search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விரக்தியில் நாராயணசாமி சாபம் விடுகிறார்-அன்பழகன் தாக்கு
    X

    கோப்பு படம்.

    விரக்தியில் நாராயணசாமி சாபம் விடுகிறார்-அன்பழகன் தாக்கு

    • பட்ஜெட் அறிவிப்புகளை ஏமாற்று அறிவிப்புக்கள் என நாராயணசாமி வழக்கம் போல் விரக்தியில் கூறி உள்ளார்.
    • ரூ.300 பொதுப்பணி ஊழியர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊதிய உயர்வை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    பட்ஜெட் அறிவிப்புகளை ஏமாற்று அறிவிப்புக்கள் என நாராயணசாமி வழக்கம் போல் விரக்தியில் கூறி உள்ளார். கடந்த சட்டமன்றத்தில் அறிவித்த எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டி யுள்ளார்.

    பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, மழைக்கால நிவாரணம், அங்கன்வாடி ஊழியர்கள்பணி நிரந்தரம், 2 ஆயிரம் அரசு துறை காலி பணியிடங்களை நிரப்புதல், விண்ணப்பித்த அனைத்து பயனாளிகளுக்கும் முதியோர் உதவி தொகை, அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம், கலப்புத் திருமணம், ஈமச்சடங்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நல திட்ட அறிவிப்புக்கள் செயல் வடிவம் பெற்றுள்ளன.

    கடந்த பட்ஜெட்டில் அறிவித்த அனைத்து திட்ட ங்களையும் படிப்படியாக முதல்-அமைச்சர் நிறைவேற்றியுள்ளார். 10 ஆண்டுக்கு மேலாக பணிபுரிந்த தினக்கூலி ஊழியர்கள் பணி நிரந்தரம், ரொட்டிப்பால் ஊழியர்கள் பணி நிரந்தரம், ஆஷா, ரொட்டிப்பால் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, பெண் குழந்தைகள் பிறந்தாள் ரூ.50 ஆயிரம டெபாசிட், அனைத்து குடும்பத்தினருக்கும் சிலிண்டர் மானியமாக ரூ.300 பொதுப்பணி ஊழியர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊதிய உயர்வை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.

    தனது ஆட்சிக் காலத்தில் எதையுமே செய்யாமல் இருந்து விட்டு தற்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவதை பாராட்ட முடியாமல் மனம் வெதும்பி சாபம் விடுகிறார்.

    கடந்த பட்ஜெட்டில் அறிவிக்காமலேயே குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என்ற திட்டத்தை செயல்படுத்தும் முதல் மாநிலமாக புதுவை உள்ளது இவையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து பதட்டம் அடைந்து வருகிறார். அவர் மனம் அமைதி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×