என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாலட்சுமி"

    • ஸ்ரீலட்சுமி குபேர பூஜையின் போது குபேர யந்திரத்தை வைத்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.
    • சிவப்பு நிற பட்டுத் துணியின் மீது யந்திரத்தை வைத்து வைத்துத் தாமரை மலரைக் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.

    ஸ்ரீலட்சுமி குபேர பூஜையின் போது குபேர யந்திரத்தை வைத்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.

    பெரும் செல்வத்தை அளிக்கும் இந்த குபேர யந்திரத்தை, தீபாவளித் திருநாளில் மட்டுமன்றி, வியாழக்கிழமையும் பூச நட்சத்திரமும் கூடிய நாளிலும் செய்யலாம். குபேர யந்திரம் வரைவது எப்படி என்பதை அறிவோம்.

    புரசு இலையில் பலாச மலர்ச் சாறும் கோரோசனையும் சேர்த்து நாணல் தட்டையினால் எழுத வேண்டும். புரசு இலையும் பலாச மலரும் கிடைக்காதவர்கள் சந்தனம், பால் குங்குமம் கலந்த குழம்பால் எழுதலாம். அல்லது 3x3 அளவுள்ள தாமிரம், வெள்ளி அல்லது தங்கத் தகட்டில் யந்திரத்தை எழுதலாம்.

    சிவப்பு நிற பட்டுத் துணியின் மீது யந்திரத்தை வைத்து  தாமரை மலரைக் கொண்டு பூஜை செய்ய வேண்டும். இந்த வழிபாட்டின்போது, கட்டாயமாக 5 முகங்கள் கொண்ட குத்துவிளக்கில் நெய் தீபம் ஏற்ற வேண்டும்.



    இந்த வழிபாட்டை தீபாவளியில் தொடங்கி தொடர்ந்து 72 நாட்கள் பூஜை செய்துவர கோடி நன்மை கிடைக்கும். ஒவ்வொரு நாளும் குபேர மந்திரத்தை 1008 முறை உச்சரிக்க வேண்டும். 72 நாட்கள் பூஜை செய்ய முடியாதவர்கள் குபேர யந்திரத்தையும், லட்சுமி குபேரர் படத்தையும் வைத்து 48 நாட்கள் பூஜை செய்யலாம். இப்படி செய்துவர செல்வப் பெருக்கம் அதிகரிக்கும். இந்த யந்திர பூஜைக்கு கைமேல் பலன் கிடைக்கும்.

    வடக்கு முகம் நோக்கி அமரந்து பால் நைவேத்தியம் செய்ய வேண்டும். குபேர பூஜையுடன் தனலட்சுமி அல்லது சவுபாக்ய லட்சுமி படத்தையும் வைத்து பூஜிக்க வேண்டும்.

    ஸ்ரீலட்சுமி குபேர பூஜையுடன் நவகிரக பூஜையையும் செய்யலாம். கோதுமையில் சூரியனையும், நெல்லில் சந்திரனையும், துவரையில் அங்காரகனையும், பச்சைப் பயறில் புதனையும், கொண்டைக் கடலையில் குரு பகவானையும், மொச்சையில் சுக்கிரனையும், கறுப்பு எள்ளில் சனீஸ்வர பகவானையும், கறுப்பு உளுந்தில் ராகுவையும், கொள்ளில் கேதுவையும் ஆவாகனம் செய்து, நவகிரக ஸ்தோத்திரங்கள் பாராயணம் செய்து பூஜிக்கலாம்.

    • தீபாவளியன்று மாகாலட்சுமிக்கு லட்டு வைத்து வழிபட பணம் சார்ந்த பிரச்சனைகள் தீரும்.
    • கல் உப்பு, மஞ்சள்,குங்குமம், கண்ணாடி, மல்லிகைப்பூ முதலானவற்றை வாங்கினால் வருடம் முழுவதும் வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சம் நிறைவாக இருக்கும்.

    தீபாவளி அன்று புத்தாடை, பட்டாசு, இறை வழிபாடு எவ்வளவு முக்கியமானதோ அதே அளவிற்கு முக்கியமானது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவது.

    பொதுவாக அக்ஷய திருதியை மற்றும் தீபாவளி போன்ற நன்னாளில் அவரவர் வசதிக்கேற்ப தங்கம் வாங்குவதை வழக்கமாக கொண்டிருப்பர். ஆனால் இப்போது தங்கம் விற்கும் விலைக்கு அனைவராலும் தங்கத்தை வாங்க முடியாது.

    இந்த சூழலில் தங்கத்திற்கு பதிலாக கல் உப்பு, மஞ்சள்,குங்குமம், கண்ணாடி, மல்லிகைப்பூ முதலானவற்றை வாங்கினால் வருடம் முழுவதும் வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சம் நிறைவாக இருக்கும்.




    எல்லாவற்றிற்கும் மேலாக தீபாவளியன்று துடைப்பம் வாங்குவது மிகவும் நல்லது. நல்ல நாளில் போய் துடைப்பம் வாங்குவதா என்று நீங்கள் யோசிக்க வேண்டாம். துடைப்பம் மகாலட்சுமியின் அம்சமாக சொல்லப்படுகிறது. அதனால் துடைப்பத்தை வாங்கி வீட்டில் ஏதேனும் ஓர் ஓரத்தில் வைத்தாலே மகாலட்சுமியின் அருள் நிறைந்து பண வரவு அதிகமாகும் என்பது நம்பிக்கை.

    வாழ்வில் எப்போதும் கஷ்டம் மட்டும் தான் இருக்கிறது, நிதி நெருக்கடியை சமாளிக்க முடியவில்லை என்பவர்கள் தீபாவளியன்று துடைப்பத்தை வாங்கி அதை யாருக்கேனும் தானமாக கொடுக்கலாம். இப்படி செய்தால் கடன் பிரச்சனை தீரும் என்பது நம்பிக்கை.

    தீபாவளியன்று மாகாலட்சுமிக்கு லட்டு வைத்து வழிபட பணம் சார்ந்த பிரச்சனைகள் தீரும்.

    • தீபாவளிக்கு முந்திய நாள் வீட்டில் லட்சுமி குபேர பூஜை செய்வதன் மூலம் செல்வ வளம் ஏற்படும்.
    • பிரிந்த குடும்பங்கள், மனங்கள் ஒன்று சேர்வதற்கும் தீபாவளி பண்டிகை பெரும் உதவியாக அமைகிறது.

    தீபாவளி என்றால் அதற்கு விளக்குகளின் வரிசை என்று பொருளாகும். தமிழகத்தில் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் வரும் அமாவாசை தினத்தன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. அந்த நாளன்று அதிகாலையில் பூஜை அறையில் 5, 9, 11 ஆகிய எண்ணிக்கைகளில் வரிசையாக தீபம் ஏற்றி வைத்து கடவுளை வழிபடுவது மரபாக கடைபிடிக்கப்படுகிறது.

    அன்று மாலை வீட்டின் முன்னால் குறைந்தபட்சம் இரு அகல் விளக்குகளாவது ஏற்றி வைப்பதும் ஐதீகமாகும். மற்ற நாட்களை விட தீபாவளி நாளில் தான் செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமி, வைத்திய கடவுளான தன்வந்திரி, மனித ஆயுளுடன் தொடர்பு கொண்ட எமதர்மன் ஆகியோர் ஆசிகளை வழிபாட்டின் மூலம் பெற முன்னோர்கள் வழிகாட்டியுள்ளனர்.

    மேலும், தீபாவளி அன்று எல்லா தேவதைகளும் பண்டிகை பொருட்களில் வாசம் செய்வதாகவும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. தலைக்கு தேய்த்துக் குளிக்கும் நல்லெண்ணையில் மகாலட்சுமியும், அரப்பு அல்லது சிகைக்காய் தூளில் சரஸ்வதி தேவியும், நெற்றியில் இடும் சந்தனத்தில் பூமாதேவியும், குங்குமத்தில் கௌரியும், பூக்களில் மோகினி, தண்ணீரில் கங்கையும், நாம் அணியும் புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், இனிப்பு பலகாரங்களில் அமிர்தமும், தீபச்சுடரில் பரமாத்மாவும் இருப்பதாகவும் சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    வழக்கமாக தீபாவளியன்று அதிகாலையில் தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிப்பது வழக்கம். அதன் மூலம் நம்மிடம் உள்ள தீமைகள் அழிந்து, நல்லவை வந்து சேரும் என்பது நம்பிக்கையாகும். அவ்வாறு குளிக்கும் தண்ணீரில் அன்று ஒரு நாள் காலையில் மட்டும் கங்கை இருப்பதாக ஐதீகம். எனவே, அதில் சிறிது பசும்பால் கலந்து குளிப்பதும் மகாலட்சுமியின் அருளை பெற்றுத் தரும்.

     

    தீபாவளிக்கு முந்திய நாள் வீட்டில் லட்சுமி குபேர பூஜை செய்வதன் மூலம் செல்வ வளம் ஏற்படும். அந்த பூஜையில் ஐந்து விதமான பழ வகைகள் மற்றும் மூன்று விதமான பூக்களை படைப்பது விசேஷம். பழ வகைகளில் மாதுளை, செவ்வாழை, நெல்லிக்கனி ஆகியவை முக்கியம். பூ வகைகளில் தாமரை, மல்லிகை, செவ்வந்தி ஆகியவை சிறப்பிடம் பெறுகின்றன. அவ்வாறு லட்சுமி குபேர பூஜை செய்த பிறகு வீட்டில் உள்ள பெரியோர்களிடம் ஆசிர்வாதம் பெறுவதன் மூலம் சகல மங்களமும் நிலைக்கும் என்ற ஐதீகம் ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    தீபாவளி நாளன்று வீட்டில் கரும்பு வைத்து மகாலட்சுமியை வழிபாடு செய்வதும் வட இந்திய மாநிலங்களில் வழக்கமாக இருந்து வருகிறது. அதன் மூலம் அவர்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுவதாக நம்புகிறார்கள். அத்துடன் வீட்டின் தலைவாசல், கதவு நிலைகள் ஆகியவற்றுக்கு சாமந்திப்பூக்களை கொண்டு வித விதமாக அலங்காரங்கள் செய்கிறார்கள்.

    அத்துடன், அன்று மாலை நேரம் செல்வத்தின் கடவுளான மகாலட்சுமியை வரவேற்கும் விதமாக வீட்டு வாசலில் இருபுறமும் அகல் விளக்குகளை ஏற்றி வைக்கிறார்கள். தீபாவளி தினத்தன்று பட்டாசுகளை வெடித்து கொண்டாடும் முறையிலும் ஒரு உள்ளர்த்தம் இருக்கிறது. அதாவது இருள் விலகி ஒளி பெருகுவது, தீமை விலகி நன்மையின் வெளிச்சம் ஏற்படுவது என்ற அர்த்தத்தில் மக்கள் விளக்கேற்றுவதுடன், பட்டாசுகளை வெடித்து தீபாவளி கொண்டாடுகிறார்கள்.

    அத்துடன் மகிழ்ச்சியை ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் தெரிவித்துக் கொள்ளும் வகையில் இனிப்புகளை வழங்கியும், புத்தாடைகளை அணிந்தும், அவற்றை பரிசுகளாக வழங்கியும் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார்கள்.

    சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் தீபாவளி நன்னாள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்றாலும், இன்னொரு முக்கியமான சடங்கும் அதன் கொண்டாட்டத்தில் அடங்கியிருக்கிறது. அதாவது, ஏதேனும் ஒரு காரணத்திற்காக குடும்பங்களில் ஒருவரோடு ஒருவர் பேசாமல், தொடர்பு கொள்ளாமல் இருந்தால் தீபாவளி நாளை முன்னிட்டு அவர்கள் ஒன்று சேர்வதற்கு உறவினர்கள் முயற்சிப்பார்கள்.

    அந்த வகையில், பிரிந்த குடும்பங்கள், மனங்கள் ஒன்று சேர்வதற்கும் தீபாவளி பண்டிகை பெரும் உதவியாக அமைகிறது. அவ்வாறு இணைந்த குடும்பங்களில் இரவு முழுவதும் சுடர் விடும்படி மாணிக்க தீபம் என்ற அகண்ட தீபத்தை ஏற்றி வைப்பார்கள். அதன் மூலம் அவரவர் குலதெய்வம் மற்றும் மகாலட்சுமியின் அருள் கிடைப்பதாக பொதுமக்களிடையே ஒரு பாரம்பரியம் உள்ளது.

    • மகாலட்சுமியை வழிபட மஞ்சள் கலந்த பச்சரிசியில் படிக்கட்டு கோலம் போட வேண்டும்.
    • மகாலட்சுமியை வழிபடுவதன் மூலம் சூரிய தோஷம் நிவர்த்தியாகும்.

    நவராத்திரி நான்காம் நாளன்று அன்னை பராசக்தி, மகாலட்சுமியாக வழிபாடு செய்யப்படுகிறாள். மகாலட்சுமி தாமரை மலரில் வீற்றிருப்பவள். திருமாலின் சக்தியாக விளங்கக்கூடியவள். சகலவிதமான நன்மைகளையும் அளிக்கக்கூடியவள் மகாலட்சுமி.

    மகாலட்சுமியை வழிபட மஞ்சள் கலந்த பச்சரிசியில் படிக்கட்டு கோலம் போட வேண்டும். நெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு 16 தீபங்கள் ஏற்ற வேண்டும். கதம்ப சாதம் நிவேதனம் செய்ய வேண்டும். ஜாதிமல்லி பூக்கள் மற்றும் கதிர்பச்சை இலை கொண்டு பூஜிக்க வேண்டும்.

    "சங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரம் இசைத்தோம்

    மகா தேசிகரின் ஸ்ரீஸ்துதியும் யாவரும் படித்தோம்

    மனமிகுந்த சாமந்தி சூடி மகிழ்ந்தோம்

    வில்வ மாலை தந்து அம்மா உன்பாதம் பணிந்தோம்"

    என பாடி துதித்தால் வரம் தருவாள்.

    மகாலட்சுமி ஆதிபத்தியம் கொண்ட கிரகம் சூரியன். எனவே மகாலட்சுமியை வழிபடுவதன் மூலம் சூரிய தோஷம் நிவர்த்தியாகும். பணம் பெருகும் வாய்ப்புகள் உண்டாகி, செல்வ வளம் கூடும். நீண்ட நாட்களாக இருக்கும் கடன் சுமைகள் தீர்ந்து, நிம்மதியான வாழ்க்கை அமையும். குடும்ப ஒற்றுமை, நல்ல எதிர்காலம், வாழ்வில் செழுமையும், ஆரோக்கியமும் கிடைக்கும். தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள் பெருகி, நன்மைகள் உண்டாகும்.

    • திட்டமிட்ட செலவு செய்து சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும்.
    • செய்யும் தொழிலில் உயர்வு, தாழ்வு பார்க்க கூடாது.

    மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை பட்டால் போதும் எல்லா வளமும் கிடைக்கும். லட்சுமியின் கடைக்கண் பார்வை கிடைக்க 12 வழிகள் உள்ளன.

    1. தன்னம்பிக்கை மற்றும் தெய்வநம்பிக்கை வேண்டும்.

    2. சோம்பல் இல்லாமல் உழைக்க வேண்டும்.

    3. காலத்தை கண் இமை போன்று மதிக்க வேண்டும்.

    4. வரும் சந்தர்ப்பங்களை நழுவவிடக்கூடாது.

    5. உடனுக்குடன் செயல்களை செய்து முடிக்க வேண்டும்.

    6. தகுதியான பெரியவர்களிடம் அறிவுரை பெற வேண்டும்.

    7. செய்யும் தொழிலை தெய்வமாக மதிக்க வேண்டும்.

    8. திட்டமிட்ட செலவு செய்து சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும்.

    9. செய்யும் தொழிலில் உயர்வு, தாழ்வு பார்க்க கூடாது.

    10. லாபத்தால் மகிழ்ச்சியும், நஷ்டம் வந்தால் வருத்தமும் அடையக்கூடாது.

    11. சுயநலம் அறவே இருக்கக் கூடாது.

    12. எந்த சூழலிலும் கடன் வாங்கவே கூடாது.

    மேற்கூறிய பண்புகள் கொண்டவர்களே லட்சுமியின் அருளைப் பெற முடியும்.

    • குடும்பத்தில் குதூகலமும் ஒற்றுமையும் ஓங்கும்.
    • லட்சுமி சுலோகம் சொல்லி வழிபட வேண்டும்.

    ஸ்ரீவிஷ்ணுவின் விருப்பத்தால் தேவர்களும் அசுரர்களும் ஒன்று சேர்ந்து திருப்பாற் கடலை கடைந்தனர். அப்போது பாற்கடலில் இருந்து ஸ்ரீ மகாலட்சுமி தோன்றினாள். அந்த நன்நாளே ஸ்ரீபஞ்சமி-லட்சுமி பஞ்சமி எனப்படுகிறது. இன்று (ஞாயிறு) லட்சுமி பஞ்சமி தினமாகும். இன்று விரதம் இருந்து ஸ்ரீ விஷ்ணுவுடன் ஸ்ரீ லட்சுமி தேவியை பூஜை செய்து மல்லிகைப் பூவால் லட்சுமி சகஸ்ரநாமம் அர்ச்சனை செய்து லட்சுமி சுலோகம் சொல்லி வழிபட வேண்டும். இதனால் குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் ஏற்படும், ஏழ்மை விலகும்.

    இன்று பஞ்சமியில் விரதம் இருக்கலாம். இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலமாக தொழில் வளம் பெருகும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தின் வறுமை நீங்கும். குடும்பத்தில் குதூகலமும் ஒற்றுமையும் ஓங்குவதும், சுபநிகழ்ச்சிகள் நடப்பதும், வீடு, வாகனம் முதலிய பொருள் சேர்க்கை ஏற்படும்.

    இன்று காலை எழுந்தவுடன் வீட்டை தூய்மை செய்து, வீட்டில் உள்ள அனைவரும் நீராடி விட்டு பூஜை அறையில் ஒரு பலகை வைத்து, அதிலே கோலம் போட்டு, கலசத்தை ஆவாகனம் செய்ய வேண்டும். அந்த கலசத்தில் திருமகளுக்கான லட்சுமி மந்திரங்களைச் சொல்லி ஆவாகனம் செய்ய வேண்டும். "இந்த கலசத்தில் மகாலட்சுமி தாயே வந்து அமர வேண்டும். எங்கள் எளிய பூஜையை ஏற்றுக்கொண்டு திருப்தி அடைய வேண்டும்" என்று மனதார பிரார்த்தனை செய்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

    இன்று குதிரை பூஜை தினம்

    ஹயம் என்றால் குதிரை. குதிரையை பூஜிக்க வேண்டிய நாளே ஹய பஞ்சமி. தேவ அசுரர்கள் மந்திரமலையை மத்தாக்கி வாசுகி என்னும் பாம்பை கயிறாக்கி பாற்கடலைக் கடைந்த போது கடலில் இருந்து உச்சைஸ்ரவஸ் என்னும் பறக்கும் சக்தி உடைய தேவக்குதிரை தோன்றிய நாள்தான் இன்று பஞ்சமி நாள். எனவே இன்று குதிரையை பூஜித்து, குதிரைக்கு கொள்ளு தானியத்தை சாப்பிடதர வேண்டும். மேலும் குதிரை வடிவில் வந்து அருள்புரிந்த ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தியை ஆராதிக்கலாம். இதனால் நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வியாபார லாபமும் ஏற்படும்.

    • தயாரிப்பாளர் ரவீந்தர் சின்னத்திரை சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துகொண்டார்.
    • சமீபத்தில் ரசிகர்கள் ரவீந்தர் -மகாலட்சுமி தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக பிரியவுள்ளதாக சலசலத்து வந்தனர்.

    தமிழில் நட்புன்னா என்ன தெரியுமா, சுட்டக்கதை, முருகைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களை தனது லிப்ரா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகர். சினிமா தயாரிப்பளராக மட்டுமல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சி விமர்சகராகவும் தன்னை முன்நிலைப் படுத்திகொண்டார்.


    ரவீந்தர் சந்திரசேகர் -மகாலட்சுமி

    இவர் கடந்த ஆண்டு தனியார் நிகழ்ச்சி தொகுப்பாளினியும் சின்னத்திரை சீரியல் நடிகையுமான மகாலட்சுமியை திருமணம் செய்துக் கொண்டதாக சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்திருந்தார். சமீபத்தில் ரவீந்தர் சந்திரசேகர் தனியாக இருக்கும் புகைப்படத்தை வலைத்தளத்தில் வெளியிட்டு "வாழ்வதற்கான காரணம் கடினமான நேரங்களில் புன்னகையை நேசிப்பதே. ஏனெனில் அவர்கள் உங்களின் வருத்தத்தில் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்'' என்று பகிர்ந்திருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் ரவீந்தர் -மகாலட்சுமி தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக பிரியவுள்ளதாக சலசலத்து வந்தனர்.


    ரவீந்தர் சந்திரசேகர் -மகாலட்சுமி

    இதனை மறுத்துள்ள நடிகை மகாலட்சுமி இது தொடர்பாக பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "புருஷா...சமூக வலைதளத்தில் தனி புகைப்படத்தை வெளியிடக்கூடாது என்று எத்தனை முறை சொல்வது. நாம் பிரிந்து விட்டோம் என்று அத்தனை சமூக வலைத்தளங்களும் பேசுகின்றன. மீண்டும் இந்த தவறை செய்ய வேண்டாம்.

    யூடியூப் சேனல்களுக்கு எனது மைண்ட் வாய்ஸ். இன்னுமா நாங்க டிரெண்டு. இதுக்கு இல்லையா ஒரு எண்டு. நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்'' என்று பதிவிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

    • நவராத்திரி வகைகளில் சாரத நவராத்திரி, வசந்த நவராத்திரி என்பன முக்கியமானவை ஆகும்.
    • நவராத்திரி முத்தெய்வங்களின் அருளை வேண்டி முக்கியமாக வீரம், செல்வம் கல்வி என்பவற்றை வேண்டி நோற்கப்படும் கூட்டு விரதமாகும்.

    சக்தியின் அருள் வேண்டி நோற்கும் விரதங்களில் மிக முக்கியமானது நவராத்திரியாகும். நவராத்திரி என்பது ஒன்பது இரவுகளும் சக்தியை துர்க்கை, மகாலட்சுமி சரஸ்வதி என பல்வேறு வடிவங்களில் வழிபடுவதாகும்.

    நவராத்திரி பெரும்பாலும் பெண்கள் அனுட்டிக்கும் விரதமாகும்.

    நவராத்திரி வகைகளில் சாரத நவராத்திரி, வசந்த நவராத்திரி என்பன முக்கியமானவை ஆகும். வசந்த காலத்தில் நிகழும் நவராத்திரி வழிபாடு வசந்த நவராத்திரி என்படும். இது சிலாபத்திலுள்ள முன்னேஸ்வர ஆலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

    காலத்தில் நிகழும் நவராத்திரி வழிபாடு சரத் காலத்தில் நிகழும் நவராத்திரிவழிபாடு சாரத நவராத்திரி எனப்படும். இது புரட்டாதி மாத வளர்பிறை பிரதமை தொடக்கம் நவமி வரை உள்ள ஒன்பது தினங்கள் அனுட்டிக்கப்படும் தனிச்சிறப்புடைய விரதமாகும்.

    ஏனைய விரதங்களில் பெரும்பாலானவை ஒரு தெய்வத்தின் அருள் வேண்டி நோற்கப்படுன்றது. ஆனால் நவராத்திரி முத் தெய்வங்களின் அருளை வேண்டி முக்கியமாக வீரம், செல்வம் கல்வி என்பவற்றை வேண்டி நோற்கப்படும் கூட்டு விரதமாகும்.

    நவராத்திரியை அடுத்து வரும் பத்தாம் நாள் விஜயதசமி எனச் சிறப்பித்துக் கூறப்படும் இத்தினத்தில் குழந்தைகளுக்கு ஏடு தொடக்குதல், கலைப்பயிற்சிகளைத் தொடங்குதல் என்பன நடைபெறும்.

    விஜய தசமியன்று ஆயுத பூஜை நடத்தப்படும். முற்காலத்தில் நவராத்திரி விரத காலத்தில் "தேவி மகாத்மியம்" என்ற நூலைப் பாராயணம் செய்யும் வழக்கம் பேணப்பட்டது. ஆனால் தற்காலத்தில் சகலகலாவல்லி மாலை முதலான நூல்களைப் பாராயணம் செய்யும் வழக்கம் உள்ளது.

    நவராத்திரி காலத்தில் நாட்டின் பல பகுதிகளிலுள்ள ஆலயங்களிலும் முப்பெரும் தேவியர்களுக்கு விசேட அபிஷேகம், பூஜை என்பன நடத்தப்படும்.

    ஒன்பதாம் நாள் கலைமகள் விழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுவதுடன் கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெறும். பத்தாம் நாள் விஜய தசமி விழா (வாழை வெட்டு) நடைபெறும். பாடசாலைகளில் கலை, கலாசார நிகழ்வுகளுடன் நவராத்திரி விழா கொண்டாடப்படும்.

    • லக்ஷ்மி என்றும், சரஸ்வதி என்றும், பார்வதி என்றும் மூன்று மூர்த்தியாக நிற்பது பராசக்தி.
    • தவம், கல்வி, தெய்வத்தைச் சரண்புகுதல் இம்மூன்றும் கர்மயோகம் என்று பதஞ்சலி முனிவர் சொல்லுகின்றார்.

    சக்திதாசன் என்று தம்மை அழைத்துக் கொண்ட மகாகவி பாரதியார் அன்னை பராசக்தியைப் போற்றும் உன்னதத் திருவிழாவான நவராத்திரியைக் கொண்டாடுவதில் மிகவும் விருப்பமுடையவராக இருந்தார்.

    நவராத்திரித் திருநாளின் மகத்துவம் பற்றிய அவரது சிறு கட்டுரை:

    ஒன்பதிரவு பராசக்தியைப் பூஜை செய்கிறோம். லக்ஷ்மி என்றும், சரஸ்வதி என்றும், பார்வதி என்றும் மூன்று மூர்த்தியாக நிற்பது பராசக்தி. இவ்வுலகத்தை ஆக்கல், அழித்தல், காத்தல் என மூன்று தொழில் நடத்துவது.

    ஹிமாசலம் தொடங்கி குமரி முனை வரை வேதத்தை நம்பும் கூட்டத்தார் எல்லாம் இந்தப் பூஜை செய்கிறோம். ஏழைகளாக இருப்போர் பராசக்திக்கு மலரையும், நீரையும், உள்ளத்தையும் கொடுத்து வலிமை பெறுகிறார்கள். செல்வமுடையோர் விருந்துகளும், விழாக்களும் செய்கின்றனர்.

    மஹாளய அமாவாசை கழிந்தது.

    இருளும், ஒளியும் மாறிவருவது இவ்வுலக இயற்கை. பகலிலே பெரும்பாலும் ஒளியுண்டு, மேகங்கள் வந்து சூரியனை மறைத்தாலொழிய. சில சமயங்களில் கிரகணம் பிடிக்கும். அதையும் தவிர்த்து விட்டால், இரவிலே தான் ஒளியின் வேறுபாடுகளும் மறைவுகளும் அதிகப்படுகின்றன. பகல் தெளிந்த அறிவு. இரவென்பது மயக்கம். பகலாவது விழிப்பு. இரவு என்பது தூக்கம். பகலாவது நல்லுயிர் கொண்டு வாழ்தல். இரவு லயம்.

    சக்தி, நல்ல வல்லெழுத்துச் சேர்ந்த மொழி, விக்ரமாதித்யனும், காளிதாஸனும் வணங்கிய தெய்வம், உலகத்தார் இந்தப் பராசக்தியை நல்ல மழையருள் புரியும் சரத்காலத்தின் முதல் ஒன்பதிரவும் வணங்கி பூஜைகள் செய்யவேண்டும் என்பது பூர்வீகர் ஏற்பாடு. மிகப் பயனுடைய காரியம். மேலான வழி.

    ஆக்கல், அழித்தல், காத்தல் என்ற முத்தொழிலும் எப்போதும் நடக்கின்றன. லோக சம்ரக்ஷணை எப்போதும் செய்யப் படுகிறது. எப்போதுமே ஆராதனை செய்யவேண்டும். சரத்காலத் தொடக்கத்திலே பேரருளைக் கண்டு விசேஷ விழா நடத்துகிறோம். தவம், கல்வி, தெய்வத்தைச் சரண்புகுதல் இம்மூன்றும் கர்மயோகம் என்று பதஞ்சலி முனிவர் சொல்லுகின்றார். லௌகீகக் கவலைகளிலே இம்மூன்று தொழிலையும் எப்போதும் செய்துகொண்டிருக்க முடியாமல் தடுக்கப்படும் சாமான்ய ஜனங்கள் நவராத்திரி ஒன்பது நாள் இரவும் பகலும் மேற்கூறிய மூவகை நெறியில் நிலை பெறும் வண்ணமான விதிகள் ஆகமங்களிலே கூறப்பட்டன. ஒன்பது நாளும் தியானம், தவம், கல்வி இவற்றிலே செலவிடத் திறமையில்லாதோர் கடைசி ஒன்பதாம் நாள் மாத்திரமேனும் விரதம் காக்கவேண்டும். இந்தப் பூஜையின் பொருள் மிகவும் தெளிந்தது.

    சக்தியால் உலகம் வாழ்கிறது.

    நாம் வாழ்வை விரும்புகிறோம்.

    ஆதலால் நாம் சக்தியை வேண்டுகிறோம்.

    • மனிதன் எவ்வகையிலேனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்.
    • ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும்.

    நவராத்திரி கொலு வைப்பதில் ஒரு தத்துவம் உள்ளது. மனிதன் எவ்வகையிலேனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

    ஆன்ம ரீதியாக மனிதன் தம்மை படிப்படியாக உயர்த்திக்கொண்டு இறுதியில் இறைவனில் கலக்க வேண்டும். இதுவே மனிதப் பிறப்பின் அடிப்படை தத்துவம். இதை விளக்கும் பொருட்டே கொலுக் காட்சியில் ஒன்பது படிகள் வைத்து அதில் பொம்மைகளை அடுக்கி வழிபடுகிறோம். ஒன்பது படிகள் வைத்து ஒவ்வொரு படியிலும் பின்வருமாறு பொம்மைகளை வைத்து வழிபட வேண்டும்.

    * முதல் படியில் ஓரறிவு உயிர்ப் பொருட்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் இருத்தல் வேண்டும்.

    * இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் இருத்தல் வேண்டும்.

    * மூன்றாவது படியில் மூவறிவு உயிர்களை விளக்கும் கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

    * நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

    * ஐந்தாவது படியில் ஐயறிவு கொண்ட நாற்கால் விலங்குகள், பறவைகள், பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

    * ஆறாவது படியில் ஆறறிவு படைத்த உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

    * ஏழாவது படியில் மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

    * எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள் இடம்பெற வேண்டும். நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள் என்பன வைக்கலாம்.

    * ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும். ஆதிபராசக்தி நடு நாயகமாக இருக்க வேண்டும்.

    மனிதன் படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று கடைசியில் தெய்வம் ஆக வேண்டும் என்கிற தத்துவத்தை உணர்த்தவே இப்படி கொலுப் படிகளில் பொம்மைகள் வைக்க வேண்டும்.

    • படைத்தல், காத்தல், அழித்தல் எனும் மூன்று சக்திகளைக் கொண்ட அன்னையின் அருள் வேண்டி பூஜை செய்தலே நவராத்திரி வழிபாடாகும்.
    • உயிர்களின் பாவத்தைப் போக்கி பிறவி என்னும் பெருங்கடலைக் கடக்கும் தோணியாக விஸ்வநாதரும், விசாலாட்சியும் இங்கு வீற்றிருக்கின்றனர்.

    அசையாப் பொருள் பரம்பொருள் என்றும், அசைவுடைய செயல் சக்தி என்றும் கூறப்படுகிறது. பொதுவாக சிவராத்திரி, கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி போன்ற விழாக்கள் ஒருநாள் விசேஷமாகக் கொண்டாடப்படும். ஆனால் சக்தி வழிபாடு மட்டும் நவராத்திரி என்ற பெயரில் ஒன்பது நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது.

    வருடத்தில் நான்கு நவராத்திரிகள் வருவதுண்டு. ஆனி மாத அமாவாசைக்குப் பின்னர் வருவது ஆஷாட நவராத்திரி. புரட்டாசி மாத அமாவாசைக்குப் பின்னர் வருவது மகா நவராத்திரி. தைமாத அமாவாசைக்குப் பின்னர் வருவது மாக நவராத்திரி. பங்குனி மாத அமாவாசைக்குப் பின் வருவது வசந்த நவராத்திரி. புரட்டாசி மாதமும் பங்குனி மாதமும் காலதேவனுடைய கோரைப் பற்கள் என்று புராணங்கள் கூறும். ஜீவராசிகள் யாவும் துன்பமின்றி நலமோடு வாழ இவ்விரு மாதங்களில் வருகின்ற நவராத்திரி காலத்தில் விரதம் மேற்கொள்வார்கள். நவம் என்றால் புதியது என்றும், ஒன்பது என்றும் இரு பொருள் தரக்கூடிய சொல்லாகும். பழமையோடும் புதுமை கலந்தும் பரிணமிக்க வழிகாட்டும் விழா என்றும் கொள்ளலாம். புரட்டாசி அமாவாசை நாளுக்குப்பின் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது நவராத்திரி. நவராத்திரியின்போது ஒன்பது நாளும் ஒன்பது வகையில் மலர் வழிபாடு செய்வார்கள். கொலுவிருக்கும் தேவியரை ஒன்பது ராகங்களில் துதித்து, ஒன்பது வகைப் பழங்கள், பிரசாதங்கள் படைத்து அன்னையின் மனம் மகிழ்வுறச் செய்வார்கள். படைத்தல், காத்தல், அழித்தல் எனும் மூன்று சக்திகளைக் கொண்ட அன்னையின் அருள் வேண்டி பூஜை செய்தலே நவராத்திரி வழிபாடாகும்.

    துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என மூவகையாக மும்மூன்று நாட்கள் விழாக் கொண்டாடுவதும், இறுதியில் பத்தாம் நாள் அம்மனை சிம்ம வாகனத்தில் ஊர்வலமாகக் கொண்டு சென்று சூரனை வதம் செய்த நிகழ்ச்சியாக பாரிவேட்டையும் நடைபெறும். புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழாவில் கொலு வைத்தல் பரம்பரையாகச் செயல்பட்டுவரும் பக்தி நிகழ்ச்சியாகும். நல்லோரின் நட்பை ஏற்றுப் போற்றுதலும் பக்தியைப் பெருகச் செய்வதும் கொலுவின் முக்கிய நோக்கமாக அமைகிறது.

    பிரதமை முதல் திரிதியை வரையில் கிரியா சக்தியாகிய துர்க்கா தேவியையும்; சதுர்த்தி முதல் சஷ்டி வரையில் இச்சா சக்தியாகிய மகாலட்சுமியையும்; சப்தமி முதல் நவமி வரையில் ஞான சக்தியாகிய சரஸ்வதியையும் வழிபாடு செய்து தசமியில் நவராத்திரியை நிறைவு செய்வது வழக்கம். மகேஸ்வரி, கவுமாரி, வராஹி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்மி, சாமுண்டீஸ்வரி போன்ற தேவியரின் மந்திரங்களை ஒன்பது நாளும் சொல்லி, பூஜை செய்வது நலமாகும். ஒன்பது நாளும் விரதமிருந்து அன்னையை வழிபடும் கன்னிப் பெண்களுக்கு திருமணம் கைகூடும். குடும்பத்தில் அன்பும் ஒற்றுமையும் ஓங்கும். இளம் பெண்கள் கல்வி, இசை போன்றவற்றில் சிறப்படைவார்கள். இல்லத்தில் செல்வம் சேரும்.

    காசியின் கருணைத்தாய்: சக்திபீடங்களில் மணிகர்ணிகா பீடமாகத் திகழ்வது காசி. தட்ச யாகத்தின் போது, கோபமடைந்த சிவன் அம்பாளின் உடலைத் தூக்கி ஆடும் போது, மணிகர்ணிகை என்னும் அம்பிகையின் குண்டலம் விழுந்த தலம் இது. கங்கைக்கு நிகரான நதியும் இல்லை. காசிக்கு நிகரான பதியும்(ஊர்) இல்லை என்பது சொல்வழக்கு. வாழ்வில் ஒருமுறையாவது காசிக்குச் சென்று கங்கையில் நீராடவேண்டும் என்பது லட்சியமாக இருக்கிறது. மோட்சத் தலங்கள் ஏழில் காசியே முதன்மையானது. உயிர்களின் பாவத்தைப் போக்கி பிறவி என்னும் பெருங்கடலைக் கடக்கும் தோணியாக விஸ்வநாதரும், விசாலாட்சியும் இங்கு வீற்றிருக்கின்றனர்.

    காசியில் மரணம் அடையும் உயிர்களை விசாலாட்சியே தன் மடியில் கிடத்தி முந்தானையால் வீசி விடுவதாகவும், விஸ்வநாதர் அவர்களின் காதில் ராமநாமத்தை ஓதி முக்தி அளிப்பதாகவும் ஐதீகம். விசாலாட்சி என்பதற்கு விசாலமான கண்களைக் கொண்டவள் என்பது பொருள். தன் அகன்ற கண்களால் பக்தர்களின் மீது அருள்மழையை விசாலாட்சி பொழிகிறாள். பாசபந்தங்களைப் போக்கி முக்திவாசலைத் திறந்து விடுகிறாள். காசியில் வாரணம், அசி என்னும் ஆறுகள் வடக்கிலும் தெற்கிலுமாக ஓடுவதால் வாரணாசி என்ற பெயரும் உண்டு. கிரகங்களில் ஒருவரான புதன், காசி விஸ்வநாதரையும், விசாலாட்சியையும் வழிபட்டு கிரகபதவி அடைந்தார். இதனால் இங்கு வழிபட்டவர்களுக்கு கல்வி வளர்ச்சி, ஞானம் கிடைக்கும். இங்கு விமரிசையாக நடக்கும் விழாக்களில் நவராத்திரி முக்கியமானது.

    • மூன்று தேவியருக்கும் தனித்தனியாக உள்ள இந்த பதினெட்டு நாமாவளிகளும் மிகுந்த சக்தி வாய்ந்தவை.
    • செல்வத் திருமகளே! மோகனவல்லியே!எல்லாரும் கொண்டாடும் வேதவல்லியே!

    நவராத்திரி நேரத்தில் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் எனச் சொல்ல நேரமில்லாதவர்கள் இந்த சிறிய நாமாவளிகளைச் சொல்லலாம். மூன்று தேவியருக்கும் தனித்தனியாக உள்ள இந்த பதினெட்டு நாமாவளிகளும் மிகுந்த சக்தி வாய்ந்தவை.

    துர்க்கா தேவி

    ஓம் துர்க்காயை நம

    ஓம் மகா காள்யை நம

    ஓம் மங்களாயை நம

    ஓம் அம்பிகாயை நம

    ஓம் ஈஸ்வர்யை நம

    ஓம் சிவாயை நம

    ஓம் க்ஷமாயை நம

    ஓம் கௌமார்யை நம

    ஓம் உமாயை நம

    ஓம் மகாகௌர்யை நம

    ஓம் வைஷ்ணவ்யை நம

    ஓம் தயாயை நம

    ஓம் ஸ்கந்த மாத்ரே நம

    ஓம் ஜகன் மாத்ரே நம

    ஓம் மகிஷ மர்தின்யை நம

    ஓம் சிம்ஹ வாஹின்யை நம

    ஓம் மாகேஸ்வர்யை நம

    ஓம் திரிபுவனேஸ்வர்யை நம

    லெட்சுமி ஸ்ரீதேவி

    ஓம் மகாலக்ஷ்ம்யை நம

    ஓம் வரலெக்ஷ்ம்யை நம

    ஓம் இந்த்ராயை நம

    ஓம் சந்த்ரவதனாயை நம

    ஓம் சுந்தர்யை நம

    ஓம் சுபாயை நம

    ஓம் ரமாயை நம

    ஓம் ப்ரபாயை நம

    ஓம் பத்மாயை நம

    ஓம் பத்மப்ரியாயை நம

    ஓம் பத்மநாபப் ப்ரியாயை நம

    ஓம் சர்வ மங்களாயை நம

    ஓம் பீதாம்பரதாரிண்யை நம

    ஓம் அம்ருதாயை நம

    ஓம் ஹரிண்யை நம

    ஓம் ஹேமமாலின்யை நம

    ஓம் சுபப்ரதாயை நம

    ஓம் நாராயணப் பிரியாயை நம

    சரஸ்வதி தேவி

    ஓம் சரஸ்வத்யை நம

    ஓம் சாவித்ர்யை நம

    ஓம் சாஸ்த்ர ரூபிண்யை நம

    ஓம் ஸ்வேதா நநாயை நம

    ஓம் ஸ§ரவந்திதாயை நம

    ஓம் வரப்ரதாயை நம

    ஓம் வாக்தேவ்யை நம

    ஓம் விமலாயை நம

    ஓம் வித்யாயை நம

    ஓம் ஹம்ஸ வாகனாயை நம

    ஓம் மகா பலாயை நம

    ஓம் புஸ்தகப்ருதே நம

    ஓம் பாஷா ரூபிண்யை நம

    ஓம் அக்ஷர ரூபிண்யை நம

    ஓம் கலாதராயை நம

    ஓம் சித்ரகந்தாயை நம

    ஓம் பாரத்யை நம

    ஓம் ஞானமுத்ராயை நம

    நவராத்திரி ஸ்லோகம்

    கிராவஹர் தேவீம் த்ருஹிண க்ருஹிணீ மாகமவிதோ

    ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸ ஹசரீ மத்ரித நயாம்!

    துரீயா காபி த்வம் துரதிகம் நிஸ்ஸீம மஹிமா

    மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷி!!

    பொருள்: இறைவனோடு இணைந்திருக்கும் சக்தியே! வேதங்களின் உட்பொருளை உணர்ந்தவர்கள் உன்னை சரஸ்வதி என்றும்,

    லட்சுமி என்றும், சிவனின் பத்தினியாகிய பார்வதி என்றும் பலவிதமாகக் கூறுகிறார்கள். மனதிற்கும் வாக்கிற்கும் அப்பாற்பட்டவளே! எல்லையற்ற மகிமை கொண்டவளே! மகாமாயாவாக இருந்து

    உலகை இயக்கச் செய்து பிரமிக்க வைப்பவளே! அருள்புரிவாயாக.

    துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி வழிபாடு

    அம்பாள் (துர்க்கை)

    காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி

    காசி விசாலாட்சி கருணாம்பிகையே!

    தருணம் இதுவே தயை புரிவாயம்மா!

    பொன் பொருள் எல்லாம்

    வழங்கி எம்மை வாழ்த்திடுவாயம்மா!

    ஏன் என்று கேட்டு என் பசி தீர்ப்பாய்

    என் அன்னை நீயே அம்மா!

    மங்களம் வழங்கிடும் மகாசக்தியே!

    மங்கலத் தாயே நீ வருவாயே!

    என்னுயிர் தேவியே! எங்கும் நிறைந்தவளே!

    எங்கள் குலவிளக்கே! நீ வருவாயே!

    பயிர்களில் உள்ள பசுமையில்

    கண்டேன் பரமேஸ்வரி உனையே!

    சரண் உனை அடைந்தேன்

    சங்கரி தாயே, சக்தி தேவி நீயே!

    அரண் எனக் காப்பாய்

    அருகினில் வருவாய் அகிலாண்டேஸ்வரியே!

    லட்சுமி

    செல்வத் திருமகளே! மோகனவல்லியே!

    எல்லாரும் கொண்டாடும் வேதவல்லியே!

    எண் கரங்களில் சங்கு சக்கரம்

    வில்லும் அம்பும் தாமரை

    மின்னும் கரங்களில் நிறைகுடம்

    தளிர்த் தாம்பூலம் அணி சியாமளையே!

    வரத முத்திரை காட்டியே

    பொருள் வழங்கும் அன்னையே!

    சிரத்தினில் மணி மகுடம்

    தாங்கிடும் சிந்தாமணியே!

    பல வரம் வழங்கிடும் ரமாமணியே!

    வரதராஜ சிகாமணியே!

    தாயே! தனலட்சுமியே!

    சகல வளமும் தந்திடுவாய்

    சரஸ்வதி

    கலைவாணி நின் கருணை தேன்மழையே

    விளையாடும் என் நாவில் செந்தமிழே

    அலங்கார தேவதையே வனிதாமணி

    இசைக்கலை யாவும் தந்தருள்வாய் கலைமாமணி!

    மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும்

    அருள் ஞானக்கரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும்

    ஸ்ருதியோடு லயபாவ ஸ்வரராக ஞானம்

    சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம்!

    வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம்

    வேணுவில் வரும் நாதம் வாணி உன் சக்ரபாதம்

    வானகம் வையகம் உன் புகழ் பாடும்.

    நவராத்திரி பாடல்

    மங்கள ரூபிணி மதியளி சூலினி மன்மத பாணியளே

    சங்கடம் நீங்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சவுந்தரியே

    கங்கண பாணியன் கனிமுகம் கண்டநல் கற்பகக் காமினியே

    ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்கநிவாரணி காமாட்சி

    கான் உறுமலர் எனக் கதிர் ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள்

    தான்உறு தவஒளி தார்ஒளிமதி ஒளி தாங்கியே வீசிடுவாள்

    மான்உறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்

    ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

    சங்கரி சவுந்தரி சதுர்முகன் போற்றிட சபையினில் வந்தவளே

    பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே

    எம்குலம் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்த நல் துர்க்கையளே

    ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

    தணதண தந்தண நவில்ஒளி முழங்கிட தண்மதி நீ வருவாய்

    கணகண கங்கண கதிர்ஒளி வீசிட கண்மணி நீ வருவாய்

    பணபண பம்பண பறைஒலி கூவிட பண்மணி நீ வருவாய்

    ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

    பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே

    கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக் கொடுத்த நல் குமரியளே

    சங்கடம் தீர்த்திட சமர் அது செய்த நல் சக்தி எனும் மாயே

    ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

    எண்ணியபடி நீ அருளிட வருவாய் எம் குலதேவியளே

    பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்

    கண்ணொளி அதனால் கருணையே காட்டி கவலைகள் தீர்ப்பவளே

    ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

    இடர் தருதொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய்

    சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்

    படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்

    ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

    ஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி

    ஜெய ஜெய துர்க்கா ஸ்ரீபரமேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி

    ஜெய ஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெய ஜெய ஸ்ரீதேவி

    ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி.

    ×