என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாண்டவர்கள்"

    • பாண்டவர்கள் சார்பில் பகவான் கிருஷ்ணர், கவுரவர்கள் இருக்கும் அஸ்தினாபுரத்துக்கு தூது சென்றார்.
    • ஆலயம் கிழக்கு நோக்கிய நிலையில் மூன்று நிலை ராஜகோபுரங்களுடன் காட்சியளிக்கிறது.

    காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பாடகம் பகுதியில் அமைந்துள்ளது, பாண்டவதூத பெருமாள் கோவில். சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில் 108 திவ்யதேச வைணவ தலங்களில் 49-வது கோவிலாகும். இங்கு, பாண்டவர்களுக்காக துரியோதனிடம் தூது சென்ற கோலத்தில் கிருஷ்ண பகவான் 25 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார்.

    தல வரலாறு

    மகாபாரத காலத்தில், பாண்டவர்களில் மூத்தவரான தருமர், கவுரவர்கள் சூழ்ச்சியால் சூதாட்டத்தில் தன் செல்வங்களையும், நாட்டையும் இழந்தார். பின்பு கவுரவர்கள், பாண்டவர்களை 13 வருடம் வன வாசம் செல்ல செய்தனர். வனவாசம் சென்று திரும்பிய நிலையில் பாண்டவர்கள், ஐவருக்கும் 5 ஊர் இல்லையென்றாலும், 5 வீடாவது தர வேண்டும் என்று கிருஷ்ணரிடம் முறையிட்டனர்.

    இதையடுத்து பாண்டவர்கள் சார்பில் பகவான் கிருஷ்ணர், கவுரவர்கள் இருக்கும் அஸ்தினாபுரத்துக்கு தூது சென்றார். பாண்டவர்களின் பலமே கிருஷ்ணர்தான் என்பதை அறிந்திருந்த துரியோதனன், அவரை அவமானப்படுத்த எண்ணினான். இதற்காக, அஸ்தினாபுரம் அரண்மனையில் கிருஷ்ணர் அமர்வதற்காக ஆசனம் அமைக்கப்பட்டது. அதன் முன்பாக ஆழமான பள்ளம் தோண்டப்பட்டு, அதன்மேல் பந்தலைப் போட்டு மறைத்தனர்.

    அஸ்தினாபுரம் அரண்மனைக்கு வந்த கிருஷ்ண பகவான், தனக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்தார். உடனே, கிருஷ்ணர் தான் அமர்ந்த ஆசனத்துடன் பள்ளத்தில் விழுந்தார். அந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இருந்த துரியோதனன், அவரை கொல்ல காவலர்களிடம் உத்தரவிட்டார். உடனே அவரைத் தாக்க சில மல்லர்கள் முயன்றனர்.

    மல்லர்கள் பள்ளத்திற்குள் இறங்கியவுடன் கிருஷ் ணர் அவர்களை அழித்து, தன் விஸ்வரூப தரிசனத்தை காட்டி ஒங்கி உயர்ந்து நின்றார். அதைப் பார்த்த அவையில் இருந்த அனைவருமே மிரண்டு போயினர். பாண்டவர்களுக்காக தூது சென்றதால் கிருஷ்ணர், 'பாண்டவதூத பெருமாள்' என அழைக்கப்படுகிறார்.

    பாரதப் போர் முடிந்து பல ஆண்டுகள் கடந்த பிறகு, பரீட்சித்து மகாராஜாவின் மகனான ஜனமேஜயர் என்ற அரசன், வைசம்பாயனர் என்ற மகரிஷியிடம் பாரதக் கதைகளை கேட்டு வந்தார். அப்பொழுது அரசனுக்கு கிருஷ்ண பகவானின் விஸ்வரூப தரிசனம் காண வேண்டும் என்ற ஆவல் வந்தது. அவர் மகரிஷியிடம், தனக்கு கிருஷ்ண பகவானின் விஸ்வரூபத்தை காண வேண்டும் என்றும், அதற்கான வழிமுறைகளை கூறும்படியும் வேண்டினார்.

    அந்த மகரிஷியின் அறிவுரையின்படி, காஞ்சிபுரம் வந்து தவம் செய்தார், அரசர். தவத்தின் பயனாக பெரு மாள், தன் பாண்டவதூது கோலத்தை இத்தலத்தில் அருளினார். மேலும், திருதராஷ்டிரனுக்கும் கண நேரம் கண் பார்வை தந்து தனது விஸ்வரூப தரிசனத்தை இத்தலத்தில் காட்டி அருளினார் என்று கூறப்படுகிறது.

     

    கோவில் தோற்றம், கொடிமரம், பலிபீடம்

    கோவில் அமைப்பு

    ஆலயம் கிழக்கு நோக்கிய நிலையில் மூன்று நிலை ராஜகோபுரங்களுடன் காட்சியளிக்கிறது. இக்கோவில் பல்லவர்களால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. பிறகு சோழர்கள், விஜயநகர பேரரசர்களால் புனரமைக்கப்பட்டதாகவும், குலோத்துங்க சோழன், ராஜராஜ சோழன் ஆகியோரின் காலத்தில் கோவிலின் சுற்றுச்சுவர் உள்ளிட்டவைகள் எழுப்பப்பட்டு, இரண்டு குளங்கள் அமைக்கப்பட்டதாகவும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்குள்ள கல்வெட்டுகளில் பாண்டவதூத பெருமாள் 'தூத ஹரி' என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.

    கோவில் ராஜகோபுரம் நுழைவுவாசலில் பழமையான அற்புதமான சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனைத் தாண்டி பலிபீடம், கொடிமரம் காணப்படு கிறது. காஞ்சிபுரத்தில் உள்ள பழமையான வைணவ தலங்களில் ஒன்றான இக்கோலிலில் மூலவர் பாண்டவ தூதர் 25 அடி உயரத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் புன்னகையோடு காட்சி தருகிறார்.

    மூலவரான கிருஷ்ணர் பத்ர விமானத்தின் கீழ் அமர்ந்த நிலையில் காட்சி தருவது இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாத அற்புதமான காட்சியாகும். வலது காலை மடக்கி, அர்த்த பத்மாசன கோலத்தில் காட்சி தருகிறார். மற்ற கோவில்களைப் போல் நான்கு கரங்களுடன் இல்லாமல், இரண்டு திருக்கரங்களுடனேயே அருள்பாலிக்கிறார். வலது கரம் அபய முத்திரை காட்டியும், இடது கரம் வரதமுத்திரை காட்டியும் உள்ளது. பெருமாளை குனிந்து வணங்கும்போது மெய் சிலிர்ப்பதை உணர முடிகிறது.

    இத்தலத்தில் திருமாலின் உற்சவர் சிலைகளில் ஸ்ரீதேவி பூதேவிக்கு பதிலாக ருக்மணி, சத்தியபாமா இருவரும் எழுந்தருளியுள்ளனர். ஆண்டாள் நாச்சியார், நர்த்தன கண்ணன், சுதர்சனர் ஆகிய உற்சவ மூர்த்திகளையும் கருவறையில் காணலாம்.

    இக்கோவிலில் உள்ள அர்த்த மண்டபத்தில் ஆழ்வார்கள், ராமானுஜர் உள்ளிட்டோரை தரிசிக்கலாம். மூலவருக்கு தெற்குபுறம் ருக்மணிக்கு தனிச் சன்னிதி உள்ளது. வெளிப் பிரகாரத்தில் சக்கரத்தாழ்வாரின் பின்புறத்தில் தனிச் சன்னிதியில் நரசிம்மர் காட்சி அளிக்கிறார். கோவிலின் வடகிழக்கு பகுதியில் மத்ஸ்ய தீர்த்தம் உள்ளது. பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் இத்தல இறைவனை மங்களாசாசனம் செய்துள்ளனர்.

    திருவிழாக்கள்

    கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, முக்கோடி ஏகாதசி, பங்குனி உத்திரம், கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தில் சாற்று முறை உற்சவம் ஆகிய விழாக்கள் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

    பாண்டவர்களுக்கு கிருஷ்ணன் கூடவே இருந்து உதவி செய்தது போல், இத்தலத்து இறைவனை வணங்கினால் கஷ்டப்படும் பக்தர்களை கை கொடுத்து காப்பார் என்பது நம்பிக்கையாக உள்ளது. கிருஷ்ணன், இத்தலத்தில் தன் பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வபாதயோக சக்திகளை கொண்டு அருளும் தலமாக இருப்பதால் இங்கு அடிப்பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்ப ர்களின் 72,000 அங்கநாடிகளும் துடிப்புடன் செயல்பட்டு சோதனைகளும், துன்பங்களும் விலகும் என்பது நம்பிக்கை.

    பாண்டவதூத பெருமாளை வணங்குபவர்களுக்கு காரியத் தடை, திருமணத் தடை நீங்குவதோடு ஆனந்த வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் பக் தர்கள் தரிசனம் செய்வதற்காக கோவில் நடை திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    காஞ்சிபுரத்தில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு ஏராளமான பேருந்து, ஆட்டோ வசதிகள் உள்ளன.

    • நமது குடும்ப விழாக்களுக்கு உறவு குடும்பங்கள் கூடி வந்தால் தான் பெருமை.
    • கவுரவர்கள் சூழ்ச்சியால் வனவாசம் சென்றார்கள் பாண்டவர்கள்.

    சகோதரர் ஒற்றுமையை ஓங்க செய்யும் பெரம்பலூர் மதனகோபால சுவாமி

    தனிமரம் தோப்பாகாது என்பார்கள்.

    குடும்பங்கள் கூடி வாழ்வது தான் கோடி நன்மை தரும்.

    நமது குடும்ப விழாக்களுக்கு உறவு குடும்பங்கள் கூடி வந்தால் தான் பெருமை.

    வாழும் போது வாழ்த்துவதும், வீழும் போது தாங்கி பிடிப்பதும் சொந்த, பந்தங்கள்தான்.

    ஆனால் குடும்பங்களுக்குள் தான் எத்தனை பிரச்சனை. உறவு குடும்பங்களுக்குள் பிரச்சினை வருவது இன்று, நேற்று நடப்பது அல்ல.

    புராண காலத்தில் இருந்தே அது தொடர்கிறது.

    அதிலும் சகோதர குடும்பங்களுக்குள் எழுந்த பகையால் பஞ்ச பாண்டவர்கள் பட்ட பாடு அனைவரும் அறிந்ததே.

    அந்த பாண்டவர்களே தங்கள் குடும்பத்தில் அமைதி நிலவ, சகோதர ஒற்றுமை ஓங்கிட வேண்டி நின்ற ஒரு கோவில் தமிழகத்ததில் உள்ளது.

    பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோவில் தான் அது.

    சாபம் ஒன்றினால் புலியாகத் திரிந்த வியாக்ரம மகரிஷியின் சாபம் விலகிய தலம் வியாக்ரபுரம்...!

    யார் அந்த முனிவர்? அவருக்கு என்ன சாபம்?

    துர்வாசரின் சீடராக இருந்த ஒரு முனிவர், ஒரு சமயம் கவனக் குறைவால் தம் குருநாதரின் கமண்டலத்தில் இருந்த நீரைத் தட்டிவிட்டார்.

    அதனால் கோபமடைந்த துர்வாசர். அவரைப் புலியாக மாறும்படி சபித்தார்.

    பதறிப்போனார் சீடர். மன்னிக்கும்படி வேண்டினார்.

    சாபம் விட்டது விட்டதுதான் அதை மாற்ற முடியாது. ஆனால் விமோசனம் சொல்கிறேன்.

    புலியாக நீ உலாவும் பகுதிக்கு பஞ்சபாண்டவர்கள் வருவார்கள்.

    அப்போது பீமனின் கதை யால் நீ அடிபடுவாய்.

    அந்த சமயத்தில் உன் சாபம் விலகும் என்றார் துர்வாசர். சாபம் பலித்து சீடன் புலியாகித் திரிந்தான்.

    பூர்வ ஜென்ம வாசத்தால், அக்காட்டிலிருந்த பெருமாளைத் துதித்தான்.

    கவுரவர்கள் சூழ்ச்சியால் வனவாசம் சென்றார்கள் பாண்டவர்கள்.

    அப்போது ஒரு முனிவர் அவர்களைச் சந்தித்தார். உங்களின் இந்த நிலைக்குக் காரணம் தீவினை பாவம்தான்.

    அது தொலைய தீனரட்சகனான புருஷோத்தமனை பூஜிக்க வேண்டும் என்றார்.

    புருஷோத்தமனை பூஜிக்க தொடங்கினார்கள் பாண்டவர்கள்.

    ஒருநாள் பூஜைக்குத் தேவையான நீரை எடுக்க ஆற்றங்கரைக்கு சென்ற பாஞ்சாலி, தண்ணீர் எடுக்காமலே பதற்றத்துடன் ஓடிவந்தாள்.

    அவளை ஆசுவாசப்படுத்திய பீமன், அவளது அச்சத்திற்கு காரணம் கேட்டான்.

    பெரிய புலி ஒன்று துரத்துவதுதான் தன் கிலிக்குக் காரணம் என்றாள், பாஞ்சாலி. உடனே கதையுடன் புறப்பட்டான் பீமன்.

    தவறவிட்ட நோஞ்சானான பெண்ணுக்கு பதில், திடகாத்திரமான ஆண்... கொழுத்த வேட்டை என்று பாய்ந்தது புலி.

    அடுத்த கணம் அதன் தலையில் இடி போல் விழுந்தது ஓர் அடி. மரண ஓலம் எழுப்பிய புலி, கீழே விழுந்து துடித்தது, துவண்டது.

    சட்டென்று முனிவராக மாறி எழுந்தது. புலி பாய்ந்தபோது துணிவுடன் நின்ற பீமன், அது முனிவராக மாறியதும் அதிர்ந்தான்.

    பெரும் தவறு செய்துவிட்டதாக பயந்தான். மன்னிப்பு வேண்டிப் பணிந்தான்.

    கனிவுடன் அவனைப் பார்த்த முனிவர், தமது சாபம் விலகிய கதையை அவனுக்குச் சொன்னார்.

    தனக்கு நன்மை செய்த அவனுக்கு வீரம் பன்மடங்காகப் பெருக வரம் அளித்தார்.

    வியாக்ரம் என்றால் புலி என்று அர்த்தம். முனிவர் புலிவடிவில் இருந்ததால், அந்தத் தலம் வியாக்ரமபுரம் என்றானது.

    தமிழில் பெரும் புலிவனம் பெரும்புலியூர், அதுவே மருவி பெரம்பலூர் ஆகிவிட்டது.

    வழிபாடு செய்த பாண்டவர்களுக்கு வரம் தர வந்தார் வாசுதேவன். அவர்கள் துன்பம் தீர அருளினார்.

    வினை தீர்க்க வந்த வேணு கோபாலா, இத்தலத்தில் நீங்கள் நிரந்தரமாக வாசம் செய்திடவேண்டும்.

    எங்க ளுக்கு இந்தத் துன்பங்கள் வந்ததற்கு முக்கியமான கார ணம், உறவினர்களிடையே ஒற்றுமை இல்லாமல் போனது தான்.

    எனவே இங்கே வந்து உம்மை வணங்குவோரின் இல்லறம் நல்லறமாக அருள வேண்டும் என வேண்டினார்கள் பாண்டவர்கள்.

    பாண்டவர்களுக்கு அருளிய அதே வாசுதேவன், மதன கோபாலசுவாமியாக இன்றும் இங்கு அருள் பாலிக்கிறார்.

    தினமும் ஏராளமான மக்கள் தங்கள் சகோதர ஒற்றுமைக்கும், குடும்ப அமைதிக்கும் கோபாலனை வணங்கி செல்கின்றனர்.

    • மகாவிஷ்ணு எடுத்த 9 வது அவதாரம் கிருஷ்ண அவதாரமாகும்.
    • ஸ்ரீ கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கிருஷ்ணா... கிருஷ்ணா என்றால் இன்பம் வரும்

    மகாவிஷ்ணு எடுத்த 9 வது அவதாரம் கிருஷ்ண அவதாரமாகும்.

    ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரத் தினத்தை ஆண்டு தோறும் பக்தர்கள் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடுகிறார்கள்.

    இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி தினம் செப்டம்பர் 6 மற்றும் 7ந் தேதிகளில் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.

    ஸ்ரீ கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    எனவே கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று நள்ளிரவு வழிபாடு நடத்துவது மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

    கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று, அவரது சக்தி ஆயிரம் மடங்கு அதிகரிப்பதாக ஐதீகம்.

    எனவே கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று இரவு, "ஓம் நமோ பகவதே வாசுதேவாய" என்று 108 தடவை அல்லது 1008 தடவை சொல்லி வழிபட்டால் கிருஷ்ண பகவானின் அருள் பரிபூரணமாய் நமக்கு கிடைக்கும்.

    மேலும் கிருஷ்ணரை வழிபடும் போது மறக்காமல் "பஜகோவிந்தம்" பாட வேண்டும்.

    ஆதிசங்கரர் தான் சென்ற இடங்களில் எல்லாம் பஜகோவிந்தம் பாடுங்கள் என்பதை வலியுறுத்தி கூறினார்.

    • கம்சன் வளர்ந்ததும், தன் சொந்த தந்தையை சிறையில் அடைத்து, அரசனாக முடிசூடினான்.
    • அவரது சகோதரி தேவகி அரசர் வாசுதேவர் என்பவரை மணந்தார்.

    கிருஷ்ணர் பிறந்த கதை

    நீண்ட காலத்திற்கு முன்பு, பண்டைய இந்தியாவில், உக்ரசேனன் என்ற அரசன் இருந்தான்.

    அவருக்கு இளவரசர் கம்சன் மற்றும் இளவரசி தேவகி என இரண்டு குழந்தைகள் இருந்தனர்.

    இளவரசர் கம்சன் இயல்பிலேயே கெட்டவர்.

    கம்சன் வளர்ந்ததும், தன் சொந்த தந்தையை சிறையில் அடைத்து, அரசனாக முடிசூடினான்.

    விரைவில், அவரது சகோதரி தேவகி அரசர் வாசுதேவர் என்பவரை மணந்தார்.

    திருமணத்திற்குப் பிறகு, கம்சன் வானத்திலிருந்து ஒரு தெய்வீக அசரீரியைக் கேட்டான்,

    "அரசே! உன் சகோதரியின் எட்டாவது மகன் உன்னைக் கொல்லும் அளவுக்கு வளர்வான்" என்று, இதைக் கேட்டு பயந்த கம்சன் தனது சொந்த சகோதரி தேவகி மற்றும் அவரது கணவர், மன்னர் வாசுதேவ் ஆகியோரை உடனடியாக சிறையில் அடைத்து, தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருந்தான்.

    வருடங்கள் கடந்தன. ஒவ்வொரு முறையும் தேவகி சிறையில் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் போது, கம்சன் வந்து குழந்தையைத் தன் கைகளால் கொன்றான்.

    எட்டாவது முறையாக தேவகி கருவுற்றபோது, வசுதேவரின் நண்பன் மன்னன் நந்தனின் மனைவி யசோதாவும் கர்ப்பமாக இருந்தாள்.

    எட்டாவது குழந்தை, பகவான் கிருஷ்ணர், சிறையில் நள்ளிரவில் ராணி தேவகிக்கு பிறந்தார்.

    • பகவான் கிருஷ்ணர் பிறந்தவுடன் வாசுதேவருக்கு ஒரு தெய்வீக செய்தி வந்தது.
    • நதி இரண்டாகப் பிரிந்து தெய்வீக குழந்தைக்கு வழிவிட்டது.

    கிருஷ்ணருக்கு வழிவிட்ட யமுனை

    குழந்தை பிறந்தவுடன், மகாவிஷ்ணு தனது தெய்வீக வடிவில் தோன்றினார், சிறைச்சாலை ஒரு திகைப்பூட்டும் ஒளியால் நிரப்பப்பட்டது.

    தேவகி மற்றும் வசுதேவ் இருவரும் விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்தனர்.

    கிருஷ்ணர் சிறையில் பிறந்த அதே நேரத்தில், ராணி யசோதா கோகுலத்தில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

    பகவான் கிருஷ்ணர் பிறந்தவுடன் வாசுதேவருக்கு ஒரு தெய்வீக செய்தி வந்தது,

    "கோகுலத்திற்கு சென்று யசோதாவின் குழந்தைக்கு பதில் இந்த குழந்தையை வைத்துவிட்டு யசோதா நந்தகோபரின் குழந்தையை எடுத்து கொண்டு, இந்தக் குழந்தை பிறந்தது யாருக்கும் தெரியும் முன் நீ திரும்பி வந்துவிடு" என்றார்.

    வாசுதேவர் உடனடியாக அறிவுரையைப் பின்பற்றினார்.

    கைக்குழந்தையுடன் அவர்களை நோக்கிச் செல்லும்போது சிறைக் கதவுகள் தானாகத் திறந்தன.

    தெய்வீக தலையீட்டால் காவலர்கள் ஏற்கனவே தூங்கிவிட்டனர்.

    கடுமையான காற்று மற்றும் மழை காரணமாக மிகவும் கொந்தளிப்பான யமுனை நதியை வாசுதேவர் நெருங்கினார்.

    வாசுதேவர் ஆற்றங்கரையை அடைந்தவுடன், நதி இரண்டாகப் பிரிந்து தெய்வீக குழந்தைக்கு வழிவிட்டது.

    வாசுதேவர் பத்திரமாக ஆற்றின் எதிர் கரையை அடைந்தார், கோகுல மக்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைக் கண்டார்.

    மன்னன் நந்தா மற்றும் ராணி யசோதாவின் அரண்மனைக்குள் நுழைந்து யசோதாவின் பெண் குழந்தை இடத்தில் ஆண் குழந்தையை வைத்தார்.

    பின்னர் அங்குள்ள பெண் குழந்தையுடன் சிறைக்கு திரும்பினார்.

    வாசுதேவர் பெண் குழந்தையை தேவகியின் அருகில் வைத்தவுடன், சிறைக் கதவுகள் தானாக மூடப்பட்டன.

    காவலாளிகள் இப்போது விழித்திருந்து, பெண் குழந்தையின் அழுகையால் திடுக்கிட்டனர்.

    காவலர்கள் கம்சனிடம் ஓடி சென்று எட்டாவது குழந்தை பிறந்ததை அறிவித்தனர்.

    உடனே, கம்சன் குழந்தையை தூக்கிலிட சிறைச்சாலைக்கு விரைந்தான்.

    • ஒவ்வொரு கையும் ஒரு ஆயுதம் ஏந்திய தெய்வமாக வானத்தில் தோன்றினாள்.
    • இதற்கிடையில் கோகுலத்தில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது.

    துர்க்கையாக மாறிய பெண் குழந்தை

    எட்டாவது குழந்தையை அழிக்க வேண்டும் என சிறைச்சாலைக்கு சென்ற கம்சனிடம், தேவகி, "கம்சனே, இந்த குழந்தை பெண் குழந்தை , தெய்வீக எச்சரிக்கை சொன்ன ஆண் குழந்தை அல்ல. இந்தக் குழந்தை உங்களுக்கு எப்படித் தீங்கு செய்யும்?" இதனை விட்டுவிடுங்கள் என கலங்கி முறையிட்டாள்.

    ஆனால் கம்சன் அவளை அலட்சியப்படுத்தி, குழந்தையை அவள் மடியில் இருந்து பிடுங்கி, குழந்தையை சிறைச் சுவரில் வீசினான்.

    குழந்தை கீழே விழவில்லை; அதற்கு பதிலாக அவள் பறந்து சென்று எட்டு கரங்களுடன், ஒவ்வொரு கையும் ஒரு ஆயுதம் ஏந்திய தெய்வமாக வானத்தில் தோன்றினாள்.

    அவள், "பொல்லாத கம்சனே! என்னைக் கொல்வதால் உனக்கு எந்தப் பலனும் கிடைக்காது. உன்னை அழிப்பவன் வேறொரு இடத்தில் வளர்கிறான்" என்று கூறி தேவி மறைந்தாள்.

    இதற்கிடையில் கோகுலத்தில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது.

    மன்னன் நந்தனின் மகன் பிறந்ததை அனைவரும் கொண்டாடினர்.

    நந்தன் அந்த குழந்தைக்கு கிருஷ்ணன் என்று பெயரிட்டார்.

    அன்று முழுக்க கோகுலம் ஒரு பண்டிகை தோற்றத்தில் இருந்தது.

    தெருக்கள் துடைக்கப்பட்டு, அனைத்து வீடுகளும் கொடிகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டன.

    பசுக்களுக்கு மஞ்சள் பூசி, மயில் தோகை மற்றும் மாலைகள் அணிவித்தனர்.

    கோகுல மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் நடனமாடி, குழந்தை கிருஷ்ணனைப் பார்க்கவும், பரிசுகளை வழங்கவும் நந்தாவின் வீட்டிற்கு திரண்டனர்.

    பகவான் கிருஷ்ணர் பிறந்த கதை, கடவுள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர் மற்றும் அன்பானவர் என்பதைக் காட்டுகிறது.

    கம்சனின் துன்மார்க்க ஆட்சியின் போது நடந்ததைப் போல, இந்த உலகில் தீமை தாங்க முடியாததாக மாறும் போதெல்லாம், கடவுள் கிருஷ்ணரைப் போல ஒரு அவதார வடிவில் நம்மைக் காப்பாற்ற வருகிறார்.

    • இரவில் கிருஷ்ணரை பூஜித்து கண் விழித்து இருந்து அவரது வரலாறை கேட்க வேண்டும்.
    • அப்போது பூவின் காம்பு கிருஷ்ணரை நோக்கி இருக்க செய்ய வேண்டும்.

    கிருஷ்ண ஜெயந்தி-கிருஷ்ணரை வழிபடும் முறை

    சரி கிருஷ்ண பரமாத்மாவை மிக எளிமையாக வழிபடுவது எப்படி என்பதைப் பார்க்கலாம்

    கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கணவன், மனைவி இருவரும் விரதம் இருக்க வேண்டும்.

    பகலில் விரதம் இருக்க வேண்டும்.

    இரவில் கிருஷ்ணரை பூஜித்து கண் விழித்து இருந்து அவரது வரலாறை கேட்க வேண்டும்.

    மறுநாள் மீண்டும் கிருஷ்ணரை பூஜித்து வழிபட்டு, அன்னதானம் செய்ய வேண்டும்.

    அதன் பிறகு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

    கிருஷ்ணருக்கு பூக்களை அர்ப்பணிக்கும்போது மூன்று அல்லது மூன்றின் பெருக்குத் தொகை எண்ணிக்கை உள்ள பூக்களை அர்ப்பணிக்க வேண்டும்.

    அப்போது பூவின் காம்பு கிருஷ்ணரை நோக்கி இருக்க செய்ய வேண்டும்.

    ஸ்ரீ கிருஷ்ணரை மூன்று முறை பிரதட்சணம் செய்ய வேண்டும்.

    கிருஷ்ணரின் கையில் உள்ள சுதர்சன சக்கரம் மிகவும் மகிமை வாய்ந்தது.

    அதன் ஆற்றல் அளவிட முடியாதது.

    எனவே சுதர்சன சக்கரத்தையும் மறக்காமல் வழிபட வேண்டும்.

    • நர்த்தனம் புரிபவர் காளிங்க கிருஷ்ணன் ஆவார்.
    • ராதையுடன் நிற்பவர் ராதா கிருஷ்ணன்.

    கிருஷ்ணரின் எட்டு வடிவ கோலங்கள்

    கிருஷ்ண பரமாத்மா மொத்தம் 8 வகையாக பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம் சந்தான கோபால கிருஷ்ணர் கோலமாகும்.

    தவழும் கோலத்தில் இருப்பவர் பாலகிருஷ்ணன்.

    நர்த்தனம் புரிபவர் காளிங்க கிருஷ்ணன் ஆவார்.

    ராதையுடன் நிற்பவர் ராதா கிருஷ்ணன்.

    ருக்மணி, சத்யபாமாவுடன் இருப்பவர் முரளீதரன்.

    அஷ்டபுஜங்களை உடையவர் மதனகோபால்.

    கோவர்த்தனகிரியை தூக்கிப் பிடிக்கும் கோலத்தில் இருக்கும் கிருஷ்ணர் கோவர்த்தனதாரி ஆவார்.

    அர்ச்சுனனுக்கு கீதை உபதேசிக்கும் கோலத்தில் இருப்பவர் பார்த்தசாரதி.

    கிருஷ்ணரை இப்படி எந்த கோலத்திலும் வழிபடலாம்.

    ஆனால் கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணரின் காலடி சுவட்டை கோலமாக வரைந்து வழிபட்டால், வீடே கோகுலமாக மாறி விட்டதுபோன்ற பக்தி உணர்வு நம் மனதில் ஆழமாக பதிந்து விடும்.

    • இப்படி பாதம் வரைவதில் சைவ, வைணவ ஒற்றுமை இருப்பதாக சொல்கிறார்கள்.
    • கோவிந்தா என்ற சொல்லுக்கு “கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன்” என்று பொருளாகும்.

    சைவ வைணவத்தை இணைக்கும் கிருஷ்ணர் பாதம்

    கிருஷ்ணர் சிறுவனாக இருந்தபோது வெண்ணை திருடி தின்றார்.

    அப்போது வெண்ணை சிதறி அவர் கால்களில் விழுந்தது.

    அதோடு கிருஷ்ணர் நடந்ததால், கிருஷ்ணர் கால் தடம் பதிந்தது.

    அதை நினைவு படுத்தவே கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று மாவால் கிருஷ்ணரின் கால் சுவடு பதிக்கப்படுகிறது.

    மேலும் இது நம் வீட்டுக்கு கிருஷ்ணர் வருவதை குறிக்கிறது.

    இப்படி பாதம் வரைவதில் சைவ, வைணவ ஒற்றுமை இருப்பதாக சொல்கிறார்கள்.

    குழந்தைகளின் பாத வடிவ சுவடு பார்ப்பதற்கு 8 போன்று இருக்கும். அதற்கு மேல் 5 விரல் பதிவுகள் இருக்கும்.

    இதில் 8 என்பது "ஓம் நமோ நாராயணா" என்ற மந்திரத்தையும், 5 என்பது "நமசிவாய" என்ற மந்திரத்தையும் பிரதிபலிக்கிறது.

    இப்படி எல்லாருக்கும் அருளும் கிருஷ்ணரை வழிபடும்போது, "கோவிந்தா"என்று சொல்லி வழிபடுவது மிகுந்த பலன்களைத் தரும்.

    கோவிந்தா என்ற சொல்லுக்கு "கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன்" என்று பொருளாகும்.

    யார் ஒருவர் கிருஷ்ணரை கோவிந்தா, கோவிந்தா என்று சொல்லி வணங்குகிறார்களோ., அவர்களுக்கு பசுதானம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

    • இப்படி வேடமிடும் குழந்தைகள் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.
    • குழந்தைகளுக்கு மூர்க்கக் குணம் வராது.

    கிருஷ்ண வழிபாட்டு பலன்கள்

    கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று சிறுவர், சிறுமிகளை மறக்காமல் கிருஷ்ணரை வழிபட செய்ய வேண்டும்.

    அவர்கள் கிருஷ்ணரின் கதைகளை சொல்லி வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

    கிருஷ்ணரை வழிபட, வழிபட மாணவர்களுக்கு பாடங்களை திட்டமிட்டு படிக்கும் புத்திசாலித்தனமும், ஆற்றலும் அதிகரிக்கும்.

    பெரும்பாலான ஊர்களில் கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று சிறுவர், சிறுமிகளை கண்ணன், ராதை போன்று வேடமிட்டு ஆராதனை செய்வார்கள்.

    இப்படி வேடமிடும் குழந்தைகள் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.

    கிருஷ்ணரை வழிபட்டால் அகந்தை அகலும்.

    குழந்தைகளுக்கு மூர்க்கக் குணம் வராது.

    கிருஷ்ணரை வழிபடும் இளைஞர்கள் தர்மசீலர்களாக வாழ்வார்கள்.

    பெண்கள் கிருஷ்ணரை மனம் உருக வழிபட்டால் திருமண தடைகள் விலகி கல்யாணம் கை கூடும்.

    விவசாயிகள் கண்ணனை கும்பிட்டால் வயல்களில் விளைச்சல் பெருகும்.

    மாடுகள் எண்ணிக்கை பெருகி கடன்கள் தீரும்.

    தொழில் அதிபர்கள் கிருஷ்ணனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தால் புகழ் உண்டாகும்.

    தன்னை நாடி வரும் அரசியல்வாதிகளின் நிர்வாக திறமையை கிருஷ்ணர் அதிகரிக்க செய்வார்.

    கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணனுக்கு மிகவும் பிடித்த சீடை, அகல், லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, வெண்ணை, பால் கோவா போன்றவைகளை படைத்து வழிபட வேண்டும்.

    கிருஷ்ண நாமத்தை உச்சரித்தப்படி கோகுலாஷ்டமியை கொண்டாட வேண்டும்.

    யார் ஒருவர் கிருஷ்ணரை ஸ்தோத்திரங்களால் துதித்து வணங்குகிறார்களோ, அவர் நாமத்தையே உச்சரித்தப்படி இருக்கிறார்களோ, அவர்களுக்கு புண்ணிய உலகை சென்று அடையும் பாக்கியம் கிடைக்கும்.

    • இந்த விழாவின் பின்னணியில் ஒரு தத்துவம் உள்ளது.
    • ஆனால் பரம்பொருள் காலடியை சென்று சேருவது என்பது அவ்வளவு எளிதான விஷயமா?

    கிருஷ்ண ஜெயந்தி-உறியடி விளக்கும் வாழ்க்கை தத்துவம்

    கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில் உறியடி விழாதான் மிக பிரச்சித்தமாக நடைபெறும்.

    ஒவ்வொரு ஊரின் மரபுக்கு ஏற்ப உறியடி திருவிழா பல வகைகளாக நடத்தப்படுகிறது.

    இந்த விழாவின் பின்னணியில் ஒரு தத்துவம் உள்ளது.

    பானை என்பது பரம்பொருள்.

    அது நமக்கு எட்ட முடியாத இடத்தில் இருக்கிறது.

    பரம்பொருளின் காலடியில் ஐக்கியமாகி முக்தி அடைய வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு ஆத்மாவின் எண்ணமாக இருக்கும்.

    ஆனால் பரம்பொருள் காலடியை சென்று சேருவது என்பது அவ்வளவு எளிதான விஷயமா?

    எத்தனை, எத்தனை அலைக்கழிப்புகளில் சிக்கி அல்லாட வேண்டியதிருக்கிறது.

    லௌகீக வாழ்க்கையில், ஆசா பாசங்களுக்கு இடம் கொடுத்து அல்லல்பட வேண்டியுள்ளது.

    இந்த தடைகளையெல்லாம் மீறி, கடந்து, தட்டுத் தடுமாறி பரம்பொருளை நெருங்க வேண்டியதுள்ளது.

    அப்போது நமது சிந்தனை, செயல் எல்லாம் பரம்பொருளிடம் சென்று சேர வேண்டும் என்ற ஒரே சிந்தனையாக, உறுதியான சிந்தனையாக இருக்க வேண்டும்.

    இந்த ஒரு முக சிந்தனையே அகங்காரம் எனும் உறியடி பானையை உடைக்க வைக்கும்.

    அகங்காரம்போய்விட்டால் இறையருளும், முக்தி எனும் பாக்கியமும் தேடி வரும்.

    உறியடி திருவிழாவில் இப்படி மாபெரும் தத்துவம் இருப்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

    கிருஷ்ணர் வழிபாட்டின் ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு தத்துவத்தை கொண்டுள்ளது.

    அவற்றை உணர்ந்து, புரிந்து கிருஷ்ணரை வழிபட்டால் பரம்பொருளின் அருள் பார்வை பெற்று ஆனந்தமாக வாழலாம்.

    • மேலும் ஆலிலைக்கு ஒரு விசேஷ சக்தி உண்டு.
    • ஆலிலையில்படுத்திருக்கும் கண்ணன் நமக்கு ஒரு பாடத்தையும் போதிக்கிறான்.

    கண்ணன் ஆலிலையில் படுத்திருப்பது ஏன்?

    தாவர வகைகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தை பெறுவது ஆலமரம்.

    ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து தான் தட்சிணாமூர்த்தி ஞானம் தருகிறார்.

    பொன், பொருள், குடும்ப சுகம் மட்டுமின்றி மறைந்த முன்னோர்கள் மோட்சம் பெற பிதுர் தர்ப்பணத்துக்குரிய பிண்டம் போடும் சடங்கை ஆலமரத்துக்கு கீழே அமர்ந்து தான் செய்வார்கள்.

    எனவே தான் ஞானமும் கர்மத்திற்குரிய பலனையும் தருகின்ற ஆலமரத்தின் இலையில் கண்ணன் படுத்துக் கொண்டான்.

    மேலும் ஆலிலைக்கு ஒரு விசேஷ சக்தி உண்டு.

    இது வாடினாலும் கூட நொறுங்கிப் போவதில்லை.

    சருகானாலும் கூட மெத்தை மாதிரி இருக்கும்.

    இதுவும் கண்ணன் ஆலிலையை தேர்ந்தெடுக்க ஒரு காரணம் ஆகும்.

    ஓரளவு காய்ந்த ஆலிலையின் மேல் தண்ணீர் தெளித்தால், அது இழந்த பச்சையை பெறும் சக்தி வாய்ந்தது.

    கண்ணன் வாடாத வதங்காத ஆத்மா என்பதை இதன் மூலம் நிரூபிக்கிறான்.

    ஆலிலையில்படுத்திருக்கும் கண்ணன் நமக்கு ஒரு பாடத்தையும் போதிக்கிறான்.

    அடேபக்தனே! நீ எதற்கும் கவலைப்படாதே.

    என்னைப் போலவே நீ குழந்தை உள்ளத்துடன் இருந்தால், உலக வாழ்க்கை என்ற கொடுமையான அலையால் தாக்கப்படமாட்டாய்.

    குடும்பம் என்ற சம்சாரக்கடலில் விழுந்து, தத்தளித்து அனுபவிக்கும் இன்ப துன்பங்களை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொண்டு என்னைப் போல் ஆனந்தமாய் இரு என்கிறான்.

    இது தான் கண்ணன் ஆலமர இலையில் மிதக்கும் தத்துவம் ஆகும்.

    ×