என் மலர்

    நீங்கள் தேடியது "one death"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வத்தலக்குண்டு அருகே மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    வத்தலக்குண்டு:

    மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்தவர் ராமலட்சுமி (வயது21). இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. இவரது நண்பர் உசிலம்பட்டி கொக்குளத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (27).

    இவர்கள் 2 பேரும் கடந்த 19-ந் தேதியன்று ஒரு மோட்டார் சைக்கிளில் வத்தலக்குண்டு- பெரியகுளம் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். எல்.ஐ.சி. அலுவலகம் அருகே சென்றபோது திடீரென பைக் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது.

    பலத்த காயம் அடைந்த 2 பேரும் வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தொடர் சிகிச்சையில் இருந்த அவர்கள் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வத்தலக்குண்டு அருகே அரசு பஸ் - சரக்கு வேன் மோதிய விபத்தில் கிளீனர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் அருகே உள்ள கொடைரோடு அம்மா பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் காமராஜ் (வயது 19). இவர் சரக்கு வேன் கிளீனராக வேலை பார்த்து வந்தார். பெரியகுளத்தில இருந்து மாங்காய் லோடு ஏற்றிக் கொண்டு வத்தலக்குண்டு நோக்கி சரக்கு வேன் வந்தது. இந்த வேனை காமாட்சி என்பவர் ஓட்டி வந்துள்ளார். காமராஜ் வேனில் கிளீனராக வந்துள்ளார்.

    கட்டகாமன்பட்டி அருகே வந்தபோது வத்தலக்குண்டுவில் இருந்து தேனி நோக்கி சென்ற அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் படுகாயமடைந்த காமராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவர் காமாட்சி வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் முதல்-உதவி சிகிச்சை பெற்று தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தேனி அருகே கிணற்றில் தவறி விழுந்து காவலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே உத்தமபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் தென்னை, வாழை, மானாவாரி பயிர்களை பயிரிட்டுள்ளனர்.

    தற்போது வறட்சி அதிகரித்து வருவதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வன விலங்குகள் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் புகுந்து விடுகின்றன. குறிப்பாக காட்டுப்பன்றி அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க தோட்ட காவலுக்கு சென்று வருகின்றனர். உத்தமபாளையம் அம்மாபட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் குமரன் (வயது 43). இவர் சூரியன், கார்த்திக், ரவி ஆகியோருடன் தனியார் தென்னந்தோப்பில் காவல் பணிக்கு சென்றுள்ளார்.

    தோட்டத்தில் நின்று பேசிக் கொண்டு இருந்த போது காட்டுப்பன்றி ஆவேசமாக சீறிப் பாய்ந்து வந்தது. இதைப்பார்த்ததும் அதிர்ச்சியடைந்த 4 பேரும் உயிரை காப்பாற்றிக் கொள்ள சிதறி ஓடினர். இருந்த போதும் காட்டுப்பன்றி அவர்களை விரட்டியது. இதில் குமரன் அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தார். தண்ணீர் இல்லாததால் குமரனுக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனே மற்றவர்கள் அவரை உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே குமரன் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அவினாசி அருகே போலீஸ் வாகனம் கவிந்து விபத்துகுள்ளானதில் ஒருவர் பலியானார். 4 போலீசார் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
    திருப்பூர்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் 20 வயது பெண் காணாமல் போன வழக்கின் விசாரணைக்காக கேரள சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் 4 பேர் பெண்ணின் உறவினர்கள் இருவரை அழைத்துக் கொண்டு நேற்றிரவு போலீஸ் வாகனத்தில் ஐதராபாத் புறப்பட்டனர்.

    இந்த வாகனம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வந்து கொண்டிருந்த போது ஆலம்பாளையம் பகுதியில் மேம்பால தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் பெண்ணின் உறவினர் ஹரி நாராயணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு உறவினர் வினு கோபால் மற்றும் போலீஸ்காரர்கள் ராஜேஷ், விநாயகம், அருண், அனில்குமார் ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் கோவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    போலீஸ் வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அவினாசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வெள்ளகோவில் அருகே கார் மீது டெம்போ மோதி கேபிள் டிவி ஆபரேட்டர் பலியானார்.

    வெள்ளகோவில்:

    கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் அன்புராஜ்(65). கேபிள் டி.வி.ஆபரேட்டர். இவரது மனைவி ஞானமணி(60). இவர்கள் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் ஒரு விஷேச வீட்டிற்கு காரில் சென்றனர். இவர்களுடன் அன்புராஜ் உறவினர் ஆறுமுகம் (70). அவரது மனைவி ஜெகதீஸ்வரி(62) ஆகியோரும் சென்றனர். இந்த கார் காங்கயம்-வெள்ளகோவில் சாலையில் எல்லை காட்டு வலசு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது எதிரே டெம்போ வந்தது. திடீரென காரும் டெம்போவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் அன்புராஜ் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஞானமணி, ஆறுமுகம், ஜெகதீஸ்வரி ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மேல்மருவத்தூர் அருகே விபத்தில் டீக்கடைக்காரர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேல்மருவத்தூர்:

    மேல்மருவத்தூர் அடுத்து சோத்துப்பாக்கத்தில் இருந்து சித்தாமூருக்கு ஷேர் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 5 பேர் இருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி ஷேர் ஆட்டோ மீது உரசியது.

    இதில் நிலை தடுமாறி ஓடிய ஆட்டோ எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மதுரை என்பவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தறிகெட்டு ஓடிய ஷேர் ஆட்டோ கவிழ்ந்ததில் டிரைவர் மணிமாறன் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பலியான மதுரை மதுராந்தகத்தை அடுத்து அவுரிமேடு பகுதியை சேர்ந்தவர். டீக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சேலம் பட்டர்பிளை மேம்பாலத்தில் இருந்த ஆம்னி பஸ் 30 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பனியன் நிறுவன உரிமையாளர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    பெங்களூருவில் இருந்து நேற்று இரவு சேலம் மாவட்டம் வழியாக பொள்ளாச்சிக்கு தனியார் ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. படுக்கை வசதியுடன் கூடிய இந்த பஸ்சில் 28 பயணிகள் பயணம் செய்தனர்.

    இந்த பஸ்சை சேலம் மாவட்டம் தாரமங்கலம், நாச்சினம்பட்டி பகுதியை சேர்ந்த டிரைவர் சரவணன் என்பவர் ஓட்டி வந்தார்.

    இன்று அதிகாலை 4 மணிக்கு பஸ் சேலம் கொண்டலாம் பட்டி பட்டர்பிளை மேம்பாலத்தில் சென்றபோது திடீரென நிலைதடுமாறி தலைகீழாக பாலத்தில் இருந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.இதனால் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் உயிர் பயத்தால் அலறினார்கள்.

    இந்த விபத்தில் பஸ்சில் இருந்த திருப்பூர், ஜம் ஜம் நகரை சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர் தனசேகரன் (வயது 42) என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் டிரைவர் சரவணன், துரைசாமி, அஸ்வின், அபினாஸ், திஸ்முகமது உள்பட 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இது பற்றி போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து கேள்விப்பட்டதும் சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி மற்றும் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

    பஸ் இடிபாடுகளில் சிக்கியவர்களை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆகியோர் சேர்ந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவர்களுக்கு முகம், கை, கால், தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த அடிப்பட்டு இருந்தது. வலியால் அய்யோ, அம்மா என கதறியபடி இருந்தனர். பயணிகள் சிலர் பதட்டத்துடனே இருந்தனர்.

    பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 12 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். 4 பேர் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். அவர்களுக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ் 5 கிரேன்கள் மூலம் தூக்கி நிலைநிறுத்தப்பட்டு, அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

    விபத்து குறித்து விசாரணை நடத்தியதில் பஸ்சின் மேற்கூரையில் அதிக பொருட்கள் ஏற்றி வந்ததே விபத்துக்கு காரணம் என தெரியவந்தது.

    காயம் அடைந்த பயணிகள் கூறுகையில், நாங்கள் எப்படியோ அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துக் கொண்டோம். கடவுளுக்கு நன்றி கண்ணீர் மல்க என்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மத்தியபிரதேச மாநிலம் டேட்டியா நகரில் மாவட்ட ஆஸ்பத்திரியில் அனைத்து நோயாளிகளுக்கும் ஒரே ஊசியை பயன்படுத்திய நர்சால் ஒருவர் உயிரிழந்தார். 25-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    போபால்:

    மத்தியபிரதேச மாநிலம் டேட்டியா நகரில் மாவட்ட ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு சிகிச்சைக்கு வந்த அனைவருக்கும் ஒரே ஊசியை நர்சு பயன்படுத்தினார்.

    ஒருவருக்கு பயன்படுத்திய ஊசியை மற்றவருக்கு பயன்படுத்த கூடாது என்பது உலக சுகாதார நிறுவனத்தின் விதிகள் ஆகும். ஆனால் அதை மீறி அனைத்து நோயாளிகளுக்கும் ஒரே ஊசியையே போட்டுள்ளனர்.



    மேலும் ஊசி சிரஞ்சை டிஸ்டில்லரி வாட்டர் மூலம் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். ஆனால் சாதாரண தண்ணீரை பயன்படுத்தி அவர் சுத்தப்படுத்தி உள்ளார்.

    இதனால் அவரிடம் ஊசி போட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. பலர் மயங்கி விழுந்தனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். 25-க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தருவதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்பிறகு சம்பந்தப்பட்ட டாக்டர், நர்சு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கோவையில் கடன் பிரச்சினையால் தொழில் அதிபர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றதில் மனைவி பலியானார். மேலும் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    கோவை:

    கோவை குனியமுத்தூர் விஜயலட்சுமி நகரை சேர்ந்தவர் ஜானகிராமன் (43). கார்மெண்ட்ஸ் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி சசிகலா (37). இவர்களுக்கு சினேகா (16), ஹேமவர்னா (15) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் சினேகா 12-ம் வகுப்பும், ஹேமவர்னா 10-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

    ஜானகிராமனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பலரிடம் வாங்கி உள்ளார். அதனை திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் மன வேதனையில் இருந்துள்ளார்.

    குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த ஜானகிராமன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்தார். பின்னர் தானும் வி‌ஷம் குடித்தார்.

    இதில் 4 பேரும் படுக்கையில் மயங்கி விழுந்தனர். அவர்கள் வாயில் இருந்து நுரை தள்ளியபடி இருந்தது. ஜானகி ராமன் வீட்டினர் வெகு நேரமாக வெளியில் வராததால் அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டினர் அங்கு வந்து பார்த்தனர்.

    அப்போது படுக்கை அறையில் 4 பேரும் மயங்கி கிடந்ததை கண்டு திடுக்கிட்டனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு குனியமுத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் இன்றி சசிகலா பரிதாபமாக இறந்தார்.

    ஜானகி ராமன் மற்றும் அவரது மகள்கள் சினேகா, ஹேமவர்னா ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடன் பிரச்சினையால் தொழில் அதிபர் குடும்பத்துடன் வி‌ஷம் குடித்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    ×