என் மலர்
நீங்கள் தேடியது "Anbazagan"
- நூற்றாண்டு விழா பொதுகூட்டத்தில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் நெல்லிகுப்பம் புகழேந்தி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
- 1500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
சென்னை:
சென்னை தெற்கு மாவட்டம் கலைஞர் நகர் தெற்கு பகுதி சார்பில் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் எம்.ஜி.ஆர். நகரில் நடைபெற்றது.
கலைஞர் நகர் தெற்கு பகுதி செயலாளரும் சென்னை தெற்கு மாவட்டம், கலைஞர் நகர் தெற்கு பகுதி சார்பில் என் (பகுதி செயலாளர், 138-வது வார்டு கவுன்சிலர் கே.கண்ணன்) தலைமையில் வடக்கு பகுதி செயலாளர், 129-வது வார்டு கவுன்சிலர் மு.ராசா முன்னிலையில் நடந்த பேராசிரியர் பெருந்தகை நூற்றாண்டு விழா பொதுகூட்டத்தில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சுகாதாரதுறை அமைச்சர் மா.சுப்ரமணியன், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் நெல்லிகுப்பம் புகழேந்தி ஆகியோர் சிறப்புரையாற்றி 1500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
இந்நிகழ்வில் விருகம்பாக்கம் எம்.எல்.ஏ., சகோதரர் ஏ.எம்.வி..பிரபாகர் ராஜா, கணக்கு நிலைகுழு தலைவர் அண்ணன் க.தனசேகரன், மாநில வர்த்தகரணி செயலாளர் அண்ணன் கவிஞர் காசி முத்துமாணிக்கம் பங்கேற்ற நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர்கள் அண்ணன் பிஎஸ்.முருகேசன், அண்ணன் ST.தங்கராஜ், மாவட்ட துணை செயலாளர் வாசுகி பாண்டியன், பகுதி நிர்வாகிகள் எஸ்.உமாபதி, அஜந்தாரவி, பெ.தியாகு, கனிமொழிதனசேகரன், அ.பாபு, ரஞ்சித்குமார், ஆர்.சசிகுமார், வட்ட செயலாளர்கள் சோ.செந்தில்குமார், மு.அன்பழகன், பூக்கடை ஆர்.பழனிச்சாமி, பிகே.குமார், சதீஷ்கண்ணன் வடக்கு வட்ட செயலாளர்கள் மு.கோவிந்தராஜ், மைக்கேல், விஏ.ராஜா, பழக்கடை பாஸ்கர், தஞ்சை பாபு, ஆர்.ராமமூர்த்தி மற்றும் மாவட்ட பிரதிநிதிகள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவதில் தொடர்ந்து இரட்டை வேடம் போட்டு நாடகமாடி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
- பிரதமர் மோடியின் விருப்பப்படி உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு முன்வர வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை மாநிலத்தில் 12 ஆண்டுக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணிஅரசில் முதல்-அமைச்சர் ரங்கசாமி முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளதற்கு அ.தி.மு.க. சார்பில் பாராட்டுக்கள். தி.மு.க., கூட்டணி கட்சிகள் புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவதில் தொடர்ந்து இரட்டை வேடம் போட்டு நாடகமாடி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
பாராளுமன்றத்தில் 35 உறுப்பினர்களை கொண்ட தி.மு.க., கூட்டணி கட்சிகள் அங்கு குரல் கொடுக்காமல் மக்களிடையே வெற்று முழக்கத்தை கூறுவது சரி அல்ல. வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநில அந்தஸ்தை பெற, மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் முதல்-அமைச்சர் உட்பட அனைத்து எம்.எல்.ஏ.க்களும் 2 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தொடரை புறக்கணிக்கும் போராட்டத்தை நடத்த வேண்டும்.
புதுவைக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா அரசுக்கு மக்கள் வாய்ப்பளித்துள்ளனர்.
பிரதமர் மோடியின் விருப்பப்படி உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு முன்வர வேண்டும். தேர்தலின்போது அறிவித்தபடி ரேஷன் கடைகளை திறந்து பொதுவிநியோக திட்டத்தை வழங்க வேண்டும். இதற்கு பட்ஜெட் கூட்டத்தொடரில் அரசு வழிசெய்ய வேண்டும்.
புதுவை பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் 25 சதவீத இடஒதுக்கீட்டை மாணவர்களுக்கு வழங்க உறுதியான நடவடிக்கையை கவர்னர், முதல்-அமைச்சர் எடுக்க வேண்டும். 10 ஆண்டாக வேலைவாய்ப்பு துறை அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு 5 ஆண்டு அரசு வேலைவாய்ப்பு வயது வரம்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். பொது பிரிவினருக்கு 35 வயதாகவும், ஒ.பி.சி. 37 வயதாகவும், எஸ்.சி. பிரிவினருக்கு 40 வயதாக மாற்றி தளர்வு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- புதுவை அமைச்சரவைக்கு முழு அதிகாரம் உருவாக்க அலுவலக விதியில் திருத்தம் கொண்டு வந்து அதை மத்திய அரசுக்கு அனுப்பி சட்ட திருத்தம் கொண்டு வர வழிவகை காண வேண்டும்.
- மருத்துவம் சார்ந்த உயர்கல்வியில் அரசின் இடஒதுக்கீட்டில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க அரசு சட்டமன்ற கூட்டத்தொடரில் உரிய சட்டம் கொண்டு, வர வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து கடிதம் அளித்தார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
புதுவை அமைச்சரவைக்கு முழு அதிகாரம் உருவாக்க அலுவலக விதியில் திருத்தம் கொண்டு வந்து அதை மத்திய அரசுக்கு அனுப்பி சட்ட திருத்தம் கொண்டு வர வழிவகை காண வேண்டும். அரசின் துறைகளை சீர்செய்ய ஒர்க் ஸ்டடி குரூப் ஒன்று அமைக்க வேண்டும்.
ஒப்பந்த ஊழியர்களுக்கு அரசு நியாயமான சம்பளத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். சமையல் கியாஸ் சிலிண்டருக்கும் ரூ.500 மானிய உதவியாக அரசு வழங்க வேண்டும். தனியார் மற்றும் கோவில் இடங்களில் வசிப்போருக்கு அவரவர் கூரை வீடுகளை கல்வீடாக மாற்றிக் கொள்ள ரூ.5 லட்சம் மானியம் வழங்க வேண்டும்.
நகரப் பகுதி முழுவதும் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வழி காண வேண்டும். அரசு துறைகளில் பணிபுரியும் பகுதி நேர ஊழியர்கள், மணி நேர ஊழியர்கள், தினக்கூலி ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரையும் நிதி நிலைமைக்கு ஏற்ப பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
மருத்துவம் சார்ந்த உயர்கல்வியில் அரசின் இடஒதுக்கீட்டில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க அரசு சட்டமன்ற கூட்டத்தொடரில் உரிய சட்டம் கொண்டு, வர வேண்டும். தனி கல்வி வாரியம், விளையாட்டுத் துறைக்கு தனி இயக்குனரகம், அமைக்க வேண்டும்.
அரசுத் துறைகளில் கடன் பாக்கி வைத்துள்ளோருக்கு வட்டி மற்றும் அபராத வட்டியை தள்ளுபடி செய்து அசலை செலுத்த வாய்ப்பு அளித்தால் கடன் வசூலாகும். மதுபானம் கொள்முதல், விநியோகம் ஆகிய இரண்டையும் அரசே ஏற்று நடத்த தனி கார்பரேஷனை ஏற்படுத்த வேண்டும்.
ரோடியர் மில் வளாகத்தில் தனியார் பங்களிப்புடன் சர்வ தேச ஐ.டி. பூங்கா, சேதராப்பட்டில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் தொழில் பூங்கா அமைத்தால் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். ஓய்வு பெறும் நிரந்தர அங்கன்வாடி ஊழியாகளுக்கு அரசு துறைகளில வழங்கப்படும் பென்ஷன், மற்றும் ஓய்வூதிய தொகை வழங்க வேண்டும்.
புதுவை, உழவர்கரை நகராட்சிகளை இணைத்து மாநகராட்சியாகவும், அரியாங்குப்பம், வில்லியனூர், மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம், பாகூர் ஆகிய கொம்யூன் பஞ்சாயத்துக்களை மக்கள் ஜனத்தொகைக்கு ஏற்ப நகராட்சிகளாக மாற்றம் வேண்டும்.
அரசுத் துறையில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதால் ஓ.பி.சி., எஸ்.சி., பொதுபிரிவினருக்கு 5 ஆண்டு வயது தளர்வு வழங்கி அரசாணை வெளியிட வேண்டும். ஏழை பள்ளி மாணவர்கள் கல்வி பயிலும் அரசு பள்ளிகளில் மீண்டும் காலை சிற்றுண்டி திட்டத்தை அரசு கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு அன்பழகன் கடிதத்தில் கூறியுள்ளார்.
- புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் பொதுமக்களுக்கு நீர் மோர், வெள்ளரிக்காய், இளநீர், தர்பூசணி, கிர்னிபழம் ஆகியவைகளை வழங்கினார்.
- இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அம்மா அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் பிரபாகரன் செய்திருந்தார்.
புதுச்சேரி:
புதுவை மாநில அம்மா அறக்கட்டளை சார்பில் உப்பளம் சட்டமன்ற தொகுதியில் உள்ள பிள்ளு கடை சந்திப்பு, துறைமுகம் மெயின் கேட், கல்லரை வீதி சந்திப்பு, அவ்வை நகர் அகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலை புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் பொதுமக்களுக்கு நீர் மோர், வெள்ளரிக்காய், இளநீர், தர்பூசணி, கிர்னிபழம் ஆகியவைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அம்மா அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் பிரபாகரன் செய்திருந்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநில இணை செயலாளர் வீரம்மாள், மாநில துணை செயலாளர் காந்தி, புதுவை நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் செல்வம், இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ் வேந்தன், மாநில எம். ஜி.ஆர். மன்ற தலைவர் மோகன்தாஸ், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் சுரேஷ், மாநில அம்மா பேரவை துணை செயலாளர் வெங்கடேசன்,ஏம்பலம் தொகுதி செயலாளர் சம்பத் உப்பளம் தொகுதியை சேர்ந்த சவரிநாதன், சிவா, செல்வம், ரமேஷ், குணாளன், பாக்கியராஜ், ரெமோ, நாகராஜ், சங்கர், சரத், இஸ்மாயில், ரியாஸ் உட்பட பலர் உடனிருந்தனர்.
- புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் உப்பளம் தலைமை கழகத்தில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
- மாநில இலக்கிய அணி துணை தலைவர் தட்சிணாமூர்த்தி, தொகுதி செயலாளர்கள் கருணாநிதி, ராஜா, தொகுதி தலைவர்கள் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் உப்பளம் தலைமை கழகத்தில் நீர்மோர் பந்தல் அமைக்கப் பட்டுள்ளது.
இதன் திறப்பு விழாவுக்கு அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கி திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், வெள்ளரிக்காய், இளநீர், தர்பூசணி, கிர்னிபழம் மற்றும் வெள்ளரி பழம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநில இணை செயலாளர்கள் திருநாவுக்கரசு, வீரம்மாள், மாநில துணை செயலாளர்கள் நாகமணி, காந்தி, மாநில பொருளாளர் ரவிபாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாபுசாமி, மாநில இலக்கிய அணி துணை தலைவர் தட்சிணாமூர்த்தி, தொகுதி செயலாளர்கள் கருணாநிதி, ராஜா, தொகுதி தலைவர்கள் காந்தி, ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
- பட்ஜெட் அறிவிப்புகளை ஏமாற்று அறிவிப்புக்கள் என நாராயணசாமி வழக்கம் போல் விரக்தியில் கூறி உள்ளார்.
- ரூ.300 பொதுப்பணி ஊழியர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊதிய உயர்வை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
பட்ஜெட் அறிவிப்புகளை ஏமாற்று அறிவிப்புக்கள் என நாராயணசாமி வழக்கம் போல் விரக்தியில் கூறி உள்ளார். கடந்த சட்டமன்றத்தில் அறிவித்த எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டி யுள்ளார்.
பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, மழைக்கால நிவாரணம், அங்கன்வாடி ஊழியர்கள்பணி நிரந்தரம், 2 ஆயிரம் அரசு துறை காலி பணியிடங்களை நிரப்புதல், விண்ணப்பித்த அனைத்து பயனாளிகளுக்கும் முதியோர் உதவி தொகை, அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம், கலப்புத் திருமணம், ஈமச்சடங்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நல திட்ட அறிவிப்புக்கள் செயல் வடிவம் பெற்றுள்ளன.
கடந்த பட்ஜெட்டில் அறிவித்த அனைத்து திட்ட ங்களையும் படிப்படியாக முதல்-அமைச்சர் நிறைவேற்றியுள்ளார். 10 ஆண்டுக்கு மேலாக பணிபுரிந்த தினக்கூலி ஊழியர்கள் பணி நிரந்தரம், ரொட்டிப்பால் ஊழியர்கள் பணி நிரந்தரம், ஆஷா, ரொட்டிப்பால் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, பெண் குழந்தைகள் பிறந்தாள் ரூ.50 ஆயிரம டெபாசிட், அனைத்து குடும்பத்தினருக்கும் சிலிண்டர் மானியமாக ரூ.300 பொதுப்பணி ஊழியர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊதிய உயர்வை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
தனது ஆட்சிக் காலத்தில் எதையுமே செய்யாமல் இருந்து விட்டு தற்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவதை பாராட்ட முடியாமல் மனம் வெதும்பி சாபம் விடுகிறார்.
கடந்த பட்ஜெட்டில் அறிவிக்காமலேயே குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என்ற திட்டத்தை செயல்படுத்தும் முதல் மாநிலமாக புதுவை உள்ளது இவையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து பதட்டம் அடைந்து வருகிறார். அவர் மனம் அமைதி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கோடைகால வெயிலை கருத்தில் கொண்டு பொது மக்களுக்கு இலவச நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி மணவெளி தொகுதி அ.தி.மு.க. சார்பில் தவளகுப்பம் 4 முனை சந்திப்பில் தொடங்கப்பட்டது.
- சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் அன்பழகன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச நீர் மோர் வழங்கி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
கோடைகால வெயிலை கருத்தில் கொண்டு பொது மக்களுக்கு இலவச நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி மணவெளி தொகுதி அ.தி.மு.க. சார்பில் தவளகுப்பம் 4 முனை சந்திப்பில் தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாநில கழக துணை செயலாளர் குமுதன் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் அன்பழகன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச நீர் மோர் வழங்கி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநில அவைத்தலைவர் அன்பானந்தன், பொருளாளர் ரவி பாண்டுரங்கன், தொழிற்சங்க செயலாளர் பாப்புசாமி, தொகுதி அவைத்தலைவர் மூர்த்தி, பொருப்பாளர்கள் ஜானகிராமன், சிவராம ராஜா, தீனதயாளன், தர்மன், முனுசாமி, காந்தாரி, குணாலன், சேது, காத்தவ ராயன், சசிகுமார், தாஸ், செல்வமணி, சத்தியசீலன்,
சங்கர், விஜயன், பன்னீர் செல்வம், மேகநாதன், பிரஷ்நேவ், ராமு, மதன், சோமு, வேல்முருகன், பெருமாள் மற்றும் மாநில, தொகுதி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- அ.தி.மு.க, கட்சி கொடி என எதையும் இனிமேல் கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் பயன்படுத்த கூடாது.
- அ.தி.மு.க.வையும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றியும் தவறாக விமர்சனம் செய்த யாருக்கும் கட்சியில் இடமில்லை.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க பொதுக்குழு தொடர் பான வழக்கில் இதுவரை 9 முறை எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார். தி.மு.க தலைவர் ஸ்டாலினை மகிழ்விக்க எத்தனை முறை நீதிமன்றத்திற்கு சென்றாலும் நீதி தேவதை துணையோடும் ஜெயலலிதா ஆசியோடும் அதனை எங்களது பொதுச் செயலாளர் முறியடிப்பார்.
சுப்ரீம்கோர்ட்டு, ஐகோர்ட்டு, பெஞ்சு, தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் மூலம் 11.7.2022-ல் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் உறுதி செய்யப்பட்ட பிறகும் அ.தி.மு.க, கட்சி கொடி என எதையும் இனிமேல் கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் பயன்படுத்த கூடாது.
இது சம்பந்தமாக ஏற்கனவே புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் டி.ஜி.பி, மற்றும் தேர்தல் துறையிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.விற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் மீண்டும் மீண்டும் எங்கள் கட்சியின் பெயரையோ, கொடியை யோ, சின்னத்தின் குறியீட்டையோ, விளம்பர பதாகை கள், துண்டு பிரசுரங்கள், போஸ்டர்கள், சுவர் விளம்பரங்கள் ஆகியவற்றை பயன்படுத்துவது சட்டவிரோத செயலாகும்.
இவர்கள் மீது காவல்துறையும், தேர்தல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அ.தி.மு.க.வையும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றியும் தவறாக விமர்சனம் செய்த யாருக்கும் கட்சியில் இடமில்லை. அப்படி விமர்சனம் செய்யாத அடிமட்ட தொண்டன், பிறருடைய தவறான துர்போதனைக்கு ஆளாகி துரோகிகள் கூட்டத்திற்கு சென்றிருந்தால் அவர்கள் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுத்தால் பொதுச் செயலாளர் அவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்ள முடிவெடுப்பார்.
இவ்வாறு அன்பழகன் கூறினார்.
- மாநில அவை தலைவர் அன்பானந்தம் முன்னிலை வகித்தார்.
- துணை செயலாளர் ராசு, சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர்கள் ஜானிபாய், ரபீக் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் உப்பளம் தலைமை அலுவலகத்தில் நடந்தது.
அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில அவை தலைவர் அன்பானந்தம் முன்னிலை வகித்தார். பேரறிஞர் அண்ணாவின் 115-ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது சம்பந்தமாகவும் ஆலோசிக்கப் பட்டது.
கூட்டத்தில் மாநில துணை தலைவர ராஜா ராமன், இணை செயலா ளர்கள் வீரம்மாள், ஆர்.வி.திருநாவுக்கரசு, பொரு ளாளர் ரவிபாண்டுரங்கன், நகரர செயலாளர் அன்பழ கன் உடையார், துணைச் செயலாளர்கள் உமா, எம்.ஏ.கே.கருணாநிதி, நாகமணி, மூர்த்தி, காந்தி, மணவாளன், மேற்கு மாநில அம்மா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன்,
மாநில இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன். மாநில இலக்கிய அணி செயலாளர் ராமசாமி, மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலா ளர் செல்வம், மாநில தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தினேஷ்குமார், நகர தலைவர்கள் கணேஷ், சிவா.
தொகுதி செயலாளர்கள் ஆறுமுகம், கமல்தாஸ், சிவகுமார், பாஸ்கர், துரை, கருணாநிதி, சம்பத், ராஜா, கோபால், வேலவன், தர்மலிங்கம், குணசேகர், சண்முகதாஸ், பொதுக்குழு உறுப்பினர்கள் லோகநாதன், நாகமுத்து, மாநில மாநில எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் மோகன்தாஸ், இணை செயலாளர் கணேசன்,
ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் சுரேஷ், மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணை தலைவர் குணாளன், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை, இணை செயலா ளர் கேசவன், துணை செயலாளர் ராசு, சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர்கள் ஜானிபாய், ரபீக் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
- இளைஞர்-இளம்பெண்கள் பாசறை செயலாளர் அறிக்கை
- அ.தி.மு.க. வெளியேறி விட்டதால் சிறுபான்மையின இனத்தவர்களும், ஆதிதிராவிட இனத்தை சேர்ந்த மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதுச்சேரி:
அ.தி.மு.க. இளைஞர்-இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் தமிழ் என்ற தமிழ்வேந்தன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-
புதுச்சேரியில் கிழக்கு - மேற்கு என இரு பிரிவாக செயல்பட்டு வந்த அ.தி.மு.க. ஒருங்கி ணைக்கப்பட்டு புதுச்சேரி மாநில செயலாளராக அன்பழகன் நியமிக்கப்பட் டுள்ளார். இதனால் இரு பிரிவாக செயல்பட்டு வந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஒரே தலைமையின் கீழ் பணியாற்ற தொடங்கி உள்ளனர்.
மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறி விட்டதால் சிறுபான்மையின இனத்தவர்களும், ஆதிதிராவிட இனத்தை சேர்ந்த மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன் தலைவர்கள் தற்போது அ.தி.மு.க. பக்கம் வர தொடங்கி விட்டனர். இதனால் அ.தி.மு.க. பலம் வாய்ந்த சக்தியாக மாறியுள்ளது.
மேலும் அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் பிறந்தநாள் நாளை(10-ந்தேதி)கொண்டாடப்பட உள்ளது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் தொண்டர்கள் இந்தாண்டு அவரது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாட தொடங்கி விட்டனர்.
மாநில செயலாளரின் வேண்டுகோளை ஏற்று பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் பேனர்கள், பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. இதுவும் தொண்டர்களி டையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- அன்பழகன் பேச்சு
- புதுவையிலும் திராவிட மாடல் ஆட்சி அமைப்போம் என எதிர்கட்சி தலைவர் சிவா கூறுகிறார்.
புதுச்சேரி:
புதுவை ஏம்பலம் தொகுதியில் அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கரிக்கலாம்பாக்கம் ராஜீவ்காந்தி சமுதாய நலக்கூடத்தில் நடந்தது.
தொகுதி செயலாளர் சம்பத் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ ராஜாராமன், பெரியசாமி, ராமசாமி, சேகர், ரேணுகாதேவி, சண்முகம், அழகப்பன், தெய்வநாயகம், ராஜேந்திரன், செல்வராணி, நல்லதம்பி, கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-
புதுவையில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் ஏம்பலம் தொகுதியை குறிவைத்து பசுமை வாய்ந்த விவசாய நிலைங்களை பிளாட் போட்டு விற்று வருகின்றனர்.
முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வாய்க்கு வந்தபடி பேசிவருகிறார். 2 ஆண்டு புதுவையின் பட்ஜெட்டே ரூ.25 ஆயிரம் கோடிதான். ஆனால் ரூ.30 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.
முன்னாள் முதல்- அமைச்சர் ஊழல் குற்றச்சாட்டு களை கூறும் போது ஆதாரத்துடன் தெரிவிக்க வேண்டும். நாராயணசாமிக்கு ஏன் பதிலளிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் பதிலளிப்பதில்லை. பதில் அளிக்காததால் குற்றச்சாட்டு உண்மை என அவர் பேசி வருகிறார்.
தமிழகம் போல புதுவையிலும் திராவிட மாடல் ஆட்சி அமைப்போம் என எதிர்கட்சி தலைவர் சிவா கூறுகிறார். தமிழகம் இன்று அழிவுப்பாதையில் செல்கிறது.
எனவே எடப்பாடியார் கரத்தை தமிழகம் மற்றும் புதுவை மக்கள் வலுப்படுத்த தயாராகிவிட்டனர். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும்
அ.தி.மு.க. நிச்சயமாக வெற்றி பெறும். புதுவை தொகுதி வெற்றிக்கு ஏம்பலம் தொகுதி செயல்வீரர்கள் வீராங்கணைகள் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- அன்பழகன் குற்றச்சாட்டு
- நம்மால் ஆட்சிக்கு வந்தவர்கள் தேர்தல் முடிந்தவுடன் நம்மை பற்றி சிந்திப்பதையே நிறுத்திவிட்டனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் மண்ணாடிப்பட்டு தொகுதி செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் திருக்கனூர் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
முன்னாள் கவுன்சிலர் மகாதேவி தலைமை வகித்தார். மாநில ஜெ. பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன், மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் நாசர், பொதுக்குழு உறுப்பினர் மகாதேவன், பாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-
பா.ஜனதா கூட்டணி அரசில் அ.தி.மு.க.வுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. ஆட்சி அமைந்தவுடன் தேசிய ஜனநயாக கூட்டணி இருந்ததற்கான அடிச்சுவடு இல்லாமல் செய்துவிட்டனர்.
கூட்டணி கட்சிக்கு உழைத்த நாம் ஓய்ந்துவிட்டோம். நம்மால் ஆட்சிக்கு வந்தவர்கள் தேர்தல் முடிந்தவுடன் நம்மை பற்றி சிந்திப்பதையே நிறுத்திவிட்டனர்.
புதுவை அரசின் அமைச்சரவையில் 2-ம் இடத்தில் உள்ள அமைச்சர் இந்த தொகுதியின் வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை. கரும்பு சர்க்கரை ஆலை உட்பட மூடப்பட்ட எந்த ஒரு தொழிற்சாலையும் இதுவரை திறக்கவில்லை. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்க வில்லை. ஆட்சி சுகமே என்னவென்று தெரியாமல் 40 ஆண்டுக்கும் மேலாக காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா என கூட்டணி கட்சிகளுக்காக அதிமுகவினர் உழைத்து, அவர்களை ஆட்சி கட்டிலில் அமர வைத்தோம்.
இதற்கு மேலும் நாம் ஏமாற வேண்டிய அவசியம் இல்லை. அ.தி.மு.க. தனியாக போட்டியிட வலியுறுத்துவோம். புதுவையில் அ.தி.மு.க. ஆட்சி மலர நாம் பாடுபடுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநில அவை தலைவர் அன்பானந்தம், மாநில இணைச் செயலாளர்கள் முன்னாள் கவுன்சிலர் கணேசன், திருநாவுக்கரசு, மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில துணைச் செயலாளர்கள் எம்.ஏ.கே. கருணாநிதி குணசேகரன், நாகமணி, காந்தி, நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பாப்புசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர். மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன் நன்றி கூறினார்.






