search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wine bottle"

    • சந்தேகப்படும்படியாக வந்த டாடா ஏ.சி. வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.
    • சதீஷ்குமார் மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருபாலபந்தல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தனசேகரன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பாபு அந்தோணி முத்து உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாடாம் பூண்டி கூட்டுச்சாலை அருகே சந்தேகப்படும்படியாக வந்த டாடா ஏ.சி. வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை செய்தனர் விசாரணையில், சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் கிராமத்தை சேர்ந்த மணி மகன் சதீஷ்குமார் (வயது 35) மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புடைய 270 மது பாட்டில்களை புதுச்சேரியில் இருந்து வாங்கி வந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த மது பாட்டில் மற்றும் மது பாட்டில் கடத்துவதற்கு பயன்படுத்திய டாட்டா ஏ.சி.வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் அதிகாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
    • முருகன் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா உத்தரவுபடி புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் அதிகாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சிறுவத்தூர் 2-வது தெருவை சேர்ந்த முருகன் (வயது 47) அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. உடனே போலீசார் வழக்குபதிவு செய்து முருகனை கைது செய்தனர். பின்னர் முருகனை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • தமிழகத்தில் சமீபத்தில் கள்ளச்சாராய விற்பனை சட்ட விரோதமாக நடைபெற்று வந்தது.
    • டாஸ்மாக் கடைகளை கள்ளு கடைகளாக மாற்றி விவசாயிகளுக்கு கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாரந்திர குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார்.

    மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது குறைகளை கோரிக்கை மனுக்களாக அளித்தனர்.

    அப்போது கலெக்டர் அலுவலகத்திற்கு இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் பெரிய கோவில் கார்த்தி தலைமையில் நிர்வாகிகள் வந்தனர்.

    திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த மதுபாட்டில்களை கையில் எடுத்து மனு கொடுக்க புறப்பட்டனர். உடனடியாக பாதுகாப்பில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    மதுபாட்டில்களோடு மனு கொடுக்க அனுமதி கிடையாது என எச்சரித்தனர்.

    இதனைத் தொடர்ந்து கார்த்தி தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    தமிழகத்தில் சமீபத்தில் கள்ள சாராயம் விற்பனை சட்ட விரோதமாக நடை பெற்று வந்தது. கள்ளச்சாராயம் குடித்ததில் 22-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

    மேலும் சில இடங்களில் போலி மதுபா னத்திற்கு அவ்வப்போது பலியாகி வரும் சம்பவம் நடந்து வருகிறது.

    இதனால் தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியில் முக்கிய கோரிக்கையான பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

    டாஸ்மாக் கடைகளைகள்ளு கடைகளாக மாற்றி பனை மற்றும் தென்னை விவசாயிகளுக்குகள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கூடலூரில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம், கூடலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையில் போலீசார் புது பஸ்நிலையம் பகுதியில் ரோந்து சுற்றிவந்தனர். அப்போது பஸ்நிலையம் பின்புறம் ஒரு சாக்கு பையில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.

    போலீசார் நடத்திய விசாரணையில் 4-வது வார்டு சுக்காங்கல்பட்டி பகுதியைச் சேர்ந்த சந்திரன் (வயது 38) எனத் தெரியவந்தது. அவரிடமிருந்து 23 குவாட்டர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல் குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்த உலகமாயன் (வயது 50) என்பவரிடம் இருந்து 39 மது பாட்டில்களையும், கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்த பேச்சி (வயது 52) என்பவரிடமிருந்து 11 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை படத்தில் காணலாம்.

    புதுவை புதிய பஸ் நிலையத்தில் மதுபாட்டில்கள் கடத்த முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை உருளையன்பேட்டை போலீசாருக்கு பஸ் நிலையத்தில் வாலிபர் ஒருவர் மதுபாட்டில்கள் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    அப்போது பஸ் நிலையம் அருகே வாலிபர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் அவர் வைத்திருந்த பையை பார்த்த போது 51 மதுபாட்டில்கள் இருந்தன.

    இதனை தொடர்ந்து அந்த வாலிபரை உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மதுரை மாவட்டம் மேலுரை சேர்ந்த அழகர் (வயது39) என்பது தெரியவந்தது. இவர் புதுவையில் உள்ள தனியார் பாரில் வேலைபார்த்து வந்து உள்ளார். இவர் புதுவையில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி சொந்த ஊருக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் அழகரை கைது செய்து அவரிடமிருந்த 51 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    ஆந்திராவில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த பழவேற்காட்டில் தேர்தல் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது, ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரி மணிமேகலை தலைமையில் திருப்பாலைவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள்.ஆனால் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் நிற்கவில்லை. அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அவர்களை பறக்கும் படையினர் விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்தனர்.

    மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்களிடம் 2 பைகளில் மதுபாட்டில்கள் இருந்தன. விசாரணையில் அவை ஆந்திராவில் இருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்டவை என்பது தெரிய வந்தது.

    அவர்களிடம் 10 மதுப்பாட்டில்கள் இருந்தன. அவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் மது பாட்டில்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அருண் (31), சுந்தர்ராஜன் (32) என்பது தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அருண் எண்ணூர் காட்டாங்குப்பத்தையும், சுந்தர்ராஜன் எர்ணாவூரையும் சேர்ந்தவர்.

    கைதானவர்களுக்கு மதுகடத்தும் கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து திருப்பாலைவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர் கலால் வட்டாட்சியர் சாந்தி தலைமையிலான பறக்கும் படையினர் சின்னநாகபூண்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனை செய்தனர்.

    காரின் உள்ளே 240 மதுபான பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதில் வந்த திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த மகேஸ்வரன் கைது செய்யப்பட்டான். ஆர்.கே. பேட்டை கலால் போலீசிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.

    ஆண்டிப்பட்டியில் அனுமதி இன்றி மது விற்ற கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே வருசநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமபாண்டியன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிங்கராஜபுரம் அல்லல்ஓடை பகுதியில் குமணன்தொழுவை சேர்ந்த வேலுத்தேவர்(வயது42) என்பவர் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டார்.

    அவரிடமிருந்த அரைகிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    மூலக்கடை எதிரே உள்ள பெட்டிக்கடையில் சிறப்பாறையை சேர்ந்த அன்பழகன்(43), அதேபகுதியில் துரைசிங்கம்(42), குமணன்தொழு கருப்பசாமிகோவில் அருகே உள்ள மீராதெருவை சேர்ந்தவர் ராஜா(40) மற்றும் கடமலைக்குண்டு வசந்தகுமார்(31) ஆகியோர் அனுமதி இன்றி மதுபதுக்கி விற்றதாக போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து 150-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    ராமநாதபுரம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினம் ரோட்டில் பழங்குளம் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு சூப்பர்வைசராக முத்துமாரி என்பவரும், விற்பனையாளராக காட்டூரணியை சேர்ந்த சதீஷ்குமரனும் உள்ளனர்.

    சம்பவத்தன்று இரவு இருவரும் வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு சென்று விட்டனர். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் கடையின் பணம் இருக்கிறதா? என தேடி பார்த்தனர். ஆனால் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து அவர்கள் கடையில் இருந்த 437 மதுபாட்டில்களை திருடிக்கொண்டு தப்பினர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

    மறுநாள் அதிகாலை அந்த பகுதி மக்கள் டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கேணிக்கரை போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். சூப்பர்வைசர் முத்துமாரி கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    கும்பகோணத்தில் பதுக்கி வைத்திருந்த 3888 மதுபாட்டில்கள் மற்றும் 55 கேன்களில் இருந்த 1925 லிட்டர் எரிசாராயம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே மணஞ்சேரி பகுதியில் எரிசாராயம்- மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு ரகசியமாக விற்கப்படுவதாக கும்பகோணம் மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் மதுவிலக்கு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சரசுவதி, சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் மணஞ்சேரி பகுதிக்கு சென்று கணகாணித்தனர்.

    அப்போது பாதிகட்டப்பட்ட நிலையில் இருந்த ஒரு வீட்டில் சிலர் செல்வதும், வருவதுமாக இருந்தனர் இதனால் சந்தேகமடைந்த போலீசார் உடனடியாக அங்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசார் வருவதை கண்ட ஒரு கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் போலீசார் அங்கிருந்த பொருட்களை சோதனை செய்தனர். இதில் அட்டை பெட்டிகளில் இருந்த 3888 மதுபாட்டில்கள், 55 கேன்களில் இருந்த 1925 லிட்டர் எரிசாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும். மேலும் அருகே நிறுத்தியிருந்த ஒரு டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.

     


    இதுகுறித்து மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் இது தொடர்பாக அதேபகுதியை சேர்ந்த சாராய வியாபாரியான பெரியவன் என்கிற முருகன், அருண்பாண்டியன், ஆனந்த், மணிகண்டன், பாரதி, மற்றொரு முருகன் ஆகிய 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மது பாட்டில்களை வாங்கி, வீட்டில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வந்த பெண்ணுக்கு 340 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
    சென்னை:

    தேனாம்பேட்டை சத்திய மூர்த்தி நகரை சேர்ந்தவர் இளவரசி (52).

    இவர், டாஸ்மாக் மது பாட்டில்களை வாங்கி, வீட்டில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வந்தார். இதுதொடர்பாக இளவரசி மீது 5 வழக்குகளை தேனாம்பேட்டை போலீசார் பதிவு செய்து இருந்தனர்.சில அடிதடி வழக்குகளும் இவர்மீது உள்ளன.

    இந்தநிலையில் கடந்த மாதம், இனி டாஸ்மாக் மது பாட்டில்களை வாங்கி அதிக விலைக்கு விற்கமாட்டேன். மீறினால் என்மீது குற்ற நடைமுறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று போலீசாரிடம் இளவரசி எழுதிக் கொடுத்து இருந்தார்.

    குற்ற நடைமுறை சட்டப்படி, இதுபோல் எழுதிக் கொடுத்தவர்கள் ஒரு வருடம் எந்தவித தவறும் செய்யவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். அதை மீறினால் போலீஸ் உதவி கமி‌ஷனரே, குற்றவாளியை குற்ற நடைமுறை சட்டப்படி சிறையில் அடைக்க முடியும்.

    ஒரு மாதத்துக்கு முன்பு குற்றம் செய்யமாட்டேன் என்று எழுதிக் கொடுத்த இளவரசி, சமீபத்தில் தேனாம்பேட்டை பகுதியில் நடந்த கோவில் திருவிழாவில் கலாட்டா செய்துள்ளார். இதையடுத்து இளவரசி மீது தேனாம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்தார்.

    தொடர்ந்து குற்றத்தில் ஈடுபடும் இளவரசி மீது குற்ற நடைமுறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.நகர் போலீஸ் துணைக் கமி‌ஷனர் அரவிந்தனுக்கு இன்ஸ்பெக்டர் ரமேஷ் கடிதம் எழுதினார்.

    அதை ஏற்றுக்கொண்ட துணை கமி‌ஷனர் அரவிந்தன், தேனாம்பேட்டை சத்திய மூர்த்தி நகரை சேர்ந்த இளவரசியை குற்ற நடை முறை சட்டத்தின் 110-வது பிரிவின் படி 340 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதன்படி இளவரசி சிறையில் அடைக்கப்பட்டார். #tamilnews
    புதுவையில் இருந்து சென்னைக்கு காரில் கடத்தப்பட்ட 720 மதுப்பாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக டிரைவர் கைதானார்.

    விழுப்புரம்:

    புதுவையில் இருந்து விழுப்புரம் மாவட்டம் வழியாக வெளி மாவட்டங்களுக்கு வேன் மற்றும் கார்களில் மதுப்பாட்டில்கள் கடத்தப்பட்டு வருகிறது.

    இதனை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    இந்த நிலையில் கோட்டக்குப்பம் மதுவிலக்கு சோதனைச் சாவடியில் ஏட்டு பாஸ்கரன், போலீஸ்காரர்கள் ராஜா, செந்தில் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது புதுவையில் இருந்து கோட்டக்குப்பம் நோக்கி ஒரு கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. அதனை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் அட்டைப் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

    அதனை பிரித்து பார்த்த போது விலை உயர்ந்த 720 மதுப்பாட்டில்கள் இருந்தன. மேலும் காரில் இருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியபோது புதுவை மாநிலம் லாஸ்பேட்டை லெனின் நகரை சேர்ந்த சடையப்பன் என்பது தெரிய வந்தது.

    மேலும் இந்த மதுப்பாட் டில்கள் புதுவையில் இருந்து சென்னைக்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கார் டிரைவர் சடையப்பனை கைது செய்தனர். கடத்தப்பட்ட மதுப்பாட்டில்களையும், காரையும் பறிமுதல் செய்து கோட்டக்குப்பம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    குடியாத்தத்தில் டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை கடத்திச் சென்ற ஆட்டோவை போலீசார் விரட்டிப் பிடித்தனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் ஏட்டுகள் பாபு, செல்லபாண்டியன் ஆகியோர் இன்று அதிகாலை 2½ மணியளவில் பிச்சனூர் அரசமரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த ஆட்டோவை மடக்க முயன்றனர். போலீசார் மீது மோதுவது போல் ஆட்டோ நிற்காமல் சென்றது. சந்தேகமடைந்த போலீசார் ஆட்டோவை விரட்டி சென்றனர். 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சினிமா பாணியில் விரட்டி சென்றனர். ஆட்டோவை ஒரு புதர் மறைவில் நிறுத்திவிட்டு கும்பல் தப்பி ஓடியது.

    போலீசார், கும்பலை பிடிக்க பின்தொடர்ந்தனர். கும்பல் சிக்கவில்லை. இதையடுத்து, ஆட்டோவில் பார்த்த போது சீல் பிரிக்காத 25 பெட்டிகளில் சுமார் 900 மது பாட்டில்கள் இருந்தது.

    மதுபாட்டில்களுடன் ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், கடத்தல் கும்பல் வந்த பாதையில் உள்ள டாஸ்மாக் கடைகளை சென்று பார்வையிட்டனர்.

    காளியம்மன்பட்டி சாமியார்மலையில் உள்ள மதுபான கடையை உடைத்து மதுபாட்டில்களை கடத்தியது தெரியவந்தது. உடனடியாக அந்தக்கடை விற்பனையாளர் துரைபாபு மற்றும் மேற் பார்வையாளர் சரவணனை வரவழைத்தனர்.

    மதுக்கடை பூட்டுகளை உடைத்த கொள்ளை கும்பல், சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா இருக்குமோ? என்ற பீதியில் மின் இணைப்பை துண்டித்துள்ளனர். பிறகு, உள்ளே புகுந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை திருடி ஆட்டோவில் கடத்தியது தெரியவந்தது.

    இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் இருதயராஜ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் தலைமையிலான போலீசார், மதுபாட்டில்கள் கடத்திய கொள்ளையர்களை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

    தற்போது, கொள்ளை நடந்த டாஸ்மாக் கடைக்கு அருகே உள்ள காளியம்மன்பட்டி மாணிக்கம் நகரில் உள்ள மதுக்கடையில் கடந்த மாதம் 9-ந் தேதி 350 மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடினர்.

    ஒரே பகுதியில் அடுத்தடுத்துள்ள மதுக்கடைகளில் கொள்ளை நடந்துள்ளதால், ஒரே கும்பல் கைவரிசை காட்டி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இரவு நேரத்தில் போலீசார், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்ததால், மதுபான பாட்டில்கள் திருடியதை கண்டுபிடிக்க முடிந்தது. எனவே, இரவு நேரங்களில் போலீசார் தொடர்ந்து வாகன தணிக்கை, ரோந்து பணியில் ஈடுபட்டால் குற்றங்கள் குறையும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
    ×