search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வத்தலக்குண்டு அருகே மரத்தில் வாகனம் மோதி 2 பேர் பலி
    X

    வத்தலக்குண்டு அருகே மரத்தில் வாகனம் மோதி 2 பேர் பலி

    வத்தலக்குண்டு அருகே மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    வத்தலக்குண்டு:

    மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்தவர் ராமலட்சுமி (வயது21). இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. இவரது நண்பர் உசிலம்பட்டி கொக்குளத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (27).

    இவர்கள் 2 பேரும் கடந்த 19-ந் தேதியன்று ஒரு மோட்டார் சைக்கிளில் வத்தலக்குண்டு- பெரியகுளம் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். எல்.ஐ.சி. அலுவலகம் அருகே சென்றபோது திடீரென பைக் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது.

    பலத்த காயம் அடைந்த 2 பேரும் வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தொடர் சிகிச்சையில் இருந்த அவர்கள் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×