search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஆதிதிருவரங்கம் எனும் அபூர்வ ஆலயம்
    X

    ஆதிதிருவரங்கம் எனும் 'அபூர்வ ஆலயம்'

    • ஆதிதிருவரங்கம் ரங்கநாதரை பார்ப்பதே மிகப்பெரிய பாக்கியம்.
    • அவரது ஆசி இருந்தால் மட்டுமே அவரை சென்று பார்க்க முடியும் என்று சொல்கிறார்கள்.

    நாம் மேலே குறிப்பிட்ட ரங்கநாதர் ஆலயங்கள் ஒவ்வொன்றிலும் பெருமாள் விதவிதமான சயன கோலத்தில் அருள்பாலித்து வருகிறார்.

    இந்த ஆலயங்களில் உள்ள பெருமாள்கள் சுமார் 15 அடி முதல் 21 அடி வரை சயன கோலத்தில் உள்ளனர்.

    ஆனால் இந்த சயன கோல பெருமாள்கள் அனைவரையும் மிஞ்சும் வகையில் திருக்கோவிலூர் அருகே

    ஆதிதிருவரங்கத்தில் இருக்கும் பெருமாள் மிக பிரமாண்டமான சயன கோலத்தில் இருக்கிறார்.

    23 அடி நீளத்தில் அங்கு ரங்கநாதர் புஜங்க சயனத்தில் காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்.

    தமிழகத்திலேயே மிகப்பெரிய சயன கோல பெருமாள் இவர்தான். ஸ்ரீரங்கம் பெருமாளையும் விட பெரியவர்.

    ஸ்ரீரங்கம் தலம் தோன்றும் முன்பே உதித்து விட்டவர். எனவே இவரை பெரிய பெருமாள் என்று சொல்கிறார்கள்.

    ஸ்ரீரங்கத்து ரங்கநாதர் 7&வது அவதாரத்தில்தான் வந்தார்.

    ஆனால் ஆதிதிருவரங்கம் ரங்கநாதர் முதல் அவதாரத்திலேயே வந்து விட்டவர்.

    இதில் இருந்தே ஆதிதிருவரங்கம் ரங்கநாதர் முதன்மையானவர் என்பது புரியும்.

    ஆனால் தமிழகத்தில் நிறைய பேர் இந்த உண்மையை இன்னமும் உணராமலேயே இருக்கிறார்கள்

    ஆதிதிருவரங்கம் ரங்கநாதரை பார்ப்பதே மிகப்பெரிய பாக்கியம்.

    அவரது ஆசி இருந்தால் மட்டுமே அவரை சென்று பார்க்க முடியும் என்று சொல்கிறார்கள்.

    Next Story
    ×