search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "modi cabinet"

    மோடி தலைமையிலான புதிய மந்திரிசபையில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு இடம் வழங்கப்படவில்லை.
    புதுடெல்லி:

    மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றிருந்தாலும், மோடி தலைமையிலான புதிய மந்திரி சபையில் கூட்டணி கட்சிகளுக்கும் வாய்ப்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. 

    எனவே, தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 2 மந்திரி பதவி கொடுக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது. கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் அல்லது மேல்-சபை எம்.பி.யான வைத்திலிங்கம் ஆகியோரில் ஒருவருக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்கலாம் என பேசப்பட்டது. 

    ஆனால், இன்று மோடி தலைமையிலான புதிய மந்திரிசபை பதவியேற்றபோது, அதிமுகவைச் சேர்ந்த யாரும் அதில் இடம்பெறவில்லை. 

    இதேபோல் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு மந்திரி பதவி கிடைக்கலாம் என்றும் கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டது. அவருக்கும் மந்திரிசபையில் இடம் வழங்கப்படவில்லை. 
    தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 2 மந்திரி பதவி கொடுக்க பிரதமர் மோடி முடிவு செய்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.

    பா.ஜனதா மட்டும் 303 தொகுதிகளை கைப்பற்றி தனி பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது.

    புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட பா.ஜனதா கூட்டணி கட்சி எம்.பி.க்களின் கூட்டத்தில் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

    அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவரும் ஆட்சி அமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து மோடி 2-வது முறையாக இன்று பதவியேற்கிறார்.

    ஜனாதிபதி மாளிகையில் இரவு 7 மணிக்கு நடைபெறும் பிரமாண்ட கோலாகல விழாவில் அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

    மோடியுடன் மந்திரிகளும் பதவியேற்கிறார்கள். 50-60 பேர் வரை அவரது மந்திரி சபையில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த மந்திரி சபையில் இடம் பெற்ற ராஜ்நாத்சிங், நிதின்கட்காரி, நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, ரவிசங்கர் பிரசாத், பியூஸ் கோயல், தர்மேந்திர பிரதான், பிரகாஷ் ஜவடேகர், நிதின்தோமர் ஆகியோர் மீண்டும் மத்திய மந்திரிகளாக பதவியேற்கிறார்கள்.

    உடல்நலம் சரியில்லாததால் அருண்ஜெட்லி மீண்டும் மந்திரியாக விரும்பவில்லை. இதை அவர் மோடியிடம் உறுதிப்படுத்தினார்.

    புதுமுகங்களுக்கு மோடி மந்திரிசபையில் அதிகமான இடங்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. பா.ஜனதாவில் 165 பேர் புதுமுக எம்.பி.க்களாக இருக்கிறார்கள். மேற்குவங்காளம், ஒடிசா மாநிலத்தில் இந்த முறை பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அந்த மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

    பா.ஜனதா மீண்டும் ஆட்சியை வெல்ல மூளையாக செயல்பட்ட அமித்ஷா மத்திய மந்திரி ஆவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.

    மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட், அரியானா ஆகிய 3 மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதன் காரணமாக அவர் மந்திரியாக மாட்டார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஒருவேளை அமித்ஷா மந்திரியானால் அவர் உள்துறை இலாகாவை கவனிப்பார்.

    பா.ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தாலும் கூட்டணி கட்சிகளுக்கு மந்திரி பதவி கொடுக்கிறது. 8 முதல் 10 இடங்கள் வரை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

    ஒரு கட்சிக்கு ஒரு மந்திரி பதவி என்ற அளவில் மந்திரி சபையில் இடம் அளிக்கப்படும்.

    ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து ஆர்.சி. பி.சிங், ராஜீவ் ரஞ்சன்சிங் ஆகியோர் மந்திரிகளாக பதவியேற்கலாம் என்று தெரிகிறது.

    ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி, சிரோன் மணி அகாலி தளம் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 இடம் கிடைக்கலாம். ராம்விலாஸ் பஸ்வான் மீண்டும் மத்திய மந்திரி ஆகிறார்.

    சிரோன்மணி அகாலி தளம் கட்சியில் இருந்து சுக்பீர்சிங் பாதலின் மனைவி ஹரிஸ்பத்கபூர் மந்திரியாக வாய்ப்பு உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி தமிழ்நாட்டில் மோசமான தோல்வியை தழுவியது. ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி கிடைத்தது. தேனி தொகுதியில் இருந்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் தேர்ந்து எடுக்கப்பட்டார்.



    ஆனாலும் தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 2 மந்திரி பதவி கொடுக்க மோடி முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது. ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் அல்லது மேல்-சபை எம்.பி.யான வைத்திலிங்கம் ஆகியோரில் ஒருவருக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்கும்.

    தமிழக பா.ஜனதாவுக்கு மற்றொரு இடம் ஒதுக்கப்படலாம் என்றும் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு மந்திரி பதவி கிடைக்கலாம் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    தமிழகத்துக்கு கேபினட் அந்தஸ்து கிடைக்குமா? என்பது உறுதியாக தெரியவில்லை. மத்திய இணை மந்திரி பதவிதான் தமிழ் நாட்டுக்கு கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

    மோடி பதவியேற்பு விழாவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திர சேகரராவ், கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமி மற்றும் பா.ஜனதா ஆளும் மாநில முதல்-மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள்.

    பதவியேற்பு விழாவில் வங்காள தேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம், பூடான், கிர்கிஸ்தான், மொரிஷியஸ், கஜகஸ்தான் உள்பட 14 நாட்டு தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை நடைபெறும் பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் 8 ஆயிரம் பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். இதையொட்டி ஜனாதிபதி மாளிகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க புறப்பட்டு சென்றுள்ள முதலமைச்சர், துணை முதலமைச்சர் மத்திய மந்திரி சபையில் அதிமுக சார்பில் இடம் பெறுபவர் பற்றி பா.ஜனதா மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவார்கள் என்று தெரிய வந்துள்ளது.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் 350-க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜனதா கூட்டணி இமாலய வெற்றி பெற்றுள்ளது.

    2014-ம் ஆண்டு தேர்தலில் உருவான மோடி அலை 2019-ம் ஆண்டு தேர்தலில் சுனாமியாக மாறி சுழன்றடித்து காங்கிரஸ் கூட்டணியை துவம்சம் செய்துவிட்டது. பா.ஜனதாவின் எழுச்சியால் படுதோல்வியைத் தழுவியுள்ள காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத அளவுக்கு 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்தது.

    பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. அதற்கு வசதியாக நேற்று மாலை 16-வது பாராளுமன்றம் நிறைவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று (சனிக்கிழமை) மாலை பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி பிரதமராக ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்படுகிறார்.

    அப்போது மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவை எங்கு, எப்போது, எப்படி நடத்துவது என்பது முடிவு செய்யப்படும். புதிய அமைச்சரவை வருகிற 28-ந் தேதி அல்லது 30-ந்தேதி பதவி ஏற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து புதிய அமைச்சரவையில் யார்-யார் இடம் பெற வாய்ப்புள்ளது என்று டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    2014-ம் ஆண்டு மோடி தனது அமைச்சரவையில் 66 பேரை மந்திரிகளாக இடம் பெறச் செய்திருந்தார். அவர்களில் 27 பேர் காபினெட் அந்தஸ்து மந்திரிகள், 39 பேர் ராஜாங்க மந்திரிகள். இவர்களில் பா.ஜனதா கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்களும் இடம் பிடித்திருந்தனர்.

    இந்த தடவையும் இதே அளவுக்கு மத்திய மந்திரி சபையில் புதிய அமைச்சர்கள் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜனதா மூத்த தலைவர்களில் அருண்ஜெட்லி தவிர அமித்ஷா, ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ், நிதின் கட்காரி, ரவிசங்கர் பிரசாத், பியூஸ்கோயல், நரேந்திரசிங் தோமர், நிர்மலா சீதாராமன், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் இடம் பெறுவது உறுதியாகியுள்ளது.

    பா.ஜனதாவுக்கு இந்த தடவை மேற்கு வங்காளம், ஒடிசா, கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் அதிக எம்.பி.க்கள் கிடைத்துள்ளனர். எனவே அதிக எம்.பி.க்கள் தேர்வாகியுள்ள மாநிலங்களில் இருந்து புதுமுகங்களை மத்திய மந்திரிகளாக்க மோடி திட்டமிட்டுள்ளார். பா.ஜனதாவை அடுத்த தலைமுறையினரிடமும் வலிமை பெறச் செய்யும் வகையில் இளைஞர்களுக்கு அதிக அளவில் மந்திரிசபையில் பிரதிநிதித்துவம் கிடைக்க வாய்ப்புள்ளது.

    பா.ஜனதா கூட்டணி கட்சிகளான சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், அ.தி.மு.க. ஆகிய கட்சிகளையும் மத்திய மந்திரி சபையில் சேர்த்துக்கொள்ள மோடி முடிவு செய்துள்ளார். மராட்டியத்தில் சிவசேனாவுக்கு 18 எம்.பி.க்களும், பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 16 எம்.பி.க்களும். தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுக்கு 1 எம்.பி.யும் கிடைத்துள்ளனர். அதன் அடிப்படையில் மந்திரிசபையில் இந்த கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என்று தெரிகிறது.

    ஆனால் புதிய அமைச்சரவையில் தங்களுக்கு 4 இடங்கள் தர வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி உள்ளது. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 3 அல்லது 4 மந்திரி பதவிகளை எதிர்பார்க்கிறது.

    அ.தி.மு.க.வுக்கு ஒரே ஒரு இடம்தான் கிடைத்துள்ளது என்பதால் மத்திய மந்திரிசபையில் ஒரு இடம் கொடுக்க மோடி முன் வந்துள்ளார். அந்த ஒரு இடம் காபினெட் அந்தஸ்துடன் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. சார்பில் யாரை மந்திரி ஆக்க விரும்புகிறீர்கள்? அவரது பெயரை தெரிவியுங்கள் என்று பா.ஜனதா மேலிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இதை உறுதிபடுத்திய அ.தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர் மத்திய மந்திரிசபையில் அ.தி.மு.க. இடம் பெற சம்மதம் தெரிவிக்கப்பட்டு விட்டது என்றார்.

    இதன் மூலம் மத்திய மந்திரிசபையில் அ.தி.மு.க. இடம் பெறுவது உறுதியாகி விட்டது. அ.தி.மு.க.வில் இருக்கும் ஒரே மக்களவை எம்.பி.யான ஓ.பி.எஸ்.சின் மகன் ரவீந்திரநாத்குமார், மத்திய மந்திரியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.



    இதற்கிடையே இன்று காலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் டெல்லி சென்றனர். மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க இருக்கும் அவர்கள் அதற்கு முன்னதாக அமைச்சரவையில் அ.தி.மு.க. சார்பில் இடம் பெறுபவர் பற்றி பா.ஜனதா மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவார்கள் என்று தெரிய வந்துள்ளது.

    ஓ.பன்னீர்செல்வத்தின் மகன், மிகவும் இளையவர் என்பதால் மூத்த தலைவர்களில் ஒருவரை மத்திய மந்திரி ஆக்கலாம் என்ற கருத்து அ.தி.மு.க.வில் வலுத்துள்ளது. இதை ரவீந்திரநாத்குமாரும் சூசகமாக உணர்த்தியுள்ளார்.

    ரவீந்திரநாத் குமார் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறுகையில், “நான் வெற்றி பெறுவதற்காக பிரசாரத்தில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய மந்திரிசபையில் இடம் பெறுவதற்காக வெற்றி பெறவில்லை. கனவிலும் அந்த எண்ணம் கிடையாது.

    மக்களின் நலனுக்காக வெற்றி பெற்றதாக நினைக்கிறேன். தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட உசிலம்பட்டி பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

    ரவீந்திரநாத் குமார் மத்திய மந்திரி ஆகாத பட்சத்தில் அ.திமு.க. மேல்-சபை எம்.பி. வைத்திலிங்கம் மத்திய மந்திரியாக அதிக வாய்ப்புள்ளது. ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்பட்டபோது, வைத்திலிங்கம் யார் பக்கமும் சாயாமல் நடுநிலை வகித்தார். தற்போது அவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள அணியில் உள்ளார்.

    தஞ்சை மாவட்டம் ஒரத்த நாடு தொகுதியில் இருந்து 3 தடவை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ள அவர் 2016-ம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைந்தார். இதைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு அவர் மேல்-சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். எனவே அவரை மத்திய மந்திரி ஆக்குவதில் எந்தவித பிரச்சினையும் இருக்காது என்று கூறப்படுகிறது.
    2018-19-ம் ஆண்டு பருவத்திற்கு கரும்பின் குறைந்த பட்ச ஆதரவு விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஒரு குவிண்டால் கரும்புக்கு ரூ.20 அதிகரிக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. #Sugarcane #ModiCabinet
    புதுடெல்லி:

    பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை குழுவின் கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்தது. இதில் 2018-19-ம் ஆண்டு பருவத்திற்கு கரும்பின் குறைந்த பட்ச ஆதரவு விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஒரு குவிண்டால் கரும்புக்கு ரூ.20 அதிகரிக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.

    இதனால் வருகிற அக்டோபர் மாதம் தொடங்கும் சந்தை ஆண்டு முதல் விவசாயிகள் அளிக்கும் ஒரு குவிண்டால் கரும்புக்கு சர்க்கரை ஆலைகள் குறைந்த பட்சமாக ரூ.275 வழங்கவேண்டும்.

    சந்தை நிலவரத்தையொட்டி, கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நேர்மையான மற்றும் லாபகரமான விலை கிடைக்கச் செய்யும் விதமாக வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையம் அளித்த பரிந்துரையின் பேரில் கரும்புக்கு இந்த குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    2017-18-ம் ஆண்டில் ஒரு குவிண்டால் கரும்புக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையாக ரூ.255 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது, குறிப்பிடத்தக்கது.  #Sugarcane #ModiCabinet #tamilnews

    ×