search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனைத்து நோயாளிகளுக்கும் ஒரே ஊசியை போட்ட நர்சு: ஒருவர் பலி - 25 பேர் கவலைக்கிடம்
    X

    அனைத்து நோயாளிகளுக்கும் ஒரே ஊசியை போட்ட நர்சு: ஒருவர் பலி - 25 பேர் கவலைக்கிடம்

    மத்தியபிரதேச மாநிலம் டேட்டியா நகரில் மாவட்ட ஆஸ்பத்திரியில் அனைத்து நோயாளிகளுக்கும் ஒரே ஊசியை பயன்படுத்திய நர்சால் ஒருவர் உயிரிழந்தார். 25-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    போபால்:

    மத்தியபிரதேச மாநிலம் டேட்டியா நகரில் மாவட்ட ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு சிகிச்சைக்கு வந்த அனைவருக்கும் ஒரே ஊசியை நர்சு பயன்படுத்தினார்.

    ஒருவருக்கு பயன்படுத்திய ஊசியை மற்றவருக்கு பயன்படுத்த கூடாது என்பது உலக சுகாதார நிறுவனத்தின் விதிகள் ஆகும். ஆனால் அதை மீறி அனைத்து நோயாளிகளுக்கும் ஒரே ஊசியையே போட்டுள்ளனர்.



    மேலும் ஊசி சிரஞ்சை டிஸ்டில்லரி வாட்டர் மூலம் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். ஆனால் சாதாரண தண்ணீரை பயன்படுத்தி அவர் சுத்தப்படுத்தி உள்ளார்.

    இதனால் அவரிடம் ஊசி போட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. பலர் மயங்கி விழுந்தனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். 25-க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தருவதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்பிறகு சம்பந்தப்பட்ட டாக்டர், நர்சு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×