என் மலர்

    ஆன்மிக களஞ்சியம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராமர் ராவணனோடு போரிட்ட ஒன்பது நாட்கள்தான் நவராத்திரி என்று கூறப்படுகிறது.
    • தச என்றால் பத்து. ஹரா என்றால் நீக்குதல் பத்துத் தலை கொண்ட ராவணை இவ்வுலகிலிருந்து நீக்குவதற்காக யுத்தம் நடந்த காலக் கட்டத்தைத்தான் தசரா என்று அழைக்கின்றோம்.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் புரட்டாசி மாதம் 12 நாட்கள் தசரா விழா நிகழ்த்தப்படுகிறது. இவ்விழாவில் கொடியேற்றல், காப்புக்கட்டுதல், நோன்பிருத்தல், வேடம் புனைதல், காணிக்கை பெறுதல், அம்மன் மகிசனை வதம் செய்தல், காப்பு வெட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான வழிபாடுகளைக் காண முடிகிறது.

    முன்னொரு காலத்தில் வரமுனி என்று ஒரு முனிவன் தவ வலிமைமிக்கவனாக வாழ்ந்து வந்தான். எனினும் ஆணவத்தால் கட்டுண்டு அறிவுக் கண்ணை இழந்தவனாயிருந்தான். ஒருநாள் அவனது இருப்பிடம் வழியாக அகத்திய முனிவர் வந்தார். தன்னுடைய ஆணவத்தால் வரமுனி அகத்திய முனிவரை மதிக்கத் தவறியதோட அவமரியாதையும் செய்தார். மனம் வெறுத்த அகத்தியர் வரமுனியை நோக்கி, எருமைத்தலையும் மனித உடலும் பெற்று இறைவியால் அழிவாயாக எனச் சாபமிட்டார்.

    அகத்திய முனிவரின் சாபத்தால் வரமுனி எருமைத்தலையும் மனித உடலும் பெற்று மகிசாசுரனாக மாறினான். தனது விடா முயற்சியால் பற்பல வரங்களைப் பெற்றான். முனிவனாக வாழ்வைத் தொடங்கிய வரமுனி தனது வாழ்வின் பிற்பகுதியில் அசுரனாக வாழ்வை நடத்தினான். மகிசாசுரனின் இடையூறுகளைத் தாங்க இயலாத முனிவர்கள் அன்னையை நோக்கி வேள்வி நடத்தி, மகிசனின் கொடுமைகளை நீக்கித் தர வேண்டினர். அவர்கள் நடத்திய வேள்வியில் தோன்றிய பராசக்தி மகிசாசுரனை அழிக்கப் புறப்பட்டாள். மகிசனை அழித்த பத்தாம் நாள் தசரா விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

    தேவர்கள், மகிசாசுரன் செய்த துன்பத்தைச் சிவனிடம் முறையிட்டனர். அவன் மேல் சிவனிடம் உண்டான சீற்றம் பெண்ணுருவாய்த் திரண்டது. அதுவே காளியுருவம்.

    கர்நாடகத்தில் நவராத்திரிப் பண்டிகையைச் சாமுண்டேசுவரிக்கு விழா எடுத்துத் தசரா என்று அழைக்கிறார்கள். இதை அவர்கள் தசராத்திரி, மகாநவமி என்றும் அழைப்பதுண்டு. சக்திப் பூசை இதில் சிறப்பாக இடம் பெறுகிறது. ஒன்பது வடிவங்களைக் கொண்டவளாகத் தேவி பூசிக்கப்படுகிறாள்.

    எருமை முகம் கொண்ட மகிசாசுரன் என்ற அரக்கன் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்த, தேவர்கள் மும்மூர்த்திகளிடம் முறையிட்டனர். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் கோபம் அக்னி ஜுவாலையாகப் பிறந்து ஒன்றாக இணைய, அதிலிருந்து துர்க்கா தேவி தோன்றினாள். துர்க்கைக்குப் பத்துக்கரங்கள். ஒவ்வொரு கரத்திலும் வெவ்வேறு ஆயுதங்கள், பல்வேறு கடவுள் அளித்தவை. என்றாலும் சிவபெருமான் அளித்த திரிசூலத்துக்குத்தான் மகிசாசுரனை அழித்த பெருமை கிடைத்தது. மகிசனைத் துர்க்கை வதம் செய்த நாள்தான் வெற்றித் திருநாள் என்று பொருள் கொண்ட விஜயதசமி. மேற்கு வங்கத்தில் துர்க்கா பூஜா இதுவே நவராத்திரியாகும்.

    ராமர் ராவணனோடு போரிட்ட ஒன்பது நாட்கள்தான் நவராத்திரி என்று கூறப்படுகிறது. ராவணனை ராமபிரான் வென்ற பத்தாவது நாளைத்தான் விஜய தசமியாகக் கொண்டாடுகிறோம் என்ற நம்பிக்கையும் நம் நாட்டில் பரவலாக உள்ளது. நவராத்திரியைத் தசராப்பண்டிகை என்று அழைப்பதே இந்த நம்பிக்கைக்கு வலுவூட்டுவதாக இருக்கிறது. தச என்றால் பத்து. ஹரா என்றால் நீக்குதல் பத்துத் தலை கொண்ட ராவணை இவ்வுலகிலிருந்து நீக்குவதற்காக யுத்தம் நடந்த காலக் கட்டத்தைத்தான் தசரா என்று அழைக்கின்றோம்.

    மகிசாசுரன் என்ற அரக்கன் கடுந்தவம் புரிந்து பிரம்மாவிடமிருந்து தனக்குத் தேவர், மனிதர், அசுரர்களால் மரணம் ஏற்படக்கூடாது என்று வாக்கினைப் பெற்றான். ஆண்களால் மரணம் நேரிடக்கூடாது என்று அந்த அரக்கன் வரம் பெற்றமையால், சண்டிதேவியால் அவனுக்கு அழிவு நேரிடுகிறது. தேவி ஒன்பது நாட்கள் கொலுவிலிருந்து பத்தாவது நாள் மகிசாசுரனை வதம் செய்ததால், தேவி மகிசாசுரமர்த்தினி என அழைக்கப்படுகிறாள். இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி ஆகிய சக்திகளின் வடிவமாகத் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவிகளையும் நவராத்திரியில் வழிபடுவது தமிழ்நாட்டவர் மரபு. நவராத்திரி முடிந்து, விஜயதசமியன்று அந்திவேளையில் தேவி மகிசாசுரனை அழித்தாள்.

    மகிசம் என்றால் எருமை என்று பொருள். மகிசாசுரன் என்றால் எருமைத் தலையுடைய அசுரன் என்று பொருள். இம்மகிசாசுரனின் இடையூறுகளைத் தாங்க இயலாத வானவர்களும் முனிவர்களும் அன்னையை நோக்கி வேள்வி நடத்தி, மகிசாசுரனின் கொடுமைகளை நீக்கித்தர வேண்டினர். மாமுனிவர்களின் கடுந்தவத்தைக் கண்டு உள்ளம் இரங்கினாள் அன்னை. மாமுனிவர்கள் நடத்திய வேள்விக்கு இடையூறு நேராது மாய அரண் ஒன்றை அன்னை உருவாக்கினாள். மாமுனிவர்கள் அளவிலா மகிழ்ச்சி அடைந்து தங்கள் வேள்வினை முறைப்படி தொடர்ந்தனர். அவர்கள் நடத்திய வேள்வியில் ஒரு பெண் மகவு தோன்றியது. அது லலிதாம்பிகை என அழைக்கப்பட்டது. அந்தப் பெண் மகவு ஒன்பது நாட்களில் முழு வளர்ச்சி அடைந்து, பத்தாம் நாள் அன்னை பராசக்தி லலிதாம்பிகை என்ற பெயரில் மகிசாசுரனை அழிக்கப் புறப்பட்டாள். மகிசாசுரனை அழித்த பத்தாம் நாள் தசரா என்றழைக்கப்படுகிறது.

    மேலே கூறப்பட்ட கதைகளுள் ஒன்று மட்டும் தசரா விழாவை ராவண வதத்தோடு தொடர்புபடுத்துகிறது. ஏனையவை யாவும் தேவி மகிசாசுரனை வதம் செய்த நிகழ்ச்சியோடு தசராவைத் தொடர்பு படுத்துகின்றன. மேலும் நவராத்திரி நாட்களில் தேவியே வெவ்வேறு சக்திகளின் வடிவில் கொலுவிருத்தல் மரபாக உள்ளது. தவிர இந்தியாவின் பெரும்பான்மைப் பகுதிகளில் இவ்விழாவைச் சக்தி வழிபாடாகவே மக்கள் கொண்டாடுகின்றனர்.

    எனவே இவ்விழாவைச் சக்தி வழிபாட்டுடன் தொடர்புடையதாகக் கொள்வதே ஏற்புடையதாகத் தோன்றுகிறது. குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோவிலிலும் மகிசனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சியை மையமாகக் கொண்டே நவராத்திரி விழாக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் அதர்மத்தை அழித்துத் தர்மத்தை நிலைநாட்டும் பொருட்டுத் தெய்வம் அவதாரம் எடுக்கும் என்ற இந்து சமயக் கொள்கை உட்பொருளாக வெளிப்படுகிறது.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த பிரதமை நாளில் கொடியேற்றத்துடன் தொடங்கி, பன்னிரு நாட்கள் நவராத்திரி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவே தசரா விழாவாகும். இவ்விழாவின் பத்தாம் நாளன்று மகிசனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவ்விழாவின் முக்கிய அம்சமாகப் பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து வழிபடுகின்றனர்.

    தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களின் தென்பகுதி எங்கும் விழாக்கோலம் பூணும் வகையில் இத்தசரா விழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இத்திருவிழாவைக் கிராமியத் தன்மையுடன் விளங்கும் கலை விழா என்று கூறலாம். திருச்செந்தூரில் கந்தசஷ்டியின் போது கடற்கரையில் மிகப் பெரியளவில் பக்தர்கள் கலந்து கொள்ளுதலைப் போன்று இவ்விழாவிலும் கலந்து கொள்கின்றனர்.

    காப்புக் கட்டுவது திருக்கோவிலின் மரபு. கொடியேற்றி அது இறக்கப்படும் வரை இவ்வூரார் பிறவூர்களுக்குச் செல்லுதல் கூடாதென்றும் செல்ல நேரின் காப்பவிழக்கும் முன் திரும்ப வேண்டுமென்றும் கூறப்படுகின்றது. காப்புத்தடை நாட்டுப்புற மக்களிடையே ஊறிப்போன வழக்காறு. ஏனைய தீய சக்திகளிலிருந்து காப்பாற்றும் நோக்குடன் இதனைக் கட்டுவதாகக் கருதப்படுகிறது.

    முத்தாராம்மன் கோவிலில் புரட்டாசி மாதம் அமாவாசையன்று இரவு எட்டு மணிக்குக் கருவறைத் தெய்வங்களான அம்மனுக்கும் சுவாமிக்கும் பூசை நடத்தப்பட்டுக் காப்புக் கட்டப்படுகிறது. பின்னர் அக்கோவிலில் உள்ள பிற தெய்வங்களுக்கும் காப்புக் கட்டப்படுகிறது. தெய்வங்களுக்குக் காப்புக் கட்டுதலைப் பூசாரியே செய்கிறார். கோவில் பூசாரிகளுக்கும் காப்புக் கட்டப்படுகிறது. இதனை அவர்கள் ஒருவருக்கு மற்றவர் எனக் கட்டிக் கொள்கின்றனர். தெய்வங்களுக்குக் காப்புக் கட்டப்பட்ட மறுநாள் கொடியேற்றத்திற்குப் பின் பக்தர்களுக்குக் கட்டப்படுகிறது. காப்புக் கட்டிய பிறகு பக்தர்கள் நோன்பு கடைப்பிடிக்கத் தொடங்குகின்றனர்.

    பூசாரிகள் காப்புக் கட்டிய பின் அவர்கள் குடும்பத்தில் ஏதேனும் தீட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்தாலும் காப்புக் கட்டியவரைத் தீட்டுக் கட்டுப்படுத்தாது. அவர்கள் விழாச் சடங்குகளில் கலந்து கொள்ளலாம். காப்பு அவிழ்க்கும் வரை அவர்களுக்கு எல்லாச் சலுகைகளும் உண்டு.

    காப்புக் கட்டிய நாளன்று முளைப்பாரி வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பூசாரி கோவில் சார்பாக ஒரு முளைப்பாரி மட்டும் வைக்கிறார். முளை வைக்க விரும்புவோருக்கு அந்நாளில் முளைப்பாரிகளை வைக்கின்றனர். பதினொரு நாட்கள் இம்முளைப்பாரிகள் சிதம்பரேஸ்வரர் கோவிலில் வளர்க்கப்படுகின்றன. சூரசம்ஹாரத்தன்று இவை முத்தாரம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, நண்பகல் பூசை முடிந்த பிறகு எடுத்துச் சென்று கடலில் கரைக்கப்படுகின்றன.

    காப்புக் கட்டிய நாள் முதல் தசராப் பக்தர்கள் நோன்பு மேற்கொள்கின்றனர். சூரசம்ஹாரம் வரை இந்நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. ஒருவேளை உண்டு, தூய்மை மேற்கெண்டு, தனியிடத்தில் தங்கி, இந்நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது.

    தசரா விழாவின் முதல் நாள் நிகழ்ச்சி கொடியேற்றம் ஆகும்.

    கொடியேற்று விழா, மும்மலங்களிலே மூழ்கிக் கிடக்கும் உயிர் அவற்றிலிருந்து விடுவித்துக் கொள்ள அருளை நாடுவதைக் குறிக்கிறது. பஞ்சாட்சரத்தினால் வீடு பேற்றை அடைவிப்பதைக் காட்டுவது கொடியேற்றுவிழா.

    முத்தாரம்மன் கோவிலில் பெருந்தெய்வ வழிபாட்டு மரபிற்கேற்பக் கொடியேற்றமும் பன்னிருநாள் திருவிழாவும் தசராவின்போது நிகழ்கின்றன. திருவிழா நாட்கள் யாவற்றிலும் அம்மனுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

    கொடியேற்றத்திற்கு முன்னர் அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது கொடிப்பட்டம் ஊர்வலம் வருகிறது. ஊர் முழுவதும் வீதிஉலாச் செல்லும் கொடிப்பட்டம் மீண்டும் கோவிலுக்குள் திரும்பி வருகிற வேளையில் ஏராளமான பக்தர்கள் அருள் பெற்று ஆவேசக் கூச்சலிடுகின்றனர்.

    கொடிப்பட்டம் வெண்மையான கச்சைத் துணியால் செய்யப்பட்டதாகும். இத்துணி பதினெட்டு முழ அகலமும் ஐம்பெத்தொரு முழ நீளமும் கொண்டது. கொடியேற்றப் பயன்படும் நூல்கயிற்றின் அளவு இருபத்தேழு முழம் ஆகும்.

    வீதி உலாச் சென்று வந்த கொடிப் பட்டம் கோவிலுக்குள் கொண்டு வரப்பட்டதும், அம்மனுக்குப் பூசை செய்யப்படுகிறது. அதன்பின் கொடிமரத்திற்கு வழிபாடு செய்யப்படுகிறது. கொடி மரத்திற்கு முன்னால் உள்ள பலிபீடத்தின் முன் கொடி வைக்கப்பட்டு, சிறிய யாகமும் பூசையும் நடத்தப்படுகின்றன. பின்னர்க் கொடிக்குச் சிறப்புப் பூசைகளும் தீபாராதனைகளும் செய்யப்பட்டு, கொடி ஏற்றப்படுகிறது. கயிற்றில் கட்டப்பட்ட கொடி மேளதாளத்தோடும் பெண்களின் குலவைச் சத்தத்தோடும் மேலே ஏற்றப்படுகிறது.

    கொடி மரத்தின் கீழ்ப்புறத்தில் நாற்புறங்களிலும் தர்ப்பைப் புல் சிறுசிறு பகுதிகளாக முடிச்சிடப்பட்டு கட்டப்படுகிறது. முடிச்சிகளுக்குள் என்ற வடிவில் மர அச்சுக்கள் செருகி வைக்கப்படுகின்றன.

    தர்ப்பைப் புல்லைச் சுற்றிக் கீழ்ப்புறமாகச் சிறப்பு நிறக் கதர்த்துணி ஆடைபோல் கட்டப்படுகிறது. அதன்பின் பீடப்பகுதியில் அபிஷேகம் நடைபெறுகிறது. பலிபீடத்திற்கும் சேர்த்தே பூசை நடைபெறுகிறது. மஞ்சள் நீர், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், திருநீறு, குங்குமம் ஆகியவற்றால் தனித் தனியாக அபிஷேகம் நடைபெற்று, ஒவ்வொருமுறையும் தீபாராதனையும் நடைபெறுகிறது.

    கொடிமரத்தைச் சுற்றிலும் சிறு குடங்கள் வைக்கப்பட்டு, அவற்றில் உள்ள புனித நீரால் கொடி மரப்பீடமும் பலி பீடமும் நீராட்டப்படுகின்றன. சந்தனமும் குங்குமமும் பூசப்படுகின்றன. பின்னர்க் கொடி மரப் பீடத்தைச் சுற்றிப் பட்டுத் துணி கட்டப்படுகிறது. தொடர்ந்து கொடி மரம், பலிபீடம் ஆகியவற்றிற்கு மாலைகள் சூட்டப்பட்டு, நாக வடிவ விளக்கு முதலான பல்வேறு விளக்குகளால் தீபராதனை செய்யப்படுகிறது.

    பூசாரிகள் இருவர் கொடி மரத்திற்கும் பலிபீடத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் அமர்ந்து சந்தனத்தால் சிறு சிலை போன்ற உருவத்தைச் செய்கின்றனர். அதை அம்மனாகப் பாவித்துச் சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், பஞ்சாமிர்தம் முதலானவற்றைப் படைத்து, வைத்துப் பூசை செய்கின்றனர். பின்னர் வெண்பொங்கல் மட்டும் கொடி மரத்தைச் சுற்றிக் கீழே நான்குபுறமும் வைக்கப்படுகிறது. தொடர்ந்த மீண்டும் தீபாராதனை செய்யப்பட்டு, பூசைப் பொருட்கள் அம்மன் சந்நிதிக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

    கொடி பதினோராம் நாளில் இறக்கப்படுகிறது. ஏற்றியவர்களே கொடியை இறக்க வேண்டும் என்பது மரபாகும். கொடியேற்றம் நேரத்தைப் பூசாரிகள் பஞ்சாங்கம் பார்த்துக் கணிக்கின்றனர். ஆனால் கொடி இறக்கும்போது நாள், நேரம் பார்ப்பதில்லை.

    கொடித்துணியைப் பூசாரிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர். கொடியேற்றத்திற்காகக் கொடித்துணி, கொடிக்கயிறு இவற்றை வாங்கும் செலவைக் கட்டளைதாரர்களே ஏற்றுக் கொள்கின்றனர். இவை திருச்செந்தூரில் வாங்கப்படுகின்றன.

    கொடியேற்றத்தின் போது கட்டப்படும் தர்ப்பைப்புல் நாவிதன் இனத்தவரால் குளம், ஆறு போன்ற பகுதிகளிலிருந்து எடுத்து வரப்படுகிறது. தர்ப்பைப்புல் மீது துணி கட்டுவதைப் பரிவட்டம் கட்டல் என்று கூறுகின்றனர்.

    தர்ப்பைப்புல் கட்டுதல் செழிப்பின் அடையாளமாகவும் மர அச்சுத் தீட்டுக் கழித்தலுக்காகவும் பிற தீய சக்திகள் தீண்டாமலிருக்கவும் வைக்கப்படுகின்றன.

    கொடியேற்றத்தின் போது கட்டப்படும் தர்ப்பைப்புல் நாவிதன் இனத்தவரால் குளம், ஆறு போன்ற பகுதிகளிலிருந்து எடுத்து வரப்படுகிறது. தர்ப்பைப்புல் மீது துணி கட்டுவதைப் பரிவட்டம் கட்டல் என்று கூறுகின்றனர்.

    தர்ப்பைப் புல் கட்டுதல் செழிப்பின் அடையாளமாகவும் மர அச்சுத் தீட்டுக் கழித்தலுக்காகவும் பிற தீய சக்திகள் தீண்டாமலிருக்கவும் வைக்கப்படுகின்றன.

    கொடியேற்றத்திற்குத் தத்துவ விளக்கம் கூறப்படுகிறது. தர்ப்பைப்புல் பாசமாகிய சுத்தமாயையை உணர்த்துவது. கொடித்துணியில் வரையப் பெற்ற தெய்வம் உயிரை (ஆன்மாவை) உணர்த்துவது. கொடி மரத்தில் தெய்வத்தின் உருவம் வரையப்பட்ட கொடி ஏறுவது உயிர் சுத்தமாயை துணைக் கொண்டு ஏனைய ஆதாரங்கள் வழியே முறையே மேலே ஏறுவதைக் குறிப்பது. மேலே உச்சியைச் சென்றடைவது உயிர் பேரானந்த நிலையில் நிற்பதனை உணர்த்துவதாகும். இவ்வாறு கோயிற்களஞ்சியம் கொடி மரத் தத்துவத்தைக் கூறுகிறது.

    கொடியேற்ற நிகழ்ச்சி முடிந்ததும் பக்தர்களுக்குக் காப்புக் கட்டுதல் நிகழ்கிறது. நோன்பு மேற்கொண்டவர்களும் நேர்ச்சை செய்வோரும் வேடம் புனைவோரும் பக்தர்களும் வரிசையாகக் கோவிலுக்குள் சென்று காப்புக் கட்டிக் கொள்கின்றனர். தசராக் குழுவினர் கூட்டமாக வந்து காப்புக் கட்டிக் கொள்வதும் உண்டு.

    தசரா விழா நாட்களில் முத்தாரம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலத்தில் வீதி உலா வருதல் சிறப்பாகக் கருதப்படுகிறது. துர்க்கை, விஸ்வகர்மேஸ்வரர், பார்வதி, பாலசுப்பிரமணியர், நவநீதக்கிருஷ்ணர், மகிசாசுரமர்த்தினி, ஆனந்த நடராசர், கஜலட்சுமி, கலைமகள் ஆகிய கோலங்களில் அம்மன் தேரில் வீதி உலா வருகிறாள். பத்தாம் நாள் மகிசாசுரமர்த்தினி கோலம் கொண்டு சூரனை வதம் செய்கிறாள்.

    தசராவிற்கு அணி சேர்த்து அதனைத் தனிப்பெரும் விழாவாக வெளிப்படுத்துகிற சிறப்பு நிகழ்ச்சியாக இரண்டை குறிப்பிடலாம். அவை:

    1. சூரசாம்ஹாரம்

    2. வேடம் புனைதல்

    சூரசம்ஹாரம் என்று மக்களால் வழங்கப்படுகிற மகிசாசுர வதம் குலசேகரன்பட்டினத்தில் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. மகிசனை வதம் செய்து கொல்லும் இந்நிகழ்ச்சியே தசரா விழாவில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.

    மகிசாசுரமர்த்தினி கோலத்தின் சிறப்புக் காரணமாக அதனை இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன.

    கானத்து எருமைக் கருந்தலைமேல் நின்றாயால் (சிலம்பு. வேட்டுவரி, 7) என்கிறது சிலப்பதிகாரம்.

    இக்கோலம் தமிழகக் கோவில்களில் பரவலாகச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் மகிசாசுரன், அவனை மாதகனம் செய்யும் கார்த்தியாயினி, இருதரப்புப்படைகள், போரின் உக்கிரம் ஆகியவற்றைக் கல்லில் அற்புதமாக வடித்துள்ளனர். அன்னையின் உருவம் செப்புச் சிலையாக வேதாரணியம், பட்டீச்சுவரம் முதலிய கோவில்களில் உருப் பெற்றிருக்கிறது.

    மகிசம் என்றால் மந்தம், மடமை, அறியாமை என்று பொருள்படும். அன்னையின் ஆற்றல் முழுவதும் இந்த அறியாமையும், அஞ்ஞானமும் ஒழிந்து ஞானம் பெருகச் செயல்படுகிறது.

    மகிசனை அழிப்பதற்காகத் தோன்றியவளே மகிசாசுரமர்த்தினி. குலசேகரன்பட்டினம் கோவிலில் பத்தாம் நாளன்று முத்தாரம்மன் மகிசனை அழிக்க மகிசாசுரமர்த்தினி கோலத்தில் புறப்படுகிறாள்.

    விழாவின் பத்தாம் நாளான சூரசம்ஹாரத்தன்று நண்பகல் கோவிலில் முத்தாரம்மன், ஞானமூர்த்தீஸ்வரர் ஆகியோருக்கும் துணைத் தெய்வங்களுக்கும் அபிஷேகமும் அலங்காரங்களும் செய்யப்படுகின்றன. மேலும் சூரசம்ஹாரத்திற்குக் கொண்டு செல்லப்படுகிற சூலத்திற்கும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    அன்றைய தினம் நள்ளிரவுப் பன்னிரண்டு மணிக்கு மீண்டும் சூலத்திற்குப் பூசைகள் செய்யப்படுகின்றன. பின்னர் சூலம் பூசாரியால் கோவிலிலிருந்து தேர்மண்டபத்திற்கு எடுத்து வரப்படுகிறது. தேர் மண்டபத்தில் உற்சவ மூர்த்தியான அம்மன் மகிசாசுரமர்த்தினி கோலத்தில் வதம் செய்யத் தயாராக இருக்கிறாள்.

    தேர் மண்டபத்திலிருந்து முதலில் மகிசாசுரன் புறப்படுகிறான். பின்னர் சிம்ம வாகனத்தில் மகிசாசுரமர்த்தினி கோலம் கொண்ட முத்தாரம்மன் புறப்படுகிறாள். இருவரின் சப்பரங்களும் சிதம்பரேஸ்வரர் கோவிலுக்குச் செல்லும் கடற்கரைச் சாலையில் வந்து சேர்கின்றன. கடற்கரைச் சாலையில் நான்கு பந்தல்கள் அமைக்கப்படுகின்றன. அவற்றில் முதல் பந்தலின் கீழ் அம்மன் வந்ததும், மகிசாசுரன் அம்மனை மூன்று முறை வலம் வருகிறான். பின்னர் அம்மனின் சப்பரத்திற்கும் மகிசனின் சப்பரத்திற்கும் இடையில் கயிறு பிடிக்கப்பட்டு, அக்கயிற்றின் வழியாக ராக்கட் வாணம் பற்றவைக்கப்பட்டுச் செலுத்தப்படுகிறது. அது கயிற்றின் இருமுனைகளுக்கும் இருமுறை சென்று வருகிறது. இச்செயல் அம்மனுக்கும் மகிசனுக்கும் இடையில் நடப்பது போலச் சித்தரிக்கப்படுகிறது.

    அம்மன் சப்பரத்திலிருந்து சூலாயுதம் புறப்பட்டு, மகிசனின் அசுரத் தலையைக் கொய்கிறது. அப்போது காளிவேடம் அணிந்த பக்தர்களும் தம் கையில் ஏந்திய சூலாயுதங்களுடன் மகிசனைக் கொல்ல ஆவேசமாக வருகின்றனர். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, மீண்டும் நூறு அடி தொலைவில் உள்ள இரண்டாவது பந்தலுக்கு அம்மன் சப்பரம் நகரத் தொடங்கும் வேளையில் மகிசாசுரன் சிம்மத்தலையுடன் முன்னால் செல்கிறான். அம்மனின் சூலாயுதத்தால் மகிசனது சிம்மத்தலை வெட்டப்படுகிறது.

    மூன்றாவது பந்தலில் மகிசனின் எருமைத் தலை வெட்டப்படுகிறது. இறுதியில் மகிசன் சேவல் தலையுடன் நான்காவது பந்தலுக்குச் செல்கிறான். அங்குச் சேவல் தலை வெட்டப்படுகிறது. உடனே பக்தர்களின் ஆரவாரத்துடன் வாணவேடிக்கை முழங்குகிறது. அம்மன் சிதம்பரேஸ்வரர் கோவிலுக்கு எதிரில் உள்ள கடற்கரை மேடையில் எழுந்தருளுகிறாள். வெற்றி வாகை சூடிய அம்மனைச் சாந்தப்படுத்தும் நோக்கத்துடன் அபிஷேக ஆராதனைகள் அம்மனுக்குச் செய்யப்படுகின்றன. பின்னர் அம்மன் சிதம்பரேஸ்வரர் கோவிலுக்குள் செல்ல, அங்கும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன. தொடர்ந்து அம்மன் தேரில் புறப்பட்டு தேர் மண்டபத்துக்கு வந்து சேர்கிறாள்.

    மறுநாள் அதிகாலை கோவில் கலையரங்கத்திற்கு அம்மன் எழுந்தருளுகிறாள். அங்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. பின்னர் அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் அம்மன் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. வீதிஉலாச் செல்லும் அம்மன் மாலையில் கோவிலுக்கு வந்து சேர்கிறாள்.

    பின்னர் கொடி மரத்திலிருந்து இறக்கப்படுகிறது. அம்மன், சுவாமி, பிற தெய்வங்களுக்குக் கட்டப்பட்டுள்ள காப்புக்கள் களையப்படுகின்றன. தொடர்ந்த பூசாரிகளும் பக்தர்களும் காப்புக்களைக் களைகின்றனர். நள்ளிரவுப் பன்னிரண்டு மணிக்குச் சேர்க்கை அபிஷேகம் நடைபெறுகிறது. அன்று நண்பகல் அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

    பன்னிரண்டாம் நாளன்று காலை எட்டு மணிக்கும் பத்து மணிக்கும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குலதெய்வமே தொட்டியங்குளம் மாரியம்மா மாமதுரையிலே தெப்பக்குளம் மாரியம்மா
    • திருச்சியிலே சமயப்புரத்தம்மா வெக்காளியம்மா சிறுவாச்சூர் மதுரகாளியம்மா

    கண்ணிரண்டும் உன்முகமே காணவேண்டும்-அம்மா

    காலிரண்டும் உன்னடியே நாடவேண்டும்

    பண்ணமைக்கும் நா உனையே பாடவேண்டும்-அம்மா

    எல்லோரும் பக்தியோடு கையெடுத்து உன்னையே கும்பிடவேண்டும்!

    எண்ணமெல்லாம் உன்நினைவே ஆக வேண்டும்

    இருப்பதெல்லாம் உன்னுடைய தாகவேண்டும்!

    மண்ணடக்கும் தாயே பெரியபாளையத்தம்மா

    மண்ணளக்கும் தாயே!

    குலதெய்வமே தொட்டியங்குளம் மாரியம்மா

    மாமதுரையிலே தெப்பக்குளம் மாரியம்மா

    விருதுநகரிலே முத்துமாரியம்மா

    சிவகாசியிலே பத்ரகாளியம்மா

    வீரபாண்டியிலே கௌமாரியம்மா

    தாயமங்கலத்திலே முத்துமாரியம்மா

    இருக்கங்குடியிலே மாரியம்மா

    செந்தூரிலே சந்தன மாரியம்மா

    ஆரல்வாய் மொழியிலே  முப்பந்தலிலே இசக்கிமாரியம்மா

    பெருங்கரையிலே சதுரங்க நாயகியம்மா

    சிவகங்கையிலே வெட்டுடையார் காளியம்மா

    திண்டுக்கல்லிலே கோட்டை மாரியம்மா

    மணப்பாறையிலே முத்துமாரியம்மா

    திருச்சியிலே சமயப்புரத்தம்மா வெக்காளியம்மா

    சிறுவாச்சூர் மதுரகாளியம்மா

    மண்ணளக்கும் தாயே!

    வடநாட்டிலே காசி விசாலாட்சியம்மா

    வங்காளத்திலே காளியம்மா

    விஜயவாடாவிலே கனகதுர்க்கையம்மா

    கர்நாடக மாநிலத்திலே அன்னை சாமுண்டீஸ்வரி

    சாரதாம்பிகே-மூகாம்பிகே அம்மா

    தங்க வயலிலே கங்கையம்மா

    கேரளத்திலே சோற்றானிக்கரை பகவதியம்மே

    கொடுங்கல்லூர் பகவதியம்மே

    மண்ணளக்கும் தாயே!

    மலேசிய நாட்டிலே மகாமாரியம்மா

    சிங்கப்பூரிலே வீரமா காளியம்மா

    தஞ்சையிலே புன்னை நல்லூர் மாரியம்மா

    குடந்தையிலே படைவெட்டி மாரியம்மா

    வலங்கைமானிலே பாடைகட்டி மாரியம்மா

    நாகையிலே நெல்லுக்கடை மாரியம்மா

    வேளாங்கண்ணியிலே வேளாங்கண்ணியம்மா

    திருத்துறைப்பூண்டியிலே முள்ளாட்சியம்மா

    எட்டுக்குடியிலே துரோபதை மாரியம்மா

    ஆரூரிலே சீதலாதேவி எல்லம்மா

    பட்டுக்கோட்டையிலே நாடியம்மா

    அறந்தாங்கியிலே வீரமா காளியம்மா

    திருவப்பூர் மாரியம்மா

    கொன்னையூர் மாரியம்மா

    காரைக்குடியிலே கொப்புடைய நாயகியம்மா

    கண்கொடுத்த தெய்வமே நாட்டரசன்

    கோட்டை வாழ் என் கண்ணாத்தா

    மண்ணளக்கும் தாயே!

    படவேட்டிலே ரேணுகாபரமேஸ்வரியம்மா

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியம்மா

    மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரியம்மா

    வெட்டுவானம் எல்லையம்மா

    செங்கையிலே நாகாத்தம்மா

    மண்ணளக்கும் தாயே!

    மயிலையிலே முண்டக்கண்ணியம்மா

    சென்னையிலே அருள்மிகு தேவி

    கோலவிழி பத்ரகாளியம்மா

    அல்லிக்கேணியிலே எல்லம்மா

    புரசையிலே பாதாளபொன்னியம்மா

    மாம்பலத்திலே முப்பாத்தம்மா

    வட சென்னையிலே ரேணுகா பரமேஸ்வரியம்மா

    சேலத்திலே அன்னதான மாரியம்மா

    ஈரோட்டிலே சின்னமாரி-பெரியமாரியம்மா

    கோவையிலேதண்டுமாரியம்மா-கோணியம்மா

    சத்யமங்கலத்திலே பண்ணாரி மாரியம்மா

    மண்ணளக்கும் தாயே!

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மறைந்த மங்கை மறுபடியும் ஒருநாள் சிவபெருமான் முன் தோன்றினாள்.
    • சாம்பலால் அகில உலகை காத்து இரட்சித்தாள் தாய்! பாம்புருக்கொண்டு பாங்காக வேற்காட்டில் அமர்ந்தாள்.

    வேயுறு தோனி பங்கன்! விடமுண்ட கண்டன்! மாதொரு பாகனாய் வீற்றிருக்கும் இடம் திருக்கயிலை. ஓங்காரத்தின் உட்பொருள்! பரம்பொருள்!! அம்மையும் அப்பனுமாய் அமர்ந்திருக்கும் இடம் கயிலைமலை. அருளே உருவானவன். பொன்னவிர் மேனியான். கங்கையும் திங்களும் அணிந்தவன்.

    அவர்கள் இருவருக்கும் பிறக்கும் ஒவ்வொரு பிள்ளையையும் கொன்று வந்தான்.

    தேவகி எட்டாவது முறையாக கர்ப்பமானாள். அதே சமயத்தில் கோகுலத்தில் நந்தகோபனின் மனையாளும் கர்ப்பமானாள். அவளது கர்ப்பத்தில் உதித்தவள் மாயை என்னும் மகாசக்தி.

    இறைவனின் எண்ணப்படி இருவருக்கும் ஒரே நேரத்தில் பிரசவம். வசுதேவர் குழந்தைகளை இடம் மாற்றினார். மாயக்கண்ணன் ஆயர்பாடியில்! மாயாசக்தி கம்சனின் சிறைக்கூடத்தில்.

    வாளெடுத்து வந்தான் கம்சன். பச்சிளம் குழந்தையைக் கொல்லும் மாவீரன். பிறந்தது பெண்ணென்றாலும் கொல்வேன் என்று அந்த மாணிக்கத்தை தூக்கி வீசினான்.

    அடுத்த கணம்...

    அந்தரத்தில் நின்று சிரித்தாள் அந்த மகாசக்தி! அடேய் கொலைப்பாதகா! நான் கருமாறி வந்தவளடா! ஊர் மாறி பேர் மாறி உருமாறி கருமாறி வந்த என்னைக் கொல்லப் போகிறாயா? அது உன்னால் முடியுமா? மும்மூர்த்திகளாலும் முடியாத செயலை, அற்பனே, நீ செய்ய முனைந்தாயா? உன்னை ஒரே நொடியில் பொடிப்பொடியாக்கிவிடுவேன். ஆனால் மண்ணுலக மக்களுக்கு அருள் செய்ய புறப்பட்டவள் நான்! உன்னைக்கொன்று மறுபடியும் ரௌத்காரியாக மாற விரும்பவில்லை.உன்னை கொல்ல வேறொருவன் பிறந்துவிட்டான் என்று கூறி அந்தரத்தில் நின்றவள் மறைந்தாள்.

    மறைந்த மங்கை மறுபடியும் ஒருநாள் சிவபெருமான் முன் தோன்றினாள். கிருஷ்ணமாரியாகத் தோன்றியவளின் உக்கிர சொரூபத்தைக் கண்டு தேவர்களே திகைத்தனர். அசுரரின் கொட்டத்தை அடக்கிட சாம்பலை அள்ளித் தந்தார் சிவபெருமான்.

    சாம்பலால் அகில உலகை காத்து இரட்சித்தாள் தாய்! பாம்புருக்கொண்டு பாங்காக வேற்காட்டில் அமர்ந்தாள். கலியின் வெங்கொடுமை மீண்டும் தலைதூக்கியது. மக்களை காக்க மாதா மீண்டும் தோன்றினாள் மீண்டும் கருமாரியாகக் கோவில் கொண்டாள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கைலையில் இருக்கும் சிவபெருமானின் தரிசனம் பெறுவதற்காக திருமால் கருட வாகனத்தில் சென்றார்.
    • சிவபெருமானின் காவலனான நந்திதேவனிடம் அனுமதி பெற்று திருமால் சிவதரிசனத்திற்கு சென்றுவிட, கருடன் வெளியில் நின்றார்.

    அதிகார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவ்வகை நந்திகளில் மூன்றாவதாக இருப்பதாகும். கைலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் நந்திக்கு, சிவபெருமானை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவராக உள்ளமையினால் அதிகார நந்தி என்ற பெயர் வந்தது.

    சிவாலயங்களில் கொடிமரத்திற்கு அருகே இந்த அதிகார நந்தி அமைக்கப்பெற வேண்டுமென சிவ ஆகமங்கள் கூறுகின்றன.

    கைலையில் இருக்கும் சிவபெருமானின் தரிசனம் பெறுவதற்காக திருமால் கருட வாகனத்தில் சென்றார். சிவபெருமானின் காவலனான நந்திதேவனிடம் அனுமதி பெற்று திருமால் சிவதரிசனத்திற்கு சென்றுவிட, கருடன் வெளியில் நின்றார். சிவதரிசனத்தில் மூழ்கிய திருமால் திரும்பிவர நேரமானதால், கருடன் நந்திதேவனிடம் அனுமதி பெறாமல் உள்ளே செல்ல முயன்றார். இதனால் இருவருக்கும் சண்டை மூண்டது. நந்தி தேவனின் ஆவேச மூச்சில் கருடன் நிலைதடுமாறி விழுந்தார்.

    தன்னைக் காக்க திருமாலை அழைத்தார். சிவதரிசனத்தில் இருந்த திருமால் சிவனிடம் வேண்ட, நந்தியிடம் கருடனை மன்னிக்குமாறு சிவபெருமான் வேண்டினார். அதனால் கருடன் காக்கப்பெற்றார்.

    சிவன் கோவில்களில் அதிகார நந்திக்கென வாகனம் உண்டு. திருவிழாக்காலங்களில் சிவபெருமான் இந்த அதிகார நந்தி வாகனத்தில் வீதியுலா வருகிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அசுரர்களை நோக்கி செல்லும் வழியில் தேரின் அச்சு முறிந்தது.
    • போரில் பின்தங்காமல் இருப்பதற்காக திருமால் காளையாக வடிவெடுத்து சிவபெருமானை தன் முதுகில் ஏற்றிச் சென்றார்.

    அவதார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவ்வகை நந்திகளில் லிங்கத்திற்கு அருகே இருக்கும் கைலாச நந்திக்கு அடுத்து இருப்பதாகும். சிவபெருமானுக்கு வாகனமாக திருமால் நந்தியாக மாறியதால் இந்த நந்தியை விஷ்ணு அவதார நந்தி என்றும், விஷ்ணு நந்தி என்றும் அழைக்கின்றார்கள்.

    விஷ்ணு நந்தியாக மாறிய கதை

    அசுரர்களின் தொல்லைகளைத் தாங்கமுடியாமல் முனிவர்களும், தேவர்களும் கயிலாயம் சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர். தேவர்கள் ஏற்பாடு செய்திருந்த தேரில் சிவபெருமான் போரிட புறப்பட்டார்.

    அவர் அசுரர்களை நோக்கி செல்லும் வழியில் தேரின் அச்சு முறிந்தது. போரில் பின்தங்காமல் இருப்பதற்காக திருமால் காளையாக வடிவெடுத்து சிவபெருமானை தன் முதுகில் ஏற்றிச் சென்றார். இதனால் ரிஷபாரூடர் என்ற பெயர் சிவபெருமானுக்கு வந்தது. அவ்வாறு விஷ்ணு ரிசபமாக மாறியதால் சிவாலயங்கள் அனைத்திலும் விஷ்ணு நந்தி அமைக்கப்பெறுகிறது.

    இருப்பினும் நான்கு நந்திக்கும் குறைவான சிவாலயங்களில் இந்த விஷ்ணு அவதார நந்தி பிரதிஷ்டை செய்யப்படுவதில்லை.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோவில் பிரதான வாயிலில் வலது பக்கம் பார்த்தபடி அதிகார நந்தி இருப்பார். பின்புறம் ரிஷப நந்தி இருக்கும்.
    • ஒரு ஆலயத்தில் ஏழு நந்திகள் இருக்குமானால் அந்த ஆலயம் மிகச்சிறப்புடையது.

    நந்தி என்ற சொல்லுக்கு எப்போதும் ஆனந்த நிலையில் இருப்பவர் என்று பொருள். இளமையும் திட்பமும் வாய்ந்தவராக நந்தி தேவர் கருதப்படுகின்றார். சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கும் மரியாதை செய்யக்கூடியது பிரதோஷ வழிபாடு.

    பிரதோஷ வேளையில் ஈசனை வழிபட அனைத்தும் சித்திக்கும். இக்காலத்தில் நந்தி தேவரை வழிபடுவது சிறப்பாகும்.

    வலம் வருதல் : சாதாரண நாளில் சிவ சந்நிதியை மூன்று முறை வலம்வர வேண்டும். ஆனால் பிரதோஷ காலத்தில், சோம சூத்திரப் பிரதட்சணம் செய்ய வேண்டும்.

    சோமசூத்தகப் பிரதட்சணம் என்பது முதலில் சிவலிங்கத்தையும், நந்தியையும் வணங்கிக் கொண்டு அப்பிரதட்சணமாக (தட்சிணாமூர்த்தி சன்னதி வழியாக) சண்டிகேசுவரர் சன்னதி வரை சென்று அவரை வணங்கிக் கொண்டு, அப்படியே திரும்பி வந்து, முன்போல் சிவலிங்கத்தையும், நந்தியையும் வணங்கிக் கொண்டு, வழக்கம் போல் அப்பிரதட்சணமாக ஆலயத்தை வலம் வரவேண்டும். அப்படி வலம் வரும் பொழுது சுவாமி அபிஷேக தீர்த்தம் வரும் தொட்டியை (கோமுகத்தை) கடக்காமல் அப்படியே வந்த வழியே திரும்பி, அப்பிரதட்சணமாக சன்னதிக்கு வந்து சிவலிங்கத்தையும், நந்தியையும் வணங்க வேண்டும். இப்படி மூன்று முறை வரவேண்டும். இது அநேக அசுவமேதயாகம் செய்த பலனைத் தரும் என சான்றோர் கூறியுள்ளனர். சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷத்தன்று இறைவனை இவ்வாறு வலம் வருவதால் இன்னல்கள் நீங்கி நன்மைகள் பெறுவர். பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்குகிறது.

    எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.

    காராம்பசுவின் பாலைக் கொண்டு நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ ஜென்ம வினைகள், பிராமணனைக் கொன்ற சாபம், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்டவை நீங்கும் என விரதமாலை நூல் கூறுகிறது.

    எனவே, பிரதோஷ காலத்தில் ஈசனையும் நந்தி தேவனையும் வழிபடுவதன் மூலம் அனைத்து தரப்பு மனிதர்களும் பலன் பெற முடியும். குறிப்பாக சாயும் காலம் (மாலை) வழிபாடு மேற்கொள்வது கூடுதல் பலனைத் தரும். பிரதோஷ கால நேரங்களில் சிவ பெருமான் நந்தியின் தலை மத்தியில் நடனம் ஆடுவதாக புராணங்களில் நம்பிக்கை . எனவே நந்திக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும்.

    நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது. எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும், இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது.

    மெத்தப் படித்திருந்தாலும் நந்தி பகவான் மிகவும் அடக்கமானவர். சிவன் கோவில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக இருக்கிறது. அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர்ந்திருப்பது போல் தோன்றும்.

    நந்தி தேவர் சிவலோகத்தின் தலைமைக் காவலனாக விளங்குவதால் இவர் தேவர்கள் மற்றும் சிவனை தரிசிக்க வரும் பக்தர்களை தடுக்க வல்ல அதிகாரம் பெற்றவர். பொதுவாக கோவிலில் சிவலிங்கமும் நந்தியும் ஒரே நேர்க்கோட்டில் காட்சி தருவார்கள்.

    ஒரு ஆலயத்தில் ஏழு நந்திகள் இருக்குமானால் அந்த ஆலயம் மிகச்சிறப்புடையது. ஐந்து பிரகாரங்கள் உள்ள கோவில்களில் இந்திர நந்தி, பிரம்ம நந்தி, வேத நந்தி, விஷ்ணு நந்தி, தர்ம நந்தி என ஐந்து நந்திகளை தரிசிக்கலாம். ஒரு சமயம் இந்திரன், நந்தி ரூபத்தில் சிவபெருமானுக்கு வாகனமாக இருந்தார். அவரே இந்திர நந்தி. இந்திரன் போகங்களுக்கு அதிபதியாகத் திகழ்வதால் இவர் 'போக நந்தி' என்றும் அழைக்கப்படுகிறார்.

    பிரம்மன் ஒரு சமயம் நந்தியாகி சிவனைத் தாங்கினார்.

    அதனால் அவர் பிரம்ம நந்தி எனப்பட்டார். பிரம்மன் வேத சொரூபி ஆனதால் இவரே 'வேத நந்தி'யும் ஆனார்.

    முப்புரத்தினை எரிப்பதற்காக சிவபெருமான் தேரில் ஏறியதும் 'தன்னால்தான் திரிபுரம் அழியப் போகிறது' என்று கர்வம் கொண்டது தேர். இதனை அறிந்த சிவபெருமான் தன் கட்டை விரலை தேரில் ஊன்றினார்.

    தேர் உடைந்தது. அப்போது மகாவிஷ்ணு நந்தியாக உருவம் எடுத்து சிவபெருமானை தாங்கினார். அவர்தான் 'மால் விடை' என்று சொல்லக்கூடிய விஷ்ணு நந்தி.

    மகா பிரளய காலத்தில், தர்ம தேவதை நந்தியாக மாறி சிவபெருமானைத் தாங்கியது. அதுதான் 'தர்ம விடை' எனப்படும் தர்ம நந்தி.

    கோவில் பிரதான வாயிலில் வலது பக்கம் பார்த்தபடி அதிகார நந்தி இருப்பார். பின்புறம் ரிஷப நந்தி இருக்கும். மூன்று நந்திகள் உள்ள ஆலயத்தில் இறைவனிடமிருந்து மூன்றாவது கொடி மரத்திற்கு அருகில் உள்ள நந்தி 'ஆன்ம நந்தி' எனப்படும். இந்த நந்தியை 'சிலாதி நந்தி' என்றும் சொல்வர்.

    கயிலையைக் காப்பவர், அதிகார நந்தி. சிவன் தாண்டவம் ஆடும்பொழுது மத்தளம் இசைப்பார்.

    சிவபெருமானின் கட்டளையை நிறைவேற்ற சேனைத் தலைவராகவும் இருப்பவர். பிரதோஷ காலத்தில் நந்தி மிகவும் போற்றப்படுகிறார்.

    நந்தியை தினமும் வணங்குபவர்களுக்கு ஞானம் கைகூடும். குலம் செழிக்கும், சிறப்பான வாழ்வு அமையும் என்பர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கைலாச நந்தி என்பவர் சிவாலயங்களில் காணப்பெறும் ஐவ்வகை நந்திகளில் ஒருவராவர்.
    • சிவ ஆலயத்தினுள் அமைக்கப்பெரும் ஒரே நந்தி இவர் என்பதால் ப்ரதிஷ்டை செய்யப்படுகிறார்.

    கைலாச நந்தி என்பவர் சிவாலயங்களில் காணப்பெறும் ஐவ்வகை நந்திகளில் ஒருவராவர். இவர் அனைத்து சிவாலங்களிலும் மூலவருக்கு அருகே அமைக்கப்பெறுகிறார். கைலாயத்தில் சிவபெருமானுக்கு அருகே எப்போதும் இருப்பதனால் இவருக்கு கைலாச நந்தி என்று பெயர் வந்து.

    இவர் கரங்களில் பொற் பிரம்பினையும், வீர வாளினையும் கொண்டுள்ளார். இவர் எப்பொழுதும் தன்னுடைய மூச்சுக்காற்றினால் இறைவனாகிய சிவபெருமானை குளிர்வித்துக் கொண்டே இருப்பவர் என்கிறன சிவ ஆகமங்கள். சிவ ஆலயத்தினுள் அமைக்கப்பெரும் ஒரே நந்தி இவர் என்பதால் ப்ரதிஷ்டை செய்யப்படுகிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அவதார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் லிங்கத்திற்கு அருகே இருக்கும் கைலாச நந்திக்கு அடுத்து இருப்பதாகும்
    • சாதாரண நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் நான்காவதாக இருப்பதாகும்.

    ஐவ்வகை நந்திகள் என்பவை சிவ ஆகமங்களின் அடிப்படையில் சிவாலயங்களில் அமைக்கப்பெரும் ஐந்து நந்திகளாவர். ஆகமத்தில் ஒவ்வொரு நந்தியை அமைக்கும் விதமும், அமைவிடமும், அந்த நந்திகளின் வரலாறும் இடம்பெற்றிருக்கின்றன.

    கைலாச நந்தி

    முதன்மைக் கட்டுரை: கைலாச நந்தி

    கைலாச நந்தி லிங்கத்துடன்

    கைலாச நந்தி என்பவர் சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் ஒருவராவர். இவர் அனைத்து சிவாலங்களிலும் மூலவருக்கு அருகே அமைக்கப்பெறுகிறார். கைலாயத்தில் சிவபெருமானுக்கு அருகே எப்போதும் இருப்பதனால் இவருக்கு கைலாச நந்தி என்று பெயர் வந்து.

    அவதார நந்தி

    முதன்மைக் கட்டுரை: அவதார நந்தி

    அவதார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் லிங்கத்திற்கு அருகே இருக்கும் கைலாச நந்திக்கு அடுத்து இருப்பதாகும். சிவபெருமானுக்கு வாகனமாக திருமால் நந்தியாக மாறியதால் இந்த நந்தியை விஷ்ணு அவதார நந்தி என்றும், விஷ்ணு நந்தி என்றும் அழைக்கின்றார்கள்.

    அதிகார நந்தி

    முதன்மைக் கட்டுரை: அதிகார நந்தி

    அதிகார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் மூன்றாவதாக இருப்பதாகும். கைலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் நந்திக்கு, சிவபெருமானை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவராக உள்ளமையினால் அதிகார நந்தி என்ற பெயர் வந்தது.

    சாதாரண நந்தி

    முதன்மைக் கட்டுரை: சாதாரண நந்தி

    சாதாரண நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் நான்காவதாக இருப்பதாகும். ஐந்து நந்திக்கும் குறைவான சிவாலயங்களில் இந்த நந்தி அமைக்கப்பெறுவதில்லை.

    பெரிய நந்தி

    முதன்மைக் கட்டுரை: பெரிய நந்தி

    தஞ்சை பிரகதீஸ்வர் கோவிலில் உள்ள பெரிய நந்தி

    பெரிய நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் நுழைவுவாயிலில் காணப்பெறும் நந்தியாவார். கைலாயத்தின் காவலனாக எந்நேரத்திலும் பேர்க்கோலம் கொண்டு விஸ்வரூபத்தில் இந்த நந்தி இருக்கிறார். அதன் காரணமாக இவரை மகா நந்தி என்றும் விஸ்வரூப நந்தி என்றும் அழைக்கின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சித்தர்கள் மரபில் ஆதி குருவான சிவனின் நேரடி சீடராக அறியப்படுகிறவர் நந்தி.
    • சூரிய உதய நேரத்தில் உடல் தூய்மை செய்து, திருநீறு அணிந்து சுகாசனத்தில் அமர்ந்து கொள்ள வேண்டுமாம்.

    சித்தர்கள் மரபில் ஆதி குருவான சிவனின் நேரடி சீடராக அறியப்படுகிறவர் நந்தி. இவரை நந்தி தேவர், நந்தீசர் எனவும் குறிப்பிடுகின்றனர். நந்தி என்றால் எப்போதும் பேரானந்த நிலையில் இருப்பவர் என பொருள் கூறப்படுகிறது. சித்த மரபின் இரண்டாவது குருவாக அறியப்படும் இவரே திருமூலரின் குருவாக விளங்கியவர்.

    இத்தனை சிறப்புகள் வாய்ந்த நந்தி தேவரை அகத்தில் தரிசிக்கும் ஒரு முறையினையே இன்று பார்க்க இருக்கிறோம். நம்புவதற்கு சற்று சிரமமான தகவல்தான் இது. நிஜத்தில் நம்முடன் இல்லாத சித்தர் பெருமக்களை தரிசிக்கும் முறை பற்றி பல பாடல்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன. இந்த பாடல்களின் பின்னால் ஏதேனும் சூட்சுமமோ அல்லது மறைபொருளோ இருக்கலாம், என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய அளவில் எனக்கு கிடைத்த ஒரு தகவலை இங்கே பகிர்கிறேன்.

    அகத்தியர் அருளிய "அகத்திய பூரண சூத்திரம்" என்னும் நூலில்தான் நந்திதேவரை தரிக்கும் முறை கூறப்பட்டிருக்கிறது. அந்த பாடல் பின்வருமாறு....

    பார்க்கையிலே பரமகுரு தியனாங்கேளு

    பக்குவமாய்ச் சொல்லுகிறேன் புத்தியாக

    ஏர்க்கையுட னுதையாதி காலந்தன்னில்

    இன்பமுடன் சரீரமதைச் சுத்திசெய்து

    மார்க்கமுடன் பூதியுத் வளமாய்ப்பூசி

    மைந்தனே சுகாசனமா யிருந்துகொண்டு

    தீர்க்கமுடன் புருவநடுக் கமலமீதில்

    சிவசிவா மனதுபூ ரணமாய்நில்லே.

    - அகத்தியர்.


    நில்லாந்த நிலைதனிலே நின்றுமைந்தா

    நிஸ்பயமாய் லிங்கிலிசிம் மென்றுஓது

    சொல்லந்த மானகுரு நாதன்றானும்

    சுடரொளிபோ லிருதயத்தில் தோன்றும்பாரு

    நல்லதொரு நாதாந்தச் சுடரைக்கண்டா

    நந்தியென்ற சோதிவெகு சோதியாச்சு

    சொல்லந்தச் சோதிதனைக் கண்டால்மைந்தா

    தீர்க்கமுட னட்டசித்துஞ் சித்தியாமே.

    - அகத்தியர்.

    சூரிய உதய நேரத்தில் உடல் தூய்மை செய்து, திருநீறு அணிந்து சுகாசனத்தில் அமர்ந்து கொள்ள வேண்டுமாம். உடலையும் மனதையும் தளர்த்திய பின்னர் கண்களை மூடி புருவ மத்தியில் மனதினை ஒருமைப்படுத்தி, தியான நிலையில் இருந்து "லிங் கிலி சிம்" என்கிற மந்திரத்தினை தொடர்ந்து செபிக்க வேண்டுமாம்.

    இவ்வாறு தினசரி செபித்து வந்தால் பரமகுருவான நந்திதேவர் நம் இதயத்தில் சோதிவடிவாகக் காட்சி கொடுப்பார் என்றும், அவர் தரிசனத்தினைக் கண்டால் அட்ட சித்துக்களும் சித்திக்கும் என்கிறார் அகத்தியர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்திசேவித்த பக்தர்களைக் காக்கும் நந்தி
    • செங்கரும்பு உணவு மாலை அணியும் நந்திசிவனுக்கு உறுதுணையாய் விளங்கும் நந்தி

    சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி

    சேவித்த பக்தர்களைக் காக்கும் நந்தி

    கவலைகளை எந்நாளும் போக்கும் நந்தி

    கயிலையிலே நடம் புரியும் கனிந்த நந்தி


    பள்ளியறை பக்கத்தில் இருக்கும் நந்தி

    பார்வதி சொல்கேட்டுச் சிரிக்கும் நந்தி

    நல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்தி

    நாள்தோறும் தண்ணீரில் குளிக்கும் நந்தி


    செங்கரும்பு உணவு மாலை அணியும் நந்தி

    சிவனுக்கு உறுதுணையாய் விளங்கும் நந்தி

    மங்களங்கள் அனைத்தையும் கொடுக்கும் நந்தி

    மனிதர்கள் துயர்போக்க வந்த நந்தி


    அருகம்புல் மாலையையும் அணியும் நந்தி

    அரியதோரு வில்வமே ஏற்ற நந்தி

    வரும்காலம் நலமாக வைக்கும் நந்தி

    வணங்குகிறோம் எமைக்காக நந்தி


    பிரதோஷ காலத்தில் பேசுதம் நந்தி

    பேரருளை மாந்தருக்கு வழங்கும் நந்தி

    வரலாறு படைத்து வரும் வல்ல நந்தி

    வறுமையினை எந்நாளும் அகற்றும் நந்தி


    கெட்ட கனா அத்தனையும் போக்கும் நந்தி

    கீர்த்தியுடன் குலம் காக்கும் இனிய நந்தி

    வெற்றி தரும் வாய்ப்பளிக்க உதவும் நந்தி

    விதியினைத்தான் மாற்றிட விளையும் நந்தி


    வேந்தன்நகர் நெய்யினிலே குளிக்கும் நந்தி

    வியக்க வைக்கும் தஞ்சாவூர்ப் பெரிய நந்தி

    சேர்ந்திரு புன்கூரிலே சாய்ந்த நந்தி

    செவிசாய்த்து அருள்கொடுக்கும் செல்வ நந்தி


    கும்பிட்ட பக்தர் துயர் நீக்கும் நந்தி

    குடம் குடமாய் அபிஷேகம் பார்த்த நந்தி

    பொன் பொருளை வழங்கிடவே வந்த நந்தி

    புகழ் குவிக்க எம் இல்லம் வருக நந்தி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print