search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாவிஷ்ணு"

    • பஞ்ச கிருஷ்ணாரண்ய ஷேத்திரத்தில், நடு நாடு என்று சொல்லப்பட்ட பகுதியில் ஆதிதிருவரங்கம் உள்ளது.
    • கிருஷ்ணர் பெயரினால் விளங்கும் காட்டில் அமைந்துள்ளதால் ‘கிருஷ்ணாரண்யம்’ என்றும் பெயர் பெற்றது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது ஆதிதிருவரங்கம்.

    இக்கோவில் முதல்யுகமாகிய கிருதாயுகத்தில் அமைக்கப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது.

    முதல்யுகம் மற்றும் முதலவதாரம் என பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளதால் இது ஆதி(முதல்) திருவரங்கம் என வழங்கப்படுகிறது.

    இக்கோவில் மூன்று முக்கிய பாக்கியங்களை பக்கதர்களுக்கு வழங்குகிறது.

    அவை முறையே வேலை, திருமணம் மற்றும் புத்திரபாக்கியம்.

    இங்குள்ள பெருமாள் சயனக்கோலத்தில் காட்சியளிக்கிறார். இதனை போகசயனம் எனக் கூறுகின்றனர்.

    போகம் என்றால் மகிழ்ச்சி (சந்தோசம்) எனப் பொருள்.

    அவரின் இந்த திருஉருவம் தமிழ்நாட்டில் உள்ள சயனக்கோலப் பெருமாள்களில் பெரியது என கூறப்படுகிறது.

    அவர் ஐந்து தலைக் கொண்ட ஆதிசேஷனின் மீது படுத்துள்ளார். அவரின் தலையை ஸ்ரீதேவி மடியில் கிடத்தியிள்ளார்.

    அவரின் கால்களில் ஒன்றை பூதேவி பிடித்துள்ளார். மற்றொரு கால் ஆதிசேஷனின் வால் மீதி வைத்துள்ளார்.

    அவரின் தோல்பட்டையை கருடபகவான் தாங்கியிருக்கிறார்.

    அவரின் இடது கை விரல்கள் 4 வேதங்களை குறிக்கின்றன. அவரின் வயிற்றிற்கு மேலாக பிரம்மன் காட்சியளிக்கின்றார்.

    இந்த நான்கு வேதங்களை பிரம்மாவிற்கு எடுத்துரைப்பதாக வருணிக்கப்படுகிறது.

    வேதங்களை உபதேசிப்பதால் இந்த காட்சியைக் கண்டால் உத்யோகப் பிராப்தம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

    மேலும் தம்பதிசமயந்தராக பெருமாள் காட்சியளிப்பதாலும் சந்திரனுக்கு சாபவிமோசனம் கொடுத்து அவர் மனைவியுடன் சேர்ந்ததால் திருமண யோகம் கிடைக்கும் எனவும், கிருதாயுகத்தில் சுரதகீர்த்தி என்னும் தொண்டை மன்னன், நாரதரின் ஆலோசைப்படி இங்கு தன் மனைவியுடன் வந்து வணங்கியதால் நான்கு ஆண்பிள்ளைகள் பெற்றதாக வரலாறுள்ளது. இதனால் புத்திரப்பாக்கியம் கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது.

    இக்கோவில் கிருஷ்ணருக்கு விருப்பமான தளமாக விளங்குகின்றது. இங்கு கிருஷ்ணர் கொடி மரம் அருகில் உயர்ந்த இடத்தில் தனிசன்னதியில் காட்சி அளிக்கின்றார். ஒரு கையில் வெண்னையும் மற்றொரு கையில் உரியோடும் தோன்றுகிறார்.

    பஞ்ச கிருஷ்ணாரண்ய ஷேத்திரத்தில், நடு நாடு என்று சொல்லப்பட்ட பகுதியில் ஆதிதிருவரங்கம் உள்ளது.

    கிருஷ்ணர் பெயரினால் விளங்கும் காட்டில் அமைந்துள்ளதால் 'கிருஷ்ணாரண்யம்' என்றும் பெயர் பெற்றது.

    தமிழ் இலக்கணம் இலக்கிய முறைப்படி காடும், காட்டைச் சார்ந்த பகுதியில் இத்திருத்தலம் உள்ளதால் இந்நிலம் முல்லை நிலம் எனப்படும்.

    காட்டை சார்ந்த பகுதியில் முழு முதற்கடவுள் 'கிருஷ்ணர்' இருப்பதனால், இத்திருத்தலத்தில் கிருஷ்ணருக்கு ஒரு தனி சன்னதி உண்டு, இது பலி பீடத்திற்கு பின்புறம் மேல் மாடியில் அமைந்துள்ளது.

    பக்தர்கள் பலி பீடத்தில் இருந்தே கிருஷ்ணரை சேவித்துக் கொள்கிறார்கள்.

    இச்சன்னதியில் பாலகிருஷ்ணர் ஒரு கையில் வெண்ணையும் மற்றொரு கையில் உரியோடும், ஆண் உருவோடு காட்சித் தருகின்றார்.

    தென்பெண்ணை ஆற்றின் தென் கரையோரம் மேட்டுப் பாங்கான பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது.

    இதன் தோற்ற மும் இதை உராய்ந் தாற்போல வடக் கிலும், கிழக்கிலும் நீர் வழிந்தோடும் பெண்ணை ஆற்றின் அழகும், மனதைக் கவர்ந்த கண் கொள்ளாக் காட்சி யாய் இன்பம் அளிக்கிறது.

    • ஆதி திருவரங்கத்தில் இருக்கும் பெருமாள் நினைத்தால்தான் இந்த தலத்துக்கு வர முடியும் என்பது ஐதீகமாகும்.
    • ஆதி திருவரங்கம் ஆலயம் முதல் யுகத்தில் உருவான வைணவ தலம் என்ற சிறப்பை பெற்றது.

    1. ஆதி திருவரங்கம் ஆலயம் முதல் யுகத்தில் உருவான வைணவ தலம் என்ற சிறப்பை பெற்றது.

    2. ஆதி திருவரங்கத்தில் இருக்கும் பெருமாள் நினைத்தால்தான் இந்த தலத்துக்கு வர முடியும் என்பது ஐதீகமாகும்.

    3. ஆலய வழிபாட்டிற்கு செல்லும் பக்தர்களிடம் இந்த ஆலயத்தின் சிறப்புகளை அர்ச்சகர்கள் சொல்லிக்கொண்டே இருப்பது சிறப்பாகும்.

    4. ஆதிதிருவரங்கம் ஆலயம் திராவிட கட்டிட கலை பாணியில் கட்டப்பட்டு உள்ளது. இங்குள்ள சிற்பங்கள் திராவிட கலையின் சிறப்புகளை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.

    5. ஆதி திருவரங்கம் ஆலயத்தை மிகப்பெரிய ஆலயம் என்றும் சொல்ல முடியாது. மிகச்சிறிய ஆலயம் என்றும் குறித்துவிடமுடியாது.

    2 பிரகாரங்களுடன் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

    6. ஆதி திருவரங்கத்தின் ஆலய சுற்றுச்சுவர்கள் மிக மிக உயரமானவை. வைணவ தலங்களில் சில ஆலயங்களில் மட்டுமே இத்தகைய உயரமான சுற்றுச்சுவரை காண முடியும்.

    7. இந்த ஆலயத்தில் பலிபீடம், கொடிமரம் ஆகிய இரண்டும் மகா மண்டபத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    8. இந்த ஆலயம் முதல் யுகத்தில் திருமாலின் முதல் அவதாரத்தை குறிக்கும் வகையில் உள்ளது. எனவேதான் இந்த ஆலயத்தை ஆதி திருவரங்கம் என்று சொல்லுகிறார்கள்.

    9. சிறப்பான வைணவ தலங்கள் 108 திவ்ய தேசம் பட்டியலில் இடம் பெற்றிருக்கும். ஆனால் இந்த தலம் திவ்ய தேச பட்டியலில் இல்லாமல் தனித்துவமாக திகழ்கிறது.

    10. ஆதி திருவரங்கம் ஆலயம் மிகச்சிறந்த பிரார்த்தனை தலமாகும்.

    • பல ஆலயங்கள் பாடல் பெற்றவை. குறிப்பாக திருக்கோவிலூர் ஆலயம் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.
    • இந்த தலங்கள் அனைத்தும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமை சிறப்பு கொண்டவை.

    ஆதி திருவரங்கம் திருத்தலத்துக்கு செல்பவர்கள் திட்டமிட்டு யாத்திரை பயணத்தை அமைத்துக் கொண்டால் திருக்கோவிலூர் மற்றும் அதை சுற்றியிருக்கும் பகுதிகளில் உள்ள பல ஆலயங்களை பார்த்துவிட்டு வர முடியும்.

    ஆதிதிருவரங்கம் ஆலயத்தில் இருந்து 10 கி.மீட்டர் சுற்றளவில் மிகப்பழமையான சைவ, வைணவ தலங்கள் உள்ளன.

    இந்த தலங்கள் அனைத்தும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமை சிறப்பு கொண்டவை.

    பல ஆலயங்கள் பாடல் பெற்றவை. குறிப்பாக திருக்கோவிலூர் ஆலயம் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.

    எனவே ஆதிதிருவரங்கம் ஆலயத்துக்கு செல்பவர்கள் அவசியம் திருக்கோவிலூர் ஆலயத்துக்கும் சென்று வாருங்கள்.

    இதில் திட்டமிடல்தான் முக்கியமானது.

    ஏனெனில் பெரும்பாலான ஆலயங்கள் மதியம் நடை மூடப்பட்டுவிடும்.

    ஆனால் ஆதிதிருவரங்கம் ஆலயத்தில் பகல் நேரத்தில் நடை மூடப்படுவதே கிடையாது.

    அதிகாலை 6 மணிக்கு திறந்தால் இரவு 8 மணிவரை அந்த ஆலயம் திறந்தே இருக்கும்.

    எனவே ஆதிதிருவரங்கம் ஆலயத்துக்கு எப்போது வேண்டுமானாலும் சென்று வரலாம்.

    மற்ற ஆலயங்களுக்கு முன்னதாக சென்றுவிட்டு மதியம் நேரத்தில் ஆதிதிருவரங்கம் ஆலயத்தில் தரிசனம் செய்யும் வகையில் உங்கள் ஆன்மிக பயணத்தை வைத்துக்கொண்டால் கூடுதலாக சில ஆலயங்களை தரிசனம் செய்யமுடியும்.

    சென்னையில் இருந்து நீண்ட தொலைவில் உள்ள பழமையான ஆலயங்களை தரிசிக்க செல்பவர்களுக்கு ஆலயம் நடை மூடப்படும் நேரம் மற்றும் குறிப்பிட்ட முகூர்த்த நேரம் முக்கியமானதாகும்.

    ஆதிதிருவரங்கத்துக்கு செல்பவர்களுக்கு இந்த பிரச்சினை இல்லை. எப்போதும் வழிபட முடியும்.

    • ரங்கநாயகி தாயாருக்கு தினமும் அபிஷேகம் நடைபெறும்.
    • இதில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

    ஆதி திருவரங்கம் ஆலயத் தில் தினமும் 2 கால பூஜை நடத்தப்படுகிறது.

    காலை 7 மணி முதல் 8.30 மணிக்குள் முதல் பூஜை நடத்தப்படும்.

    பிறகு மாலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் 2&வது பூஜை நடைபெறும்.

    மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட மாட்டாது.

    மூலவர் சிலை மூலிகை மற்றும் சுதையால் செய்யப்பட்டு இருப்பதால் அபிஷேகம் செய்யப்படுவதில்லை.

    அதற்கு பதில் சந்தனகாப்பு செய்யப்படுகிறது.

    உற்சவருக்கு தினமும் அபிஷேகம் செய்யப்படும்.

    சனிக்கிழமை தோறும் சிறப்பாக அந்த அபிஷேகத்தை நடத்துவார்கள்.

    அன்று காலை 8 மணிக்கு தொடங்கி அனைத்து அபிஷேகங்களையும் செய்வார்கள்.

    பக்தர்களும் இந்த சிறப்பு பூஜையில் பங்கேற்கலாம்.

    ரங்கநாயகி தாயாருக்கு தினமும் அபிஷேகம் நடைபெறும்.

    இதில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இந்த அபிஷேக தரிசனத்தை செய்தால் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    • திருக்கோவிலூர் ஆதிதிருவரங்கம் ஆலயத்தில் ரங்கநாதர் புஜங்க சயன கோலத்தில் இருக்கிறார்.
    • இவர் முதல் யுகத்தில் அவதாரம் எடுத்தவர்.

    பொதுவாக பெருமாள் 8 விதமான சயன கோலத்தில் காட்சி அளிப்பார்.

    உத்தான சயனம், தர்ப்ப சயனம், தல சயனம், புஜங்க சயனம், யோக சயனம், மாணிக்க சயனம், வடபத்ர சயனம், வீர சயனம் என்று 8 விதமான கோலத்தில் ரங்கநாதரின் சயன கோலங்களை பல்வேறு ஆலயங்களில் காணலாம்.

    திருக்கோவிலூர் ஆதிதிருவரங்கம் ஆலயத்தில் ரங்கநாதர் புஜங்க சயன கோலத்தில் இருக்கிறார்.

    இவர் முதல் யுகத்தில் அவதாரம் எடுத்தவர்.முதல் யுகம் பாற்கடலில் பள்ளிக்கொண்டதை குறிக்கும். அதற்கு வெண்மை உகந்தது.

    எனவே ஆதிதிருவரங்கம் ரங்கநாத பெருமாளை வெண்மை நிற பூக்களால் வழிபட்டால் நினைத்தது நடக்கும்.

    முதல் யுகத்தில் பெருமாளின் முதல் அவதாரமாக நடந்தது மச்ச அவதாரம் ஆகும்.

    மச்ச அவதாரத்திற்கு உரிய திதியாக நவமி திதி உள்ளது.

    ஆகையால் நவமி திதி நாட்களில் இங்கு வழிபடுவது கூடுதல் சிறப்பு.

    ஜென்ம நட்சத்திர நாட்களில் சென்று வழிபட்டால் மேலும் பலன் கிடைக்கும்.


    • ஆதிதிருவரங்கம் ரங்கநாதரை பார்ப்பதே மிகப்பெரிய பாக்கியம்.
    • அவரது ஆசி இருந்தால் மட்டுமே அவரை சென்று பார்க்க முடியும் என்று சொல்கிறார்கள்.

    நாம் மேலே குறிப்பிட்ட ரங்கநாதர் ஆலயங்கள் ஒவ்வொன்றிலும் பெருமாள் விதவிதமான சயன கோலத்தில் அருள்பாலித்து வருகிறார்.

    இந்த ஆலயங்களில் உள்ள பெருமாள்கள் சுமார் 15 அடி முதல் 21 அடி வரை சயன கோலத்தில் உள்ளனர்.

    ஆனால் இந்த சயன கோல பெருமாள்கள் அனைவரையும் மிஞ்சும் வகையில் திருக்கோவிலூர் அருகே

    ஆதிதிருவரங்கத்தில் இருக்கும் பெருமாள் மிக பிரமாண்டமான சயன கோலத்தில் இருக்கிறார்.

    23 அடி நீளத்தில் அங்கு ரங்கநாதர் புஜங்க சயனத்தில் காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்.

    தமிழகத்திலேயே மிகப்பெரிய சயன கோல பெருமாள் இவர்தான். ஸ்ரீரங்கம் பெருமாளையும் விட பெரியவர்.

    ஸ்ரீரங்கம் தலம் தோன்றும் முன்பே உதித்து விட்டவர். எனவே இவரை பெரிய பெருமாள் என்று சொல்கிறார்கள்.

    ஸ்ரீரங்கத்து ரங்கநாதர் 7&வது அவதாரத்தில்தான் வந்தார்.

    ஆனால் ஆதிதிருவரங்கம் ரங்கநாதர் முதல் அவதாரத்திலேயே வந்து விட்டவர்.

    இதில் இருந்தே ஆதிதிருவரங்கம் ரங்கநாதர் முதன்மையானவர் என்பது புரியும்.

    ஆனால் தமிழகத்தில் நிறைய பேர் இந்த உண்மையை இன்னமும் உணராமலேயே இருக்கிறார்கள்

    ஆதிதிருவரங்கம் ரங்கநாதரை பார்ப்பதே மிகப்பெரிய பாக்கியம்.

    அவரது ஆசி இருந்தால் மட்டுமே அவரை சென்று பார்க்க முடியும் என்று சொல்கிறார்கள்.

    • பவுர்ணமி தினங்களில் காமாட்சி தங்கத்தேரில் உலா வருவது சிறப்பான ஒன்று.
    • ஆடிப்பூர பவுர்ணமி அன்று, அன்னைக்கு 108 பால் குட அபிஷேகம் நடைபெறும்.

    சிவனின் சொல்லை மீறி தட்சனின் யாகத்திற்குச் சென்ற பார்வதியைத் தட்சன் அவமதித்ததால் அந்த யாகத்தில் குதித்து விடுகிறாள்.

    யாகத்தில் எரிந்து கொண்டிருந்த பார்வதியின் உடலை எடுத்து ருத்ர தாண்டவம் ஆடுகிறார்.

    இதைக்கண்டு அஞ்சிய தேவர்களும் முனிவர்களும் இந்திரன் நாரதன் முதலானோர் பிரம்மனிடம் முறையிட இந்தப் பிரச்சினையை மகாவிஷ்ணுவால்தான் தீர்க்க முடியும் என்று விஷ்ணுவை வேண்ட, அவரும் தனது சக்ராயுதத்தால் அன்னையின் உடலை ஐம்பத்தோரு துண்டுகளாக வெட்டி வீச, அதில் பார்வதியின் தொப்புள் வீழ்ந்த இடம் காஞ்சி சக்தி பீடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

    பவுர்ணமி தினங்களில் காமாட்சி தங்கத்தேரில் உலா வருவது சிறப்பான ஒன்று.

    ஆடிப்பூர பவுர்ணமி அன்று, அன்னைக்கு 108 பால் குட அபிஷேகம் நடைபெறும்.

    இதில் கலந்து கொள்ளும் பக்தர் களுக்குக் காமாட்சியின் அருட்கடாட்சம் பூரணமாகக் கிட்டும். சகல நன்மைகளும் ஏற்படும்.

    • இந்த பூஜையைத் தொடர்ந்து ஒவ்வொரு பௌர்ணமியன்றும் செய்யலாம்.
    • பவுர்ணமி அன்று காலையில் குளித்துவிட்டு எந்த ஆகாரமும் எடுத்துக்கொள்ளாமல் விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.

    சத்யநாராயண விரதம் நம் வேண்டுதல் நிறைவேறிய பிறகு அதற்காக நன்றி சொல்லும்விதமாக அமைந்த விரதமாகும்.

    இந்த விரதம் அனுஷ்டிக்கும் முறையை அறிந்து கொள்ளலாம்.

    பவுர்ணமி அன்று சத்ய நாராயண விரதம் கடை பிடிக்கப்படுகிறது.

    பொதுவாகவே விரதம் என்பது எதையாவது வேண்டிக்கொண்டு அது நடக்கவேண்டும் என்பதற்காக அனுசரிக்கப்படுவது.

    ஆனால், இந்த சத்யநாராயண விரதம் அப்படியல்ல, நம் வேண்டுதல் நிறை வேறிய பிறகு அதற்காக நன்றி சொல்லும் விதமாக அமைந்த விரதம்.

    இந்த சத்யநாராயண பூஜையை எப்படி அனுஷ்டிப்பது? பொதுவாகவே இந்த விரத பூஜையை எந்த மாதத்திலும் வரும் பவுர்ணமி அன்றைக்கு அனுசரிக்கலாம்.

    அன்றைக்கு பகல், இரவு பொழுதுகளைத் தவிர்த்து, பூர்ண சந்திரனின் உதய நேரத்தைப் பார்த்து அப்போது மேற்கொள்ளலாம்.

    இந்த பூஜையைத் தொடர்ந்து ஒவ்வொரு பௌர்ணமியன்றும் செய்யலாம்.

    பவுர்ணமி அன்று காலையில் குளித்துவிட்டு எந்த ஆகாரமும் எடுத்துக்கொள்ளாமல் விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.

    மஹாவிஷ்ணுவின் ஓர் அம்சம்தான் சத்யநாராயணர் என்பதால் அன்று மாலைப் பொழுதுவரை விஷ்ணு ஸ்லோகங்களை சொல்லிக்கொண்டிருக்கலாம்.

    திரும்பத் திரும்ப விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லலாம்.

    பூஜையறையிலேயே இந்த பூஜையை அனுசரித்தால் ரொம்பவும் விசேஷம்

    அல்லது பூஜை செய்வதற்காகத் தேர்ந்தெடுத்திருக்கும் இடத்தை பெருக்கி, நீரால் துடைத்து சுத்தம் செய்து, மாவுக்கோலம் போட்டுக்கொள்ளுங்கள்.

    இடவசதிக்கேற்ப சின்னதாக மண்டபம் போல அமைத்துக் கொள்ளலாம்

    அல்லது ஒரு மணை போட்டு அதிலே சத்யநாராயணர் விக்ரகத்தை வைத்தும் பூஜை செய்யலாம்.

    அல்லது சத்யநாராயணர் படம் கிடைத்தாலும் உபயோகப் படுத்திக்கொள்ளலாம்.

    மண்டபத்துக்குச் சின்னதாக ஒரு மாவிலைத் தோரணம் கட்டிக்கொள்ளுங்கள்.

    மணை அல்லது மண்டபத்துக்குள் விக்ரகம் அல்லது படத்தை வைப்பதற்கு முன்னால் அதை நன்கு துடைத்து சந்தனம், குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள்.

    இரண்டு வாழைக் கன்று வாங்கி இருபக்கமும் சாய்த்து வையுங்கள்.

    இந்த மண்டபம் மேற்கு பார்த்தபடி இருக்கலாம்.

    நீங்கள் ஒரு மணைமேல், கிழக்கு பார்த்தோ அல்லது வடக்கு பார்த்தோ உட்கார்ந்து பூஜையை ஆரம்பிக்கலாம்.

    உங்களுக்கு இடது பக்கத்தில் இரண்டு நுனி வாழை இலைகளை ஒன்றன்மேல் ஒன்றாகக் கொஞ்சம் இடைவெளி விட்டு சேர்த்துப் போட்டுக் கொள்ளுங்கள்.

    அதன்மேல் அரிசியைப் பரப்பி வைத்துக் கொள்ளுங்கள்.

    ஆறுமுனை உள்ள ஷட்கோணம் (நட்சத்திரம் போல) கோலத்தை அதன்மேல் விரலால் வரைந்து கொள்ளுங்கள்.

    சுத்தமான நீர் நிரப்பிய ஒரு சொம்பை கோலத்தில் வையுங்கள்.

    சொம்பில் கழுத்தைச் சுற்றி ஒரு பூச்சரத்தைக் கட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

    சொம்பிற்கு சந்தனம் குங்குமம் இடுங்கள்.

    கலசத்தின் வாயில் மாவிலைக் கொத்தை செருகி வையுங்கள்.

    அதன் நடுவே மஞ்சள் பூசிய தேங்காயை வையுங்கள்.

    பிறகு விநாயகரை மனதாற வணங்கி விட்டு பூஜையை ஆரம்பியுங்கள். விஷ்ணு ஸ்தோத்திரங்களைச் சொல்லுங்கள்.

    சத்யநாராயணர் அஷ்டோத்திரம் சொல்லிக் கொண்டே உதிரிப் பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள்.

    பூஜை முடிந்ததும் பாயசம், வடை என்று பிரசாதங்கள் நிவேதனம் செய்யுங்கள்.

    அடுத்து, கற்பூரம் காட்டி இந்த பூஜையை நிறைவு செய்யலாம்.

    பூஜை முடிந்ததும் வீட்டுக்கு வெளியே வந்து, வானில் பூரணமாக ஒளிரும் சந்திரனைப் பார்த்து தரிசனம் செய்துவிட்டு நிவேதனப் பொருட்களை உட்கொண்டு விரதத்தை முடிக்கலாம்.

    சத்யநாராயண பூஜை விரதமிருப்பதாக வேண்டிக்கொண்டு எந்த கோரிக்கை நிறைவேறவேண்டும் என்று நினைக்கிறோமோ, அந்த கோரிக்கை நிறைவேறியதும் மறந்துவிடாமல் கண்டிப்பாக சத்யநாராயண பூஜையை அனுசரித்துவிட வேண்டும்.

    • ஆடி மாதத்தில் வரக்கூடிய பவுர்ணமி பொதுவாக உத்திராடம் நட்சத்திரத்தில் வரும்.
    • திருச்சி உச்சிப் பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

    ஆடி மாதத்தில் வரக்கூடிய பவுர்ணமி பொதுவாக உத்திராடம் நட்சத்திரத்தில் வரும்.

    இந்த ஆடி பவுர்ணமி தினம் மகா விஷ்ணுவை வழிபடுவதற்கான மிக உன்னத நாள்.

    பிள்ளையாரையும் வழிபடுவார்கள்.

    திருச்சி உச்சிப் பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

    இந்த அற்புத நாளில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றி திருமாலை வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் ஏற்படும்.

    புண்ணியம் கிட்டும். உயர் பதவிகளை அடையலாம்.

    • ஒவ்வொரு அவதாரத்தின் பின்னணியிலும் ஒரு வரலாற்று நிகழ்வு அடங்கி இருக்கும்.
    • இந்த ஊரில் வேதவல்லி சமேத வேதநாராயண சாமி அருள் பாலித்து வருகிறார்.

    மகா விஷ்ணு ஒவ்வொரு யுகத்திலும் தசாவதாரம் எடுத்திருப்பதை புராணங்களில் படித்து இருப்பீர்கள்.

    ஒவ்வொரு அவதாரத்தின் பின்னணியிலும் ஒரு வரலாற்று நிகழ்வு அடங்கி இருக்கும்.

    அதை பிரதிபலிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் எண்ணற்ற வைணவ தலங்கள் உள்ளன.

    அந்த வைணவ தலங்களில் மிகச் சிறப்பானவற்றை 108 திவ்ய தேசங்களாக நமது முன்னோர்கள் வகுத்து உள்ளனர்.

    இந்த திவ்ய தேசங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பு கொண்டவை.

    அந்த வகையில் தசாவதாரம் நிகழ்ந்த இடங்களாக கருதப்படும் புண்ணிய தலங்கள் உயர்ந்த இறைஆற்றல் கொண்டவை.

    இதில் மகா விஷ்ணுவின் முதல் அவதாரம் நிகழ்ந்த இடம் நாகலாபுரம் ஆகும்.

    தமிழ்நாடு ஆந்திரா எல்லையில் ஊத்துக்கோட்டைக்கு மிக அருகில் நாகலாபுரம் உள்ளது.

    இந்த ஊரில் வேதவல்லி சமேத வேதநாராயண சாமி அருள் பாலித்து வருகிறார்.

    இந்த தலத்தில்தான் தசாவதாரத்தின் முதல் அவதாரமான மச்ச அவதாரம் நிகழ்ந்ததாக கருதப்படுகிறது.

    பெருமாள் மீன் வடிவமெடுத்து கடலுக்குள் சென்று வேதங்களை மீட்டு வந்ததன் பின்னணியில் இந்த அவதார கதை அமைந்துள்ளது.

    ஆனால் நாகலாபுரம் பகுதியில் கடல் எதுவும் கிடையாது. அங்கிருந்து பழவேற்காடு சுமார் 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

    எனவே இந்த அவதாரம் நிகழ்ந்த போது நாகலாபுரம் பகுதி கடலாக இருந்திருக்கலாம் என்றும், நாளடைவில் கடல் பின்வாங்கியதால் ஊர்கள் தோன்றி இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

    நாகலாபுரத்தில் அமைந்துள்ள வேதநாராயண சுவாமி ஆலயம் முதல் அவதாரம் நிகழ்ந்த தலம் மட்டுமின்றி மேலும் பல்வேறு சிறப்புகளை கொண்டது.

    ஆகம அடிப்படையில் இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக ஆலய அமைப்பு பக்தர்களுக்கு புதிய தகவல்களை சொல்லும் வகையில் அமைந்துள்ளது.

    சென்னையில் இருந்து இந்த ஆலயத்துக்கு மிக எளிதாக சென்று வரலாம்.

    இந்த ஆலயம் பற்றிய கூடுதல் தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

    • வட இந்தியர் சிலர் புத்தரை பத்து அவதாரங்களுள் ஒருவராக கருதுகின்றனர்.
    • கல்கி அவதாரம் கையில் கேடயமும், வாளும் உள்ளன.

    வட இந்தியர் சிலர் புத்தரை பத்து அவதாரங்களுள் ஒருவராக கருதுகின்றனர்.

    பாகவத புராணத்தில் இருபத்தைந்து அவதாரங்கள் கூறப்படுகிறது.

    தசாவதார திருக்கோவில்

    தாசாவதார திருக்கோவில் திருவரங்கத்தில் அமைந்துள்ளது.

    இத்தலத்தில் பெருமாளின் பத்து அவதாரங்களும் மூலவர்களாக உள்ளனர்.

    மச்சவதாரம், கூர்மவதாரம், வராகவதாரம், நரசிம்மவதாரம் ஆகிய நான்கு அவதாரங்கள் சங்குசக்கரத்துடன் காட்சியளிக்கின்றன.

    வாமன அவதாரம் கையில் குடையுடனும், பரசுராம அவதாரம் கையில் கோடாரியுடனும், ராம அவதாரம் வில்லம்புடனும், பலராமன் அவதாரம் கலப்பையுடனும், கிருஷ்ணவதாரம் கையில் வெண்ணையுடனும் இருக்கின்றன.

    கல்கி அவதாரம் கையில் கேடயமும், வாளும் உள்ளன.

    திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ராஜகோபுரம், மதில்சுவர் கட்டுமானப் பணிகளை செய்த திருமங்கையாழ்வாரின் விருப்பத்திற்கிணங்க இத்தலத்தில் இரங்கநாதர் பத்து அவதார திருக்கோலத்திலும் காட்சி தந்ததாக தலவரலாறு கூறுகிறது.

    • கல்கி பகவான் கலியுகத்தில் தோன்றி அனைத்து தீயவைகளையும் அழிப்பாராவார் என்பது ஒரு கூற்று.
    • கல்கி என்பதன் பொருள் காலம் அல்லது முடிவிலி ஆகும்.

    கல்கி அவதாரம் என்பது இந்து சமயத்தின் கூற்றுப்படி, விஷ்ணு பகவானின் பத்தாவதும் இறுதியுமான மகா அவதாரமாகும்.

    கல்கி பகவான் கலியுகத்தில் தோன்றி அனைத்து தீயவைகளையும் அழிப்பாராவார் என்பது ஒரு கூற்று.

    கல்கி என்பதன் பொருள் காலம் அல்லது முடிவிலி ஆகும்.

    மனிதன் என்ற நிலையை அடைந்த வரை ஆராய்ந்து வந்த சார்லஸ் டார்வினின் ஆராய்ச்சி அத்துடன் நின்று விட்ட போதிலும் பரிணாம வளர்ச்சி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

    அதற்கு ஒரு முடிவு இல்லை.

    கல்கி அவதாரம் கலியுகத்தின் முடிவில் திருமால் எடுக்கும் கடைசி அவதாரமாக புராணம் கூறுகிறது.

    ஆயுதங்களும் வாகனங்களும் கொண்ட அவதாரமான கல்கி தினம் தினம் மனிதன் சிந்தனையில் வளர்ந்து கொண்டிருப்பதையும், விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் அவன் மகாசக்தியாக மாறுவதையும் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.

    ×