என் மலர்
நீங்கள் தேடியது "sugarcane price"
- குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை நடைமுறைப்படுத்துவதால் அரசுக்கு எந்த நிதியிழப்பும் ஏற்படாது.
- விவசாயிகளுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.5000 கொள்முதல் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பஞ்சாப் மாநிலத்தில் நடப்பு அரவைப் பருவத்தில் ஒரு டன் கரும்பு ரூ.4100 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பகவந்த்சிங் மான் அறிவித்திருக்கிறார். இதன் மூலம் இந்தியாவிலேயே கரும்புக்கு அதிக கொள்முதல் விலை வழங்கும் மாநிலம் என்ற பெருமையை பஞ்சாப் தக்கவைத்துக் கொண்டுள்ளது. உழவர்கள் நலனில் அக்கறை கொண்டு கரும்பு விலையை இந்த அளவுக்கு உயர்த்தியிருப்பது பாராட்டத்தக்கது.
ஆனால், தமிழ்நாட்டில் நடப்புப்பருவத்தில் ஒரு டன்னுக்கான கொள்முதல் விலை ரூ.3150 மட்டும் தான். இது மத்திய அரசு அறிவித்த விலை தான். தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த ஆண்டு டன்னுக்கு ரூ.215 ஊக்கத்தொகை வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் ஊக்கத்தொகை எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதனால் பஞ்சாப் மாநிலத்தில் வழங்கப்படுவதை விட தமிழ்நாட்டில் டன்னுக்கு ரூ.950 குறைவாக கொள்முதல் விலை வழங்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு கணக்கிட்டு பார்த்தால் ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ.38,000 இழப்பு ஏற்படும். இப்படியெல்லாம் விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா?
2024-25 ஆம் ஆண்டுக்கான அரவைப் பருவத்தில் 10.25% சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கு டன்னுக்கு 3,400 ரூபாயும், 9.50% அல்லது அதற்கும் குறைவானத் திறன் கொண்ட கரும்புக்கு 3150 ரூபாயும் கொள்முதல் விலையாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. பஞ்சாப் கரும்பு 10% சர்க்கரைத் திறன் கொண்டது என்பதால் அதற்கு மத்திய அரசின் விலை ரூ.3400, மாநில அரசின் ஊக்கத்தொகை ரூ.710 ஆகும். தமிழக கரும்புகளுக்கு அதிகபட்ச சர்க்கரைத் திறன் 9.50% தான் இருக்கும் என்பதால், அவற்றுக்கு ரூ.3150 மட்டும் தான் கிடைக்கும்.
கரும்புக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கும் கொள்கை கடைபிடிக்கப்படுவது தான் பஞ்சாபில் உழவர்களுக்கு அதிக விலை கிடைக்க காரணம் ஆகும். மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகையை சர்க்கரை ஆலைகளே வழங்கி விடும் என்பதால் அரசுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லை; அதே நேரத்தில் உழவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
தமிழ்நாட்டிலும் 2017-ஆம் ஆண்டு வரை குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கும் முறை தான் இருந்தது. ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்த போது தான் அந்த முறை கைவிடப்பட்டு ஊக்கத்தொகை வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. 2016-ஆம் ஆண்டில் ஒரு டன் கரும்புக்கு ரூ.650 ஊக்கதொகை சேர்த்து குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டது. அதே முறை நீடித்திருந்தால் ஊக்கத்தொகை இப்போது ரூ.1000 ஆக உயர்ந்திருக்கும். அதனால் ஒரு டன் கரும்புக்கு ரூ.4150 கிடைத்திருக்கும். ஆனால், நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்த திமுக அதை செயல்படுத்தத் தவறியதால் தான் உழவர்களுக்கு பேரிழப்பு ஏற்படுகிறது.
குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை நடைமுறைப்படுத்துவதால் அரசுக்கு எந்த நிதியிழப்பும் ஏற்படாது. மாறாக, ஊக்கத்தொகை முழுவதையும் சர்க்கரை ஆலைகள் ஏற்றுக்கொள்ளும் என்பதால், அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகை அரசுக்கு மிச்சமாகும். ஆனால், சர்க்கரை ஆலைகளுக்கு அதிக செலவு ஏற்படும் என்பதால் அதைத் தாங்கி கொள்ள முடியாது என்பதால் அந்த முறையை செயல்படுத்த திமுக அரசு மறுக்கிறது. இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.
தமிழகத்தில் ஒரு டன் கரும்பு உற்பத்திக்கு ரூ.3500 செலவாகிறது எனும் போது 50% லாபமாக ரூ.1750 சேர்த்து டன்னுக்கு ரூ.5250 கொள்முதல் விலை வழங்க வேண்டும். குறைந்தது டன்னுக்கு ரூ.5000 ஆவது வழங்க வேண்டும். மத்திய அரசு அதன் கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.4000 அறிவிக்க வேண்டும். தமிழக அரசு அதன் பங்குக்கு சர்க்கரை ஆலைகள் மூலம் ரூ.1000 ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும் என்று அறிவித்து விவசாயிகளுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.5000 கொள்முதல் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை குழுவின் கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்தது. இதில் 2018-19-ம் ஆண்டு பருவத்திற்கு கரும்பின் குறைந்த பட்ச ஆதரவு விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஒரு குவிண்டால் கரும்புக்கு ரூ.20 அதிகரிக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.
இதனால் வருகிற அக்டோபர் மாதம் தொடங்கும் சந்தை ஆண்டு முதல் விவசாயிகள் அளிக்கும் ஒரு குவிண்டால் கரும்புக்கு சர்க்கரை ஆலைகள் குறைந்த பட்சமாக ரூ.275 வழங்கவேண்டும்.
சந்தை நிலவரத்தையொட்டி, கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நேர்மையான மற்றும் லாபகரமான விலை கிடைக்கச் செய்யும் விதமாக வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையம் அளித்த பரிந்துரையின் பேரில் கரும்புக்கு இந்த குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
2017-18-ம் ஆண்டில் ஒரு குவிண்டால் கரும்புக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையாக ரூ.255 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது, குறிப்பிடத்தக்கது. #Sugarcane #ModiCabinet #tamilnews
கரும்பு உற்பத்தி அதிகமாக நடைபெறும் உத்தரபிரதேசம், மராட்டியம், கர்நாடகா, உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 140 கரும்பு விவசாயிகளை தனது வீட்டுக்கு வரவழைத்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரையாடினார். கடந்த 10 நாட்களில் அவர் விவசாயிகளுடன் உரையாடுவது, இது 2-வது தடவை ஆகும்.

அதுபோல், 2018-2019 சர்க்கரை பருவத்துக்கான கரும்பின் நியாய நிலை, இன்னும் 2 வாரங்களில் அறிவிக்கப்படும். அந்த விலை, முந்தைய சர்க்கரை பருவ விலையை விட அதிகமாக இருக்கும். மேலும், 9.5 சதவீத பிழிதிறன் கொண்ட கரும்பை அளிக்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். கடந்த 10 நாட்களில், விவசாயிகளுக்கான கரும்பு நிலுவைத்தொகை ரூ.4 ஆயிரம் கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல், மாநில அரசுகளையும் நிலுவைத்தொகையை வழங்குமாறு கூறியுள்ளோம்.
விவசாயிகள் தங்கள் வருமானத்தை பெருக்க சொட்டுநீர் பாசனம் மற்றும் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். சோலார் குழாய் களை பயன்படுத்த வேண்டும். வயல்களில் சூரியசக்தி தகடுகளை நிறுவ வேண்டும்.
சாகுபடியின் தரத்தை உயர்த்த உரங்களின் பயன்பாட்டை குறைத்துக்கொண்டு, பண்ணை கழிவுகளை உபயோகியுங்கள்.
இவ்வாறு மோடி கூறினார்.






