என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "broom"

    • தீபாவளியன்று மாகாலட்சுமிக்கு லட்டு வைத்து வழிபட பணம் சார்ந்த பிரச்சனைகள் தீரும்.
    • கல் உப்பு, மஞ்சள்,குங்குமம், கண்ணாடி, மல்லிகைப்பூ முதலானவற்றை வாங்கினால் வருடம் முழுவதும் வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சம் நிறைவாக இருக்கும்.

    தீபாவளி அன்று புத்தாடை, பட்டாசு, இறை வழிபாடு எவ்வளவு முக்கியமானதோ அதே அளவிற்கு முக்கியமானது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவது.

    பொதுவாக அக்ஷய திருதியை மற்றும் தீபாவளி போன்ற நன்னாளில் அவரவர் வசதிக்கேற்ப தங்கம் வாங்குவதை வழக்கமாக கொண்டிருப்பர். ஆனால் இப்போது தங்கம் விற்கும் விலைக்கு அனைவராலும் தங்கத்தை வாங்க முடியாது.

    இந்த சூழலில் தங்கத்திற்கு பதிலாக கல் உப்பு, மஞ்சள்,குங்குமம், கண்ணாடி, மல்லிகைப்பூ முதலானவற்றை வாங்கினால் வருடம் முழுவதும் வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சம் நிறைவாக இருக்கும்.




    எல்லாவற்றிற்கும் மேலாக தீபாவளியன்று துடைப்பம் வாங்குவது மிகவும் நல்லது. நல்ல நாளில் போய் துடைப்பம் வாங்குவதா என்று நீங்கள் யோசிக்க வேண்டாம். துடைப்பம் மகாலட்சுமியின் அம்சமாக சொல்லப்படுகிறது. அதனால் துடைப்பத்தை வாங்கி வீட்டில் ஏதேனும் ஓர் ஓரத்தில் வைத்தாலே மகாலட்சுமியின் அருள் நிறைந்து பண வரவு அதிகமாகும் என்பது நம்பிக்கை.

    வாழ்வில் எப்போதும் கஷ்டம் மட்டும் தான் இருக்கிறது, நிதி நெருக்கடியை சமாளிக்க முடியவில்லை என்பவர்கள் தீபாவளியன்று துடைப்பத்தை வாங்கி அதை யாருக்கேனும் தானமாக கொடுக்கலாம். இப்படி செய்தால் கடன் பிரச்சனை தீரும் என்பது நம்பிக்கை.

    தீபாவளியன்று மாகாலட்சுமிக்கு லட்டு வைத்து வழிபட பணம் சார்ந்த பிரச்சனைகள் தீரும்.

    கையில் துடைப்பத்துடன் மகாத்மா காந்திக்கு மெழுகு சிலை வைக்க வேண்டும் என மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்துக்கு பிரதமர் மோடி பரிந்துரை செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #CleanIndia #PMModi #MadameTussauds
    புதுடெல்லி:

    உலகப்புகழ் பெற்ற பிரபலங்களின் மெழுகு சிலைகள் லண்டன் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியிலும் இதேபோன்ற அருங்காட்சியகம் கடந்தாண்டு இறுதியில் திறக்கப்பட்டது. இங்கு, மகாத்மா காந்தி, பகத்சிங், நேதாஜி, அப்துல்கலாம் உள்ளிட்ட பல தலைவர்களுக்கு மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி, அமிதாப் பச்சன், டாம் குரூஸ், சல்மான் கான், சச்சின், கோலி உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு இங்கு மெழுகு சிலை உள்ளது. இந்நிலையில், இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் முன்னர் அதன் நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி கூறிய பரிந்துரை ஒன்றை அருங்காட்சியக நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது.

    தூய்மை இந்தியா திட்டத்தை பிரதிபலிக்கும் வண்ணம், 1.25 பில்லியன் மக்களை தூய்மை குறித்து ஊக்குவிக்கும் வண்ணம் மகாத்மா காந்தியின் கையில் துடைப்பத்துடன் இருக்கும் படி மெழுகு சிலை வைக்க வேண்டும் என மோடி, அருங்காட்சிய நிர்வாகிகளை கேட்டுள்ளார்.

    மேலும், காந்தி கையில் துடைப்பம் வைத்திருக்கும் படியான புகைப்படத்தை தான் அனுப்புவதாகவும் அவர் கூறியுள்ளார். 

    எனினும், மகாத்மா காந்தி கையில் நீண்ட குச்சி வைத்திருக்கும் படியான மெழுகு சிலையே வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
    ×