என் மலர்
நீங்கள் தேடியது "Sivaganga custodial death"
- பாதிக்கப்பட்ட அஜித்குமார் தாயாருக்கு இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்து அரசு தெரிவிக்க வேண்டும்.
- சிபிஐ விசாரணை நடத்த தேவையான வாகன வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தையடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார், நகை திருடியதாக எழுந்த புகாரில் தனிப்படை போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கொடூரமான முறையில் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வழக்கு விசாரணை ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் சுப்ரமணியம், மரிய கிளாட் அமர்வில் நடந்து வருகிறது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இவ்வழக்கின் சிறப்பு விசாரணை அதிகாரியாக மாவட்ட கூடுதல் நீதிபதி ஜான் சுந்தர் லாலை நியமித்ததுடன், அவர் தனது அறிக்கையை ஜூலை 8-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இதையடுத்து நீதிபதி ஜான் சுந்தர் லால், கடந்த சில நாட்களாக திருப்புவனம் காவல் நிலையம், மடப்புரம் கோவில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து, 50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து இன்று, மூடி சீலிடப்பட்ட உறையில் அவர் தனது இறுதி அறிக்கையில் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சுப்ரமணியம், மரிய கிளாட் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட்டால், சாத்தான் குளம் வழக்கு போல, இந்த வழக்கும் தாமதம் ஆகும் என்பதால், அதற்கு தடை கோரப்பட்டது. இதற்கு பதிலளித்த நீதிபதிகள், வேறு அமைப்புக்கு விசாரணையை மாற்றினால், இதே குற்றச்சாட்டை எழுப்பும் வாய்ப்புள்ளதாக கூறி அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.
தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், சட்ட விரோத காவல் மரணம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. இந்த வழக்கில் அஜித்குமாரின் தாயாருக்கும் உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும். கூடுதல் நீதிபதி தாக்கல் செய்துள்ள அறிக்கையை படித்து பார்த்தில், இவ்வழக்கில் விதிமீறல் மற்றும் குற்றத்திற்கான முகாந்திரம் இருப்பதாக தெரிய வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக, மாவட்ட கூடுதல் நீதிபதி பாதி விசாரணையை முடித்துள்ளார். மீதி விசாரணையை சி.பி.ஐ. அதிகாரிகள் முடிக்க வேண்டும். காவலாளி அஜித்குமார் மரண வழக்கு விசாரணையை ஆக.20-க்குள் முடிக்க வேண்டும்.
வழக்கை விசாரிக்கும் அலுவலர்களை ஒருவாரத்தில் நியமிக்க சிபிஐ இயக்குநருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள்,
பாதிக்கப்பட்ட அஜித்குமார் தாயாருக்கு இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்து அரசு தெரிவிக்க வேண்டும். வழக்கு தொடர்பான விசாரணைக்கு தென்மண்டல காவல் தலைவர், மதுரை, சிவகங்கை காவல் கண்காணிப்பாளர்கள், சிவகங்கை ஆட்சியர் சிபிஐ-க்கு உதவ வேண்டும். சிபிஐ விசாரணை நடத்த தேவையான வாகன வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
- சட்ட விரோத காவல் மரணம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.
- இவ்வழக்கின் சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தையடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார், நகை திருடியதாக எழுந்த புகாரில் தனிப்படை போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கொடூரமான முறையில் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் சுப்ரமணியம், மரிய கிளாட் அமர்வில் நடந்து வருகிறது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இவ்வழக்கின் சிறப்பு விசாரணை அதிகாரியாக மாவட்ட கூடுதல் நீதிபதி ஜான் சுந்தர் லாலை நியமித்ததுடன், அவர் தனது அறிக்கையை ஜூலை 8-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதையடுத்து நீதிபதி ஜான் சுந்தர் லால், கடந்த சில நாட்களாக திருப்புவனம் காவல் நிலையம், மடப்புரம் கோவில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து, 50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து இன்று, மூடி சீலிடப்பட்ட உறையில் அவர் தனது இறுதி அறிக்கையில் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சுப்ரமணியம், மரிய கிளாட் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட்டால், சாத்தான் குளம் வழக்கு போல, இந்த வழக்கும் தாமதம் ஆகும் என்பதால், அதற்கு தடை கோரப்பட்டது. இதற்கு பதிலளித்த நீதிபதிகள், வேறு அமைப்புக்கு விசாரணையை மாற்றினால், இதே குற்றச்சாட்டை எழுப்பும் வாய்ப்புள்ளதாக கூறி அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.
தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், சட்ட விரோத காவல் மரணம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. இந்த வழக்கில் அஜித்குமாரின் தாயாருக்கும் உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும். கூடுதல் நீதிபதி தாக்கல் செய்துள்ள அறிக்கையை படித்து பார்த்தில், இவ்வழக்கில் விதிமீறல் மற்றும் குற்றத்திற்கான முகாந்திரம் இருப்பதாக தெரிய வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக, மாவட்ட கூடுதல் நீதிபதி பாதி விசாரணையை முடித்துள்ளார். மீதி விசாரணையை சி.பி.ஐ., அதிகாரிகள் முடிக்க வேண்டும். அதற்கு ஏதுவாக இன்னும் ஒரு வார காலத்திற்குள் சி.பி.ஐ. அதிகாரி தனது விசாரணையை தொடங்க வேண்டும். இவ்வழக்கின் சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.
- த.வெ.க. தலைவர் விஜய், காவலாளி அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
- போராட்டத்தை நடத்த அனுமதி கோரி த.வெ.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் போலீசார் தாக்கியதில் மரணம் அடைந்தார். தமிழகத்தையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், காவலாளி அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
இதனிடையே, அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், ஐகோர்ட்டின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் த.வெ.க. சார்பில் சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே கடந்த ஜூலை 3-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் போராட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி கிடைக்காததால், ஜூலை 6-ந்தேதி போராட்டத்தை நடத்த அனுமதி கோரி த.வெ.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. இருப்பினும் அதற்கும் அனுமதி கிடைக்காததால் த.வெ.க. போராட்டம் மீண்டும் தள்ளிப்போனது.
இந்தநிலையில் அஜித்குமார் மரணம் தொடர்பான த.வெ.க. போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவையடுத்து போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- அஜித்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்தபோது, அவரது உடலில் இருந்த காயங்களையும் மறைக்கும் முயற்சியில் மர்ம நபர்கள் ஈடுபட்டு இருக்கின்றனர்.
- அஜித்குமார் குடும்பத்தினரிடம் பணம் தருவதாக கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளனர்.
மதுரை:
மதுரையைச் சேர்ந்த மகாராஜன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளியம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வந்த நிகிதா என்ற பெண் மணி கோவில் காவலர் அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்து உள்ளார். அதன்பேரில் விசாரணைக்கு அஜித்கு மாரை அழைத்துச்சென்ற போலீசார், அவரை 2 நாள் சட்டவிரோத காவலில் அடைத்து வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இதில் அவர் படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்து விட்டார். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மடப்புரம் கோவிலில் பதிவான கேமரா காட்சிகளை திருப்புவனம் போலீசாருடன் இணைந்து அப்பகுதியை சேர்ந்த சிலரும், ரகசியமாக எடுத்துச்சென்று விட்டனர். இதேபோல அஜித்குமார் உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்தபோது, அவரது உடலில் இருந்த காயங்களையும் மறைக்கும் முயற்சியில் மர்ம நபர்கள் ஈடுபட்டு இருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாாமல் இந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று அஜித்குமார் குடும்பத்தினரிடம் கேட்டுக்கொண்டு, அதற்காக பணம் தருவதாகவும் கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளனர். இதுபோன்ற மனித உரிமைக்கு எதிரான சட்டவிரோத காவல் மரணங்களை தடுக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பிக்க வேண்டும். அஜித்குமார் மரணத்தில் உள்ள உண்மைகளை மறைக்க முயற்சி செய்து வருபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரியா கிளாட் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அஜித்குமார் மரணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் நாளை (8-ந்தேதி) விசாரணைக்கு வருகின்றன. அந்த வழக்குகளுடன் இந்த மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும் என தெரிவித்தனர்.
- சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டபோது அனைவரும் ஒருமித்த குரல் கொடுத்தனர்.
- இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால் இதுபோன்று ஒரு தரப்பினர் செயல்படுகின்றனர்.
தேனி:
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் தேனியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாடு தமிழகத்தில் அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது. மாநாடு நடந்த அதே இடத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா முஸ்லிம் முன்னேற்ற மாநாடு நடத்தப்படும் என அறிவித்துள்ளார். இது வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் செயல்படும் நிகழ்வாகும். இந்த மாநாட்டிற்கு அரசு தடை விதிக்க வேண்டும்.
திருப்புவனத்தை சேர்ந்த கோவில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு பொறுப்பேற்று 'சாரிம்மா' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்.
சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டபோது அனைவரும் ஒருமித்த குரல் கொடுத்தனர். ஆனால் தற்போது அஜித்குமார் படுகொலை செய்யப்பட்டபோது குரல் கொடுக்க தயங்குகின்றனர். அவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால் இதுபோன்று ஒரு தரப்பினர் செயல்படுகின்றனர்.
அஜித்குமார் கொலை வழக்கில் நிகிதாவை பாதுகாக்கும் அந்த சார் யார்? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
த.வெ.க. தலைவர் விஜய் முதல்வர் வேட்பாளராக அறிவித்து அக்கட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இது அவர்களின் விருப்பம். அதேபோல் பா.ஜ.க. கூட்டணியில் இணைவதும், இணையாமல் இருப்பதும் அவர்களது விருப்பம்.
ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் ஆசிர்வாதம் விநாயகர் சதுர்த்தி விழாவில் கடந்த ஆண்டைக்காட்டிலும் குறைந்த சிலைகளை பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். அவரது கருத்து கண்டிக்கத்தக்கது. உடனடியாக அவர் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அஜித்குமார் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்தான் நிகிதா.
- முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையுடன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நிகிதாவுடன் இணைத்து பேசுகிறார்கள்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித்குமார் (வயது 28). தனது காரில் இருந்த நகைகள் மாயம் என நிகிதா என்பவர் அளித்த புகாரின் பேரில், அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்து சென்ற தனிப்படை போலீசார், கொடூரமாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கூறிய மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்த பேராசிரியை நிகிதா மீது பல்வேறு மோசடி வழக்குகள் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது நிகிதா தலைமறைவாக உள்ளார்.
இந்நிலையில் நிகிதா பெயரில் தனது புகைப்படம் பரப்பப்படுவதாக திருவள்ளூர் கிழக்கு பா.ஜ.க. மாவட்ட செயலாளர் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,
என் பெயர் ராஜினி. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ளேன்.
அஜித்குமார் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்தான் நிகிதா. என் மண் என் மக்கள் யாத்திரைக்காக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையுடன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நிகிதாவுடன் புகைப்படத்துடன் இணைத்து பேசுகிறார்கள்.
சமூக வலைதளத்திலும், ஊடகத்திலும் தவறாக செய்தி பரப்புகிறார்கள். இதை கொண்டுபோனது செந்தில் சரவணன் என்பவர். பேஸ்புக், டுவிட்டரில் அவர் ID தான் வெளிவருகிறது. சில செய்திகளையும் வெளியிட்டு உள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் மீது புகார் அளித்துள்ளேன். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அது என்னுடைய புகைப்படம். அண்ணாமலை என் அண்ணா. அவரை முன்னிறுத்தி தான் நாங்கள் உள்ளேயே வந்தோம். ஆனா அந்த போட்டோவை வைத்து இந்த மாதிரி அசிங்கப்படுத்தி இருக்கிறார்கள். இது ஒரு லேடீசை கலங்கப்படுத்தியதுபோல் இல்லை. எல்லோரும் பாதிக்கப்பட்டுள்ளோம். இதற்கு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் வேற லெவலில் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெண்ணின் வளர்ச்சியை சமூகத்தில் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.
- எனக்கு எந்த பெரிய அதிகாரிகளும், முதலமைச்சரும் தெரியாது.
மதுரை:
போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்ட மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கூறிய மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்த பேராசிரியை நிகிதா மீது பல்வேறு மோசடி வழக்குகள் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது நிகிதா தலைமறைவாக உள்ளார். அவருடைய வீடும் பூட்டிக்கிடக்கிறது.
இந்தநிலையில் நிகிதா பேசி வெளியிட்டுள்ள ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் பேசியிருப்பதாவது:- `இதனை மிகவும் வேதனையுடன் நான் வெளியிடுகிறேன். பெண் ஒருவர் பல்வேறு பட்டப்படிப்புகள், டாக்டர் பட்டம் முடித்து கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து சமூகத்தில் மிக உயரிய பொறுப்பிற்கு வருவது மிகப்பெரிய சவால்.
பெண்ணின் வளர்ச்சியை சமூகத்தில் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அதுதான் எனக்கும் ஏற்பட்டுள்ளது. அஜித்குமார் இறந்தது மிகவும் வேதனையான சம்பவம். சம்பவத்தன்று புகார் தெரிவித்ததோடு நாங்கள் வீட்டிற்கு வந்து விட்டோம். அதன்பின் என்ன நடந்தது என தெரியாது. என்னுடைய தந்தை முக்கிய பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு 2011-ம் ஆண்டு பலதரப்பினரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்றதாக புகார் வந்துள்ளது. ஓய்வு பெற்ற பின்பு ஒரு அதிகாரிக்கு என்ன மரியாதை கிடைக்கும் என்பது இந்த சமூகத்தில் தெரிந்த ஒன்று.
அப்படி இருக்கும்போது இந்த குற்றச்சாட்டை எப்படி ஏற்க முடியும். திண்டுக்கல்லில் கல்லூரியில் பணியாற்றி வரும் நான் ஒரு நாள் மட்டும் கல்லூரிக்கு சென்றுவிட்டு தொடர்ந்து விடுப்பில் உள்ளேன். எனது தாய் கீழே விழுந்து அடிபட்டு பேச முடியாத அளவிற்கு உடல்நிலை சரியில்லாததால் அவருக்கு உதவியாக உள்ளேன்.
தற்போது எனக்கு சோதனையான காலம். என்னை பற்றி இப்போது பல்வேறு தரப்பினர் பேட்டியளித்து வருகிறார்கள். அவர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்று எனக்கு தெரியும். என்னுடைய சொந்த வாழ்க்கையை பேசுவதற்கு முன்பு அவர்களுடைய நிலையை யோசித்து பார்க்க வேண்டும். எனக்கு பெரிய அதிகாரிகள் மற்றும் தமிழக முதலமைச்சரை நன்கு தெரியும், அதை பயன்படுத்தி தான் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனக்கு எந்த பெரிய அதிகாரிகளும், முதலமைச்சரும் தெரியாது. என்னை பற்றி வேண்டுமென்றே தி.மு.க. நிர்வாகி ஒருவர் தூண்டிவிட்டு வருகிறார். காலம்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். நான் பொறுமையாக இருந்து வருவதால் குற்றவாளி கிடையாது. இது முற்றிலும் வேதனையான நேரம். அஜித்குமார் இறந்ததற்கு அவருடைய தாயாரிடம் நான் பலமுறை மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அந்த ஆடியோவில் அவர் பேசி உள்ளார்.
இதற்கிடையே நிகிதா தன் மீதான மோசடி வழக்குகளில் போலீசாரிடம் சிக்காமல் இருக்க கோவையில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. பொள்ளாச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் அவர் அமர்ந்திருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கள்ளச்சாராயம் குடித்து செத்தால் ரூ.10 லட்சம் கொடுக்கிறது.
- எளிய மகன் நானே எங்கள் அம்மாவுக்கு ரூ.5 லட்சம் கொடுக்கிறேன்.
கடலூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது
வரும் 8-ந்தேதி காலையில் அம்மாவை போய் பார்த்துவிட்டு எங்கள் போராட்டம் தொடரும்.
அரசே ரூ.5 லட்சம் தான் கொடுக்கிறது. கள்ளச்சாராயம் குடித்து செத்தால் ரூ.10 லட்சம் கொடுக்கிறது. காவலர்கள் அடித்து செத்தால் ரூ.5 லட்சம்தான் கொடுக்கிறது.
எளிய மகன் நானே எங்கள் அம்மாவுக்கு ரூ.5 லட்சம் கொடுக்கிறேன். என்னது இது... அவ்வளவுதான் உயிருக்கு மதிப்பா?
நிகிதா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும், கைது செய்ய வேண்டும். அதுவரை தொடர்ந்து போராடுவேன். இன்னும் 3 நாட்கள் இருக்கிறது.
த.வெ.க. தலைவர் விஜய் அரசியல் குறித்த கேள்விக்கு, என் அரசியலை தான் நீங்கள் என்னிடம் கேட்க வேண்டும் என்று கூறினார்.
- நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம். சட்டத்தை மதிக்க வேண்டிய உங்க வீட்டுக்காரர் ஏன் மதிக்கவில்லை.
- நான் மனது வருத்தப்படுவதுபோல் பேசி இருந்தால் மன்னித்து விடுங்கள்.
நடிகர் தாடி பாலாஜி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
இறந்துபோன, கொல்லப்பட்ட அஜித்குமார் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிறைய விஷயங்கள் செய்து கொடுத்து இருக்கிறார். அதற்காக நன்றி.
மாநிலத்தில் ஒருத்தருக்கு இப்படி நடந்து இருப்பதை நினைத்து வருத்தப்படுவதாகவும், வேதனைப்படுவதாகவும், கண்டிக்கத்தக்கது என்று நீதிபதி கூறி உள்ளார்.
அஜித்குமார் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட போலீசார்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். காவலர்கள் மனைவிகள் அழுவதை பார்த்தேன்.
உங்க வீட்டுக்காரர்கள் அஜித்குமாரை அடித்ததுபோல் உங்களுடைய வீட்டுக்காரர்களையும் கோசாலையில் வைத்து பொதுமக்கள் அடித்து தண்டனை கொடுத்தால் ஒத்துக்கொள்வீர்களா?
இது சட்டத்தில் கிடையாது. நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம். சட்டத்தை மதிக்க வேண்டிய உங்க வீட்டுக்காரர் ஏன் மதிக்கவில்லை. நீங்க சொன்னீர்கள் அவரா செய்யவில்லை. யாரோ ஒரு சார் சொல்லி தான் செய்தார்.
ஏற்கனவே ஒரு சார் அவரே யார் அந்த சார்? என்று மக்களுக்கு தெரியவில்லை. இப்போது ஒரு சார். 3-வதாக ஒரு சார் வருவதற்கும் யார் அந்த சார்? என்று நீங்கள் சொல்லி விடுங்கள்.
நான் மனது வருத்தப்படுவதுபோல் பேசி இருந்தால் மன்னித்து விடுங்கள். ஒரு வார்த்தை சொல்ல வேண்டும் என்றால் சாரி... சாரி... ஓகே.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 25 வயதில் வீரியமாக அடித்துக்கொண்டிருக்கும் இதயம் நிறுத்தப்படுகிறது என்றால் எவ்வளவு கொடுமையை அந்த உடம்பு அனுபவித்து இருக்கும்.
- தமிழகம் முழுவதும் இது ஒரு மாடலாக இருக்கிறதே என்று மிகமிக கவலையாக உள்ளது.
சென்னையில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
போலீசாரால் அஜித்குமார் தாக்கப்பட்டதை வீடியோ எடுத்தவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அந்த தம்பி, எனக்கு பாதுகாப்பு மட்டும் கேட்கவில்லை. இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் மிரட்டப்படுகின்றனர் என்று கூறி உள்ளார்.
அப்படியென்றால் இதில் மிரட்டுபவர் யார்? யார் அந்த சார்?
இந்த காவல்துறை அதிகாரிகளை மிரட்டி, அவரிடம் இருந்து உண்மையை வரவழைக்க வேண்டும் என்று அஜித் குமாரை கடுமையாக தாக்கச்சொன்ன சார் யார்?
சென்னையில் இருந்துதான் அவர்களுக்கு ஆணை வந்ததாக சொல்கிறார்கள்.
அப்படியென்றால் யாரின் நடவடிக்கையின்பேரில், யாரின் ஒப்புதலின்பேரில், யாரின் அறிவுறுத்தலின்பேரில் கடுமையான விசாரணை நடத்தப்பட்டது.
25 வயதில் வீரியமாக அடித்துக்கொண்டிருக்கும் இதயம் நிறுத்தப்படுகிறது என்றால் எவ்வளவு கொடுமையை அந்த உடம்பு அனுபவித்து இருக்கும். எந்த விசாரணையும் காவல்நிலையத்தில் நடக்கவில்லை.
சாரி சொன்னால் போதுமா... எவ்வளவு ஒரு வேதனையான விஷம்.
தேனியில் இன்னொரு சம்பவம் வெளி வருகிறது. காவல் நிலையத்தில் உண்மை வெளிவருகிறதா? உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க வைக்கிறார்களா? தமிழகம் முழுவதும் இது ஒரு மாடலாக இருக்கிறதே என்று மிகமிக கவலையாக உள்ளது.
எங்கெங்கு இருந்து எந்தெந்த சாரிடம் இருந்து ஆணைகள் வந்துகொண்டிருக்கிறது என்று நமக்கு தெரியவில்லையே.
தனிப்படையை கூலிப்படை போல் நீங்கள் பயன்படுத்தி வந்தீர்கள் என்று தானே அர்த்தம்.
விசாரணைக்கு காவல்துறை அதிகாரிகளுக்கு துணைபோய்க்கொண்டிருந்த சிறப்பு காவல்படை நீக்கப்படுகிறார்கள் என்று டிஜிபி சொல்கிறார்.
அஜித்குமாரை தாக்கிய அனைவருக்குமே கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தமிழக அரசு இதை தீவிரமாக சிந்திக்க வேண்டும். எல்லோரும் ஒரு அழுத்தத்தில் பணியாற்றி வருகிறார்கள்.
த.வெ.க. தலைவர் சென்று பார்த்ததை ஒரு ஸ்டண்ட் என்று சொல்லும் அளவிற்கு கீழ்த்தரமாக போய்க்கொண்டு இருக்கிறார்கள். முதலமைச்சர் கட்டாயம் சென்று இருக்க வேண்டும்.
எதிர்க்கட்சி ஆட்சி செய்யும்போது முதலமைச்சர் பொறுப்பு. இவர்கள் ஆட்சி செய்யும்போது அதிகாரிகள் பொறுப்பு.
இவ்வாறு அவர் கூறினார்.
- நீதிமன்றம் உத்தரவிட்டும் பாதுகாப்பு வழங்கவில்லை என டிஜிபிக்கு கடிதம்.
- 24 மணி நேரமும் சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு வழங்க உத்தரவு.
திருப்புவனத்தில் நகை திருட்டு வழக்கு தொடர்பாக கோவில் காவலாளி அஜித்குமாரை போலீசார் கொடூரமாக தாக்கியதில் லாக்அப் மரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து கொலை வழக்கு பதியப்பட்டு 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை நீதி விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிபிஐ-க்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக சக்தீஸ்வரன் உள்ளார். இவர் சாட்சிகள் அச்சத்தில் உறைந்துள்ளதாக பரபரப்பு பேட்டி அளித்தார். அத்துடன் உயர்நீதிமன்றம் மதுரை கிளை சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்ட நிலையிலும் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என டிஜிபி-க்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில் அவரது வீட்டுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு வழங்குவார்கள்.
சக்தீஸ்வரன்தான் அஜித்குமார் மரண வழக்கல் முக்கிய ஆதாரமான காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்தவர்.
- அந்த அதிகாரி யார்? என தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்.
- தமிழகக் காவல்துறையை சீர்திருத்த இத்தகைய அதிகாரிகளை அடையாளம் கண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர்களால் கொல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞரை சித்திரவதை செய்யும்படி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்குக் கூட தகவல் தெரிவிக்காமல் காவல்துறை துணை கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டு காவல்துறை உயரதிகாரி ஒருவர் ஆணையிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அந்த அதிகாரி யார்? என தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விட்டாலும் தமிழகக் காவல்துறையை சீர்திருத்த இத்தகைய அதிகாரிகளை அடையாளம் கண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.