என் மலர்

    செய்திகள்

    வத்தலக்குண்டு அருகே அரசு பஸ்-சரக்கு வேன் மோதல் - கிளீனர் பலி
    X

    வத்தலக்குண்டு அருகே அரசு பஸ்-சரக்கு வேன் மோதல் - கிளீனர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வத்தலக்குண்டு அருகே அரசு பஸ் - சரக்கு வேன் மோதிய விபத்தில் கிளீனர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் அருகே உள்ள கொடைரோடு அம்மா பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் காமராஜ் (வயது 19). இவர் சரக்கு வேன் கிளீனராக வேலை பார்த்து வந்தார். பெரியகுளத்தில இருந்து மாங்காய் லோடு ஏற்றிக் கொண்டு வத்தலக்குண்டு நோக்கி சரக்கு வேன் வந்தது. இந்த வேனை காமாட்சி என்பவர் ஓட்டி வந்துள்ளார். காமராஜ் வேனில் கிளீனராக வந்துள்ளார்.

    கட்டகாமன்பட்டி அருகே வந்தபோது வத்தலக்குண்டுவில் இருந்து தேனி நோக்கி சென்ற அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் படுகாயமடைந்த காமராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவர் காமாட்சி வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் முதல்-உதவி சிகிச்சை பெற்று தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×