அரசன், வைசம்பாயனர் என்ற மகரிஷியிடம் பாரதக் கதைகளை கேட்டு வந்தார். அப்பொழுது அரசனுக்கு கிருஷ்ண பகவானின் விஸ்வரூப தரிசனம் காண வேண்டும் என்ற ஆவல் வந்தது. அவர் மகரிஷியிடம், தனக்கு கிருஷ்ண பகவானின் விஸ்வரூபத்தை காண வேண்டும் என்றும், அதற்கான வழிமுறைகளை கூறும்படியும் வேண்டினார்.
அந்த மகரிஷியின் அறிவுரையின்படி, காஞ்சிபுரம் வந்து தவம் செய்தார், அரசர். தவத்தின் பயனாக பெரு மாள், தன் பாண்டவதூது கோலத்தை இத்தலத்தில் அருளினார். மேலும், திருதராஷ்டிரனுக்கும் கண நேரம் கண் பார்வை தந்து தனது விஸ்வரூப தரிசனத்தை இத்தலத்தில் காட்டி அருளினார் என்று கூறப்படுகிறது.

கோவில் தோற்றம், கொடிமரம், பலிபீடம்
கோவில் அமைப்பு
ஆலயம் கிழக்கு நோக்கிய நிலையில் மூன்று நிலை ராஜகோபுரங்களுடன் காட்சியளிக்கிறது. இக்கோவில் பல்லவர்களால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. பிறகு சோழர்கள், விஜயநகர பேரரசர்களால் புனரமைக்கப்பட்டதாகவும், குலோத்துங்க சோழன், ராஜராஜ சோழன் ஆகியோரின் காலத்தில் கோவிலின் சுற்றுச்சுவர் உள்ளிட்டவைகள் எழுப்பப்பட்டு, இரண்டு குளங்கள் அமைக்கப்பட்டதாகவும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்குள்ள கல்வெட்டுகளில் பாண்டவதூத பெருமாள் 'தூத ஹரி' என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.
கோவில் ராஜகோபுரம் நுழைவுவாசலில் பழமையான அற்புதமான சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனைத் தாண்டி பலிபீடம், கொடிமரம் காணப்படு கிறது. காஞ்சிபுரத்தில் உள்ள பழமையான வைணவ தலங்களில் ஒன்றான இக்கோலிலில் மூலவர் பாண்டவ தூதர் 25 அடி உயரத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் புன்னகையோடு காட்சி தருகிறார்.
மூலவரான கிருஷ்ணர் பத்ர விமானத்தின் கீழ் அமர்ந்த நிலையில் காட்சி தருவது இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாத அற்புதமான காட்சியாகும். வலது காலை மடக்கி, அர்த்த பத்மாசன கோலத்தில் காட்சி தருகிறார். மற்ற கோவில்களைப் போல் நான்கு கரங்களுடன் இல்லாமல், இரண்டு திருக்கரங்களுடனேயே அருள்பாலிக்கிறார். வலது கரம் அபய முத்திரை காட்டியும், இடது கரம் வரதமுத்திரை காட்டியும் உள்ளது. பெருமாளை குனிந்து வணங்கும்போது மெய் சிலிர்ப்பதை உணர முடிகிறது.
இத்தலத்தில் திருமாலின் உற்சவர் சிலைகளில் ஸ்ரீதேவி பூதேவிக்கு பதிலாக ருக்மணி, சத்தியபாமா இருவரும் எழுந்தருளியுள்ளனர். ஆண்டாள் நாச்சியார், நர்த்தன கண்ணன், சுதர்சனர் ஆகிய உற்சவ மூர்த்திகளையும் கருவறையில் காணலாம்.
இக்கோவிலில் உள்ள அர்த்த மண்டபத்தில் ஆழ்வார்கள், ராமானுஜர் உள்ளிட்டோரை தரிசிக்கலாம். மூலவருக்கு தெற்குபுறம் ருக்மணிக்கு தனிச் சன்னிதி உள்ளது. வெளிப் பிரகாரத்தில் சக்கரத்தாழ்வாரின் பின்புறத்தில் தனிச் சன்னிதியில் நரசிம்மர் காட்சி அளிக்கிறார். கோவிலின் வடகிழக்கு பகுதியில் மத்ஸ்ய தீர்த்தம் உள்ளது. பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் இத்தல இறைவனை மங்களாசாசனம் செய்துள்ளனர்.
திருவிழாக்கள்
கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, முக்கோடி ஏகாதசி, பங்குனி உத்திரம், கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தில் சாற்று முறை உற்சவம் ஆகிய விழாக்கள் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
பாண்டவர்களுக்கு கிருஷ்ணன் கூடவே இருந்து உதவி செய்தது போல், இத்தலத்து இறைவனை வணங்கினால் கஷ்டப்படும் பக்தர்களை கை கொடுத்து காப்பார் என்பது நம்பிக்கையாக உள்ளது. கிருஷ்ணன், இத்தலத்தில் தன் பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வபாதயோக சக்திகளை கொண்டு அருளும் தலமாக இருப்பதால் இங்கு அடிப்பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்ப ர்களின் 72,000 அங்கநாடிகளும் துடிப்புடன் செயல்பட்டு சோதனைகளும், துன்பங்களும் விலகும் என்பது நம்பிக்கை.
பாண்டவதூத பெருமாளை வணங்குபவர்களுக்கு காரியத் தடை, திருமணத் தடை நீங்குவதோடு ஆனந்த வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் பக் தர்கள் தரிசனம் செய்வதற்காக கோவில் நடை திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
காஞ்சிபுரத்தில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு ஏராளமான பேருந்து, ஆட்டோ வசதிகள் உள்ளன.
- இருவரையும் எப்போதும் ஒதுக்குகிறார்கள்" என்றும் மிகுந்த வேதனையுடன் திருமாலிடம் முறையிட்டன.
- மனக்கவலையைப் போக்க நினைத்த எம்பெருமான் அவைகளிடம் ஒரு வாக்குறுதியை அளித்தார்.
ஒரு முறை திதிகளான அஷ்டமியும், நவமியும் திருமாலை தரிசிக்க வைகுண்டம் சென்றன. பெருமாளின் தரிசனத்தைப் பெற்ற அவை தங்களின் மனவருத்தத்தை அவரிடம் கூறத் தொடங்கின. "மக்கள் எந்த ஒரு விசேஷத்தையும் அஷ்டமி, நவமி ஆகிய இரு நாள்களில் செய்வதில்லை என்றும், எங்கள் இருவரையும் எப்போதும் ஒதுக்குகிறார்கள்" என்றும் மிகுந்த வேதனையுடன் திருமாலிடம் முறையிட்டன.
அவைகளின் மனக்கவலையைப் போக்க நினைத்த எம்பெருமான் அவைகளிடம் ஒரு வாக்குறுதியை அளித்தார். அஷ்டமி, நவமியை மக்கள் கொண்டாடும் வகையில் அந்த இரு நாள்களில், தான் அவதாரம் எடுப்பதாகக் கூறினார். தனது வாக்குறுதியை நிறைவேற்றவே அஷ்டமி திதியில் கிருஷ்ணனாகவும், நவமி திதியில் ராமனாகவும் அவதரித்தார். அந்த இரு தினங்களையே நாம் கோகுலாஷ்டமியாகவும், ராமநவமியாகவும் கொண்டாடி வருகிறோம்.
- பிரபாசபட்டினக் கடற்கரையில் சோமநாதபுரம் சிவன் கோவில் அமைந்துள்ளது.
- துவாரகாபுரியை ஆண்ட கிருஷ்ணர் சோமநாதரை வணங்கி போற்றி “புருஷோத்தமன்” என்ற உயர்ந்த பதவியை அடைந்தார்.
சோமநாதபுரம் இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் தென்மேற்குக் கரையில், மேற்கே அரேபியன் கடலும், வடக்கே கச்சு வளைகுடாவும், தெற்கே காம்பே வளைகுடா எல்லைகளாக, அமைந்துள்ள சௌராட்டிர தேசத்தில், 'வேராவல்' எனும் நகரை தலைமையிடமாகக் கொண்டு, 15-08-2013 அன்று ஜீனகாட் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளை பிரித்து, 15-08-2013இல் புதிதாக அமைக்கப்பட்ட கிர்சோம்நாத் மாவட்டம் எனும் மாவட்டத்தில், பிரபாசபட்டினக் கடற்கரையில் சோமநாதபுரம் சிவன் கோவில் அமைந்துள்ளது. இது இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் முதன்மையானது.
புராணக் கதைகள்: பிரபாசப்பட்டின கடற்கரையில் சோமநாதர் கோவில்
சந்திரன் தனது 27 மனைவியரில் உரோகிணியிடம் மட்டும் அளவு கடந்த அன்பு பாராட்டி மற்ற மனைவியர்களைப் புறக்கணித்தான். தனது 26 மகள்களின் துயரத்தைக் கண்டு சீற்றங்கொண்ட தந்தை தட்சப்பிரசாபதி, சந்திரனுக்கு காச நோயினால் தேய்ந்து போகக் கடவது என்று சாபமிட்டார். ஒவ்வொரு நாளும் தேய்ந்து வந்த சந்திரன் இறுதியில் சௌராட்டிரத்தின் கடற்கரையில் உள்ள பிரபாச தீர்த்தத்தில், சுயம்புவாக தோன்றிய சிவலிங்கத்தை சரணடைந்து நோய் நீங்கி சுகமடைந்தான். அதன்படி சந்திரன் தேய்ந்து தேய்ந்து வளரும் நிலை ஏற்பட்டது. துவாரகாபுரியை ஆண்ட கிருஷ்ணர் சோமநாதரை வணங்கி போற்றி "புருஷோத்தமன்" என்ற உயர்ந்த பதவியை அடைந்தார். பாண்டவர்கள் இங்கு வந்து பிதுர் கடன்கள் செய்து சோமநாதரை வழிபட்டனர் என்று மகாபாரதம் கூறுகிறது.
பெயர்க் காரணம்: சோமநாதர் கோவில், நுழைவாயில்
சந்திரனே முதன்முதலில் இங்கு சிவலிங்கத்திற்கு பொற்கோவில் கட்டி வருடம் முழுவதும் அமிர்தத்தை பொழிந்து திருமுழுக்கு வழிபாடு செய்த காரணத்தால் இந்த ஜோதிர்லிங்கத்திற்கு 'சோமநாதர்' என்ற பெயர் ஏற்பட்டது என்று கூறப்படுகின்றது. எனவே இவ்விடத்தை சோமநாதபுரம் என்றும் அழைப்பர். பின்னர் இராவணன் அதை வெள்ளியிலும், கிருஷ்ணர் அதனைச் சந்தன மரத்திலும், குஜராத்தின் சோலங்கி அரசனான பீமதேவன் கல்லாலும் கட்டினார்கள் என்று கூறப்படுகின்றது.
சோமநாதபுர ஆலயத்தை இடித்தவர்கள் விவரம்
உருவ வழிபாட்டினை முழுவதுமாக எதிர்க்கும் இசுலாமிய மன்னர்கள் பல முறை சௌராஷ்ட்டிர பகுதி மீது படையெடுத்து சோமநாதபுரம் கோயிலை ஆறு முறை அடியோடு இடித்து தரை மட்டம் ஆக்கிச் சென்றனர். சோமநாதரின் ஆலயத்தை இடித்த இசுலாமிய மன்னர்கள் பெயர்கள் பின்வருமாறு.
முதல் முறையாக கி.பி. 725ல் சிந்து மாநில இசுலாமிய அரபு ஆளுனரின் கட்டளைப்படி சோமநாதபுரம் கோயிலை, உருவ வழிபாட்டை எதிர்க்கும் இசுலாமியப் படைகள், சௌராட்டிர தேசத்தை ஆண்டு கொண்டிருந்த, பிரதிஹர குல மன்னன், இரண்டாம் நாகபாதர் காலத்தில் சோமநாதபுரம் கோவில் இடிக்கப்பட்டது.
கி.பி. 1025, டிசம்பர் மாதம், கஜினி முகமது என்றழைக்கப்படும், ஆப்கானிஸ்தானில் கஜினி என்ற குறுநிலத்தை ஆண்ட முகமது என்ற குறுநில மன்னர், இசுலாமியர்களின் தலைமை மதத்தலைவரான கலீபாவின் அனுமதியுடன், இசுலாமிய கொள்கைக்கு எதிராக உள்ள உருவ வழிபாட்டு இடங்களை அழிக்கு பொருட்டு சோமநாதபுரம் ஆலயத்தை முழுமையாக தரைமட்டம் ஆக்கி, அங்கிருந்த செல்வக்குவியல்களை அள்ளிச்சென்றதுடன், ஐம்பதாயிரம் இந்துக்களை கொன்று, 20,000 இந்துக்களை அடிமைகளாக இழுத்துச் சென்றனர். ஆயிரக்கணக்கான இந்துக்களை கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். நாட்டில் இந்துக்கள் உயிருடன் வாழ வேண்டுமானால் கட்டாய வரி செலுத்த ஆணையிட்டார். சோமநாதபுரம் ஆலய சிவலிங்கத்தை சுக்கு நூறாக உடைத்து, அக்கற்களை கஜினியில் உள்ள மசூதியின் படிக்கட்டுகளில் பதித்தார். மேலும் ஆலயத்தின் இரத்தின குவியல்கள், தங்கம், வெள்ளி மற்றும் சந்தன கதவுகளை கஜினி நகருக்கு எடுத்துச் சென்றார்.
24.02.1296ல் குஜராத்தை ஆண்ட இராசாகரன் என்ற மன்னர் காலத்தில், அலாவுதீன் கில்ஜி என்ற தில்லி சுல்தான், குஜராத் பகுதி மீது படையெடுத்து சோமநாதபுர ஆலயத்தை இடித்து தரை மட்டம் ஆக்கினார். பின்னர் 'காம்பத்' அரசை ஆண்ட இரண்டாம் கர்ணதேவ வகேலா மன்னரை கொன்று, அவரின் மனைவி கமலாதேவியை மதமாற்றம் செய்வித்து மணந்து கொண்டு அவரை பட்டத்து அரசியாக்கினார். கமலாதேவியின் அந்தரங்க பணிப்பெண்னையும் (திருநங்கை) தன்னுடன் தில்லிக்கு கொண்டு சென்றார் கில்ஜி. அந்த திருநங்கைக்கு, மாலிக் கபூர் என்று பெயர் சூட்டி தன் ஆருயிர் நண்பனாக்கி, படைத்தலைவர் தகுதி வழங்கினார் அலாவுதின் கில்ஜி. கில்ஜி, 50,000 ஆயிரம் பேரைக் கொன்று, 20,000 பேரை அடிமைகளாக பிடித்துச் சென்றதுடன் அப்பகுதியில் இருந்த கால்நடைகளையும் கவர்ந்து சென்றார். இந்த செய்தியை ஹாசன் நிஜாமைச் சேர்ந்த தாஜ்-உல்-மாசிர் என்ற வரலாற்று அறிஞர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
கி.பி. 1375ல் ஜினாகாட் சுல்தான், முதலாம் முசாபர்ஷா, உருவ வழிபாட்டினை அவமதிக்கும் பொருட்டு, சோமநாதபுரம் ஆலயத்தை இடித்து தரைமட்டம் ஆக்கினார்.
கி.பி. 1451ல் ஜினாகாட் சுல்தானாக இருந்த முகமது பேக்டா என்பவர் சோமநாதரின் ஆலயத்தை இடித்து தரை மட்டம் ஆக்கினார்.
கி.பி. 1701ல் மொகலாயர் மன்னர்கள் காலத்தில், இசுலாமிய நெறிப்படி வாழ்ந்த மற்றும் உருவ வழிபாட்டை கடுமையாக எதிர்த்த, மொகலாய மாமன்னர் அவுரங்கசீப் சோமநாதபுர ஆலயத்தை இடித்து தரை மட்டம் ஆக்கிச் சென்றார்.
சோமநாதபுர ஆலயத்தை மீண்டும் கட்டி சீரமைத்தல்
முதல் முறையாக கி.பி. 649ல் சௌராட்டிர தேசத்து வல்லபீ புர யாதவகுல மன்னர், சோமநாதபுர ஆலயத்தை அதே இடத்தில் இரண்டாம் முறையாக சோமநாதரின் ஆலயத்தை சீரமைத்து கட்டினார்.
மூன்றாம் முறையாக கி.பி. 815 -இல், கூர்சர பிரதிஹர வம்சத்தின், இரண்டாம் நாக பாதர் மன்னர், சோமநாதபுர ஆலயத்தை மறுபடியும் சீரமைத்து கட்டினார்.
நான்காம் முறையாக மாளவ நாட்டு போஜராஜனும், பட்டான் (ஜீனாகாட்டு) நாட்டு சோலங்கி மன்னரும் 1042 -இல் சோமநாதபுர ஆலயத்தை மீண்டும் கட்டி எழுப்பினார்கள்.
ஐந்தாம் முறையாக கி.பி 1308 -இல் சூதசமாவம்ச அரசன் மகிபாலன் என்பவர் சோமநாதபுர ஆலயத்தை மீண்டும் கட்டினார். அவர் மகன் கேன்கர் என்பவர் 1326-1351 -க்குள் கோயிலில் லிங்கத்தை பிரதிட்டை செய்தார்.
ஆறாம் முறையாக 1783 -இல் இந்தூர் நாட்டு அரசி அகல்யாபாய் ஹோல்கர், நாக்பூர் மன்னர் இராஜா போன்ஸ்லே, கோலாப்பூர் மன்னர் சத்ரபதி போன்ஸ்லே மற்றும் குவாலியர் மன்னர் ஸ்ரீமந் பாடில்புவா ஷிண்டே ஆகியோர் ஒன்று சேர்ந்து, சிதைந்த போன பழைய சோமநாதபுரம் கோவில் அருகே புதிய சோமநாதபுர ஆலயத்தை மீண்டும் கட்டி எழுப்பினார்.
ஏழாம் முறையாகவும், இறுதியாகவும், விடுதலை பெற்ற இந்திய அரசின் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேலும் உணவு அமைச்சராக இருந்த கே. எம். முன்ஷியும் இணைந்து பொது மக்களிடம் நிதி திரட்டி, சோமநாதரின் ஆலயத்தை மீண்டும் கட்ட துவங்கினர். முதலில் சோமநாதபுரம் கோவில் இடிபாடுகளை அக்டோபர் மாதம்,1950 -இல் அகற்றினர். சோமநாதபுரம் கோயிலை இடித்துக் கட்டிய இடத்தில் இருந்த மசூதியை சில மைல் தூரத்திற்கு அப்பால் இடம் மாற்றி அமைத்தனர். சோமநாதபுர கோயிலைப் புனரமைக்க தொடங்கும் விழாவை (பூமி பூஜை விழா) நடத்தி, மே மாதம், 1951ல், இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர். இராசேந்திரப் பிரசாத் தலைமையில், கோவில் அத்திவாரக்கல் நடப்படும் விழா நடைப்பெற்றது. புதிதாக கட்டப்பட்ட சோமநாதரின் ஆலயத்தை இந்தியக் குடியரசுத் தலைவர், சங்கர் தயாள் சர்மா தலைமையில் ஜனவரித் திங்கள் 1ஆம் நாள், 1995ஆம் ஆண்டு (01-01-1995) பொது மக்களின் வழிபாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
கோவிலின் கட்டிடக் கலை அம்சங்கள்
சாளுக்கியர் கட்டிடக்கலை வடிவத்தில் இறுதியாக கட்டப்பட்ட சோமநாதர் கோவில் பிரமிடு வடிவத்தில் விசாலமாகக் கட்டப்பட்டுள்ளது.
- கிருஷ்ண அவதாரம் ஹிந்துக்களுக்கு மிக முக்கியமானதாகும்.
- நந்தருக்கும், யசோதாவுக்கும் குழந்தை பிறந்ததை கோகுலமே கொண்டாடியது. குழந்தைக்கு நந்தர் கிருஷ்ணர் என்று பெயரிட்டார்.
மஹா விஷ்ணு கிருஷ்ண அவதாரம் எடுத்த தினமே கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) பண்டிகையாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
கிருஷ்ண அவதாரம் ஹிந்துக்களுக்கு மிக முக்கியமானதாகும். ஏனெனில் போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு, கிருஷ்ணர் கொடுக்கும் ஆலோசனைகளே இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையானது.
இந்த நாளில் கிருஷ்ணருக்குப் பிடித்த உணவுப் பொருட்களை செய்தும், கிருஷ்ணரின் சிலைகளை நன்றாக அலங்கரித்தும் கிருஷ்ணரை தங்கள் இல்லங்களுக்கு வரவழைக்கும் விதமாக, குழந்தையின் கால் பாதங்களை வரைந்தும் இந்துக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
கிருஷ்ண ஜெயந்தியைப் பற்றி சில விவரங்கள்...
கிருஷ்ணரின் பிறப்பு
தேவகியும், கம்சனும் சகோதர சகோதரிகள். தனது தங்கை தேவகிக்கும், வாசுதேவருக்கும் பிறக்கும் 8வது குழந்தையால் கம்சனுக்கு மரணம் நிகழும் என்று வானத்தில் இருந்து ஒரு குரல் கூற, அதனால் அச்சமுற்ற கம்சன் தேவகியையும், வாசுதேவரையும் சிறையில் அடைத்து தன் கண்காணிப்பிலேயே வைத்துக் கொண்டான்.
இருவருக்கும் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் கம்சன் ஈவு-இரக்கமின்றி கொன்று வந்தான். இவ்வாறாக 7 குழந்தைகளையும் கம்சனே கொன்றான். தேவகி 8வது முறையாக கர்பமுற்றாள். அதே சமயம் வாசுதேவரின் நண்பரும் ராஜாவுமான நந்தாவின் மனைவி யசோதாவும் கர்பமுற்றாள்.
இந்நிலையில் ஆவணித் திங்கள் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று இரவு நேரத்தில் கிருஷ்ணர் பிறந்தார் (அவதரித்தார்). அதே சமயம் யசோதாவும் ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுத்தார்.
அப்போது சிறைக்குள் விஷ்ணு தோன்றி, இக்குழந்தையை கோகுலத்தில் உள்ள யசோதாவின் வீட்டில் கொண்டு சென்று சேர்த்துவிடு. அங்கு அவளுக்குப் பிறந்திருக்கும் பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்துவிடு என்று வாசுதேவருக்கு ஆணையிட்டார்.
வாசுதேவரும் கிருஷ்ணரை கூடையில் சுமந்தபடி கொட்டும் மழையில் கோகுலத்தை நோக்கிச் சென்றார். அங்கு கிருஷ்ணரை வைத்துவிட்டு, பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு வந்தார் வாசுதேவர்.
அந்த பெண் குழந்தை வந்ததும், 8வது குழந்தை பிறந்த செய்தி கம்சனுக்கு எட்டியது. உடனடியாக விரைந்து வந்த கம்சன், அந்த பெண் குழந்தையை கொல்ல முயன்றபோது, அது அவனது பிடியில் இருந்து விலகிச் சென்று காளித் தோற்றம் கொண்டு பேசியது, கம்சனே உன்னைக் வதம் செய்வதற்கான 8வது குழந்தை கிருஷ்ணன் பிறந்துவிட்டான். அவன் வேறொரு இடத்தில் வளர்ந்து உன்னைக் கொல்ல வருவான் என்று கூறி மறைந்தது.
இதையடுத்து தேவகியையும், வாசுதேவரையும் கம்சன் விடுதலை செய்தான்.
அதே நேரத்தில், நந்தருக்கும், யசோதாவுக்கும் குழந்தை பிறந்ததை கோகுலமே கொண்டாடியது. குழந்தைக்கு நந்தர் கிருஷ்ணர் என்று பெயரிட்டார்.
அந்த தினத்தை கோகுலமே கொண்டாடியது. தற்போது இந்தியாவிலும், உலக நாடுகளில் வாழும் இந்தியர்களும் கிருஷ்ண ஜெயந்தி விழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.
கிருஷ்ணருக்குப் பிடித்த இனிப்புகள்: அவல் லட்டு, சேமியா பாயசம்.
- பகவான் கிருஷ்ணர் குழந்தை அவதாரமாக நம் வீட்டுக்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமி பண்டிகையின் முக்கிய அம்சமும், நோக்கமும் ஆகும்.
- கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டை வீட்டில் குழந்தைகளுடன் கொண்டாடும் போது கிருஷ்ணரின் கதைகளைச் சொல்லி வழிபட்டால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர்.
நம் பாரத நாட்டில் பல நூற்றாண்டுகளாக கலாச்சாரம், பண்பாட்டை பேணிக் காக்கும் வகையில் பல உற்சவங்கள், பண்டிகைகள், விரதங்கள், திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதன்மூலம் நம்மை வாழ வைக்கும் இறைவனுக்கும், இயற்கை சக்திகளுக்கும் நன்றியையும் பிரார்த்தனையும் சமர்ப்பிக்கின்றனர்.
அந்த வகையில் அதர்மத்தை அழிக்க பகவான் கிருஷ்ணன் பூலோகத்தில் வந்து பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று, ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவு நேரத்தில் சிறைக்குள் வசுதேவர்-தேவகிக்கு மகனாகக் கிருஷ்ணன் அவதரித்தார். பிறந்தபோது சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் ஏந்திய கைகளுடன் கிருஷ்ணன் காட்சியளித்தான்.
கிருஷ்ண அவதாரம் இந்துக்களுக்கு மிக முக்கியமானதாகும். ஏனெனில் போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு, கிருஷ்ணர் கொடுக்கும் உபதேசங்களே இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையானது. பகவத் கீதையில் அர்ச்சுனனுக்கு அருளிய உபதேசங்களுடன் இந்திய தத்துவ சாரங்களின் அடிப்படைகளை ஒன்று கலந்து கொடுக்கப்பட்டுள்ள நூல் பகவத் கீதையாகும்.
பகவான் கிருஷ்ணர் குழந்தை அவதாரமாக நம் வீட்டுக்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமி பண்டிகையின் முக்கிய அம்சமும், நோக்கமும் ஆகும். அதனால்தான் கிருஷ்ண ஜெயந்தியன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலமிட்டு, மாவிலை தோரணங்களால் அழகுபடுத்துவர். வாசலில் தொடங்கி பூஜை அறை வரை குழந்தையின் கால் தடங்களை அரிசி மாவால் பதிப்பார்கள். ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டுக்குள் தத்தித்தத்தி நடந்து வருவதாக ஐதீகம். அன்று பல கோவில்களில் உறியடித் திருவிழா நடைபெறும்.
கிருஷ்ணனின் படத்தை அலங்கரித்து, மாலைகளும், மலர்களும் சூடி அவனுக்கு பிடித்தமான வெண்ணெய், அவல், இனிப்பு வகைகள், சீடை, முறுக்கு, தேன்குழல், பொங்கல் போன்ற நைவேத்யங்கள் படைத்து அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து பூஜைகள் செய்து வழிபடுவர். அந்த நீல வண்ணக் கண்ணன் நம் இல்லம் வந்து அருள்புரிய மனதார வேண்டி பிரார்த்தனை செய்கின்றோம்.
கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டை வீட்டில் குழந்தைகளுடன் கொண்டாடும் போது கிருஷ்ணரின் கதைகளைச் சொல்லி வழிபட்டால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர். ராஜதந்திரம் அதிகரிக்கும், அரசியல் சாணக்கியத் தன்மை அதிகரிக்கும். பாடங்களை திட்டமிட்டு படிக்கும் புத்திசாலித்தனம் கூடும். எளிமையாகவும், சுருக்கமாகவும், புரிந்து கொள்ளும் ஆற்றல் அதிகரிக்கும்.
குழந்தை பாக்யம் இல்லாதவர்கள், புதுமணத் தம்பதியர், கருவுற்றிருக்கும் தாய்மார்கள் தங்களுக்கு புக்தி, யுக்தி, அறிவு ஆற்றல், ஆயுள், ஆரோக்யம் மிக்க சற்புத்திர பாக்யத்தை அருள வேண்டும் என்று அந்த ஆலிலைக் கண்ணனிடம் நெஞ்சுருகி பிரார்த்தனை செய்து கொண்டால் ஜாதகத்தில் உள்ள புத்திர தோஷம், புத்திர தடை போன்றவை நிவர்த்தியாகி சற்புத்திர பாக்கியத்தை பகவான் கிருஷ்ணன் அருள்வார்.
நாமும் கிருஷ்ண ஜெயந்தி அன்று நம் வீடுகளில் கண்ணனை அழைத்து வழிபட்டு ஏராளமான பலன்களைப் பெற்றிடுவோம்.
- மழைக்கு வருணன் தலைவன், அவனுக்கு இந்திரன் தலைவன், அதனால் அவனை வழிபடுகிறோம் என்றனர் ஆயர்கள்.
- கண்ணன் இது இந்திரன் செயல் என்று அறிந்து கோவர்த்தனை மலையையே குடையாகப் பிடித்தான்.
கிருஷ்ணருக்கும், அவரது கூட்டாளிகளுக்கும் கோவர்த்தன கிரி மேய்ச்சல் நிலமாக பயன்பட்டது. அதன் சாரலிலே அவர்கள் நித்தம் திரிந்து விளையாடினர். ஒரு நாள் ஆயர்கள் கூட்டம் கூட்டமாய் திரண்டு சென்று கொண்டிருந்தனர்.
எங்கே போகிறீர்கள்? என்று கிருஷ்ணர் கேட்க, பொங்கல் இட, இந்திரனுக்கு வழிபாடு செய்ய செல்கிறோம் என்றனர்.
ஞாயிறு, திங்கள், மழைநீர் இவற்றையே வழிபடுவது வழக்கம். இவற்றை விட்டுவிட்டு இந்திரனை வழிபடுவது புதுமையாய் இருக்கிறது என்றான் கண்ணன்.
மழைக்கு வருணன் தலைவன், அவனுக்கு இந்திரன் தலைவன், அதனால் அவனை வழிபடுகிறோம் என்றனர் ஆயர்கள்.
பசுவே நாம் வழிபட வேண்டிய தெய்வம், செய்யும் தொழிலே தெய்வம் என்பது தெரியாதா என்று கேட்டான் கண்ணன்.
அவர்கள் அவன் சொல்லியதை ஏற்றுக்கொண்டனர். எந்தத்தெய்வத்தின் பெயரும் கூறாமல் பொங்கல் இட்டுத்தம் பசுக்களை மதித்து வழிபட்டனர். இந்திரன் இதனை அறிந்து கோபம் கொண்டான். ஆயர்களை அடக்குவதற்காகக் கடுமையாக மழை தொடர்ந்து பெய்ய செய்தான். இடியும் மின்னலும் உடன் சேர்ந்தன. ஆயர்களும் பசுக்களும் தவிப்புக்குள்ளானார்கள்.
கண்ணன் இது இந்திரன் செயல் என்று அறிந்து கோவர்த்தனை மலையையே குடையாகப் பிடித்தான். அதன் நிழலில் கன்றுகளும், பசுக்களும், இடையர் சிறுவர்களும், பெரியோர்களும் தஞ்சம் அடைந்தனர்.
கண்ணனின் பேராற்றலைக் கண்டு வியந்த இந்திரன் தரைக்கு வந்து கண்ணனை வணங்கித்தன்னை மன்னிக்கும்படி வேண்டினான். கண்ணனை அவன்தன் தம்பியாக ஏற்றுக்கொண்டான். அதனால், கண்ணனுக்கு உப இந்திரன் என்ற பெயர் வழங்கலாயிற்று, பசுக்களைக் காத்தமையின் கோவிந்தன் என்னும் பெயரும் நிலைத்துவிட்டது. துன்பம் வரும்போது அனைவரும் கோவிந்தன் பெயரைச் சொல்லி அழைப்பதும் வழக்கமாகி விட்டது.
- உன்னை எவரேனும் ஏளனம் செய்து சிரித்தால், அதை ஒரு பொருட்டாகக் கருதாதே.
- எல்லா உயிரிலும் நான் உள்ளேன், என்னுள் எல்லா உயிரினங்களும் உள்ளன.
ஸ்ரீகிருஷ்ணர் வழங்கிய ஒப்பற்ற உபதேசங்களை கவனத்துடன் கேளுங்கள்.
ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார் "உன்னை எவரேனும் ஏளனம் செய்து சிரித்தால், அதை ஒரு பொருட்டாகக் கருதாதே, உடல் உணர்வை மறந்து விடு. அவமானத்தைத் தாங்கிக்கொள். மண்ணில் சாஷ்டாங்கமாக விழுந்து, மிக அற்பமாகக் கருதுகின்ற நாய், கழுதை மற்றும் சண்டாளனைக் கூட நமஸ்காரம் செய். எல்லா உயிரிலும் நான் உள்ளேன், என்னுள் எல்லா உயிரினங்களும் உள்ளன. என்னைச் சரணாகதி அடைந்துவிடு. எனக்காகவே எல்லா கர்மங்களையும் செய். பற்றுகளிலிருந்து விலகி விடு. தடையில்லாத, தடுமாற்றம் இல்லாத பக்தியினை என் மீது வை. எனது புகழ்பாடு".
- இப்போதெல்லாம் ஏழைகளை, நண்பனாக ஏற்றுக்கொள்ளவே தயங்குகின்றனர். ஆனால் கண்ணன் அப்படியல்ல.
- கண்ணன் தன்படுக்கையில் இருந்து எழுந்து ஓடோடிச்சென்று வரவேற்றான்.
எல்லாரும் கண்ணனின் திருவடிகளை வணங்குவார்கள். ஆனால் கண்ணன் ஒரு பக்தரின் கால்களை தடவியே கொடுத்துள்ளான். அந்த பாக்கியம் பெற்றவர் குசேலர்.
இப்போதெல்லாம் ஏழைகளை, நண்பனாக ஏற்றுக்கொள்ளவே தயங்குகின்றனர். ஆனால் கண்ணன் அப்படியல்ல. எப்போதோ தன்னுடன் படித்த ஏழை குசேலரை அவன் மறக்கவில்லை. தன்னைக்காண குசேலர் வந்துள்ளார் எனத்தெரிந்ததும், கண்ணன் தன்படுக்கையில் இருந்து எழுந்து ஓடோடிச்சென்று வரவேற்றான். இத்தனைக்கும் அவன் துவாரகாபுரிக்கு மன்னன்.
குசேலரின் திருவடியை வணங்கினான். கால்கள் தேய இவ்வளவு தூரம் நடந்து வந்தாயா? எனக்கேட்டு, உனது திருவடிகள் இவ்வளவு தூரம் நடந்ததால் காய்த்துப்போய் விட்டதே! என்று சொல்லி அவற்றை வருடினான்.
கண்ணணின் அன்பை கண்ட குசேலர் மெய்மறந்து போனார்.
இப்படிப்பட்ட நண்பனிடம் தனக்கென எதுவும் கேட்காமலேயே திரும்பினார் குசேலர்.
- யமுனைக்கரையில் உள்ள ஆயர்பாடியில் கண்ணன், குழந்தையாக இருந்தபோது வெண்ணெய் திருடி உண்பான்.
- கண்ணா! நான் மோட்சம் பெற காரணமாக இருந்த இந்த தாழிக்கும் விமோசனம் கொடு! என்றான். கண்ணன், தாழிக்கும் விமோசனம் கொடுத்தான்.
நமக்கு உதவி செய்தவர்களை என்றுமே மறக்கக்கூடாது என்பதற்கு கண்ணன் கற்றுத்தரும் ஒரு நிகழ்ச்சி.
யமுனைக்கரையில் உள்ள ஆயர்பாடியில் கண்ணன், குழந்தையாக இருந்தபோது வெண்ணெய் திருடி உண்பான். ஒருமுறை வெண்ணெய் திருடியபோது அவனை யசோதை பார்த்து விட்டாள். கையும் களவுமாக சிக்கியதால், அவளிடம் அடிவாங்கப் பயந்து தப்பி ஓடினான். ததிபாண்டன் என்ற நண்பனின் வீட்டுக்குள் சென்று விஷயத்தைச் சொன்னான். ததிபாண்டன் ஒரு தாழியை அவன் மீது கவிழ்த்து வைத்துவிட்டான்.
கண்ணனை தேடிய யசோதை அங்கு வந்தாள். ததிபாண்டனிடம் விசாரித்தபோது, கண்ணன் இங்கு வரவில்லையே என்று சொல்லி விட்டான். யசோதை சென்ற பிறகு. கண்ணன் தன்னை மூடிவைத்திருந்த தாழியை எடுக்கச் சொன்னான். ஆனால், ததிபாண்டன் மறுத்துவிட்டான்.
அவன் கண்ணனிடம், கண்ணா! நீ தெய்வம் என்பதை நான் அறிவேன் எனக்கு நீ பிறப்பற்ற நிலையைத் தந்தால்தான் உன்னை விடுவேன் என்றான்.
கண்ணனும், சரி! நீ கேட்டதைத் தந்துவிட்டேன். என்னை விடு! என்றான்.
- கோவிந்தா எனும் சொல்லுக்கு வேறொரு பொருளும் உண்டு.
- கோ என்றால் பசு இந்தா என்றால் வாங்கிக்கொள் என்று பொருள் வரும்.
கோவிந்தா என்று சொன்னால் போனது வராது என்று பொருள்படும் இதனால்தான் கடன் வாங்கியவன், திருப்பித்தராமல் ஏமாற்றி விட்டால், பணம் கோவிந்தா தானா? என கேட்கும் வழக்கம் வந்தது.
கோவிந்தா எனும் சொல்லுக்கு வேறொரு பொருளும் உண்டு. இதை கோ இந்தா என்றும் பிரிக்கலாம். அப்போது கோ என்றால் பசு இந்தா என்றால் வாங்கிக்கொள் என்று பொருள் வரும்.
கோவிந்தா... கோவிந்தா... என சொல்லச்சொல்ல பசு தானம் செய்த புண்ணியம் கிடைத்துக்கொண்டே இருக்குமாம். எப்போதும் கோவிந்த நாமம் சொல்லிக்கொண்டே இருங்கள். பசுக்களுடன் விளையாடி மகிழ்ந்த கிருஷ்ணனின் அருள் பூரணமாகக் கிடைக்கும்.
- கண்ணன் துளசி மாலை அணிந்திருப்பான்.
- கண்ணன் நாகங்களுடன் விளையாடுபவன். ஐந்து தலை நாகத்தின் மீதேறி நடனம் ஆடியவன்.
கண்ணன் துளசி மாலை அணிந்திருப்பான். விஷத்தை முறித்து, உடலுக்கு வெப்பத்தை தரும் சக்தி துளசிக்கு உண்டு.
கண்ணன் நாகங்களுடன் விளையாடுபவன். ஐந்து தலை நாகத்தின் மீதேறி நடனம் ஆடியவன். குளிர்ந்த மேனியன். எனவே தான், கண்ணன் துளசி மாலை அணிந்து கொள்வான்.
வீடுகளின் பின்பக்கத்தில் துளசிமாடம் அமைப்பதும் இதனால்தான். பூச்சிகள் நுழையாமல் தடுக்க, வீட்டின் பின்புறத்தில் துளசிமாடம் வைத்து, அதனை வழிபட்டார்கள்.
- கிருஷ்ண வழிபாடு நம் நாட்டில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. கிருஷ்ணனைப் பற்றிய மிகப் பழமை வாய்ந்த ஆதாரம் ரிக்வேதத்தில் உள்ளது.
- யமுனை ஆற்றங்கரையில் கிருஷ்ண வழிபாடு இருந்ததாக மெகஸ்தானிஸ் தனது வரலாற்று குறிப்புகளில் எழுதியுள்ளார்.
* கிருஷ்ண வழிபாடு நம் நாட்டில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. கிருஷ்ணனைப் பற்றிய மிகப் பழமை வாய்ந்த ஆதாரம் ரிக்வேதத்தில் உள்ளது. இந்திரனுடன் கிருஷ்ணர் போரிட்டதாக அச்செய்தி தெரிவிக்கிறது.
* சாந்தோக்ய உபநிஷத்தில் கிருஷ்ணன் தேவகியின் மகன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
* அர்த்த சாஸ்திரத்தை எழுதிய சாணக்கியர், மருத்துவ தொழிலை தொடங்குபவர்கள் கிருஷ்ணனை வழிபட்ட பிறகே தொடங்க வேண்டும் என கூறியுள்ளார்.
* அலெக்சாண்டருடன் போரிட்டு வென்ற போரஸ் (புருஷோத்தமர்) தனது படைகளுக்கு முன்னாள் கிருஷ்ணனின் உருவத்தை நிறுத்தியிருந்தார். போரில் வெற்றி பெற கிருஷ்ணனே காரணம் என கருதினார்.
* யமுனை ஆற்றங்கரையில் கிருஷ்ண வழிபாடு இருந்ததாக மெகஸ்தானிஸ் தனது வரலாற்று குறிப்புகளில் எழுதியுள்ளார்.
* சிலப்பதிகாரத்தில் கிருஷ்ணனின் அண்ணன் பலராமன் என்றும், மனைவி நப்பின்னை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நப்பின்னை யாதவர் குலத்தைச் சேர்ந்தவள் என்றும், ராதையை கிருஷ்ணனின் காதலி என்றும், ராதை மற்றும் ருக்மணியை விட நப்பின்னை மேன்மையானவள் என்றும் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. நப்பின்னையை ஆழ்வார்களும் பாராட்டியுள்ளனர்.
* ஒரு சமயம் அசுரர்கள் சூரியனை தடுத்து மறைத்து விட்டால் பூமி இருளடைந்து தவித்தது. அப்போது கிருஷ்ண பரமாத்மா சூரியனை ஆகாயத்தில் நிலைக்கச் செய்ததாக புறநானூறு குறிப்பிடுகிறது.






